Category: Uncategorized

  • வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள்

    இஸ்லாத்தின் முதலாவது வாக்களிக்கப்பட்ட மஸீஹ்  ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள் 
    இன்று 23 மார்ச் 2018, வாக்களிக்கப்பட்ட மஸீஹ்  ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள், இஸ்லாத்தில் அஹமதியா முஸ்லிம் ஜமாஅத் எனும் இயக்கத்தை நிறுவி 129 ஆண்டுகள் கடந்துவிட்டது. அன்னார் லூதியானாவில் உள்ள சூஃபி அகமது ஜான் அவர்கள் வீட்டில் தமது 40 சீடர்களிடமிருந்து விசுவாச உறுதிமொழிகளை (பைஅத்) நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார்கள். வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கையிலிருந்து உடன்படிக்கை (பைஅத்) செய்த முதல் நபர் பெராவினை சேர்ந்த ஹஸ்ரத் மவ்லவி ஹக்கீம் நூருதீன் (ரலி) அவர்கள் ஆவார்கள்.  பிற்காலத்தில் அன்னார் வாக்களிக்கப்பட்ட மஸீஹின் முதல் கலீஃபாவாப ஆனார்கள் – கலீ ஃபத்துல் – மஸீஹ் அவ்வல் (ரலி)  மொரிஷியஸ் மற்றும் உலகின் பிற நாடுகளில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் 

    “வாக்களிக்கப்பட்ட மஸீஹின் நாள்” என்று  அழைக்கப்படுகிறது:-

    ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் பர்லாஸ் என்ற பாரசீக குலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவரது மூதாதையர்களில் ஒருவர் மிர்சா ஹாதி பேக், இந்தியாவில் குடியேற தனது சொந்த ஊரான சமர்கண்டிலிருந்து (குராசன்) குடியேரினார்கள். அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருநூறு பேருடன் அதாவது அன்னார் மற்றும் அவரது குடும்பத்தினர், பணியாளர்களும் அதில் அடங்குவர். அவர் மிகவும் மதிப்புமிக்கவராகவும் சிறந்த மார்க்கப் பற்றுள்ளவராகவும் அறிஞராகவும்  இறாயச்சமுடையோராகவும் திகழ்ந்தார்கள். அந்த நேரத்தில் இந்தியா முகலாய பேரரசர் பாபரின் ஆட்சியின் கீழ் இருந்தது. மேலும் பேரரசர் மிர்சா ஹாதி பேக் அவர்களுக்கு அவரது விசுவாசமான சேவைகளுக்கு பரிசாக பரந்த நிலங்களை வழங்கினார்.
    அதன் பிறகு மிர்சா ஹாதி பேக் இந்த பரந்த நிலத்தின் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து, தனது குடும்பத்தினருடன் அங்கு குடியேற முடிவு செய்தார்கள். பின்னர் அவர் ஒரு ஊரை நிறுவி அதற்கு “இஸ்லாம்பூர்” என்று பெயரிட்டார்கள். அவ்வூர் காலப்போக்கில், இஸ்லாம்பூர் என்ற பெயர் பல மாற்றங்களை கடந்து இஸ்லாம்பூர் காதி மாஜி என்றும் பின்னர் காதி என்றும் அழைக்கப்பட்டது. இறுதியாக இந்த நகரம் காதியான் என்று அறியப்பட்டது.

    வாக்களிக்கப்பட்ட மஸீஹ் அலை அவர்களின்  தந்தை பாட்டனார் மிர்சா குல் முஹம்மது ஆவார்கள், அவர் இறையச்சம் (தக்வா) நிறைந்த ஒரு பயபக்தியுள்ள மனிதராவார். மேலும் அவர் ஒரு நேர்மையான நபராகவும் அறியப்பட்டார்கள். வாக்களிக்கப்பட்ட மஸீஹின் தந்தை வழி பாட்டனார், மிர்சா குல் முஹம்மது அவர்களின் மகன் மிர்சா ‘ஆத்தா முஹம்மது ஆவார். வாக்களிக்கப்பட்ட மஸீஹ் அவர்களின் தந்தை “மிர்சா குலாம் முர்தாழா” மற்றும் அவரது தாயார் சிராக் பீபி ஆவார்கள். அவர்களுளுடைய தாயார்  விருந்தோம்பலுக்கும் ஏழைகள் மேல் மிகுந்த அக்கறைக்கும் பெயர் பெற்றவர்களாவார்கள். பல்வேறு அறிவிப்புகளின்படி, வாக்களிக்கப்பட்ட மஸீஹ்  (அலை ) 13 பிப்ரவரி 1835 வெள்ளிக்கிழமை (14 ஷவ்வால் 1250 ஹிஜ்ரி) சூரிய உதயத்திற்கு முன் பிறந்தார்கள். அவர்கள் ஒரு இரட்டை  குழந்தையுடன் அதாவது உடன் ஒரு சகோதரியுடன் பிறந்தார்கள். (ஆனால், அவர் பிழைக்கவில்லை). வாக்களிக்கப்பட்ட மஹ்தி இரட்டையருடன் பிறப்பார் என்ற உண்மையைப் பற்றி அவரது இரட்டைப் பிறப்பு இஸ்லாமிய இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (முஹ்யுத்தீன் இப்னு அரபியின் ஃபுசஸ் அல்-ஹிகாம்).

    அவரது குழந்தை பருவத்திலிருந்தே, வாக்களிக்கப்பட்ட மஸீஹ்  (அலை ) பயனற்ற விஷயங்களில் தனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை, மேலும் அவர்களது சிறிய தோழர்கள் தங்கள் வயதில் செய்த குறும்புகளிலிருந்து அவர் வெகுதொலைவில் இருந்தார். அவரது கல்விக்காக, அவரது பெற்றோர் மூன்று வெவ்வேறு ஆசிரியர்களைக் கொண்டு வந்தனர், அவருக்குப் பிறகு ஒருவர் பின் ஒருவராக அவருக்குப் பல பாடங்களில் கல்வி கற்பித்தனர்.

    வாக்களிக்கப்பட்ட மஸீஹ்  (அலை ) மிக இளம் வயதில் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுடைய முதல் திருமணம்
    அன்னாருக்கு 15 வயதாக இருந்தபோது நடந்தது. இது அவர்களது உறவினர் ஹர்மத் பீபியுடன் (அவரது தாயின் குடும்பத்தைச் சேர்ந்த ஹுர்மத் பீபி அவரது தாய் மாமா மிர்சா ஜமாத் பேக்கின் மகள்) இது ஒரு நிச்சயிக்கப்பட்ட திருமணம். இந்த திருமணத்தின் மூலமாக இரண்டு மகன்கள் பிறந்தனர். ஒருவர் மிர்சா சுல்தான் அஹ்மத் மற்றொருவர் மிர்சா பசல் அஹ்மத். மிர்சா பசல் அஹ்மத் மற்றும் மிர்சா சுல்தான் ஆகியோர் தனது தந்தையின் மீது முஜத்தித் (சீர்திருத்தவாதி) மற்றும் அவரது வாக்களிக்கப்பட்ட மஸீஹ் என்று ஈமான் நம்பிக்கை கொள்ளவில்லை. ஆனால் மிர்சா சுல்தான் அஹ்மத் மட்டுமே அவரது தந்தையின் மரணத்திற்கு பிறகு நம்பிக்கை கொண்டார்கள். அஹ்மதியா இயக்கத்தின் இரண்டாவது கலீபாவான ஹஸ்ரத் மிர்ஸா பஷிருத்தீன் மஹ்மூத் அஹ்மத் (ரலி) யின் கையால் ஜமாத் அஹ்மதியாவை ஏற்று பைஅத்  செய்து கொண்டார்கள்.
     
    சிறு வயதிலிருந்தே, ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை ) அவர்கள் தனிமையை விரும்பினார்கள். மேலும் தனிமையில் அல்லாஹ்விடம் பிரார்த்தனையில் தனது பெரும்பாலான நேரத்தை செலவிட்டார்கள். (துஆக்கள்) மற்றும் பிரார்த்தனை (சலவாத்) அல்லது அவர் திருக்குர்ஆன் படிப்பில் மூழ்கியிருந்தார்கள். அவர்களுடைய தந்தை தனது மகனின் மார்க்கப் பற்றைய நன்கு அறிந்திருந்தார்கள். இருப்பினும், அவர்கள் தனது மகனின் எதிர்காலத்தை குறித்து  கவலைப்பட்டார்கள். அவரகளது மரணத்திற்குப் பிறகு தனது மகன் எவ்வாறு வாழ்க்கையை வாழப்போகிறான் என்று கவலையடைந்தார்கள்.ஏனென்றால், அவர்கள் தனது நிகழ்காலத்தைப் பற்றி கவலைப்படவில்லை.  தந்தை உயிருடன் இருக்கும் வரை, அவர் தான் தனது மகனைக் கவனிப்பார்கள்,
    ஆனால் அன்னாரது மரணத்திற்குப் பிறகு அவரது மகனுக்கு என்ன நடக்கும்? மிர்சா குலாம் முர்தாழா சாஹிப் அவர்கள் தனது நண்பர்களிடம் தனது மகனை குறித்து, ” “எனது இந்த  மகன் ஒரு ‘மசீதர்’ (அதாவது, பஞ்சாபி மொழியில்: அவனுடைய பெரும்பகுதியை மசூதியில் பிரார்த்தனை செய்வதில் செலவிடுபவர் அவர் ஒரு வேலையைத் தேடவில்லை மற்றும் வாழ்க்கை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை (தன்னை பொருளாதாரத்தை  ஆதரிக்க) … ”.  அல்லாஹ் தனது மகனைத் தேர்ந்தெடுத்து அவரை மஸீஹ்யாவாகவும், மஹ்தியாகவும் தனது காலத்தில் வாக்குறுதி அளித்ததை நேரில் பார்க்க அவர் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் அவருக்கு எவ்வளவு பெரிய மரியாதை கிடைத்திருக்கும்!
     
    வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் தகப்பனார்  பிறகு ஜூன் 1876 இல் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வஃபாத்தானார்கள் (இன்னாலில்லாஹ). அதே நாளில் நண்பகலில், வாக்கக்கப்பட்ட மஸீஹ்  (அலை ) அவர்களுக்கு ஒரு வெளிப்பாட்டைப் பெற்றார்கள், அங்கு அவரது தந்தையின் உடனடி மரணம் குறித்து அல்லாஹ் அவருக்கு அறிவித்தான். கடுமையான துக்கத்தின் நிலையில், அவர் தனது வாழ்வாதாரம் (அவரது நிதி நிலை) பற்றிய பாதுகாப்பற்ற உணர்வால் சிறிது நேரம் துயறுற்றார்கள். ஏனென்றால், அவரகளது தந்தை அவர்களை கவனித்து அவர்களுக்கு தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்து வந்தார்கள்.  (பொருளாதாரம், உணவு மற்றும் இதர தேவைகள்) பின்னர் அவர் தனது தந்தையின் உதவி இப்போது கிடைக்காது என்றும் அதனால் எதிர்காலத்தில் வறுமையின் நாட்கள் காத்திருக்கின்றன என்றும் அவர்கள் நினைத்தார்கள். உடனே, அவர்கள் அல்லாஹ்விடம் இருந்து ஒரு வெளிப்பாட்டைப் பெற்றார்: *அலைசல்லாஹு பி-காஃபின் அப்தாஹூ* (அல்லாஹ் தன் அடியானுக்கு போதுமானவன் அல்லவா?)இந்த வெளிப்பாடு அவர்களுக்கு அசாதாரணமான ஆறுதலையும், அவர்களது கவலையை நீக்கி, மன அமைதியையும் அளித்தது. ஏனெனில், அல்லாஹ் தான் அவர்களை கவனித்து அவர்களுடைய அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபடுவார்கள் என்பது தெளிவாக இருந்தது.
     
    1882 ஆம் ஆண்டில், அவர்கள் நபி பெருமானார் ஹஜ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களை ஒரு கனவில் பார்த்தார்கள், அப்போதுதான் அல்லாஹ் அவரைத் தேர்ந்தெடுத்து அவர்களை முஜத்தித் ஆக தேர்ந்தெடுத்தான் என்ற உண்மையைப் பற்றி அல்லாஹ்விடமிருந்து முதல் வெளிப்பாட்டைப் பெற்றார்கள். (சீர்திருத்தவாதி).1889 ஆம் ஆண்டில், ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் என்ற இயக்கத்தை நிறுவினார்கள். அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையை புதுப்பிக்கவும், இஸ்லாத்திற்கு எதிரான அனைத்து வாதங்களையும் முறியடிக்கவும் செய்தார்கள். மேலும் இஸ்லாத்தின் அனைத்து போதனைகளுக்கும் குர்ஆன் மற்றும் முஸ்லிம்களின் பாதுகாவலராகவும் இருந்தார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக பெரும்பான்மையான முஸ்லிம்கள் அவர்களது மதிப்பை ஏற்கவில்லை. அதுமட்டுமல்லாமல் அன்னாரை இழிவுபடுத்தினார்கள்.
     
    அவர்கள் 1908 மே 26 அன்று லாகூரில் வஃபாத்தானார்கள். மேலும், அவர்களது போதனைகளை சிறந்த முறையில் பிரச்சாரம் செய்ய ஒரு ஜமாஅத்தை அவருக்குப் பின்னால் விட்டுச் சென்றார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக, காலப்போக்கில், இந்த ஜமாஅத்தின் மக்கள் அவர்களுடைய போதனைகளிலிருந்தும், அல்லாஹ்விடமிருந்தும், இந்த ஜமாத்தின் தலைவர்களாக  இருப்பவர்கள் தங்களை  பெரியவர்களாக எடுத்துக்கொண்டு அவர்களுடைய போதனைகளை மீறினார்கள் பின்னர் அல்லாஹ் தனது அபரிமிதமான கருணையால், மற்றொரு முஜத்தித்தை எழுப்பினான். மேலும் இந்த உலகத்தில் சீர்திருத்தத்தைக் கொண்டுவரவும் இஸ்லாத்தின் கண்ணியத்தை பாதுகாக்கவும், ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) மற்றும் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை ) மற்றும் அல்லாஹ்வின்  சிறப்பிற்குரிய அடியார்களை  நிலைநாட்டி பாதுகாக்கவும்  .

    இஸ்லாத்தின் கீழ் பற்றுடன் இருக்கவும், அல்லாஹ்வின் தூதர்கள் மற்றும் அல்லாஹ்வின் மார்க்கத்தின் சீர்திருத்தவாதிகளின் கவுரவத்தை எப்போதும் பாதுகாக்கவும் அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவட்டுமாக! ஜமாத் உல் ஸாஹிஹ் அல் இஸ்லாம் இந்த மாபெரும் பணியை நிறைவேற்ற அல்லாஹ் உதவி செய்வானாக!!எப்போதும் பக்தியுடன் மற்றும் அல்லாஹ்வின் பயம் உள்ள மக்களை அதன் வட்டத்தில் வைத்திருக்க வேண்டும். இன்ஷா-அல்லாஹ், அமீன்.

    (*ஜூமுஆ  உரை:* ஹஸ்ரத்  கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹமது அஸீம் (அலை)  23 மார்ச் 2018 (04 ரஜப் 1439 AH )
  • கலீபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஜீம் அலை அவர்களின் நபி வாதம்

    கலீபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஜீம் (அலை) அவர்களின் நபி வாதம்

     

    “இஹ்தின ஸ்ஸிராத்தல் முஸ்தகீம்” நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டுவாயாக! அந்த வழி நம்மை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு முற்றிலும் கீழ்படியும் இஸ்லாத்தின் வழியில் ,அந்த வழி ஈமானின் வழி, அந்த வழி அவனை காணமுடியாவிட்டாலும் அவன் நம்மை பார்க்கின்றான் என்பதை உணர்ந்து அவனை காண்பதைப்போன்று அந்த ஏக இறைவனை வணங்கும் அந்த “இஹசானின்” வழியில், அந்த வழி தக்வாவின் வழியாகும் ,மேலும் இதன்முலம் அல்லாஹ் நமக்கு என்ன கட்டளையிட்டு உள்ளானோ அதை நிறைவேற்ற நாம் போராடும் அதேவேளையில் அவன் நமக்கு எதை விட்டு தடை செய்துள்ளானோ அல்லது விலக்கியு ள்ளானோ அதைவிட்டு நமது மனம் ,கண்கள் ,காதுகள்,வாய், கால்ககள், கைகள் மற்றும் நமது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் நாம் பாதுகாக்கின்றோம்.

     அந்த ஏக இறைவன் நமக்கு இவ்வாறு கற்றுக்கொடுக்கின்றான், அதாவது நாம் அவனிடம் எங்களை நேரானவழியில் அதாவது இம்மையிலும் மறுமையிலும் வெற்றியடைந்த அவர்களின் வழியில் நம்மையும் நடத்த அவனிடம் வேண்டுமாறு கூறுகின்றான். இவ்வாறு அவன் கற்றுக்கொடுத்ததை நாம் வேண்டும்போது அதை ஏற்றுக்கொண்டு அவனது மாபெரும் அருளால் அவனிடமிருந்து அவனின் மாபெரும் கருணையால் ஒருவருக்கு மறைவான ஞானத்தை கற்றுக்கொடுத்து நம்மை நேரான வழியில் செல்ல வழிகாட்டினால் அவரை நாம் நபி என்று அழைக்காமல் வேறு என்னவென்று அழைக்கமுடியும்?

     ஒருவேளை அவரை நான் “முஹத்தஸ்” என்று அழைத்தால் “முஹத்தஸ்” என்ற சொல்லிற்கு அகராதியில் “தஹ்ஃதீத்” என்று வருகின்றது, மேலும் இதுவே முஹத்தஸ் மூலச்சொல்லாகவும் உள்ளது எனவே இதிலிருந்தும் நாம் அறியவேண்டியது “தஹ்ஃதீத்” என்பதற்கு பொருளை நாம் பார்த்தோமே ஆனால், மறைவான ஞானத்தை பெறுவது என்ற அர்த்தத்தில் வருவதில்லை என்பதாகும் மாறாக நுபுவ்வத் என்ற வார்த்தையே இதற்கான பொருள்படும் மேலும் “நபி” என்ற வார்த்தை அரபியிலும் ,ஹீப்ருவிலும் பொதுவாக “நபஆ” என்ற வார்த்தையில் லிருந்து உருவாகியுள்ளது இதன் அர்த்தம் இறைவெளிப்பாடுகள் மூலம் தீர்க்கதரிசனம் செய்யும் ஆற்றலை பெறுவது என்பதாகும், இறைவனின் தூதர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் அவனிடம் இருந்து ஒரு புதிய ஷரீயத்தை பெறுபவர்கள் மட்டும் தான் என்பதில்லை மாறாக இறைவனிடமிருந்து மறைவானவற்றின் ஞானம் என்ற அறிவை பெரும் ஒருவரும் “தூதர்” என்றே அழைக்கப்படுகின்றார்கள், மேலும் நீங்கள் ஒவ்வொரு வரும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் அந்த ஏக இறைவன் நிச்சயமாக  நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கும் முன் தோன்றிய நபிமார்களுக்கும்,சித்தீக்குகளுக்கும் (நபிமார்களுக்கு சேவை செய்வதில் எல்லையற்ற அர்ப்பணிப்புடன் செய்த அந்த அடியார்கள் குறிப்பாக நபி ஸல் அவர்களுக்கு அபூபக்கர் (ரலி) அவர்களை போல்) வழங்கிய அனைத்து அருள்களையும்  வழங்கியிருக்கின்றான். மேலும் இந்த அருட்கொடையில் தீர்க்கதரிசனம், மறைவானவற்றின் ஞானம் ஆகியவைகளும் அடங்கும் இன்னும் இந்த அருளே மற்றவர்களிடமிருந்து நபிமார்களையும் (அந்த பதவியின் உயர்நிலை) வேறுபடுத்தி காட்டுகின்றது, மேலும் நபிமார்களையும் ரசூல்மார்களையும் தவிர வேறு எவருக்கும் அல்லாஹ் தனது மறைவான ஞானம் என்ற அருட்கொடையை வழங்குவதில்லை என்பதை திருமறை வசனங்களும் நமக்கு தெளிவு படுத்துகின்றது

    மேலும் இது தொடர்பாக அல்லாஹ் திருகுரானில் கூறும்போது

    அவன் மறைவானதை அறிபவனாவான். மேலும் அவன் தனது மறைவான ஞானத்தை எவருக்கும் வெளிப்படுத்துவதில்லை.அவன் தேர்ந்தெடுத்த தூதரைத் தவிர………( Al-Jinn 72 : 27-28)

     

     எனவே மிக தெளிவாக இதை போன்ற ஞானத்தை பெறுபவர் ஒரு தூதராக இருப்பது அவசியம் ஆகின்றது, நாம் இப்போது பார்க்கவிருக்கும் சூரத்துல் அல் ஃபாத்திஹாவின் வசனமும் இதை உறுதிசெய்கின்றது

    சிராத்தல்ல தீன அன் அம்த அலைஹிம் கய்ரில் மக்ளுபி அலைஹிம் வலல லாழ்ழீன்

     பொருள் :-நீ அருள் புரிந்தவர்களின் வழியில் எங்களை நடத்துவாயாக  (அருள்புரிந்த நபி மற்றும் ரசூல்மார்களின் வழி) உன் கோபத்திற்கு ஆளானவர்கள், வழிதவறியவர்கள் ஆகியோரின் வழியில் அல்லாமல்(நபி மற்றும் ரசூல்மார்கள் தோன்றும்போது அந்த அருளின் பக்கம்.  தங்களது முகத்தை திருப்பிக்கொண்டவர்கள்)

    எனவே இந்த வசனத்தின் அர்த்தத்தை பின்வருமாறு அறியலாம் அதாவது,   ”நீ எங்களுக்கு மற்றவர்களுக்கு செய்த அருளைப்போல எங்களுக்கும் வழங்குவாயாக……”எனவே இது உண்மையாகவே மிக சிறந்த சான்று பகிர்கின்றது நபிகள் நாயகம் எம்பெருமானார் (ஸல்) அவர்களை பின்பற்றுபவர்களுக்கு இந்த ஞானத்தின் அருள் ஒருபோதும் மறுக்கப்படாது மேலும் இந்த ஞானத்தின் மூலம் நபி மற்றும் ரசூல் என்ற நிலையை பெரும் ஒருவர் அந்த நிலையை பெற அவர் அன்னாரின் ஆன்மிக வழிகாட்டல்களுக்கு முற்றிலும் கட்டுப்பட்டவராக இருக்கவேண்டும், எனவே நாம் ஒரு தெளிவான மறுக்கமுடியாத முடிவுக்கு வரவேண்டும் அதாவது இந்த மேலான அருளை பெற ஒருவர் அன்னாரின் இரட்டையர்களாக அன்னாரின் நிழலாக அன்னாருடன் முற்றிலும் மூழ்கிப்போகும் நிலையை அடையவேண்டும் என்பதாகும்.

    மேலும் அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் அவனது வஹீயின் மூலம் என்னை ஒரு ஜமாஅத்துடன் எழுப்பி நபி என்றும் ரசூல் என்றும் அழைக்கும்போது நான் எவ்வாறு மறுக்க முடியும்?, இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த பதவிகளை அல்லாஹு சுபஹானஹுதாலாவே என்னை தேர்வு செய்து நியமித்துள்ளான், அவ்வாறிருக்க இத்தகைய மேலான அருளை மறுப்பதற்கு நான் யார்? படைத்த இறைவனுக்கு எதிரில் நான் யாரை பார்த்து அஞ்சவேண்டும்?

    நான் என்னை நபி என்று மறுப்பது, நான் ஒரு புதிய ஷரீயத்தை  கொண்டுவர கூடியவனாகவும் ஒரு சுதந்தரமான நபியாக வரவில்லை என்ற பொருளிலேயேயாகும். ஆனால் மிகவும் மகிமை  பெற்ற கண்ணியம் உள்ள என் எஜமானராகிய ஹஜ்ரத் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றி அவர்களின் ஆன்மீக அருட்கொடைகளால்  நான் இந்த பலனை அடைந்தேன், அவரின் பெயரை நான் பெற்றுக்கொண்ட  காரணத்தினாலும் அன்னாரின் மூலமாக மறைவான விஷயங்களை பற்றிய ஞானத்தின் அருளும் எனக்கு அருளப்பட்ட காரணத்தினால் நிச்சயமாக நான் நபியாக இருக்கின்றேன்.

    நான் மறுபடியும் உங்களுக்கு தெளிவு படுத்துகின்றேன் நான் ஒரு புதிய ஷரீயத்தை  கொண்டுவரவோ அல்லது புதிய மாற்றங்களை புகுத்தவோ வரவில்லை இருப்பினும் நான் என்னை நபி என்று அழைப்பதை ஒருபோதும் மறுக்கவில்லை மேலும் நான் நபி என்று மறுப்பது ஒரு புதிய சட்டத்தை கொண்டுவந்த நபி என்று அழைப்பதை மட்டுமே, மேலும் இதை நானாக கூறவில்லை மாறாக அந்த ஏக இறைவனாகிய அல்லாஹுவே என்னை நபி என்றும் ரசூல் என்றும் அழைக்கின்றான் எனவே அவன் வழங்கிய இந்த பதவிகளை வகிப்பதில் என்ன தவறிருக்கின்றது, மேலும் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) எவ்வாறு அல்லாஹ்வின் நபியாகவும் ரஸூலாகவும் இருந்தாரோ அவ்வாறே நானும் அல்லாஹ்வின் நபியாகவும் ரஸூலாகவும் இருக்கின்றேன்.

    “நான் ஒரு நபி அல்ல நான் ஒரு ஷரீயத்தை கொண்டுவரவில்லை” என்ற எனது வாதத்தின் பொருள் நான் ஒரு புதிய சட்டத்துடன் தோன்றிய நபி இல்லை என்பதாகும். நான் நபி என்ற வார்த்தையினால் அழைக்கப்பட்ட போதிலும் இந்த சிறப்பு சுதந்திரமான முறையினாலோ, எவருடைய வழியிலும் பின்பற்றாமல் நேரடியாக எனக்கு கொடுக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்! இத்தகைய எல்லா சிறப்புகளும் வானத்தை சேர்ந்த பரிசுத்த தூய நபி ஹஜ்ரத் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆன்மீகமான ஐக்கியத்தை நான் அடைந்த காரணத்தினாலேயே நான் இத்தகைய அருளை அடைந்தேன்,அன்னாரின் மூலமாக அதாவது, ஹஜரத் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிலே என்னை சுயமே மாய்த்து கொண்டதினால் மட்டுமே அந்த நிலைக்கு பின்னரே அல்லாஹ் என்னை முஹையுதீன்னாகவும் கலீபஃதுல்லாஹ்வகவும் எழுப்பினான், இன்னும் இதன் மூலமே மறைவானவற்றின் ஞானத்தையும் அல்லாஹ் எனக்கு அருளினான், எனவே தான் என்னுடைய இந்த பதவியால் அந்த பரிசுத்த புனித நபிகள் பெருமானார் காத்தமுல் அன்பியா முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் முத்திரை நபி என்ற உயர்ந்த அந்தஸ்தை ஒருபோதும் பாதிப்பதில்லை.

    நான் இந்த மேலான நிலையை பிரதிபிம்பமான முறையிலும், ஒரு நிழல் போன்ற முறையிலும் அன்பென்னும் கண்ணாடியின் வழியாக என்னுடைய அனைத்து குணஇயல்பின் மூலமும் (இதை தொடர்ந்து அடைவதற்கு முயன்றுகொண்டே இருப்பது) இன்னும் அன்னாரின் மீதுள்ள நேசத்தால் தன்னையே இழப்பதன் மூலமே நிலையை அடைகின்றேன், எனவே அல்லாஹ் என்னை முஹையூதீனாகவும் கலீபஃதுல்லாஹ்வாகவும் அவனுடைய வஹீயின் மூலம் அழைப்பதால் அந்த தூய நபி பெருமானார் (ஸல்) அவர்களின் கம்பிரத்திற்கும் பெருமைக்கும் அன்னாரின் கண்ணியத்திற்கு  எந்த குறைபாடும் ஏற்படப்போவதில்லை ,ஆனால் இந்த அருளால் அன்னாரின் முத்திரை நபி என்ற உயரிய நிலை மேலும் சிறப்புறுகின்றது, இதிலிருந்து பெருமானார் (ஸல்) அவர்களுக்கு பிறகு ஒரு நபி தோன்றினால் அன்னாரின் காத்தமுன் நபீயின் என்ற முத்திரை உடைந்துவிடும் என்று எனது எதிரிகளில் எவர் கூறினாலும் ஆட்சேபனை செய்தாலும் எனது இந்த விளக்கம் தெளிவுபடுத்தும், மேலும் இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரம் அற்றது என்பதும் தெளிவாகும். மீண்டும் உங்களிடம் நான் ஆணித்தரமாக வலியுறுத்தி கூறிக்கொள்கின்றேன், எனது எந்த ஒரு வாதத்திலோ அல்லது அறிவிக்கையிலோ காத்தமுன் நபியின் முஹம்மத் (ஸல்) அவர்களின் முத்திரை நபி என்ற உன்னத நிலைக்கு எந்த குறைபாடும் ஏற்படாது என்பதை நான் உறுதியளிக்கின்றேன்.

    எனது வருகையின் நோக்கம் ஒரு அணு அளவிற்கு கூட நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் வருகையின் நோக்கத்திற்கு எதிரானதில்லை, ஏனெனில் ஒரு நிழல் அதன் மூலப்பொருளில் இருந்து வேறானதில்லை இதை நான் தார்மீகமாக உங்ளுக்கு புரியவைக்கும் பொருட்டு நான் இந்த உதாரணத்தை விளக்கினேன், ஒவ்வொரு பொருளிற்கும், ஒவ்வொருவருக்கும் அல்லது இறைவனின் படைப்பினங்களுக்கும் அதன் நிழல் என்பது நிச்சயமாக இருக்கத்தான் செய்கின்றது மேலும் அந்த நிழல் அதன் மூலப்பொருளில்(அல்லது அந்த நபரை) இருந்து ஒருபோதும் பிரிக்கமுடிவதில்லை, இருப்பினும் அந்த நிழல் தான் அந்த நபர் என்று நாம் எவ்வாறு கூறஇயலும், இதை போலவே நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் நபிமார்களின் முத்திரை என்ற நிலையில் ஒருபோதும் மாறாமல் இருப்பார்கள் அன்னாரை தொடர்ந்து எஜமானரை பின்தொடரும் அடிமைகளாக அன்னாரின் நிழல்களாக தோன்றிக்கொண்டே இருப்பார்கள், இவ்வாறு அன்னாரின் உம்மத்தில் தோன்றும் இத்தகைய நபிமார்களின் நுபுவ்வத் அன்னாரின் நுபுவத்துடன் இணைந்தே அறியப்படும் மேலும் இதனால் இத்தகைய நபிமார்கள் ஒரு போதும் சுதந்திரமான நபி என்ற நிலையை அடையமுடியாது. இங்கே நான் உங்களுக்கு தெளிவு படுத்த விரும்புகின்றேன், எனது இந்த வாதத்தை கேட்டபிறகு நான் வாதம் செய்யாத ஒன்றை எவராவது இட்டுக்கட்டி என்மீது குற்றம்சாட்ட முயன்றால் அவர் பொய்யரும் குழப்பம் விளைவிப்பவரை தவிர வேறு ஒருவரும் இல்லை. மேலும் உங்களிடம் கூறிக்கொள்கின்றேன்:-

    நானே இந்த நூற்றாண்டில் அல்லாஹ்விடம் இருந்து தோன்றிய கலீபா (கலீபஃதுல்லாஹ்) மற்றும் முஹையூதீன்னும் (மார்க்கத்திற்கு புத்துயிர் வழங்குபவர்) ஆவேன்,இதை நான் எந்த மனித கரங்களாலும் பெறவில்லை மாறாக அந்த ஏக இறைவனாகிய அல்லாஹுவே எனக்கு வழங்கினான்.

    எனது இறைவனாகிய அந்த தூய அல்லாஹ்வின் மற்றும் அவனது அன்பிற்குரிய தூதர் நபிகள் பெருமானார் (ஸல்) மற்றும் அன்னாரின் மஸீஹ்கான சென்ற நூற்றாண்டில் தோன்றிய ஹஸ்ரத் மிர்சா குலாம் காதியானி (அலை )ஆகிய அனைவரின்  நேசம் எனது ரூஹு முழுவதும் ஊடுருவி நான் என்ற எனது சுயத்தைமுற்றிலும் இழந்துவிட்டேன்.

    இதற்கு பிறகும் எனது எதிரிகள் என்னை ஒரு பொய்யன் என்று அவர்களின் நிலையில் தொடர்ந்தால் அவர்கள் அறியாமையிலும் ,மறுப்பதிலும் உள்ளார்கள் என்ற முடிவுக்கு நான் வருகின்றேன், இந்த தலைப்பின் சம்பந்தமாக என்னுடைய ஜுமுஆ பேருரைகளையும் பல்வேறு சொற்பொழிவுகளையும் கேட்டு இதன் உண்மைத்தன்மையை அறிய அல்லாஹ் இவர்களின் இதயத்தை திறக்க செய்வானாக! இன்ஷா அல்லாஹ், ஆமீன்

    சூரத்துல் ஃபாத்திஹா பிரதிபலிக்கின்ற பொருளை பற்றிய சிறப்புமிக்க இந்த தலைப்பின் பேருரையை இன்றுடன் நிறைவு செய்கின்றேன். மேலும் இது நபிமார்களின் வருகை என்ற இரகசியத்தை தன்னகத்திலே கொண்டுள்ளது, இன்னும் மனித குலத்தின் ஆன்மிகத்தை (ருஹுவை) பாதுகாக்க கூடிய நபிமார்களை எங்களுக்கு அனுப்புவாயாக என்று அவனை படைத்த ஏக இறைவனிடத்தில் மன்றாடும் வகையிலும்,இதன் மூலம் நம்பிக்கையின் பாதையிலும் இறை பேரரருளிலும் நிலைத்திருக்க வகையில் அமைத்துள்ளது. அல்லாஹ்வின் நபிமார்கள் தோன்றவில்லை என்றால் மனித இனம் அவர்களாகவே ஷைத்தானின் செல்வாக்கின் கீழ் வந்துவிடுவார்கள். சூரத்துல் ஃபாத்திஹாவிலிருந்து கற்றுக்கொடுக்கப்பட்ட துஆவை செய்யும்போது அல்லாஹ் மனிதனுக்கு உறுதியளிக்கின்றான் அதாவது அல்லாஹ் நிச்சயமாக மன்றாடுபவரின் குரலை கேட்டு மீண்டும் அவனை நேர்வழியில் நடத்துகின்றான், எனவே நபிமார்களின் வருகை நிச்சயமாக முகம்மதிய உம்மத்திற்கு கியாமத்து நாள் வரை தொடர்வது மிகவும் இன்றியமையாததாகும். மேலும் அல்லாஹ் உங்கள் கண்களை திறக்க செய்து இப்பொழுது இறைவனின் அருளாக உங்களுக்கு வழிகாட்ட தோன்றியுள்ள அவனின் நபியை அடையாளம் கண்டு ஏற்று இறைவனின் உண்மையான வெகுமதியையும், உண்மையான சந்தோஷத்தையும் அடைய செய்வானாக!

     

    இன்ஷா அல்லாஹ் ,ஆமீன்

    (ஜுமுஆ பேரூரை தலைப்புசூரத்துல் ஃபாத்திஹா விளக்க உரை -இரண்டாவது பகுதி 29 AUG 2014 (02 Dhul-Qaddah 1435 Hijri) )        

  • வஹீ வாதம்

    வஹீ வாதம்

    திருக்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடும் போது

    *நிச்சயமாக  உமது பகைவனே ஆண் சந்ததியற்றவன்.*( திருக்குர்ஆன் 108: 4 )

    திருக்குர்ஆனின் கருத்துப்படி இறை அறிவிப்பைப்(இறைவஹீயை) பெறும் கூட்டத்தினரே ஆன்மீக ஆண் சந்ததிகளாவர். அப்படிப்பட்ட ஆன்மீக சந்ததியினரை முஹம்மது நபி (ஸல்) அவர்களாலேயே பெறமுடியும்; அவர்களின் எதிரிகளால் பெறவியலாது என்பது தெளிவாகின்றதுஎனவே திருகுர்ஆனின் வழிகாட்டல் படி, வஹீயை வைத்து வாதம் செய்யும் ஒருவரைப் பற்றி அறிவது நம்மீது மிகப் பெரிய கடமையாகின்றது.

    மேலும் திருகுர்ஆன் நம்பிக்கை கொண்டோரை பற்றிக் கூறும்போது

    உமக்கு அருளப்பட்டதன் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டதன் மீதும் அவர்கள் நம்பிக்கை கொள்வர். இனிமேல் வரக்கூடிய (வாக்களிக்கப்பட்ட) வற்றின் மீதும் உறுதியாக நம்புவர். இவர்கள் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள். இவர்களே வெற்றிக்குரியவர்களும் ஆவர். ( திருக்குர்ஆன் 2: 5-6 )

    எனவே ஹஸ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இறக்கிவைக்கப்பட்டதன் மீது திட்டமாக ஈமான் கொண்ட நிலையில் அதாவது முன்னுள்ள வேதங்களை ஏற்றுக்கொண்ட நிலையில் அன்னாருக்கு பிறகு வாக்களிக்க ப்பட்டவர்களுக்கு (வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் வாக்களிக்கப்பட்ட சீர்த்திருத்தவாதி) இறங்கியதை ஏற்றுக்கொண்ட நிலையில் அதாவது நம்பிக்கையாளர் என்ற நிலையில்  இறை வஹீயை வைத்து வாதம் செய்பவரின் வாதத்தைப் பற்றி சிந்திப்பது நம்மீது இருக்கும் ஒரு தலையாய கடமையாகும்.

    மேலும் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் நமக்கு இது தொடர்பாக மிகச்சிறந்த வழிகாட்டல்களை வழங்கியுள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்

    வாக்களிக்கப்பட்ட மஸீஹ் அலைஹிவஸலாம்  கூறுகின்றார்கள்:-

    *ஒரு வேஷதாரிக்கு மீண்டும் மீண்டும் பொய் பிரச்சாரம் செய்ய இறைவன் அவனது உண்மையான வெளிப்பாடு செய்பவர் என்று எவ்வாறு அங்கீகரிப்பான்* ,இறைவன் போலியானவர்களை நிச்சயம் பிடிப்பான் என்று உங்களுக்கு உறுதியாக அறிவிக்கப்படவில்லையா ? தவ்ராத் மற்றும்  தீர்க்க தரிசனங்களில் *பொய்யான ஒரு நபி கொல்லப்பட வேண்டும்* அவர்கள் விரைவாக பிடிக்கப்ப டுவார்கள் மற்றும் அவரை பின்பற்றுபவர்கள் சிதறடிக்கப்படுவார்கள் என்று கூறப்படவில்லையா? இதை போன்ற ஏதேனும் ஒரு சம்பவம் கூற முடியுமா? என்னை போல் மக்கள் மத்தியில் வெளிப்பாடு செய்து நீண்ட நாள் வாழமுடியுமா அப்படி இருந்தால் என் முன் கொண்டு வாருங்கள். *நான் உறுதியாக  கூறுகின்றேன் இதை  போல் ஒரு சம்பவம் இந்த உலகம் தோன்றியதிலிருந்து இல்லை.*ஒரு இறை நம்பிக்கையாளர் /இறைவனுக்கு அஞ்சுபவர்   தனது (ஜமாஅத்) நிருபனத்திருந்து ஆதாயம் பெற இப்படி கூறுவாரா?

    நான் இவ்வாறு கூறவில்லைஒரு சிலை வழிபடுபவர் அல்லது இறைமறுப்பாளர் அல்லது இறைவன் இல்லை என்று அல்லது நான் தான் கடவுள் என்று வாதம் செய்பவர் *நீண்டநாள் தண்டனை இன்றி வாழமாட்டார் என்று*, இறைவன் இவர்களை போன்று வழிகெடுப்பவர்களை *பிறகு பார்த்துக்கொள்வான்.* (மறுமையில் )ஆனால் நான் உறுதியாக கூறுகின்றேன்,  *இறைவஹீயின்மீது பொய்யுரைப்பவன்  விரைவாக பிடிக்கப்படுவார்கள் இதற்கு சான்றாக *தவ்ராத், இன்ஜீல் மற்றும் திருக்குரான்* உள்ளது .இதன்  காரணத்தினாலே தான்  நான் உறுதியாக  கூறுகின்றேன்,  *என் எதிரிகள் இதை போன்ற ஒரு சம்பவத்தை கூட வரலாற்றிலிருந்து எடுக்க முடியாது* (காதியான் ஜிவுள் இஸ்லாம் பிரஸ் 1899.Newly printed in ரூஹானி கஸாயின்(லண்டன் 1984) vol 14 பக்கம் 35-36  )

    மேலும் அன்னார் (அலை) அவர்கள் திருகுர்ஆனின் போலியாக வஹீயியை அறிபவர்களுக்கு இறங்கும் தண்டனையை பற்றி குறிப்பிட்டவர்களாக;*அவர் எந்தச் சொல்லையேனும் பொய்யான வெளிப்பாடாக எம்மீது சுமத்தியிருந்தால்.**நிச்சயமாக நாம் அவரை எம் வலக்கையால் பிடித்திருப்போம்.**பின்னர் நாம் அவருடைய கழுத்து பெரு நரம்புக் குழாயைத் துண்டித்திருப்போம்.**உங்களுள் எவராலும் அவரை (எம்முடைய தண்டனையிலிருந்து) காப்பாற்ற இயலாது.*(அல்ஹாக்க 69:45 லிருந்து 48 வரை

    வலக்கரத்தால் பிடிப்படுவது உறுதி என்பது.-

    “… அவர்கள் எவ்வாறெல்லாம் இறைவன் மீது இட்டுக்கட்டி பொய் கூறினாலும் , *பொய்யான இல்ஹாம்களை உருவாக்கி அவற்றை இறைவனுடன் தொடர்பு படுத்தி ,அவனிடமிருந்து அவை வந்தன என்று கூறினாலும்,* அவற்றைக் குறித்து இறைவனின் தன்மான உணர்வு பொங்கி எழாது  என்ற எண்ணம் எவ்வாறு அறிவுக்கு புறம்பாக இருக்கின்றதோ  அவ்வாறே அது  எல்லா வேதங்களுக்கும் எதிராக இருக்கின்றது …”(ஹக்கீக்கதுல் வஹி Vol 22p.- 213)

    குறிப்பு: இந்த வசனத்தை தனக்குரிய வானத்தின் அடையாளமாக – 18 ஆவது அடையாளமாகஹகீகதுல் வஹீ்யில் குறிப்பிட்டுள்ளார்கள்.

    எனவே நம்பிக்கை கொண்ட நிலையில் வஹீயை வைத்து பொய்யாக வாதம் செய்பவரை அந்த ஏக இறைவனின் வல்லமை ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்பதை மிகச்சரியாக புரிந்து கொள்ள முடியும். சகோதரர்களே!!! மேலும் குறிப்பாக அன்னார் மிகத்தெளிவாக தன்னை அல்லாஹ் என்பவனை கூட இறைவன் பிறகு பார்த்துக் கொள்வான் அதாவது மறுமையில் பார்த்துக்கொள்வான் என்றும், ஆனால் இறைவஹீ வருவதாக நம்பிக்கையாளர் என்ற நிலையில் நம்பிக்கை கொண்ட மக்களை வழிகெடுக்க அந்த ஏக இறைவன் ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்பது தெள்ளத்தெளிவாக புரிகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

    ஆனால் இதை பற்றிய அடிப்படை ஞானம் இல்லாத மக்கள் ரஷாத் கலீஃபா வாதம் செய்துள்ளார் என்றும் கோபால் என்பவர் நபியென்று வாதம் செய்கின்றார் என்று உண்மையை தேடும் அப்பாவி மக்களை குழப்புகின்றார்கள். இதைப்போன்ற செயலையே ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்கள் வாதம் செய்த நூற்றாண்டிலும் குறைமதி கொண்ட மக்கள், பேரரசர் அக்பர் வாதம் செய்தார் என்றும் ஜலந்தரைச் சேர்ந்த ரோஷன் தீன், நபி என்று வாதம் செய்கிறார் என்று கூறி அன்னாரின் வஹீயின் அடிப்படையிலான உண்மை வாதத்தை உண்மையை தேடும் மக்களை குழப்பும் வண்ணம் இவ்வாறே செய்துள்ளார்கள். அந்த நேரத்திலும் அன்னார் இவ்வாறே தக்க பதிலை அளித்துள்ளார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அதே போன்ற ஒரு வரலாறு இப்போது நமது காலத்திலும் தோன்றியுள்ளது. மக்கள் வஹீ வாதத்தின் உண்மை நிலையை திருகுரானின் அடிப்படையில் ஆராயாமல் தங்களது மனோ இச்சைகளை பின்பற்றுகின்றனர் இதைப் போன்ற மக்களை திருகுர்ஆன் மிகத் தெளிவாக எச்சரிக்கின்றது

     வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததை கூறி வரம்பு மீறாதீர்கள்; (உங்களுக்கு) முன்பு வழிதவறிச் சென்ற கூட்டதாரின் மனோ இச்சைகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; அநேகரை அவர்கள் வழி தவறச் செய்ததுடன், தாங்களும் நேர் வழியை விட்டு விலகி விட்டனர்.”(அல்குர்ஆன் : 5:78)

    இன்னும் நிதர்சனமான உண்மை என்னவென்றால், நாம் வாழும் இந்த அருளுக்குரிய நூற்றாண்டில் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸிம் (அலை) அவர்கள் மட்டுமே இறை வஹீயின் மூலம் தன்னை இந்த நூற்றாண்டின் உம்மதி நபியென்று வாதம் செய்கின்றார்கள் மேலும் அன்னார் 2000 ம் ஆண்டில் தனது முதல் வஹீ தொடங்கி தொடர்ச்சியாக இறைவஹீயை பிரகடனம் செய்து வருகிறார்கள்

     Bismillah hir rahman nir raheem

    La Mabooda bil Haqqe Iillallah – There is no one to worship in truth but Allah –உண்மையில் வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவறும் இல்லைஆதாரம்(https://sahih-al-islam.blogspot.com/2011/04/new-mujaddi d-and-kerala-jamaat-i.html#more)

    அன்னார் தன்னை கலீஃபத்துல்லாஹ் (அல்லாஹ்வின் கலீஃபா), நபி மற்றும் ரசூல் என்று  அன்னாரின் அனைத்து வாதமும் இறை வஹீயின் அடிப்படையிலானது.( ஆதாரம்https://sahih-al-islam.blogspot.com/2014/08/surah-al-fatiha-on-divine-guidance.html#more)

    சென்ற ஆண்டு கொரோனா வைரஸ் பற்றி அன்னாருக்கு வெளிப்பட்ட வஹீயில் ஒன்று உங்கள் பார்வைக்கு, இந்த வஹி அன்னாருக்கு 20.07.2019 அன்று அரபி மற்றும் கிரியோல் மொழியில் இறங்கியது

     Bismillah hir rahman nir raheem

    After Tahajjud prayers Saturday 20 July 2019 17 Dhul-Qaddah 1440 AH

    Fatawakkal ‘alallaah. Innaka ‘alal-Haqqil mubeen. Innaka laa tusmi-‘ul-mawtaa wa laa tusmi-us-summaddu-‘aaa-‘a izaa wallaw mudbireen. Wa maaa anta bihaadil-‘umyi an-zalaalatihim. ‘In tusmi-u ‘illaa may-yu’-minu bi- Aayaatinaa fahum Muslimuun. Wa izaa waqa-‘al-Qawlu ‘alayhim ‘akhrajnaa lahum Daaabbatam-minal-‘arzi tu-kallimuhum ‘annannaasa kaanuu bi-‘Aayaatinaa laa yuuqinuun.

    தஹஜ்ஜுத் தொழுகைக்கு பிறகு அரபி மற்றும் கிரியோல் மொழியிலும் இறங்கிய வெளிப்பாடு

    பொருள்:- நீங்கள் அல்லாஹுவிடத்தில் நம்பிக்கை வையுங்கள் நீங்கள் உண்மையாகவே உண்மையின் மீது இருகின்றீர்கள் உங்களால் இறந்தவர்களை செவியேற்க செய்ய முடியாது. மேலும் முதுகுக்குப் பின்னால் திரும்பிய அத்தகைய செவிடர்களை உம்மால் கேட்கும்படி செய்யவியலாது, இன்னும் குருடர்களை உம்மால் அவர்களின் தவறுகளில் இருந்து நேர்வழி செலுத்த முடியாது. ஆனால் எவர்கள் உம்முடைய அடையாளங்கள் மீது நம்பிக்கை கொள்கிறார்களோ மேலும்  உம்முடன் தங்களை முஸ்லிம்களாக அர்ப்பணித்து இருக்கின்றார்களோ அவர்களையே உம்மால் சீர்திருத்த முடியும் மேலும் அவர்களின் (நிராகரிப்பாளர்கள்) மீது அவர்களின் வாக்கு நெருங்கும் போது *பூமியில் இருந்து ஒரு பிராணியை நாம் வெளிப்படுத்துவோம்* மக்கள் நம் அடையாளங்களில் நம்பிக்கை கொள்ளாததே அதற்குக் காரணம். ஆதாரம் காண்க :- http://jamaat-ul-sahih-al-islam.com/jusai2019/rev_hmaa_20jul19.pdf

    இந்த நூற்றாண்டின் மாபெரும் எச்சரிக்கை செய்யும் வஹீ.. இதன் உண்மைத் தன்மையை நாம் வாழும் இந்த காலத்தில் ஒவ்வொரு மனிதனும் அவன் அரசனானாலும்  சரி ஆன்டியானாலும் சரி உணர முடிகின்றது .இந்த பூமி இதுவரை கண்டிராத மாபெரும் இறை அடையாளத்தை பார்த்த பிறகும் நம்மிடையே இறைவனின் இந்த நூற்றாண்டின் தூது செய்தி மீது நம்பிக்கை கொள்ளாமல் இருப்பது நிச்சயம் ஆச்சரியத்திற்குரியது.

     

    மேலும் தற்போது மஸீஹ் (அலை) அவர்களை ஏற்றுக்கொண்டு பிரிவுகளாக இருக்கும் அமைப்புகளிலும் ஒருவர் கூட இறைவஹீயை தொடர்ச்சியாக அறிவித்து தன்னை உம்மத்தி நபி என்று எவரும் வாதம் செய்யவில்லை,உங்களின் புரிதலுக்காக சுருக்கமாக பார்க்கலாம்

     1.   லாகூர் அஹ்மதிய்யா இயக்கம்

    இந்த அமைப்பு முதலாவது கலீஃபதுல் மஸீஹ் (ரலி) அவர்களின் மரணத்திற்கு பிறகு ஹஸ்ரத் மஸீஹ் அலை அவர்கள் நபி மற்றும் ரசூல் இல்லை என்றும் அன்னார் ஒரு முஜத்தித் என்றும் மஸீஹ் அலை அவர்களின் சில சஹாபிகளால் 1914 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும் இவர்கள்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் இறுதி நபி என்ற  வழிகேடுக் கொள்கையை கொண்டவர்கள். இங்கே வாதம் செய்யும் ஆண் சந்ததி எவரும் இல்லை

     2.   ஜமாஅத்ததே அஹ்மதிய்யா ஹக்கீ பிரிவு

    தோற்றுநர் டாக்டர் நஸீர் சுல்தானி சாஹிப் அவர் தன்னை 15 வது நூற்றாண்டின் முஜத்தித் என்று வாதம் செய்கின்றார் இவரும் இறுதி நபி கொள்கை என்னும் வழிகேட்டு கொள்கையில் உள்ளவர்.

    ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸிம் (அலை) அவர்கள் இவருடன் முபாஹிலா செய்ததன் விளைவாக அல்லாஹ்வின் தண்டனையால் பிடிக்கப்பட்டு பாகிஸ் தான் சிறையில் உள்ளார். அவரது இயக்கம் சிதறடிக்கப்பட்டு அவரது வெப்சைட்டும் முடக்கப்பட்டு விட்டது. ஆதாரம் காண்க :- https://sahih-al-islam.blogspot.com/2013/06/mubahila-statement-on-nasir-ahmad.html#more

     இது சம்பந்தமாக ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹமத் அஸிம் (அலைகூறும்போது இந்த இடத்தில் நான் உங்களிடம் தெளிவு படுத்துகின்றேன். நான் அந்த புனித நபி எம்பெருமான் (ஸல்) அவர்களை போன்ற பரிபூரண முழுமை பெற்றவன் என்று ஒருபோதும் நான் கூறவில்லை, ஆனாலும் அந்த ஏக இறைவன் என்னை ஒரு சிறிய முஹம்மதாக்க முயற்சி செய்யும் பொருட்டு என்னை தேர்வு செய்துள்ளான். மேலும் அன்னாரின் அடிசுவற்றை பின்பற்றுவதன் மூலம் அன்னாரின் உம்மத்தில் நபியாக ஒரு சீர்திருத்தவாதியாக தகுதியை  பெற்று இஸ்லாம் மற்றும் முழுமனித சமுதாயத்தையும் சீர்த்திருத்த நான் வந்துள்ளேன். நிச்சயமாகவும் உங்களிடம் மீண்டும் மீண்டும் கூறிக் கொள்கின்றேன்நான் எனது எஜமானார் தூய நபி பெருமானார் (ஸல்) அவர்களின் கணுக்காலில் உயரத்தின் நிலையை கூட நான் ஒருபோதும் எட்டவில்லை, மேலும் அல்லாஹ் என்னை *ஆதம் என்றும் தாவூது என்றும் அழைத்துள்ளான்.* என்பதன் அர்த்தம் நான் என் எஜமானர் பெருமானார் (ஸல்) அவர்களை விட உயர்ந்தவன் அல்லது சிறந்தவன் என்பதற்காக அல்ல, மேலும் நான் ஒரு புதிய மார்க்கத்தை கொண்டு வந்துள்ளேன் என்பதும் இல்லை, மாறாக இதன் அர்த்தம் என்னவென்றால் அல்லாஹ் என்னை நபிமார்களின் குண இயல்புடன் அனுப்பியுள்ளான், என்பதும் ஏனைய நபிமார்களின் சிறப்புகளையும் என் மூலமாக பிரதிபலிக்கின்றான் என்பதுமாகும். அவை நூறு சதவீதம் இல்லாவிட்டாலும் கூட அவன் என் தோலின் மீது வைத்துள்ள வேலையை நான் சிறப்புடன் செய்வதற்க்காகவே அவன் இவ்வாறு செய்கின்றான்.

    ஆனால் இப்போது மேலும் துரதிர்ஷ்டவசம் என்னவென்றால் மக்கள் தங்களது  உலக சட்டங்களை பயன்படுத்தி தனது சகோதரர் இஸ்லாத்தை பின்பற்றுவதிலிருந்து தடுக்கின்றனர். இன்னும் இதன் மூலம் தங்களது சுய கருத்துக்களை வெளிடுகின்றனர். இந்த உண்மை ஒரு பக்கம் இருக்க சில தினங்களுக்கு முன் நாசிர் சுல்தானி என்பவர் என்னை பொய்யர் என்று கூறி தன்னை உண்மையாளர் என்று வாதம் செய்தார். இதற்கு பிறகு பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் கைது செய்து சிறையில் ஒரு வருடத்திற்கு மேலாக அடைந்துள்ளார்கள் என்பதை அறிந்தேன் அனேகமாக மார்ச் 2017 வரை அவரைப்பற்றிய எந்த தகவலும் இல்லை. *நான் அல்லாஹ்வின் கலீஃபா* என்ற முறையில் பாகிஸ்தான் உயர் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன். அவரை சிறையில் இருந்து விடுதலை செய்யுங்கள், உங்களை நான் எச்சரிக்கின்றேன்! ஒருவரின் நம்பிக்கையை பற்றி தீர்மானிப்பது உங்கள் வேலை அல்ல. அது முழுக்க நம்மை படைத்த அல்லாஹ்வின் பணியாகும் அவரை உண்மையாளர் என்றும் பொய்யர் என்றும் தீர்மானித்து தண்டிப்பது அல்லது கௌரவ படுத்துவது உங்கள் வேலையில்லை, இறைக் கட்டளை இல்லாமல் எவர் தான் இறைபுரத்திலிருந்து வந்துள்ளேன் என்று வாதம் செய்தால் அவரை பொய்யர் என்பதை அல்லாஹ் மட்டுமே தீர்த்துவைப்பான் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

     3.   அஹ்மதிய்யா முஸ்லீம் ஜமாஅத்தின்

    புனித தோற்றுனர் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. மேலும் அன்னார் வாக்களிக்கப்ட்ட மஹதி மற்றும் மஸீஹும் ஆவார்கள். மேலும் அன்னாருக்கு பிறகு ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூத் (ரலி) அவர்கள் 1944 ம் ஆண்டு இறைவஹீயைப் பெற்று தன்னை வாக்களிக்கப்பட்ட சீர்த்திருத்தவாதி என்று வாதம் செய்தார்கள். அன்னாருக்கு பிறகு இறை வஹீயைப் பெற்று வாதம் செய்பவர்கள் கிடையாது, மேலும் இப்போது உள்ள அஹ்மதியா ஜாமத்தில் கொள்கையின் படி இந்த கிலஃபாத் இறுதி தீர்ப்புநாள் வரை தொடரும். இன்னும் குறிப்பாக இந்த நபிமார்கள் அல்லாத கலீஃபத்துல் ரசூல் மார்களே தொடர்வார்கள் என்றும் மஸீஹ் (அலை) அவர்களுக்கு பிறகு நபி (ஸல்) அவர்களின் நூற்றாண்டு கலீஃபத்துல்லாஹ்கள் வருகை முற்றுப்பெற்று விட்டது. என்றும் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஒருவர்தான் எனவே மஸீஹ்க்கும் இறுதியானவர் என்ற நம்பிக்கையில் உள்ளார்கள்.

    4.   க்ரீன் அஹ்மதிய்யா (Green Ahmadiyya )

     க்ரீன் அஹ்மதிய்யா இதன் தோற்றுநர் மிர்சா ரபி அஹ்மத் சாஹிப் அஹ்மதிய்யா ஜமாத்தின் முன்றாவது கலீஃபா தேர்வில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஜமாத்தில் இருந்து வெளியேறி நூற்றாண்டில் வர வேண்டிய இறை அருளனான முஜத்தித் மக்களை பற்றி கூறி வந்தார் அவரின் வபாத்திற்கு பிறகு சிலரால் அவரது வெப்சைட் நடத்தபடுகின்றது. அவர் தன்னை முஜத்தித் என்று கூறினார் என்று கூறு கிறார்கள் இப்போது எந்த வாதமும் கிடையாது.

     

    5.    அஹ்மதிய்யா இஸ்லா பெசன்ட்

    தோற்றுநர் அப்துல் கபார் ஜனாபா, மஸீஹ் (அலை) அவர்கள் முன்னறிவித்த முஸ்லிஹ் மவூது என்று வாதம் செய்கின்றார் மேலும் ஹஸ்ரத் மிர்சா பஷீருத்தீன் மஹமூத் அஹமத் (ரலி) அவர்கள் ஒரு பொய்யர் (நஊதுபில்லாஹ்) என்று கூறுகிறார். இவ்வாறு பொய்யாக ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்களை இழிவு படுத்தியபோதும் நிஸாமே ஜமாஅத் எந்த ஒரு ஆன்மீக போருக்கும் அழைக்கவில்லை. ஆனால் *காலத்தின் இமாம் ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸிம் (அலை) அவர்கள் அவரை முபாஹிலாவிற்கு அழைத்தார்கள்.* பல்வேறு சாக்குபோக்குகளை கூறிய ஜனாபா இறுதியில் கையொப்பம் இட்டு உள்ளார்  ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸிம் (அலை) அவர்கள் கூறும்போது முபாஹிலா செய்த ஜனாபா அதிக பாவமன்னிப்பு கேட்பதால் தண்டனையின் காலம் தாழ்த்தபட்டுள்ளது. நிச்சயம் இறைத் தண்டனைக்கு ஆளாவர் என்றுகூறி உள்ளார்கள். ஆதாரம் காண்க :-https://sahih-al-islam.blogspot.com/2014/02/on-mubahila-against-janbah-sahib.html

     6.      அஹ்மதிய்யா அல்  முஸ்லிமின்

     சஃபருல்லாஹ் டொமேன் சாஹிப் மற்றும் ஹசரத் முனீர் அஹ்மத் (அலை) அவர்களால் தோற்றுவிக்கபட்டது  இது இந்நூற்றாண்டின் இறை வெளிப்பாட்டின்  ஆரம்ப காலகட்டத்தில் ஏற்படுத்தபட்டது இப்போது சபாருல்லாஹ் டொமேன் சாஹிப் அவர்களால் நிர்வகிக்கபடுகின்றது. இவர் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் ஆசிம் (அலை) அவர்களை காலத்தின் இமாம் ஆக ஏற்று பையத் செய்ததன் அருளாக இறைவஹீயின் அருளை பெற்றார் பின்பு அன்னாரை பிரிந்துவிட்டார். முன் சென்ற நபிமார்களின் வாழ்க்கையில் இதை போன்றவர்கள் நபிமார்களிடம் இருப்பதால் இறைவஹீயின் அருளை பெற்றதன் மூலம் அவர்களை விட்டு பிரிந்து சென்று உள்ளார்கள் இன்னும் குறிப்பாக கூறுவதென்றால்  நபி (ஸல்) அவர்களின் வஹீயை எழுதியவர்க்கு வஹீ வந்ததால் தனக்கும் வஹீ வருகின்றது என்ற கர்வத்தில் அன்னாரை பிரிந்து சென்றார் , ஹசரத் மூசா (அலை) அவர்களின் காலத்தில் பல்ஆம் போன்றவர்கள் இன்னும் ஹசரத் மஸீஹ் (அலை) அவர்களை ஏற்றுக்கொண்ட காஷ்மீர் கான் அன்னாரை பிரிந்து சென்று மஸீஹ் வாதம் செய்த வரலாறும் உள்ளது. ஹசரத் முனீர் அஹ்மத் அலை அவர்களும் அவரை பல்ஆம் என்றே குறிப்பிடுகின்றார்கள் (ஆதாரம் காண்க:- https://sahih-al-islam.blogspot.com/2012/02/zafrullah-domun-sahib-then-now-i.html#more)

     

     இவர்களை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறும்போது:-

    நாம் எம்முடைய அடையாளங்களை வழங்கிய ஒருவருடைய நிலையை நீர் அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! பின்னர் அவர் அவற்றிலிருந்து நழுவித் தனித்துவிட்டார். இதனால் ஷைத்தான் அவரைப் பின்பற்றிச் சென்றான். ஆகவே அவர் வழிதவறியவர்களைச் சேர்ந்தவராகி விட்டார் நாம் விரும்பியிருப்பின் அவற்றின் (அடையாளங்கள்) மூலம் நாம் அவரை உயர்த்தியிருப்போம். ஆனால் அவர் பூமியின் பக்கம் சாய்ந்தது தமது (தீய) விருப்பங்களைப் பின்பற்றிச் சென்றுவிட்டார். எனவே அவருடைய நிலை ஒரு நாயின் நிலையை போன்றது. அதனை நீர் தாக்கினாலும் அது நாக்கைத் தொங்கவிட்டு மூச்சிரைத்துக் கொண்டிருக்கும். இதுவே எம்முடைய அடையாளங்களைப் பொய்ப்படுத்தும் சமுதாயத்தினரின் நிலையாகும். எனவே அவர்கள் சிந்திக்கும் பொருட்டு நீர் இந்த வரலாற்றை அவர்களிடம் எடுத்தியம்புவீராக.( திருக்குர்ஆன் 7: 176-177 )

    ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம்

     

    ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹமத் (அலை) அவர்களால் இறையாணைப்படி தோற்றுவிக்கப்பட்டு தொடர்ந்து இறைவனின் மாபெரும் அருளால் இந்த நூற்றாண்டின் இறைவஹீ கொண்டு வாதம் செய்யும் ஹசரத் முஹம்மது (ஸல்) அவர்களின் ஆண் சந்ததியை பெற்ற மேலும் அன்னாரின் 14வது கலீபத்துல்லாஹ்வை கொண்ட ஜமாஅத், ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்களை தொடர்ந்து நூற்றாண்டின் முஜத்தித், கலீபா மற்றும் இமாம்களின் வருகையை ஏற்றுக்கொண்டு நுபுவ்வத்தின் வாசலை திறந்து, அதாவது மஸீஹ் மார்களின் அருளின் கதவை திறந்து வைத்துள்ள ஒரே ஜமாஅத் ஆகும்.

     அன்னார் கூறும்போது:-

     மனித குலமே கேளுங்கள்! முஸ்லீம் சமுதாயமே கேளுங்கள்!! ‘அஹமதிகளே கேளுங்கள்!!! என் சகாபிகளே கேளுங்கள்!!!!  முன் சென்ற சமுதாயம் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள், நபிமார்களை அனுப்பும் இந்த அருளை அல்லாஹ் ஒருபோதும் உங்களிடமிருந்து பறித்துக்கொள்ள மாட்டான், இதற்கு பிறகும் என்னை போன்ற நபிமார்களை அல்லாஹ் அனுப்புவான், நான் இந்த காலத்திற்கு மட்டும் நபியாவேன், என்னை போன்றவர்கள் தீர்ப்புநாள் வரைதொடர்வார்கள் உங்களிடம் நான் கூறியது நிச்சயம் நிகழும். (ஆதாரம் காண்க  https://sahih-al-islam.blogspot.com/2018/05/the-khalifa-of-islam-title-and-tasks.html#more)

    எனவே அன்பு சகோதரர்களே முன் சென்ற சமுதாயம் செய்த தவறை நாமும் செய்வதா? வஹீ வாதத்தின் முக்கியத்துவத்தை அறிந்த மக்களாக திருகுரானின் அடிப்படையில் ஒரு வாதத்தை பார்ப்பதே சிறந்ததாக இருக்கும், மேலும் இதைப்போன்ற 16 நபர்கள் 20 நபர்கள் 60  நபர்கள் வாதம் செய்கிறார்கள் என்று பொய்யை பரப்புபவர்களிடம் ஆதாரப்பூர்வமாக திருகுரானின் அடிப்படையில் ஆராய்வதே சாலச் சிறந்ததாக இருக்கும்உங்களுக்கு உண்மையை ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்குவானாக !!! இன்ஷாஅல்லாஹ் ஆமீன்!!!

     இறை வஹீயை பற்றி ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) கூறும்போது;-

    நேசங்கொண்டவர்கள், ஆன்மீகத்தாகம் கொண்ட தமது உள்ளம் இறைவசனத்தின் இனிய ஒலியை நேரடியாகக் கேட்டுப் பேரானந்தம் பெறவேண்டும் என்ற ஆவல் கொள்ள மாட்டார்களா? இறைவனுக்காக முழு உலகையும் விட்டு விலகித் தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறைவழியில் தியாகம் செய்து தன்னையே இறைவனுக்காக அர்ப்பணித்திருக்கின்ற ஒருவன் இந்த ஒளிமிக்க உண்மையான சூரியனைத் தன் கண்களால் காண முடியாமல் மங்கிய ஒளியிலேயே நின்று மரணமடைந்து விடுவதை விரும்புவானோ? உயிருள்ள இறைவன்அனல் மவ்ஜூத்நான் இருக்கின்றேன் என நேரடியாகக் கூறும்போதுதான் ஒருவனுக்கு முழுமையான இறைஞானம் கிடைக்கும் என்பது உண்மையல்லவா? இறைவன் இருப்பதை நிரூபிப்பதற்கு முழுமை பெறாத தமது பகுத்தறிவைக் கொண்டு உலகெங்குமுள்ள தத்துவஞானிகளால் எழுதப்பட்ட புத்தகங்களை ஒரு புறத்திலும், ‘நான் இருக்கின்றேன்என்று கூறும் இறைவனின் தெளிவான குரலை மறுபுறத்திலும் வைத்து பார்த்தால், அப்புத்தகங்களெல்லாம் இறைவனின் குரலுக்கு முன்னால்சுத்த சூனியமாய்ப் போய்விடுகின்றன. தத்துவ ஞானிகள் என்று அழைக்கப்படுவோர் இறைவனைக் காணமுடியாத, இறைவசனத்தைக் கேட்க முடியாத கருத்துக் குருடர்களாகி இருக்கின்ற நிலையில் இறைவனைப் பற்றி அவர்கள் எவ்வாறு நமக்குக் எடுத்துக்கூற முடியும்? சுருக்கமாக, இறைவனின் உண்மையை அறிய நாடுகின்றவர்களுக்குத் தன்னைப் பற்றிய பூரணமான ஞானத்தை அருளவேண்டுமென அவன் நாடுவானாகில், தன்னுடன் உரையாடுவதற்கான வழியையும் அவனே திறந்து கொடுத்தருளுவான்.

    இதைக் குறித்து இறைவன் தன் திருமறையில் உண்மையை ஆராய்ந்தறிய நாடும் ஒவ்வொருவனுக்கும் கற்றுத்தரும் பிரார்த்தனை இதுவாகும்:

    இறைவா! உனது அருள்களைப் பெற்றவர்களின் நேரான உறுதியான பாதையை எங்களுக்கும் காட்டித் தருவாயாக (1:6,7).

    இங்குக் குறிப்பிட்டிருக்கும் அருள் என்பதன் பொருள் இல்ஹாம் (இறையறிவிப்பு) மற்றும் கஷ்ஃப் (ஆன்மீகக் காட்சி) போன்ற இறைஞானமே ஆகும். இவை மனிதனுக்கு நேரடியாகக் கிடைக்கும்.

     இறைவன் தன் திருமறையில் இதைக் குறித்து இவ்வாறும் கூறுகின்றான்:

    எங்கள் இறைவன் அல்லாஹ் எனக் கூறி அக்கொள்கையில் நிலைத்திருப்பவர்களிடம், நீங்கள் அஞ்சவும் வேண்டாம்; கவலையடையவும் வேண்டாம்; உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தைப் பற்றிய நற்செய்திகளை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று (கூறியவாறு) வானவர்கள் இறங்குவர். (41:31)

    இத்திருவசனத்தில் இறைவன்மீது முழுமையான நம்பிக்கைக்கொண்ட நல்லடியார்களுக்குப் பயமும் துயரமும் ஏற்படும்போது இறைவன் புறமிருந்து அவர்களுக்கு இல்ஹாம் கிடைக்கின்றது என்றும், வானவர்கள் இறங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறுவார்கள் என்றும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றது.

    எனவே அன்னார் மிகத்தெளிவாக ஓர் இறைக்கொள்கையில் நம்பிக்கை கொண்டு அதில் நிலைத்து இருந்தால் அந்த அடியாருக்கு இல்ஹாமின் வாசல் நிச்சயம் தீர்க்கப்படும் என்று அல்லாஹ் உறுதியளிப்பதாக கூறுகின்றார்!!!

    மேலும் அன்னார் கூறும்போது:- ஐனுல் யக்கீன்அதாவது ஒரு பொருளுக்கும் அப்பொருளைப் பற்றிய அறிவுக்குமிடையே வேறு எதுவும் இல்லாமல், அப்பொருளிலிருந்தே நேரிடையாகக் கிடைக்கும் அறிவே பார்வை அறிவு (ஐனுல் யக்கீன்) என்று கூறப்படும். எடுத்துக்காட்டாக, நாம் முகர்ந்தறியும் புலனால் ஒரு நறுமணத்தையோ கெட்டவாசனையையோ அறிகின்றோம். ருசியறியும்புலனால் இனிய சுவையையோ, உப்புச் சுவையையோ அறிய முடிகின்றது. தொடுவுணர்ச்சிப் புலனால் வெப்பம் அல்லது குளிரை உணர்ந்து கொள்கின்றோம். இத்தகைய அறிவுகள் அனைத்தும் ஐந்து புலன்களின் மூலம் நமக்குக் கிட்டும் பார்வை அறிவில் அடங்குகின்றவையாகும். ஆனால் மறுவுலக வாழ்வைப் பற்றிய நமது அறிவு, பார்வை அறிவு என்ற நிலையை ஏய்தவேண்டுமானால் நாம் நேரடியாக இல்ஹாம் என்னும் இறையறிவிப்பைப் பெறவேண்டும். இறைவனின் குரலை நம் காதுகளால் கேட்கவேண்டும். தெளிவானதும் சரியானதுமான இறைகாட்சிகளை நம் கண்களால் காணவேண்டும். இவ்வாறு இறைவனின் தெளிவான குரலைக் (- இல்ஹாம்) கொண்டே நாம் முழு அளவில் இறைஞானத்தைப் பெறமுடியும். அந்த முழுமையான இறைஞானம் கிடைப்பதற்காகவே நம்முடைய உள்ளத்தில் ஆன்மீகப் பசியினையும், தாகத்தையும் அனுபவித்து வருகின்றோம். அந்த இறைஞான அமுதம் நமக்குக் கிட்டுவதற்கான வழிவகைகள் எவற்றையும் இறைவன் செய்து வைக்கவில்லை என்றால் அவன் இந்த ஆன்மீகத் தாகத்தை நம் உள்ளத்தில் ஏற்படுத்துவதன் அவசியம் என்ன? நமது மறுவுலக வாழ்விற்காக இவ்வுலக வாழ்வில் சர்வ வல்லமையுள்ளஎன்றென்றும் உயிருடனுள்ளசத்தியவடிவான இறைவனைப் பற்றி நமக்கு எவ்வித அனுபவமுமில்லாமல் வெறும் புராணக் கதைகளையும் வரலாறுகளையும் மட்டுமே படித்து மனநிறைவுக் கொண்டு விடத்தக்க அடிப்படையற்ற நம்பிக்கை (ஈமான்) மட்டும் இருந்தால் போதுமா? அல்லது முழுமை பெறாத பலவீனமான மனித மூளையில் பிறக்கும் அறிவு மட்டும் இருந்தால் போதுமா?

    இதைப் பற்றி இறைவனே தன் திருமறையில் கூறுவதாவதுஇவர்களே அத்தூதர்கள் நாம் இவர்களுள் சிலருக்கு மற்றவர்களைவிட மேன்மையை வழங்கியுள்ளோம். (2:254)  

    இவ்வேத வசனத்திலிருந்தும் இல்ஹாம் ஓர் இறையருள் என்றும், உயர்ந்த ஸ்தானம், தாழ்ந்த ஸ்தானம் என்ற படித்தரங்களுடன் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் தெரிகின்றது. அந்தஸ்தில் ஏற்படும் வித்தியாசம் இறைவனுடன் அவருக்குள்ள பற்றுதலையும் உறவையும் தூய்மையான இறைபக்தியையும் நம்பிக்கையையும் பொருத்ததாக இருக்கும். அதாவது இறைவனால் மட்டும் புரிந்து கொள்ளத்தக்க இப்பண்புகளுக்கேற்பவே படித்தரத்தில் ஏற்றத்தாழ்வுகள் அமையும். ஆனால் அருளுக்குரிய எல்லா அம்சங்களும் அடங்கிய இல்ஹாம் கிடைப்பதும் அம்மேலான குணங்களின் ஒரு பலனேயாகும். இறையடியார் ஒருவர் இறைவனிடம் செய்யும் பிரார்த்தனைக்கு விடை கிடைத்துவிடுமாயின், இவ்வாறு பிரார்த்தனையும் விடையும் இடையறாமல் தொடர்வதும், அந்த இறை அறிவிப்புகளில் இறைவனுடைய மகத்துவமும் ஒளியும் காணப்படுவதும், எதிர்காலத்தைக் குறித்து மறைமுகமான அறிவும், இறைஞானமும் அடங்கியிருப்பதும் அது இறைவனிடமிருந்து கிடைத்த இல்ஹாமாகவே இருக்கும் என்பதற்கு சான்று பகர்கின்றன. ஒருவன் தனது நண்பனைக் கண்டு உரையாடுவதைப் போன்று இறையறிவிப்பு அமைவது அவசியமானதாகும். ஓர் இறையடியான் ஏதேனும் ஒரு விஷயத்தைக் குறித்து இறைவனிடம் வேண்டி நிற்கும் போது இறைவனின் திருச்சந்நிதானத்திலிருந்து இனிமையான பொருள் மிகுந்த வார்த்தைகளால் விடை கிடைத்தாலும், அவ்விடை அவனுடைய விருப்பத்தின் அல்லது சிந்தனையின் அல்லது ஆராய்ச்சியின் பலனாக இராமல் இறைவனின் கருணையாகஇறையருளாகஇருக்குமாயின் நிச்சயமாக அது இறைவனின்

    திருவசனமே ஆகும். இவ்வாறு இறைவசனம் கிடைக்கப் பெற்ற அடியார் இறைவனுடைய திருச்சந்நிதானத்தில் ஏற்கப்பட்ட நேசராக இருக்கின்றார். ஆனால் இத்தகைய மேலான நிலை, அதாவது தூய உயிருள்ள இறைவசனம் இறைவன் புறமிருந்து தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருப்பது எல்லாருக்கும் வாய்க்கக் கூடியதன்று.

    இல்ஹாம் என்றால் என்ன? இல்ஹாம் என்பது தூய்மையானவனும் எல்லாம் வல்லவனுமான இறைவன், தான் தேர்ந்தெடுத்த நல்லடியாருடன் அல்லது தான் தேர்ந்தெடுக்க நாடும் நல்லடியாருடன், உயிருள்ள, வலிமைமிக்க திருவசனங்களின் மூலம் உரையாடுவதே ஆகும். இந்த உரையாடல், முழுமையாகவும் திருப்திகரமாகவும் நீடித்து, எவ்விதத் தீய எண்ணத்தின் இருள்படராமலும் முழுமை பெறாது இராமலும், பொருளற்ற வசனங்களாய் இல்லாமலும், ஆனந்தம் நிறைந்ததும் இறைஞானம் ததும்பியதும் கௌரவம் மிக்கதுமான உயிருள்ள திருவசனங்கள் அடங்கியதுமாக இருந்தால் அதுவே இல்ஹாம் என்று கூறப்படும். இத்திருவசனங்களால் அவன் தன் அடியாருக்கு மனநிறைவைத் தருகின்றான். அவ்வசனங்களே அந்த அடியார் முன்னால் அவனை வெளிப்படுத்தவும் செய்கின்றன.

     ஆனால், இச்சீரிய வழி திறப்பது எவ்வாறு? இந்தத் திசை உயர்த்தப்படுவதற்குரிய வழிவகை என்ன? இவை பற்றித் தெளிவான நற்செய்தி கூறும் ஒரேயொரு மார்க்கம் இஸ்லாம்தான் என்று சத்தியத்தைத் தேடித் திரிவோருக்கு நான் உறுதியாகக் கூறுகின்றேன். ஏனைய மார்க்கங்களோ இறைவசனம் என்னும் அருட்பேறு அதாவது இறைவன் தன் அடியானுடன் உரையாடுதல் என்ற வாசலானது நீண்டகாலமாகவே முத்திரையிடப்பட்டு அடைப்பட்டுக் கிடப்பதாக அறிவிக்கின்றன. ஆனால் இந்த முத்திரை இறைவனால் போடப்பட்டதல்ல. மாறாக இவ்வருட்பேறு கிடைக்கப் பெறாததால் நிராசையடைந்தோர் தாமாகவே ஒரு சாக்குப் போக்கை உருவாக்கிக் கொண்டுள்ளார்கள் என்பதை நான் உங்களுக்கு உறுதியாக எடுத்துரைக்கின்றேன். கண்களில்லாமல் காணவோ காதுகளி ல்லாமல் கேட்கவோ, நாவில்லாமல் பேசவோ முடியாததைப் போலவே திருக்குர்ஆனின் உதவியில்லாமல், மெய்யான, அன்பே வடிவான, ஒளிமயமான அந்த இறைவனின் திருமுகத்தை நம்மால் காணயியலாது. நான் எனது இளமைப் பருவத்தைத் தாண்டி, தற்போது முதியவனாக இருக்கின்றேன். இந்த நீண்டகால வாழ்க்கையில் இந்த தூய்மையான ஞான ஊற்றிலிருந்து அல்லாமல் வேறெங்கிருந்தும் மெய்ஞானமாகிய பானத்தை அருந்தி மனநிறைவு கொண்ட எந்த ஒரு மனிதனையும் நான் கண்டதில்லை!!!

     இவ்வாறு ஹசரத் மஸீஹ் மவூது (அலை) கூறியிருக்க

    ஆனால் இன்று அந்தோ பரிதாபம்!!! நிசாம்மே ஜமாத்தில் ஒரு வஹீயை கூட அறிவிக்க முடியவில்லை குறிப்பாக ஐந்தாவது கலீஃபதுல் மஸீஹ் அவர்களின் காலத்தில் இத்தனை பையத் இத்தனை பள்ளிகள் இத்தனை மருத்துவமனைகள் என்று கூறப்படுவதே அன்றி மாபெரும் இறை அருளனான இறை வஹீ பற்றி ஒரு நாள் கூட பேசப்படுவதும் இல்லை அதை வெளீயிடுவதும் இல்லை!!! எனவே ஹஸ்ரத் முனீர் அஹ்மத் (அலை) அவர்களை நிசாம்மே ஜமாஅத் நீக்கியது இதன் நிலைமையை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

     இதை தான் அல்லாஹ் திருமறையில் கூறும்போது

    இரவு(ம்) அவர்களுக்கு ஓர் அடையாளமாகும். இதிலிருந்து நாம், பகலை இழுத்துக் கொள்கிறோம். அதற்குப் பின்னர் அவர்கள் இருளில் மூழ்கி விடுகின்றனர்.

    சூரியன், அதற்கெனக் குறித்த வரையறைக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறது. இது, வல்லோனும், ஞானமிக்கோனுமாகிய (இறை)வன் ஏற்படுத்திய திட்டமாகும்.( திருக்குர்ஆன் 36: 38-39 )

    இந்த வசனத்தில் இரவு அதாவதுஇருள்என்பதை இறை வஹீ இல்லாத காலம் என்று ஹசரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்கள்எச்சரிக்கின்றார்கள்!!!

    சிந்திக்கும் மக்களுக்கு இதில் ஆன்மீக உணவு உள்ளது!!!

    ஜசாக்கல்லாஹ்இந்த பதிலால் உங்கள் மனம் பாதிக்கபட்டால் அல்லஹ்விற்காக எங்களை மன்னியுங்கள், இதில் உண்மை இருக்கின்றது என்று தோன்றினால் இறைவனின் இந்த நூற்றாண்டின் மாபெரும் இறைவெளிப்பாட்டில் உங்களை இணைத்து கொள்ளுங்கள் இன்ஷாஅல்லாஹ் அமீன்

     

    1.   https://sahih-al-islam.blogspot.com/2011/06/why-new-massih-was-expelled.html#more

     

    2.   https://sahih-al-islam.blogspot.com/2014/05/truth-about-whispering-campaign.html#more

     

    3.   இஸ்லாமிய போதனைகளின் தத்துவ ஞானம

  • நூற்றாண்டு முஜத்தித்

    நூற்றாண்டு முஜத்தித்

    1.“நூற்றாண்டு”- நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உம்மத்தில் ஒரு மிக இன்றியமையாத இடத்தை பெறுகின்றது. முதலில் அன்னார் முன்னறிவித்த ஒவ்வொரு நூற்றாண்டின் தலைமையிலும் அல்லாஹ்  ஒரு முஜத்தித்தை  தோன்ற செய்து மார்க்கத்திற்கு புத்துயிர் வழங்குவான்(அபூதாவூத் 4291)

     

    இது சம்பந்தமாக காலத்தின் இமாம், கிலாஃபத்தே முஹம்மதிய்யாவின் கலீஃபா, கலீஃபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸிம் (அலை) அவர்கள், ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலைஅவர்களின் கூற்றை மேற்கோள் காட்டியவாறு இவ்வாறு கூறுகின்றார்கள்:- மஸீஹ் (அலை) அவர்கள் இந்த ஹதீதை பற்றி கூறும்போது (ஒவ்வொரு நூற்றாண்டிலும் முஜத்தித்மார்கள் வருவார்கள் பற்றியஇது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நபிமொழி என்றும், “ஷாவலியுல்லாஹ்அவர்களும்  இது நமது கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் நாவிலிருந்து தான் உதித்தது என்று சான்றுபகிர்கின்றார்கள். இது ஹதீத் நூல்களில் மிக தெளிவாக பதிவுசெய்யப்பட்டுள்ளதுமேலும் இந்த ஹதீதை எவரும் புறக்கணிக்கவில்லை.

     

    இந்த ஹதீத் ஒருபோதும் பொய்யானதில்லை. மாறாக, இது முற்றிலும் உண்மையான ஹதீத் என்பதை நான் உறுதியளிக்கின்றேன். ஒவ்வொரு நூற்றாண்டும் ஒரு முஜத்தித் வருவதை நாம் இவ்வாறு கூறலாம், அதாவதுஒரு நூற்றண்டில் நமது பௌதீக உடல் குன்றுவதைபோல் ஒவ்வொரு நூற்றாண்டும் ஆன்மிகமும் அதன் இறப்பை சந்திக்கின்றது , எனவே ஒவ்வொரு நூற்றாண்டு கடந்ததும் ஒரு புதிய தலைமுறை உருவாகின்றது. இந்த புதிய தலைமுறைக்கு ஆன்மிக புத்துயிர் வழங்க ஒவ்வொரு நூற்றாண்டிலும் முஜத்தித்மார்களை அனுப்புவது அந்த தூய *இறைவனின் சுன்னத்துல்லாஹ் வாகும்.*

    2. “நூற்றாண்டு”- பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்தின் இமாம்களின் வருகை சம்பந்தமான முன்னறிவிப்பும் நூற்றாண்டுடன் தொடர்புடையதுநபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:- “இமாமை பற்றி அறியாதவர்களின்  மரணம் அறியாமையின் மரணம் ஆகும்”(Page 96 vol. 4 Musnad Ahmad)

     மேலும் மஸீஹ்( அலை) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:-

    They do not realize that such a thought is altogether sinful because our Holy Prophet(sa) has testified to the need for an Imam for every century(Book The Need For The Imam page  5)இமாம்களின் வருகையை மறுப்பது தண்டனைக்குரிய பாவம் ஏன்னென்றால் ஹஸ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்கள் இந்த இமாமின் தேவை ஒவ்வொரு நூற்றாண்டும் தேவை என்று கூறுகின்றார்கள்.

    காலத்தின் இமாம் கிலாஃபத்தே முஹம்மதிய்யாவின் கலீஃபா கலீபத்துல்லாஹ் ஹசரத் முனீர் அஹ்மத் (அலை) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:-

    என் அன்பிற்குரியவர்களே! இதிலிருந்து இஸ்லாத்தின் அழகிய போதனைகளை எடுத்து செல்வத்திற்கு ஆட்சி அரசாங்கமோ , செல்வமோ அல்லது அதிக எண்ணிக்கையிலான மக்களோ தேவையில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம். மாறாக இந்த வேலைக்கு இறையச்சம் மற்றும் இறை நம்பிக்கையே தேவையானதாகும். அல்லாஹ் வின் அருளால் இந்த பணியை *ஜமாத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம்* பலவேறு விதமான எதிர்ப்புகள் இருந்தபோதிலும் இஸ்லாத்தின் தூய போதனைகளை உலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச்செல்கின்றது.இந்த ஜமாத்தில் உலக செல்வச்செழிப்போ அல்லது அதிக எண்ணிக்கையிலான மக்களோ இல்லை மாறாக  எளிமையான மிக சொற்ப எண்ணிக்கையிலான மக்களே உள்ளனர். இருந்த போதிலும் இதன் பணியை உண்மை இஸ்லாத்தை முழு உலகத்திலும் பரப்பும் பணியை எவராலும் தடுக்கமுடியாது. ஏனென்றால், இவர்களுடன் அந்ததூய அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட கலீபஃதுல்லாஹ் இருக்கின்றார். மேலும் அவர் காலத்தின் இமாமாகவும் திகழ்கின்றார்.(ஆதாரம்:- http://www.jamaat-ul-sahih-al-islam.com/jusai2016/fseng_29jan16.pdf

    3.“நூற்றாண்டுதிருக்குர்ஆன் கூறும் நூற்றாண்டு

    நாம் அவர்களை (மக்களின்) தலைவர்களாக ஆக்கினோம். அவர்கள் நமது கட்டளை மூலம் அவர்களுக்கு நேர்வழி காட்டினர். நாம்அவர்களுக்கு நற்செயல்களைச் செய்யுமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸக்காத்து கொடுக்குமாறும் வஹியின் மூலம் அறிவித்தோம். அவர்கள் யாவரும் எம்மை வணங்கும் அடியார்களாகவே விளங்கினர். ( திருக்குர்ஆன் 21: 74 )

     தப்பிஸிர் :- பரிசுத்த குர்ஆன் 2: 125-ல் குறிப்பிடப்பட்டுள்ள பிரார்த்தனையை நிறை வேற்றுவதற்காக இறைவன் இப்ராஹீமின் சந்ததியினரிடமிருந்து மார்க்க இமாம்களைத் தேர்ந்தெடுத்தான். தம்மைப் பின்பற்றுபவர்களிடமிருந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆன்மீக சீர்திருத்தவாதிகளை எழுப்புவது தொடர்பாக இதேபோன்றதொரு வாக்குறுதியே புனித நபி(ஸல்) அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

    (நிச்சயமாக ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இறைவன் இந்த உம்மத்திற்கு,அவர்களது மார்க்கத்தை மீட்டெடுக்கும் ஒரு சீர்திருத்தவாதியை நியமிப்பான்அபூதாவுத்).

     இந்த வாக்குறுதியானது பிரபலமான பிரார்த்தனையிலும் அடங்கி உள்ளது, அதாவது தரூதில், அது:-

     அல்லாஹ்வே! நீ (ஹஸ்ரத்)இப்ராஹீமின் மீது எவ்வாறு அருள்புரிந்தாயோ அது போன்று ((ஹஸ்ரத்) முஹம்மது(ஸல்) அவர்களின் மீதும் அருள்புரிவாயாக! ஆன்மீக சீர்திருத்தவாதிகள் (ஹஸ்ரத்) இப்ராஹீமின் சந்ததியினரிடையே தொடர்ந்து தோன்றிவந்தார்கள், யூதர்களால் ஈசா(அலை) அவர்கள் நிராகரக்கப்பட்டதன் மூலம், அவர்கள் எல்லா காலத்திற்கும் அந்த அருளை இழந்துவிட்டார்கள், மேலும் மேற்கூறப்பட்ட(2:125) பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்கான முன்னறிவிப்பு இஸ்மாயிலின் சந்ததிக்கு மாற்றப்பட்டது. இஸ்லாத்தை சீர்திருத்தம் செய்வதற்காக ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களை பின்பற்றுபவர்களிடமிருந்து ஆன்மீக சீர்த்திருத்தவாதிகள் எப்போதும் எழுப்பப்ப டுகின்றார்கள், அவர்கள் இறுதி காலம் வரை தொடர்ந்து (அந்த சீர்திருத்தத்தை) செய்து கொண்டிருப்பார்கள். தரூத்(ஷரீஃபி)ல் உள்ள பிரார்த்தனையின் நிறைவேற்றமானது ஹஸ்ரத் இப்ராஹீம்(அலை) அவர்கள் மீது  ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களது மேன்மையை நிலைநிறுத்துகின்றது, ஏனென்றால் (ஹஸ்ரத்)ஈஸா நபிக்குப் பிறகு இப்ராஹீமின் சந்ததியினரிடையே ஆன்மீக சீர்த்திருத்தவாதிகள் தோன்றுவது நிறுத்துப்பட்டு விட்டது. ,(தற்போது) அவர்கள் அவரை(அதாவது நபி(ஸல்) அவர்களைப்) பின்பற்றுபவர்களிடையே இந்த உலகம் நீடித்திருக்கின்ற வரை தொடர்ந்து தோன்றிக் கொண்டேயிருப்பார்கள்!!!! (English w/5 vol.Commentry(2018) பக்கம்-2101-2111)

     தீர்ப்பிற்குரிய இரவு, ஆயிரம் மாதங்களை விட மிகச்சிறந்ததாகும்.( திருக்குர்ஆன் 97: 4 )

     The verse, however, embodies an allusion to the appearance of Divine Reformers among the Muslims when they would stand in need of them. One thousand months roughly make one century and the Holy Prophet is reported to have said that God would continue to raise from among his followers, at the head of every century, a Reformer who would regenerate Islam and give it new life and new vigour (Mājah). Thus väl all (Night of Destiny) may signify the period of each one of these Divine Reformers.(English w/5 vol.Commentry(2018) பக்கம்-3415)

     (1000 மாதம் என்பது ஒரு தோராயமாக ஒரு நூற்றாண்டை குறிக்கும் இதையே ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இறைவன் இந்த உம்மத்திற்கு,அவர்களது மார்க்கத்தை மீட்டெடுக்கும் ஒரு சீர்திருத்தவாதியை நியமிப்பான்இப்பனுமாஜா)

    *பெருமானார் (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள்* என்பதற்கான வலுவான ஆதாரம் அவன் (அதாவது அல்லாஹ்ஒவ்வொருநூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஒரு நபரை நியமிக்கின்றான். அவர் இஸ்லாத்தை மரணிப்பதிலிருந்து காப்பாற்றுகின்றார். அதற்கு புதிய வாழ்க்கையை வழங்குகின்றார். உலகில் உள்ளவர்களை அவர்களிடம் உருவாகின்ற தவறுகள், பித் அத்துகள்(மார்க்க தில் புதிதாக புகுத்தப்படும் விஷயங்கள்) கவன மற்ற நிலைமைகள், சோம்பல்கள் ஆகிய வற்றில் இருந்து அவர் காப்பாற்று கின்றார். *இந்த தனிச்சிறப்பு பெருமானார் (ஸல்)* அவர்களுக்கே கிடைத் திருக்கின்றது. இது அவர்கள் *உயிருடன் இருக்கின்றார்கள் என்பதற்கான வலுவான ஆதாரமாக இருக்கின்றது* . யாரும் அதை எதிர்த்து நிற்வே  முடியாது. (அஹ்மதி அவ்ர் கைர் அஹ்மதி மே கியா ஃபரக் ஹே? ரூஹானி கஸாயின் தொகுதி 20 பக்கம் 469)

    சகோதரர்களே! சற்று சிந்தியுங்கள் *ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஆரம்பத்தில்* அல்லாஹ் அவனிடம் இருந்து ஒரு சீர்திருத்தவாதியை அனுப்புவது அவனது வாக்குறுதியாகும் இதை நாம் 14 நூற்றாண்டுகளாக ஏற்று, ஹஸ்ரத் மஸீஹ் மௌவூது (அலை ) அவர்களை  ஏற்றோம் ஆனால் *15 வது நூற்றாண்டு தொடங்கி வாதம் செய்பவர் வந்த பின்னும்* ஹஸ்ரத் மஸீஹ் (அலை ) அவர்களின் போதனையை கவனமற்று இருப்பது ஏனோ? இறைவன் அவனதுசுன்னத்தை ஒருபோதும் மீறமாட்டான்அவனுடன் போட்டியிட்டு வெல்லமுடியுமா!!

    ஆனால் இந்த கூற்றுக்கு மாறாக இந்த நூற்றாண்டில் சில தவறான கொள்கைகள் நம்மிடையே நிலவுகின்றன அதாவது கலீஃபதுல் ரஸூல் /மஸீஹ்மார்கள் இன்னும் குறிப்பாக கூறவேண்டும் என்றால் இந்த நபிமார்கள் அல்லாத கலீஃபாமார்கள் தான் முஜத்தித், காலத்தின் இமாம் என்று நிசாமிகளால் முன்வைக்கப்படுகின்றது. ஆனால், அவர்களின் இந்த கூற்றிற்கு எந்த திருகுர்ஆன் வசனமும் ஆதாரமாக நிற்பதில்லை. மாறாக, ஒரு கலீஃபதுல் மஸீஹ் அவருக்கு முன்னுள்ள கலீஃபதுல் மஸீஹ் இறந்ததிற்கு பிறகு தேர்வு செய்யப்படுகின்றார். ஆனால் இறைவனோ ஒவ்வொரு நூற்றாண்டின் தலைமையிலும் இறைவஹீ மூலம் ஒருவரை அவனே நியமிக்கின்றான். என்பதை அவர்கள் மறந்து விட்டனர். மேலும் நிசாமிகள் வைக்கும் மற்றும்மொரு ஆட்சேபனை ஒவ்வொரு நூற்றாண்டும் பல முஜத்தித்கள் வந்துள்ளனர் என்று.., ஆனால் திருகுரானின் அடிப்படையில் இந்த ஹதீஸ் மிகத்தெளிவாக ஒவ்வொரு நூற்றாண்டில் தலைமையில் தோன்றும் அந்த முஜத்தித் பற்றி அதாவது அந்த நூற்றாண்டின் இமாமைப் பற்றி அங்கே மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதை ஏற்க மறுக்கின்றனர். அவர்களின் நோக்கம் இந்த கிலாஃபதே ரஸூலை அதாவது நபிமார்கள் அல்லாத கலீபாக்களை இறுதி நாள் வரை கொண்டுசெல்வதில் தான் உள்ளது என்பதையும் நாம் தெளிவாக உணரலாம்

    இன்னும் மற்றுமொரு வியக்கத்தக்க ஆட்சேபனை என்னவென்றால் நிஜாமிகள் இறைபுரத்திலிருந்து தோன்றும் முஜத்தித்மார்கள் வாதம் செய்வதில்லை என்ற கூற்றை முன் வைக்கின்றனர். ஆனால் திருகுறான் மற்றும் மஸீஹ் (அலை) அவர்களின் கூற்றின் அடிப்படையில் நாம் பார்த்தால் இந்த கூற்றும் தவறானது எனபதை அறியலாம்.

    அந்த இரவை அது மூடிக் கொள்ளும் போது சான்றாகக் காட்டுகிறேன். அந்தப் பகலை அது ஒளி வீசும் போது சான்றாகக் காட்டுகிறேன். ஆணையும், பெண்ணையும் படைத்ததை சான்றாகக் காட்டுகிறேன்.( திருக்குர்ஆன் 92: 2-4 )

     “Procreation of man depends upon the coming together of two individuals of opposite sexes. The characteristic quality of the one the (male) is to give and of the other (the female) is to receive. Like the physical world, there are in the spiritual world, males- God’s great prophets and Divine Reformers- who teach and guide, and there are also spiritual females- their followers- who receive and benefit by the Divine Teaching. The verse embodies a hint that by coming together of the perfect Teacher- the Holy Prophet- and the ideal pupils- his Companions- a new world is about to be born”.   (HQ, 92: 2-4, pp. 2835)

    வருகின்ற முஜத்தித் ஆன்மீக ஆண்கள் என்ற பொருளில் வருகின்ற அதாவது முஜத்தித்மார்கள் நபிமார்களை போன்று ஆன்மீக ஆண்கள் அதாவது வாதம் செய்யும் ஆன்மீக சந்ததி என்று தெளிவாக ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

    மேலும் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்கள் ஹகீகத்துல் வஹீயில் அன்னாரின் வருகையின் முதல் அடையாளமாக நூற்றாண்டின் முஜத்தித்மார்களின் வருகையைப் பற்றி மிகவும் குறிப்பாக நூற்றாண்டின் தலைமையில் தோன்றும் இத்தகைய முஜத்தித் மார்கள்  தத்தமது காலத்தில் வாதம் செய்துத்துள்ளனர்  என்று தெளிவாக குறிப்பிட்டுளார்கள். ( HaqIqatul-WaHI—The Philosophy of Divine Revelation page no:241)

    நூற்றாண்டு:-ஒவ்வொரு நூற்றாண்டின் தலைமையிலும் ஒரு முஜத்தித் தோன்றுவர் என்றும் அத்தகைய முஜத்தித் வாதம் செய்வார்கள் என்றும் அவர்களின் வருகை இறுதி தீர்ப்புநாள் வரை தொடரும் என்பதை திருகுரானின் அடிப்படையில் பார்த்தோம். மேலும் நூற்றாண்டு எவ்வாறு கணக்கிடப்படுகின்றது என்பதையும் இப்போது பார்க்கலாம் நபிகள் நாயகம் ஸல் அவர்களும் ஒரு சிறந்த முஜத்தித் ஆவார்கள்.

    நபி (ஸல்) அவர்கள் ஒரு *சிறந்த முஜத்தித் ஆவார்கள்.* (Urdu- Roohani Khazain, Volume 20, Page 206)

    அன்னாருக்கு பிறகு ஒவ்வொரு நூற்றாண்டின் தலைமையிலும் முஜத்தித்மார்கள் தோன்றுவார்கள். அவ்வாறு அவர்கள் தோன்றும் காலத்தை பற்றி ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹமத் அஸிம் (அலை) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள். “அந்த நாளை பற்றிய அறிவு எவர்க்கும் இல்லை மேலும் அதன் அறிவை அவன் தன்னகத்தே வைத்துள்ளான் இதன் அறிவை அவனது மிகவும் நெருங்கிய அவனது அன்பிற்குரிய ஹஸ்ரத் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூட வெளிப்படுத்த வில்லை. ” மேலும் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.https://sahih-al-islam.blogspot.com/2015/10/super-blood-moon-grand-celestial-sign.html)

    அவர்கள் உம்மிடம் அந்த நேரத்தைக் (கியாமத்தை) குறித்து அது எப்போது வருமென்று கேட்கின்றனர். நீர் கூறுவீராக! அதனைப் பற்றிய அறிவு என் இறைவனிடமே உள்ளது. அவனையன்றி அதனை அதற்குரிய காலத்தில் வெளிப்படுத்த எவராலும் முடியாது. அது வானங்களிலும் பூமியிலும் பாரமானதாக இருக்கும். (மேலும்) அது உங்களிடம் திடீரென்று தான் வரும். அது குறித்து நீர் அதனை நன்கறிந்திருப்பதைப் போன்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறுவீராக: அதனைப் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் இதனை அறிவதில்லை.( திருக்குர்ஆன் 7: 188 )

    இறுதிக்காலம் குறித்து மக்கள் உம்மிடம் கேட்கின்றனர். நிச்சயமாக அதைப் பற்றிய அறிவு அல்லாஹ்விடம்(தான்) உள்ளதென்று நீர் கூறுவீராக. மேலும் அந்த நேரம் நெருங்கியிருக்கலாம் என உமக்குத் தெரிவிப்பது எது?( திருக்குர்ஆன் 33: 64 )

     எனவே ஒரு நூற்றாண்டிற்கு பிறகு அடுத்த நூற்றாண்டு என்று கணினியை வைத்து நாளை கணிப்பது அறிவார்ந்த சிந்தனையாக இருக்காது, மாறாக அல்லாஹ் யாரை அவனது வஹியின் மூலம் எழுப்புகின்றான் எப்போது எழுப்புகின்றான் என்பதை அவன் எவரிடமும் அறிவிப்பதில்லை, எனவே ஒரு நூற்றாண்டு முடிந்து அடுத்த நூற்றாண்டுகளில் வாதம் செய்பவரை பொறுத்தே உள்ளது. மேலும் வாதம் செய்யும் அந்த புனிதர்கள் அவர்களின் நூற்றாண்டிற்குறிய வாதமும்  செய்கின்றனர்.

    இதையே ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள் 13 வது நூற்றாண்டு முடித்து 14 வது நூற்றாண்டு தொடங்கியது அந்த ஏக இறைவாகிய அல்லாஹ்எனக்கு வஹியின் மூலம் அறிவித்தான் நான் தான் முஜத்தித் என்று. “(கிதாபுல் பரிய்யா பக்கம் 201)

     இதையே ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸிம் (அலை) அவர்களும் கூறுகின்றார்கள்;-

     பாருங்கள்! எனது பிறப்பு ஹிஜிரி 1380 அதாவது 14 வது நூற்றாண்டு ஆகும் மேலும் அந்த ஏக இறைவன் ஹிஜிரி 1421 அதாவது 15 நூற்றாண்டில் என்னை வஹியின் மூலம் எழுப்பினான்

     இவ்வாறே நாம் வாழும் காலத்தில் இறைவனால் 15 வது நூற்றாண்டில் முஜத்தித்தாக எழுப்பட்டவரே ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள், அன்னார் இந்த நூற்றாண்டின் இறைவஹீயின் மூலம் வாதம் செய்துள்ளார்கள்

    இறங்கிய இறைவஹீ(10.09.2010)

                                                       Bismillah hir rahman nir raheem

    Ya Khalifathullah! Qul: “Annal Mujaddido” (O Khalifathullah! Tell them: ‘I am the Mujaddid’)-கலீபத்துல்லாஹ்வே! அவர்களுக்கு கூறுவீராக! “நான் தான் முஜத்தித் என்று

    அல்ஹம்துலில்லாஹ், உண்மையை தேடும் ஒரு இறைநேசருக்கு நிச்சயம் ஒரு சிறந்த ஆன்மீக உணவாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை, மேலும் உங்கள் புரிதலுக்காக அஹ்மதிய்யா ஜமாத்தில் இதுவரை ஏற்றுக்கொண்ட நூற்றாண்டின் முஜத்தித்மார்களின் பட்டியலிடப்பட்டுள்ளது ஜசாக்கல்லாஹ்.

  • உம்மத்தே முஹம்மதியாவில் மஸீஹ்மார்கள் ஒருவர் அல்ல

    உம்மத்தே முஹம்மதியாவில் மஸீஹ்மார்கள் ஒருவர் அல்ல!!!!

    அல்ஹம்துலில்லாஹ்..இந்த நூற்றாண்டில் நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய மிக இன்றியமையாத ஒரு ஆன்மீக கேள்வியாகும். ஏன்னென்றால், நிஸாமிகளின் இந்த கொள்கையை, இந்த காலத்தின் இமாம் ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபத்துல்லாஹ்(அலை) அவர்கள் இந்த நிலையை மிகத்தெளிவாக இறுதி நபி கொள்கையின் *மற்றொரு* வடிவம் என்று கூறுகின்றார்கள். எனவே எந்த நோக்கத்திற்காக நாம் அஹமதியத்தை ஏற்றுகொண்டோமோ இந்த கொள்கையின் மீதும், மேலும் திருக்குர்ஆன் எந்த கொள்கையை வழிகேட்டு கொள்கை என்று கூறுகின்றதோ அந்த நிலையை பற்றி இந்த கேள்வி நமக்கு உணர்துவதால், இதன் பதிலை ஒரு உண்மையை தேடும் ஒவ்வொரு சகோதரர்களும் தவறாமல் முழுமையாக படித்து சிந்திக்கவேண்டிய இன்றியமையாத நிலை நமக்கு உள்ளது.(https://sahih-al-islam.blogspot.com/2018/03/khalifatullah-performs-tawaf-in-kaaba.html)

    மஸீஹ் ஒருவர் அவர் தோன்றிவிட்டார் என்ற நம்பிக்கை ஹசரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் நம்பிக்கையாக இல்லை!!! மாறாக இந்த நம்பிக்கையை அன்னாருக்கு பிறகு தோன்றிய கலீபதுல் ரசூல்மார்களின் காலத்தில் இன்னும் குறிப்பாக கூறினால் மூன்றாவது கலீபதுல் மஸீஹ் அவர்களின் காலத்தில் தோன்றியது. (ஆதாரம் ஆங்கில புத்தகம் Khilafat and mujaddidiyyat பக்கம்  37)

    மேலும் நிசாமிகளால் இன்றளவும் இத்தகைய கொள்கையை இந்த நபிமார்கள் அல்லாத கலீஃபாக்களை தீர்ப்புநாள் வரை கொண்டு செல்வதற்காக ஹஸ்ரத் மஸீஹ் மஊத் (அலை) அவர்களின் வருகைக்கு பிறகு இந்த கதவை அடைக்க *முயல்கின்றனர்.* இவர்களின் முரண்பட்ட கொள்கை இப்போது எவ்வாறு உள்ளது என்றால், 

    ஒரு சாரார் மஸீஹ் இனி வரமாட்டார். ஆனால் நபி வராலம். என்றும் மற்றும் சிலரோ இந்த கடைசி 1000ம் வருடத்திற்க்கு யாரும் வரமாட்டர்கள் ஏன்னென்றால் நம்முடைய ஆதமின் காலம் 7000 வருடம் கடைசியாக தோன்றிய மஸீஹ் தோன்றிவிட்டதால் இனி நபிமார்கள் அடுத்த ஆதாமின் அதாவது மற்றும்மொரு 7000 வருட *சூழற்ச்சியின்* போது வருவார்கள் என்றும் முற்றிலும் ஒற்றுக்கொன்று முரண்பட்ட நிலைப்பாட்டில் உள்ளனர்.ஆனால் திரு குர்ஆன் இத்தகைய கூற்றுக்களை முற்றிலும் மறுக்கின்றது. சகோதரர்களே!!! அல்லாஹ் திருமறையில் மஸீஹ்மார்களின் அதாவது ஹசரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் நிழல்களின் வருகையை பற்றி குறிப்பிடும்போது இவ்வாறு கூறுகிறான்.

    *“வ ஆகரீன மின்ஹும் லம்மா யல்ஹக்கூ பிஹிம்”* “மேலும் இதுவரை, அவர்களுடன் சேராத மற்றவர்களுக்கிடையிலும் (அவரை எழுப்புவான்)”. (அல் ஜுமுஆ 62:4)

    இந்த திருமறை வசனம் பற்றி நபி பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வாறு நமக்கு விளக்குகின்றார்கள். 

    அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :-நாங்கள் (ஒரு சமயம்) நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுக்கு ‘அல்ஜுமுஆ’ எனும் (62 வது) அத்தியாயத்தில் ‘இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதரை அவன் அனுப்பியுள்ளான்)’ எனும் (3 வது வசனம் அருளப்பெற்றது. அப்போது, ‘அந்த (ஏனைய) மக்கள் யார்? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்டேன். நான் மூன்று முறை கேட்டும் அவர்கள் (எனக்கு) பதிலளிக் கவில்லை. எங்களிடையே *சல்மான்-அல்-ஃபார்ஸி*(ரலி) இருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் சல்மான் ஃபார்ஸி (ரலி)அவர்கள் மீது தம் கரத்தை வைத்தார்கள். பிறகு, கிருத்திகை (ஸுரய்யா) நட்சத்திரக் குழுமத்தின் அருகில் இறைநம்பிக்கை இருந்தாலும் ‘சில மனிதர்கள்’ அல்லது ‘இவர்களில் ஒருவர்’ அதனை அடைந்தே தீருவார்’ என்று கூறினார்கள்.

    அபுல் ஃகைஸ் சாலிம்(ரஹ்) அறிவித்தார் அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், ‘இவர்களில் சில மனிதர்கள் இதனை அடைந்தே தீருவர்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது. ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 65. திருக்குர்ஆன் விளக்கவுரை ஹதீஸ் எண் 4897 மற்றும் 4898

    மேற்கண்ட ஹதீஸின் படி,  இறுதி காலத்தில் தோன்றும் ஈசா மஸீஹ் பற்றியும் அவர்கள் கடந்த நூற்றாண்டில் பஞ்சாபில் தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களை அன்னாரின் வஹீ வாதத்தின் அடிப்படையில் அஹ்மதிகளாகிய நாம் ஏற்றுள்ளோம்,

    அன்னார் (அலை) அவர்கள் இந்த வசனத்தை பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள்

    (மேலும் இதுவரை அவர்களுடன் சேராத மற்றவர்களுக்கிடையிலும் (அவரை எழுப்புவான்) என்ற (62:3)

    திருக்குர்ஆன் வசனத்தின்படி பிரதிபிம்பமான முறையில் நான் அதே காத்தமுல் அன்பியாவாக இருக்கிறேன். என்பதை நான் பலமுறையும் கூறியுள்ளேன். மேலும் இன்றிலிருந்து 20 ஆண்டுகளுக்கு முன் நான் வெளியிட்ட பராஹீனே அஹ்மதிய்யா என்ற நூலில் என் பெயரை இறைவன் முஹம்மது என்றும் அஹ்மது என்றும் கூறி, எனது வருகையை ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களின் வருகை என்றே கூறியுள்ளான்.

    ஆனால் *காத்தமுல் அன்பியா முஹம்மது முஸ்தபா (ஸல்)* அவர்களின் நபிமொழியின் அடிப்படையில் அவர்கள் பலர் என்பதும் காத்தமுள் குலஃபா ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவ்வாறு தோன்றுவார்கள் அன்னாரின் பிம்பங்கள் என்பதும் இன்னும் விளக்கமாக தோன்றக்கூடியவர்கள் ஒருவரல்ல பலர் என்பதும் அவர்கள் அனைவரும் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் பிரதி பிம்பங்களாக இருப்பார்கள் என்பதும் தெளிவாகின்றது.

    ஆனால் மஸீஹ் மார்கள் ஒருவர்தான் என்ற கொள்கையை நிலைநாட்ட நிஜாமிகள் இந்த நபிமொழியில் உள்ள பலர் என்பது ஹசரத் மஸீஹ் (அலை) அவர்களை பின்தொடரும் கலீபதுல் மஸீஹ்கள் தான் என்ற அடிப்படை ஆதாரம் இல்லாத ஒருநிலைப்பாட்டை முன்வைக்கின்றனர். இதற்காக அவர்கள் *தோன்றக்கூடியவர்கள்* சல்மான் பார்சி (ரலி) அவர்களின் பௌதிக சந்ததியாக மட்டுமே இருப்பார்கள் என்ற இஸ்லாத்திற்க்கு முற்றிலும் ஒரு மாறுபட்ட கருத்தை முன்வைக்கின்றனர்.

    ஆனால் சந்ததிகளை பற்றி திருகுர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடும் போது;

    *நிச்சயமாக  உமது பகைவனே ஆண் சந்ததியற்றவன்.* ( திருக்குர்ஆன் 108: 4 )

    திருக்குர்ஆனின் கருத்துப்படி இறை அறிவிப்பைப்(இறைவஹீயை) பெறும் கூட்டத்தினரே ஆன்மீக சந்ததிகளாவர். அப்படிப்பட்ட ஆன்மீக சந்ததியினரை முஹம்மது நபி (ஸல்) அவர்களாலேயே பெறமுடியும்; அவர்களின் எதிரிகளால் பெற *இயலாது*, என்பது தெளிவாகின்றது.

    மேலும் அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் கூறும்போது, 

    மேலும் இப்ராஹீம் அவருடைய இறைவன் சில கட்டளைகளைக் கொண்டு சோதித்து, அவற்றை அவர் நிறைவேற்றிய நேரத்தையும் (எண்ணிப் பாருங்கள்). நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக்குவேன்  என்று அவன் கூறினான். என் சந்ததிகளிலிருந்தும்  என்று (இப்ராஹீம்) கேட்டார். (அதற்கு அல்லாஹ் ஆம்! எனினும்) என் வாக்குறுதி அநீதியிழைப்பவர்களைச் சேராது என்று கூறினான். ( திருக்குர்ஆன் 2: 125 )

    இங்கும் அல்லாஹ் இறை செய்தியை ஏற்றுக்கொள்பவர்களே சந்ததியினர் என்று மிகத்தெளிவாக கூறிப்பிடுகின்றான்.

    மேலும் இது தொடர்பாக கிலாஃபதே முஹம்மதிய்யாவின் *13* வது கலீஃபா ஹசரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) இவ்வாறு நம்மை எச்சரிக்கின்றார்கள்.

    (வ ஆஹரீன மின்ஹும்)(மேலும் இதுவரை அவர்களுடன் சேராத)

    என்ற இந்த (62:4)வசனத்தில் வாக்களிக்கப்பட்டவரின் தோழர்களை தமது சஹாபாக்களாக ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏன் கூறினார்கள்? மேலும் பிரதிபிம்பமாகத் தோன்றுதல் என்ற கருத்தை மறுப்பதனால் இவ்வசனம் பொய்ப்படுத்தப்படுகிறது.

    தோன்றக்கூடியவர்கள் பிரதிபிம்பங்களான ஆன்மீக சந்ததிகள் என்பதை மிகவும் அழுத்தமாக இன்னும் அவ்வாறு இல்லை என்றால் இந்த வசனமே பொய்யாகிவிடும் (நஊதுபில்லாஹ்) என்று நம்மை எச்சரிக்கின்றார்கள்

    மேலும் இந்த இறைவசனத்தை பௌதீகமாக பொருள் கொள்பவர்களை பார்த்து அன்னார் இவ்வாறு கூறுகின்றார்கள்:

    பௌதீகமான பொருள் கொள்ளும் மக்கள் வாக்களிக்கப்பட்டவர் ஹஸன் (ரலி) அவர்களின் சந்ததியில் தோன்றுவாரென்றும் ஹுஸைன் (ரலி) அவர்களின் சந்ததியில் தோன்றுவார் என்றும், சிலர் அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹுமா) அவர்களின் சந்ததியில் தோன்றுவார் என்றும் கூறுகின்றனர். ஆனால் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்சொன்ன முன்னறிவிப்பைப் பற்றி கொண்டிருந்த கருத்து வாக்களிக்கப்பட்டவர் தங்கள் பிள்ளைகளைப் போல் தங்கள் வாரிசாகவே திகழ்வார் என்பதேயாகும். அதாவது அவர்களின் பெயர்களின் வாரிசாக, அவர்களின் குண இயல்புகளின் வாரிசாக, அவர்களின் ஞானத்தின் வாரிசாக, அவர்களின் ஆத்மீக தன்மையின் வாரிசாக வாக்களிக்கப்பட்டவர் திகழ்வார் என்பதேயாகும். எனவே ஒவ்வொரு வகையிலும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரதிபிம்பத்தை வாக்களிக்கப்பட்டவர் தன்னுள் காட்டுவார்; அவர் சுயமாக இக்குண இயல்புகளைக் காட்டுவதில்லை. மாறாக எல்லாவற்றையும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புறமிருந்தே பெறுவார். தாம் அவர்களிலே ஃபனாவாகி (மாய்ந்து, அர்ப்பணமாகி) அவர்களின் முகத்தையே பிரதிபலிப்பவராக திகழ்வார். எனவே அவர் நிழலாக ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களின் பெயரைப் பெறுவதைப் போன்று, அன்னாரின் பண்புகளை பெறுவதைப் போன்று, அன்னாரின் ஞானத்தைப் பெறுவதைப் போன்று அவருடைய நபிப்பட்டத்தையும் பெறுவார்.

    சகோதரர்களே! இந்த இடத்தை படித்து ஆழ்ந்து சிந்தியுங்கள். தோன்றக்கூடிய பிம்பமானவர் ஒரு நபியாக இருப்பார் என்பது தெளிவாகிறது. *ஏனென்றால்* எந்த ஒரு பொருளின் நிழல் அந்த பொருளாகவே உள்ளது. ஒரு மனிதன் நிழல் மனிதனாக *இருப்பது போல்* ஒரு பறவையின் நிழல் பறவையாக இருக்கிறது. அதே போலவே ஒரு நபியின் நிழல் ஒரு நபியாக இருக்குமே அன்றி நபிமார்கள் அல்லாத *கலீஃபதுல் மஸீஹாக *மட்டும்* *எவ்வாறு இருக்க முடியும்?*  *சகோதரர்களே!* சற்று சிந்தியுங்கள்!!! ஹஸ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்களின் நிழல் அபூபக்கர் (ரலி) அவர்களா? அல்லது மஸீஹ் மஹதியான ஹசரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களா?

    மேலும் அன்னார் (அலை) மஸீஹ்காக நபி (ஸல்) அவர்களின் பிம்பங்களாக தோன்றக்கூடியவர்களின் குலம், கோத்திரம் என்று கிறித்தவர்களை போல் கேட்பவர்களுக்கு அழகிய முறையில் தனது நிலையை பற்றி விளக்கியுள்ளார்கள்.

    அன்னார் (அலை) கூறுகின்றார்கள்:-

    *இன்னா அஃதய்னாகல் கவ்ஸர்* நிச்சயமாக நாம் உமக்கு மிகுதியான நன்மையினை வழங்கியுள்ளோம். (108:2)

    என்ற வசனத்திலும் பிரதிபிம்பமான ஒருவரைப் பற்றி வாக்களிக்கப்பட்டிருக்கிறது. அவரது காலத்தில் “கவ்ஸர்” என்ற மிகுதியான நன்மைகள் வெளியாகும் எனக்கூறப்பட்டிருக்கிறது. அதாவது ஆத்மீக அருள்களின் நீருற்றுகள் வெளிப்படும். மேலும் அதன் மூலம் உலகில் இஸ்லாத்தை உண்மையாக ஏற்றுக்கொள்பவர்கள் அதிகமாகி விடுவர். இந்த வசனத்திலும் உலகியல் ரீதியான (வெளிப்படையான) சந்ததிகளின் தேவை அற்பமாகக் கருதப்பட்டு பிரதிபிம்பமான சந்ததியைப் பற்றி முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது.

    நான் இஸ்ராயீல் சந்ததியைச் சேர்ந்தவனாகவும் ஹஸ்ரத் ஃபாத்திமா (ரலி) அவர்களின் சந்ததியைச் சேர்ந்தவனாகவும். இருக்கக்கூடிய பாக்கியத்தை இறைவன் எனக்கு வழங்கிய போதிலும், இவ்விரு குடும்பங்களின் இரத்தங்கள் என் நரம்புகளில் ஓடுகின்ற சிறப்பை நான் அடைந்த போதிலும், *நான் ஆத்மீக உறவையே முதன்மையாகக் கருதுகிறேன்.* எனது பிரதிபிம்பமான தன்மையே இந்த ஆத்மீக உறவாகும்.

    எனவே தோன்றக்கூடிய பிம்பமானவர்கள் ஒருவரல்ல பலர் என்பதும் அவர்கள் இறைவஹீயை பெற்று வாதம் செய்யும் ஆன்மீக சந்ததிகளான கவ்ஸர்”கள் நபிமார்கள் அதாவது மஸீஹ்மார்கள் என்பதும் தெளிவாகின்றது.

    இவ்வாறு பிம்பமானவர்கள் அதாவது மஸீஹ் மார்கள் ஒருவர் அல்ல என்பதற்கு ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் போதனைகளில் இருந்தும் பல்வேறு சான்றுகள் உள்ளது. 

    வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:-

    முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு முறையல்ல; ஆயிரம் முறை உலகில் பிரதிபிம்பமாகத் தோன்றுவதும், பிரதிபிம்பமான முறையில் வேறு பல முழுமை பெற்ற தன்மைகளுடன் தமது நுபுவ்வத்தை வெளிப்படுத்துவதும் சாத்தியமேயாகும்.

    மேலும் அன்னார் கூறுகின்றார்கள்:-

    நிழலான /பின்பமான மஸிஹ் மார்களாகப் பலர் வரலாம் – இதுவும் எனது தனிப்பட்ட கருத்தில்லை. பெருமதிப்புக்குரிய நபிமார்களின் பரப்பரியத்தின் சாரம் இதுவே ஆகும். கியாமத் நாள் வரை  தஜ்ஜால்கள் வரமுடியும். இவ்வாறு  30 தஜ்ஜால்கள் உலகில் தோன்றக்கூடும் “லீ குல்லி தஜ்ஜாலி ஈஸா ” என்ற நபி மொழிக்கு ஏற்ப குறைந்தது 30 *மஸிஹ்மார்கள்* வருவார்கள். பிற மஸீஹ்மார்கள் பின்வரும் காலத்தில் தோன்றுவார்கள். இவை அனைத்தும் நிச்சயம் சாத்தியமே. மேலும் அந்த வாக்களிக்கப்பட்ட மஸீஹ் வாதம் செய்பவன் நானே. ஆனால் நான் ஒருவனே மஸீஹ் என்றும் நானே முதலாவது மற்றும் கடைசி வாக்களிக்கப்பட்ட மஸீஹ் என்றும் வாதம் செய்யவில்லை. என் பார்வையில் எனக்கு பிறகு 10000 க்கும் மேற்பட்ட வாக்களிக்கப்பட்ட மஸீஹ்மார்கள் வருவார்கள், நான் இந்த காலத்திற்கு மட்டுமே மஸீஹ் ஆக உள்ளேன்.(Isaalaye Auhaam,
    p.197)

    அதாவது பல மஹ்திகள் (இதற்கு) முன்னர் வந்திருக்கலாம் என்றும் ஒரு வேளை எதிர்காலத்திலும் அது போல வருவார்கள் என்றும் இனிமேலும் இமாம் முஹம்மது என்ற பெயரைக் கொண்ட எவராவது கூடத் தோன்றுவதற்கான சாத்தியமுள்ளது என்பதையும் நாம் ஒப்புக் கொள்கிறோம்.( ரூஹானி கஸாயின் தொகுதி 3  பக்கம் 379)

    எதிர்காலத்திலும் எண்ணற்ற மஸீஹ்கள் வருவது சாத்தியமே. பத்தாயிரத்திற்கும் அதிகமான மஸீஹ்கள் வருவதற்கும் அவர்களுள் எவரேனும் ஒருவர் டமாஸ்கஸில் இறங்குவற்கும் சாத்தியம் உள்ளது. .( Isaalaye Auhaam ,ரூஹானி கஸாயின் தொகுதி 3  பக்கம் 251)

    இன்னும் அன்னார் தன்னை போன்ற “மஸீஹ்லே மஸீஹ்” பற்றியும் குறிப்பிட்டு கூறுகின்றார்கள். 

    “அநேகமாக வேறு சில மஸுஹ்  மவூதும் இருக்கலாம் என்பதை என்னால் மறுக்கவும் முடியாது. மேலும் நான் அதனை மறுக்கவும் மாட்டேன்”.( (Majmooa Ishteharat, vol. 1, p. 207)

    “அதாவது எனக்கும் கூடுதலாக மற்ற சில மஸுஹ் போன்றவர்(களும்) வரக்கூடும் என்பதையும் நான் மறுக்கவில்லை” . (Majmooa
    Ishteharat, vol. 1, p. 208)

    மேற்கண்ட ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) கூற்றுக்கள் மஸீஹ் ஒருவர் அல்ல, பலர் என்று தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் போது இக்கால அஹ்மதிகள் இந்த கூற்றுக்களுக்கு என்ன மதிப்பளீத்தார்கள் என்பதற்கு அவர்கள் இதனை தன் முதுகிற்கு பின்னால் தூக்கி எறிந்து விட்டார்கள் என்பதே கசப்பான உண்மையாகும்.

    இன்னும் இது தொடர்பாக இந்த நூற்றாண்டில் இறைபுரத்தில்லிருந்து அருளாக தோன்றிய இக்காலத்தின் மஸீஹ் கிலாஃபதே முஹம்மதியாவின் *14* வது கலீஃபா ஹசரத் முனீர் அஹ்மத் (அலை) அவர்கள் இவ்வாறு வாதம் செய்கின்றார்கள்;

    வாக்களிக்கப்பட்ட மஸீஹான, ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் இஸ்லாத்தின் அழகை வெளிக்காட்டுவதற்காகவும், அல்லாஹ், மற்றும் நபி பெருமானார் (ஸல்) அவர்களின் மீது அன்னாருக்கு இருந்த அற்புதமான உறவைக் குறித்து எடுத்துக் காட்டுவதற்காகவும் வந்தார்கள். அதாவது, நபி பெருமானார் (ஸல்) அவர்களைப் பின்பற்றாதிருக்கும் பட்சத்தில், அன்னாரின்  நபித்துவ வாதம் ஏற்கத்தகுந்ததாக இருக்காது. அதாவது, எந்தவொரு நபியும் திருக்குர்ஆனின் சட்டத்தை மாற்றி அமைப்பதற்கோ, மற்றொரு ஷரியத்தின் இறை வேதத்தை நடைமுறைப் படுத்துவதற்கோ தோன்ற இயலாது. அன்றியும் எந்தவொரு நபியும், மாநபி பெருமானார் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களைப் போன்ற சிறப்புடனும், கம்பீரத் தோற்றத்துடனும், பரிபூரணத் தன்மையுடனும் இனி வரப்போவதில்லை. எனினும், அல்லாஹ், மற்றும்  நபி பெருமானார் (ஸல்) அவர்களின் அன்பிற்காக,  தங்களை முழுமையாக அர்ப்பணிக்கின்ற இது போன்ற  நபிமார்கள் வருவார்கள் என்பது ஒரு மறுக்க இயலாத  உண்மையாகும். அவ்வாறு வரும் இந்த நபிமார்கள், மனிதர்களிலும் நபிமார்களிலும் எல்லாம் சிறந்தவரான  நபி பெருமானார் (ஸல்) அவர்களுடைய முழுமையான பிரதிபலிப்பாக(நிழல்களாக) வருவார்கள். இவ்வாறு வரும் இச்சிறிய முஹம்மதுகள்,  இறுதிக் காலத்தில் பரவும்  இருளை அகற்றுகின்ற   ஒளி விளக்குகளாக இருப்பார்கள். மேலும், எல்லா மார்க்கங்களைச் சேர்ந்த மக்களையும், அதாவது  முஸ்லிம்கள் உட்பட அனைவரையும்  இஸ்லாம், மற்றும் அவர்கள் பிறந்த உண்மையான மார்க்கத்தின் பக்கம் மீண்டும் திரும்ப செய்வார்கள். 

    நிச்சயமாக, வாக்களிக்கப்பட்ட மஸீஹான, மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள், “
    Ek-Ghalati-Ka-Izala” (ஒரு தவறான எண்ணம் அகற்றப்பட்டது) என்ற தனது புத்தகத்தில் கூறியுள்ளதாவது:

    “சுருக்கமாக, “காத்தமுன்னபிய்யீன்” என்ற சொல்லிற்கு, ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நுபுவ்வத்தின் மீது இருக்கின்ற அந்த ஏக இறைவனின் முத்திரையாகும் இந்த முத்திரை ஒருபோதும் உடைந்துபோக சாத்தியமே இல்லை ஆயினும் நமது கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் ஒருமுறை அல்ல ஆயிரம் முறை உலகில் பிரதிபிம்பமாக தோன்றுவதும். பிரதிபிம்பமான முறையில் வேறு பல முழுமை பெற்ற தன்மைகளுடன் தமது நுபுவ்வத்தை வெளிப்படுத்துவதும் சாத்தியமேயாகும். இந்த பிரதிபிம்ப நிலை இறைவன் புறத்திலிருந்து நியமிக்கப்பட்ட ஒரு பதவியை ஆகும். 

    இதை பற்றி இறைவன் திருமறையில் கூறும்போது:

                 “வ ஆஹரீ ன மின்ஹும் லம்மா யல்ஹக்கு பிஹிம்”

    “மேலும் இதுவரை, அவர்களுடன் சேராத மற்றவர்களுக்கிடையிலும் (அவரை எழுப்புவான்)”. (அல் ஜுமுஆ 62:4)

    பிரதிபிம்பமாக தோன்றுபவர்கள் குறித்து நபிமார்களுக்கு எந்தவிதமான குறையும் ஏற்படுவதில்லை எனினும் நபிமார்களின் தோற்றமாகவும் அவர்களின் உருவமாகவே திகழ்வார்கள். ஆனால் இவர்களை தவிர வேறு யாரும் வருவதால் (சுதந்திரமாக) அவர்களுக்கு நிச்சயமாக அவமானம் உண்டாகும்.

    மேலும் அல்லாஹ்,  எல்லா நாடுகளுக்கும் முன் சென்ற காலங்களிலும்  நபிமார்களையும், தூதர்களையும், மஸீஹ்மார்களையும், சீர்திருத்தவாதிகளையும் அனுப்பியுள்ளான். இவ்வாறு இருக்க தற்போது மட்டும்  இறைவன்,  இவ்வுலகில் வாழும்  புதிய தலைமுறை மக்களுக்காக,  இனி  நபிமார்கள், மற்றும் சீர்திருத்தவாதிகள் யாரையும்   அனுப்பமாட்டான் என்று கூறுவதும் , அல்லாஹ் பேசுவதையே நிறுத்திவிட்டான் என்று கூறுவதும்  உங்களுக்கு விவேகமுள்ள செயலாக இருக்கின்றதா? சற்று சிந்தியுங்கள். எனது அருமையானவர்களே! அதாவது, அவர்களை இறைவனிடமிருந்து வந்த  ஒரு எச்சாரிக்கையாளரோ,  அல்லாஹ்வின் ஒரு தூதரோ வரவில்லை என்றால், அவர்களின் தவறான வழிகளின் காரணமாக, அவர்களை குற்றம் சுமத்த எவ்வாறு முடியும்?  நிச்சயமாக, அல்லாஹ் தனது படைப்பினங்களிடையே ஒருபோதும் அநியாயமாக நடந்து கொள்வதில்லை. இந்த பூமியில், ஒரு மனிதர் கூட இல்லாத அந்த நாள் வருகின்ற வரையிலும், அல்லாஹ்வின் நபிமார்கள் தொடர்ந்து வந்துக்கொண்டே தான் இருப்பார்கள். அதாவது, மக்களை அவர்களின் செயல்களின் காரணமாக எச்சரிக்கை செய்வதற்காகவும், இஸ்லாத்தின் (அல்லாஹ்வின் பக்கம் முழுமையாக கீழ்படிதல்) பக்கம் மீண்டும்  அவர்களைக்  கொண்டு வருவதற்காகவும் தொடர்ந்து வந்து கொண்டேதான் இருப்பார்கள். எங்கெல்லாம் மக்களும், நாடுகளும் இருக்கின்றதோ, அங்கெல்லாம்  மக்களை எச்சரிக்கை செய்ய  எச்சரிக்கையாளர்கள் வருவார்கள். அன்றியும், அவர்கள் தங்களை சீர்திருத்தம் செய்யவேண்டும் என்ற காரணத்தினால், அல்லாஹ்வின் நேசம், மற்றும் கருணைக்கான நற்செய்தியை வழங்குவதற்காகவும், தற்காலிக தங்குமிடமான இப்பூமியில் யாரும் உயிருடன் இல்லாதிருக்கின்ற வரையிலும்,  அல்லாஹ்வுடைய  நாட்டத்தை  இப்பூமியில் நிறைவேற்றுவதற்காகவும் அவர்கள்  வருவார்கள்.

    அல்லாஹ், தனது நேசத்திற்குரிய, மிகவும் பரிபூரண அடியாரும்,  போற்றதக்க மனிதருமான, காத்தமுன் நபீயீன் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களை வாழ்க்கையின் வழிமுறையான இஸ்லாத்துடனும்,  முழுமையான  மார்க்கத்துடனும்  இவ்வுலகிற்கு  அனுப்பி அருள்புரிந்துள்ளான். இதன் மூலம்  இவ்வுலகம்,  அன்னாரது இருப்பிற்கு ஏற்றார் போன்று  தங்களது இருப்பை வடிவமைப்பதற்கும், அன்னாரை அச்சில் வார்த்தார் போன்று நடப்பதற்கும், அன்னாரது  பிரதிபலிப்பாகவும் (புரூஸாக),  நிழலாகவும் (ஜில்லியாகவும்) நடப்பதற்கும்,  ஒரு முழுமையான  முன்மாதிரியை  பெற்றுள்ளது என்பதே ஒரு பெரும் அடையாளமாகும். அன்றியும், நபி பெருமானார் (ஸல்) அவர்களின் பிரதிபிம்பமாக பலர் வருவதன் மூலம், இஸ்லாத்தின் மகிமை பிரதிபலிக்கப்படுகின்றது. எனினும் இவ்வுலகிற்கு வருவதற்கு முன்பே,  அல்லாஹ்,  அவர்களில் யாரை இஸ்லாத்தின் சீர்திருத்தவாதிகளாகவும், அல்லாஹ்வுடைய நபிமார்களாகவும் நியமித்து  தூய்மைப்படுத்தியுள்ளானோ , நிச்சயமாக  அவர்களே  உண்மையான நற்பேறு பெற்றவர் ஆவார்கள். இவ்வாறான நபிமார்களே, உலக நாடுகளிலுள்ள மக்களிடையே இஸ்லாம், மற்றும் அதன் உண்மையின் ஒளிவிளக்கை ஏந்தி வருபவர்களாக இருப்பார்கள். இதுவே, நிச்சயமாக பழைய நாடுகளுக்கும், தற்போதைய நாடுகளுக்கும், வருங்கால நாடுகளுக்கும் இடையே உள்ள மிக முக்கியமான வித்தியாசமாகும். கடந்தகாலங்களில் உள்ள நாடுகளும் இவ்வாறான  நபிமார்களையே பெற்றுள்ளது. இப்படிப்பட்டவர்களே, மனிதகுலத்தின் சிறப்பான பிறப்பாக உள்ள நபி பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்தையும், அன்னாரது சிறப்புக்களையும் முன்னறிவிக்க வந்தவர்கள். அப்படியிருக்க, தற்போதைய நாடுகளைச் சேர்ந்த நமக்கு மத்தியிலும், வருங்கால நாடுகளுக்கு மத்தியிலும் நபிமார்கள் தோன்றும் போதெல்லாம், நாம்  அந்த  முழுமையான மாமனிதரைப் பரிசுத்தப்படுத்துவதற்கும், மற்றவர்கள் அவரை  அவமானப்படுத்தும் போதெல்லாம்,  அவரது கண்ணியத்தை மீண்டும் அவருக்காக ஏற்படுத்தி தருவதற்கும்  நாம் முயற்சி செய்யவேண்டும். அல்லாஹ்வின் கடுங்கோபம் அவர்களை சூழ்ந்துக் கொள்ளும்போது, அவமானப்படுத்துபவர்களும், அவர்களது அவமானங்களும்  அவர்களுக்கு எந்த பலனும் அளிக்காது. ஏனெனில், என்ன நிகழ்ந்தாலும், அல்லாஹ் தனது நபிமார்களின் கண்ணியத்தை எப்போதும் பாதுகாப்பவனாகவும், இரட்சிப்பவனாகவும் இருக்கின்றான். அன்றியும், வாக்களிக்கப்பட்ட மஸீஹான, ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள், “

    Ek-Ghalati-Ka-Izala” (ஒரு தவறான எண்ணம் அகற்றப்பட்டது) என்ற தனது புத்தகத்தில் இன்னும் கூறியுள்ளதாவது:

    “அதாவது இறுதி நாள் வரை நபித்துவத்தின் முத்திரை ஹஜ்ரத் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தோற்றமாகவே   விளங்குகின்ற,  அவர்களின் பிரதிபிம்பமாகவே  இருக்கின்ற வரை  தவிர வேறு எவராலும் நபிமார்களை போன்று இறைவனிடமிருந்து தெளிவான எந்த மறைவான ஞானத்தை பெற முடியாது, அந்த பிரதிபிம்பமானவர்  ஹஜ்ரத் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உருவமாகவே இருப்பதால் அத்தகையவரே இதை பெற முடியும்,  இதன் படி முற்காலத்திலிருந்தே முஹம்மதின் பிரதிபிம்பமாக வாக்களிக்கப்பட்டவன்  நான் இருக்கிறேன். எனவே பிரதிபிம்பமான முறையில் எனக்கு நுபுவத் அளிக்கப்படுகின்றது. தற்போது முழு உலகமும் முத்திரை இடப்பட்ட  இந்த நுபுவ்வத்தின் முன் நிற்க எவருக்கும் சக்தியில்லை  .முஹம்மதின் முழுமையான தன்மை கொண்ட முஹம்மதின் பிரதிபிம்பமானவர்  பிற்காலத்தில்  தோன்றுவார் என்பது முன்னரே விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர் தோன்றி விட்டார் இப்பொழுது இந்த வாசல் வழியாக இல்லாமல் வேறு எந்த வழியிலும் நுபுவ்வத்தின் ஊற்றிலிருந்து நுபுவ்வத்தின் தண்ணீரை அருந்த முடியாது.

    மேலும்,  உண்மையில்  வாக்களிக்கப்பட்ட மஸீஹான, ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களே,  காத்தமுன் நபீயீன் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களின் அத்தகைய பிரதிபலிப்பாகவும் (புரூஸாக),  நிழலாகவும் (ஜில்லியாகவும்) தனது காலத்தில்   தோன்றியுள்ளார்கள். மேலும், நிச்சயமாக அல்லாஹ் அன்னாருடைய ஜமாத்தை அருளுக்குரிய ஜமாஅத்தாக விருப்புகின்றான் எனவே அவன் இந்த அருளுக்குரிய ஜமாத்திலிருந்து இஸ்லாத்தின முக்கியத்துவமான முஹம்மதுகளையும் குலாம் அஹ்மத்துகளையும் எழுப்புவதாக வாக்குறுதியளித்துள்ளான்.. இவர்களே,  அல்லாஹ்வின் இந்த அருளுக்குரிய அடியார்களின் கண்ணியத்தையும், தூதர்களின் கண்ணியத்தையும் உயிருடன் வைத்திருக்கக்கூடியவர்கள்.  இவ்வாறான மனிதர்களே, இம்மையாயினும், மறுமையாயினும், இரட்சிப்பிற்கான வாசலை  திறக்க வந்த திறவுகோலாகவும் பிரதிபலிப்பார்கள். இது எவ்வாறு எற்படுகின்றது என்றால்  அவர்களுக்கு அல்லாஹ்வின் மீது இருக்கும் மறுக்கயியலாத அன்பின் காரணமாகவும், அல்லாஹ்வின் நபிமார்களுக்கு இடையே பகிர்ந்து கொள்ளப்படும் நெருக்கமான பந்தத்தின் காரணமாகவும் ஆகும். நிச்சயமாக, வாக்களிக்கப்பட்ட ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களுக்கு அல்லாஹ்வின் மீதும், அவனது நேசத்திற்குரிய தூதரான,  மனிதர்களிலும், நபிமார்களிலும் சிறந்தவரான  ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களின் மீதும் இருக்கும் அன்பு உண்மையில் எல்லையற்றதாகும். 

    அல்லாஹ்,  பிற்காலத்திற்கான வழிதவறிய நாடுகளுக்கு வழிக்காட்டுவதற்காக,  இஸ்லாத்தை   உள்ளத்தில்  பாதுகாக்கக்கூடிய தனது இறையச்சமுள்ள  நபிமார்களைக் கொண்டு மனிதகுலத்திற்கு அருள்புரிவானாக ஆமீன், ஸும்மா ஆமீன். ஆதாரம்: http://www.jamaat-ul-sahih-al-islam.com/jusai2016/fseng_25mar16.pdf

    மேலும் அன்னார் கூறும்போது ஹசரத் மஸீஹ் மவூது (அலை) அவர்கள் இஸ்லாத்தின் தோன்றிய கடைசி மஸீஹ்ஹல்ல மாறாக அன்னார் நபி (ஸல்) அவர்களின் முன்னறிவித்த அந்த வாக்களிக்கப்பட்ட மஸீஹ்ஹில் முதன்மை யானவர் ஹஸ்ரத் மிர்சா குலாம் காதியானி (அலை) அவர்கள் இதற்கு முன்னால் உள்ளவர்கள் வாக்களிக்கப்பட்டவர்களாக அதாவது அவர்களை பற்றி எந்த ஒரு முன்னறிவிப்பும் ஹதீதில் இருக்காது இதன் அர்த்தம் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் இறுதியானவர்கள் அல்ல மாறாக அன்னார் முஹம்மதிய மஸீஹ் மார்களின் வருகையின் கதவை திறப்பதற்காக வந்துள்ளார்கள் என்று அல்-கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள் (ஆதாரம்: http://sahih-al-islam.blogspot.com/2013/03/the-elixir-of-truth-in-divine-prophecies.html)

    இதையே மஸீஹ் அலை அவர்கள் தன்னை பற்றி கூறும்போது

    “நான் இந்த விதையை என் கையால் விதைப்பவராக வந்துள்ளேன் என்று நமக்கு போதித்துள்ளார்கள்” (ஆதாரம்
    :Tadhira-tus-Shahadatain, pp. 64-65) இங்கே கவனிக்கத்தக்கது என்னவென்றால் அவர்கள் தம்மைப் பற்றி ‘கடைசி ஃகலீஃபா மஸீஹே மவூத்’ என்று கூறியதன் பொருள் அவர்கள் ஃகாத்தமுல் ஃகுலஃபா(ஃ ஃகலீஃபாக்களில் தலை சிறந்தவர்) என்ற பதவியினாலும், மஸீஹின் வாசலைத் திறப்பதற்காக வருகை தந்ததாலுமே அவ்வாறு கூறியுள்ளார்கள்.அவ்வாறு இல்லை என்றால் ‘தனக்குப் பிறகும் கூட ஃகலீஃபாக்கள் ‘கியாமத் நாள் வரை தொடர்ந்து வந்து கொண்டிருப்பார்கள்’

    பெருமானார் ஸல் அவர்களின் முன்னறிவிப்பு படி அன்னாருக்கு மஸீஹிக்கும் இடையில் நபி இல்லை மஸீஹ் (ஒரு நபியுல்லாஹ்) மற்றும் அல்லாஹ்வின் கலிபா என்பதை நாம் அறிந்ததே[min ba‘di]. (Al-Mu’jamAl-Ausat, by Hafiz  Tibrani)

    எனவே மிகத்தெளிவாக மஸீஹ் நபி ஸல் அவர்களின் கிலாபாத்தில் அதாவது கிலாபதே முஹ்மதிய்யாவின் இறுதி கலீபா ஆவார் ஆனால் அவர் ஒருவர் அல்ல அதாவது இனி தோன்றக்கூடியவர்கள் மஸீஹ்காகவும் நபியாகவும் இருப்பார்கள் என்பதே உண்மை இது அனைத்தும் ஒரு சங்கிலி தொடர்போல் உள்ளது இதில் இருந்து மஸீஹ் ஒருவர் என்று கூறினால் அது திருக்குரான் போதனைக்கு மாற்றமான இறுதிநபி கொள்கையாகும்

    இதற்கு முன்னர் யூஸுஃப் தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்தார். ஆனால் அவர் உங்களிடம் கொண்டு வந்தது குறித்து நீங்கள் ஐயப்பாட்டிலேயே இருந்தீர்கள். அவர் மரண மடைந்த போது, அவருக்குப் பின்னர் எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒருபோதும் அனுப்ப மாட்டான் என்று நீங்கள் கூறினீர்கள். இவ்வாறே அல்லாஹ், வரம்பு மீறுபவர்களாகவும், ஐயம் கொள்பவர்களாகவும் இருப்பவர்களை வழி தவறியவர்கள் என்று (முடிவு எடுத்துக்) கொள்கிறான்.(திருக்குர்ஆன் 40: 35 )

    எனவே பலர் அல்ல ஒருவர் என்பது கடைசி நபி கொள்கையின் மறு வடிவமே ஆகும்.ஹஜ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது சமூகம் எல்லா சமூகங்களை விட சிறந்ததாகும் ஆனால் ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்களது உம்மத்தில் அன்னாரின் நிழலாக பலர் தோன்றி இருக்க கைருல் உம்மத்தான இந்த முஹம்மதிய்ய உம்மத்தில் ஒரே ஒரு மஸீஹ் தான் கியாமத் வரை என்றால் இது மூஸா (அலை) அவர்களது உம்மத்தை விட எந்த வகையில் சிறந்த சமூகம் என்பதற்கு இக்கொள்கையை கொண்டவர்கள் விளக்குவதற்கு கடமைப்பட்டுள்ளார்கள்.

    முஸ்லிம்கள் நபி (ஸல்) இறுதியானவர் என்றும் வானத்திலிருந்து ஈஷா (அலை) வானத்திலிருந்து இறங்குவர் ஆனால் அவர் நபியாக இருக்கமாட்டார் என்று கூறுவதை போல் இப்போது நிஜாமிகள் மஸீஹ் இறுதியானவர் இனி வரக்கூடியவர்கள் நபிமார்கள் அல்லாத கலீபதுல் ரசூல்மார்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனபதே நிதர்சனமான உண்மை!!!

    சிந்திக்கும் மக்களுக்கு நிச்சயமாக இதுஒரு பெரும் எச்சரிக்கையாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை

    உங்களுக்கும் எங்களுக்கும் இந்த உண்மையை அறிந்துகொள்ளும் வாய்ப்பை அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் வழங்குவானாக! ஆமீன்.


  • இறைவனின் மாபெரும் அத்தாட்சி

    இறைவனின் மாபெரும் அத்தாட்சி

    ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம்(அலை) அவர்கள் தன்னுடைய வருகைக்கான இறைவனின் மாபெரும் அத்தாட்சிகளில் ஒன்றாக தொடச்சியாக தோன்றும் இரத்த சந்திரன் மற்றும் சூப்பர் மூன் பற்றி அன்னார், ஒவ்வொரு நூற்றாண்டில் மட்டுமே தோன்ற கூடிய இந்த அறிய நிகழ்வு இந்த நூற்றாண்டில் இமாம் ஆக தோன்றியுள்ள தனது வருகைக்கான இறைஅடையாளமாகும் என்று கூறியுள்ளார்கள்.இந்த அத்தாட்சிகளை பற்றி அன்னார் கூறும்போதுஆகவே, பார்வையும் மழுங்கி;சந்திரனின் ஒளியும் மங்கி;சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்போது.{ திருகுரான் 75:7-10}

    வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன்.கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வரும் முன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும் (பைபிள்பழைய ஏற்பாடு JOEL 2:30-31)

    கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வரும் முன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும் (பைபிள் புதிய ஏற்பாடு ACTS 2:20)

    திருக்குர்ஆன்,பைபிள் மற்றும் மற்ற இறைவேதங் களும் இந்த நிகழ்வுகள் பூமியில் இறைவனால் தேர்தெடுக்கப்பட்ட தூதர் உங்களிடையே உள்ளார் என்பதை முன்னறி விக்கின்றது. நான் எனது நாட்டின் இந்துக்கள் மற்றும் தமிழர்களிடம் எனது வருகையை பற்றி உரையாற்றும் போது,மேலும் முக்கியமாக அவர்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியின் போதும் இந்த நிகழ்வுகள் தோன்றியது, இன்னும் சில நிகழ்வுகள் ஒவ்வொரு நூற்றாண்டிலும் மட்டுமே நிகழக்கூடியவை. மேலும் 01.09.2016 அன்று மிக நீண்ட சூரிய கிரகணம் ஏற்பட்டது. மேலும் இதற்கு பிறகு இந்த நிகழ்வு 2200 ஆண்டிற்கு பிறகே நிகழும்.

    :இந்த நிகழ்வுகள் 2014 -2015 ல் சரியாக யூதர்களின் புனித நாட்களில் தோன்றியுள்ளது.மேலும் இந்த அத்தாட்சிகள் இறை வஹீயை பெறக்கூடிய ஒரு தூதர், ஒரு மார்க்க சீர்திருத்தவாதி, ஒரு கலீஃபதுல்லாஹ் (தோன்றி) உள்ளார் என்பதை பூமிக்கு உணர்த்து கின்றது, இன்னும் இவர்களின் வருகையை பற்றி நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு நூற்றாண்டும் ஒரு மார்க்க சீர்திருத்தவாதி தோன்றி இந்த மார்க்கத்திற்கு புத்துயிர் வழங்குவார் என்று முன்னறிவித்துள்ளார் கள். நபி (ஸல்) அவர்களின் உம்மத்தில் தோன்றும் இவர்கள் புதிய ஷரீயத்தை கொண்டு வருவதில்லை; மாறாக இந்த உண்மை மார்க்கம் எப்போதெல்லாம் மார்க்க சீர்கேட்டையும் , திருக்குர் ஆனிற்கு மாற்றமான கொள்கையையும் கொண்டு பாதிக்கப்படும் போது இறைவனின் அருளாக இவர்கள் தோன்றி உங் களுக்கு எச்சரிக்கை செய்கின்றனர். இது இறுதிநாள் வரைத் தொடரும். இவ்வாறு தோன்றும் இவர்களால் இறைவன் தனது திருக்குர்ஆனின் போதனைகளை பாதுகாக்கின்றான் ([ஆதாரம் HQ, 15: 10, Five Volume Commentary on the Holy Qur’an(tafseer-e-Kabir), Volume III, pp. 1265-66].

    மேலும் அவர்கள் அக்காலத்தின் இமாம்களாகவும், நபி (ஸல்) அவர்களது ஷரீஅத்துடைய கிலாஃபத்தின் கலீபாக்களாகவும் தோன்றுகின்றனர். நபி (ஸல்) அவர்களின் உம்மத்தில், முதல் நூற்றாண்டின் மார்க்க சீர்திருத்தவாதி உமர் பின் அப்துல் அஸீஸ்(ரஹ்) அன்னாரிலிருந்து தொடங்கி பதினான்காம் நூற்றாண்டின் மார்க்க சீர்திருத்தவாதியும், வாக்களி க்கப்பட்ட மஹ்தியும் மஸுஹூமான ஹஜ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது(அலை) அவர்கள் தோன்றியுள்ளனர் .அன்னார் நபி (ஸல்) அவர்களின் கிலாஃபத்தைப் பற்றி கூறும்போது; பதிமூன்றாம் நூற்றாண்டின் மார்க்க சீர்திருத்தவாதி ஸயீத் அஹமத் பரேல்வி (ரஹ்) அவர்கள் முஹம்மதிய்ய கிலாஃபத்தின் 12 வது கலீஃபா என்றும், அன்னார் (தன்னை) இஸ்லாத்தின் 13 வது  கலீஃபா என்றும் மிகத் தெளிவாக கூறியுள்ளார்கள்(ஆதாரம்: ரூஹானி கசாயின்உருது, தொகுதி17 பக்கம் 193)

     

    இதை விளக்குவதென்றால் ஹஜ்ரத் மஸீஹ் (அலை) அவர்களின் காலத்தில் ஒருவர் உங்களுக்கு பிறகு மார்க்க சீர்திருத்தவாதி வருவார்களா? என்று கேட்டார் அதற்கு வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை )அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள் :-“

    எனக்கு பிறகு ஒரு  மார்க்க சீர்திருத்தவாதி வருவதில் என்ன தவறு இருக்கின்றது? மூஸா (அலை) அவர்களின் கிலாஃபத், ஈஸா(அலை)அவர்களுடன் முடிந்தது; ஆனால் நபி (ஸல்) அவர்களின் கிலாஃபத், கியாமத் வரை தொடரும்; எனவே ஒன்றுக்கு பின் ஒன்றாக முஜத்தித்கள் வருவார்கள். ஒருவேளை கியாமத்து நாள் நீட்டிக்கப்பட்டாலும் அதற்கும் ஒருவர் தோன்றுவார். நாம்  ஒருபோதும் இறைநேசர்களும், புனிதர்களும் வருவதை ஏற்றுக்கொள்ளாமல் விடமுடியாது; அப்போது திடீரென்று மறுமை தோன்றும். ( Malfoozat, Volume 7, Page 119)

    மேலும், எனக்குப் பிறகு வரும் மஸீஹ், நபி (ஸல்அவர்களின் ஹதீஸை வைத்து வாதம் செய்வார்.(ஆதாரம்: உருது ரூஹானி கசாயின் , தொகுதி 3 பக்கம் 379) ,எனக்கு பிறகு வரும் மஸிஹ், நபி (ஸல்அவர்களின் ஹதீதை வைத்து வாதம் செய்வார். (ஆதாரம்: ஆதாரம் உருது ரூஹானி கசாய்ன், தொகுதி; 3 பக்கம்: 379)

    மேலும் கீழ் காணும் நபி மொழியும் என்னுடைய வருகையை உறுதி செய்கின்றது. ஹிஜ்ரி 1400ல் இருந்து 20 அல்லது 30 வருடத்தை கூட்டி கொள்ளுங்கள். அப்போது  உங்களிடையே மஹதி தோன்றுவர்….. (ஆதாரம்: Asmal Masalik Lieyyam Mahdiyy Maliki Li Kull-id Dunya Biemrillah-il Malik, Qalda bin Zayd, p. 216)

    மேலும் இந்த ஹதீஸின்அறிவிப்பாளர் அபு ஹுரைரா (ரலி ) அவர்கள் ஆவார்கள்இந்த காலத்தின் அல்லாஹ்வின் கலீஃபாவாகிய முனீர் அஹ்மத் ஆஸிம் ஆகிய நான் பகிரங்க அறிவிப்பு செய்கின்றேன்அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் சுபஹானஹுதாலா  ஒரு கூரிய வாளை போன்று என் பக்கம் இருக்கிறான். அவன் எனக்கு இவ்வாறு கூறினான்: எவர் எனக்கு எதிராக அவதூறு மற்றும் அப்பாவி மக்களை குழப்புகின் றார்களோ அவரை அவன் நிச்சயம் இழிவுபடுத்துவான்.நான் அந்த அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்து கூறுகிறேன்:அவனே என்னை இந்த நூற்றாணடின் அமீருல் முஃமின், முஹையதீன், அல் கலீஃபதுல்லாஹ்வாக எழுப்பியுள்ளான். நான் உங்கள் முன்னே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸலம் அவர்களின் ஆன்மீக புதல்வனாகவும் மற்றும் வாக்களிக் கப்பட்ட மஹதி (அலை ) அவர்களின் ஆன்மீக மகனாகவும் வந்துள்ளேன். என்னை இறைவன் முஸ்லிஹ் மவூதே என்று 20 பிப்ரவரி 2004ஆம் ஆண்டு அன்று அழைத்தான். மேலும், அவன் என்னை படிப்படியாக உயர்த்திக் கௌரவ படுத்தினான் அதாவது முதலில் என்னை *கமரம்  முனீரா என்பதிலிருந்து காஜா நூருதீன், அமீருள் முஃமினீன், முஹைய் யுத்தீன், கலீஃபதுல்லாஹ், ரஸூலல்லாஹ் மற்றும் நபியுல்லாஹ்வாக  உயர்த்தினான் இம் மதிப்பை  நான் எவரிடமும் சண்டையிட்டு பெற்றவதில்லை. மாறாக, அந்த ஏக இறைவன்  இந்த எளியவன் மீது கருணையாக பொழிந்தான். நான் இந்த உலகிற்கு ஒரு வெளிச்சமாக வந்துள்ளேன். என்னை பின்பற்றுபவர் இருளிலிருந்து விலகி அந்த வெளிச்சத்தை பெறுகின்றார்.

    எனது வாதத்திற்கு இறைவன் 2003 ம் ஆண்டில் ரமலான் மாதத்தில் சூரிய மற்றும் சந்திர கிரகணத்தை அத்தாட்சியாக்கினான், இதே போன்ற ஒரு நிகழ்வை 1894 ம் ஆண்டு எனக்கு முன் தோன்றிய மஸிஹ் வூது  (அலை ) அவர்களுக்கு அத்தாட்சியாக்கினான்.

    மேலும் நபி மொழியில்லிருந்து வரக்கூடிய மஹ்திமார்கள்  ஒருவரல்ல பலர் என்றும் நாம் அறியலாம்(ஆதாரம்:ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 65. திருகுறான் விரிவுரை :4897&4988)

    வாக்களிக்கப்பட்ட மஹ்தியும் ஆன மஸிஹ் மவுது (அலை) அவர்களும் இதை உறுதிசெய்கின்றார்கள், அன்னார் கூறும்போது:- நாங்கள் இதற்கு முன்பும் பல மஹதிகள் வந்துள்ளார்கள் என்றும்  மேலும் பல மஹதிகள் வரக்கூடும் என்றும் ஏற்றுக்கொள்கின்றோம்இன்னும் சில மஹதிகள் *இமாம் முஹம்மது* என்ற பெயரில் கூட வரலாம். (ஆதாரம் :ரூஹானி காசயின் தொகுதி 3 பக்கம் 379)

    ரமலான் மாதத்தில் தோன்றும் சூரிய சந்திர கிரகணத்தை பற்றிய ஹதீதில் இதை போன்ற ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை என்பதில்லை. மாறாக, வாதம் செய்யும் ஒருவருக்கு அத்தாட் சியாக அமைந்ததில்லை என்பதே ஆகும், ஏனென்றால், இதில்லும் தக்குன” (“lum takuna”) என்று பெண்பாலில் உள்ளது, அது ஒருமுறை யை தோன்றவேண்டும் என்றிருந்தால்லும் யக்குன” (“lum yakuna”) என்ற ஆண்பாலில் வந்திருக்கவேண்டும், இதிலிருந்து மிக தெளிவாக இந்த நிகழ்வு நடந்ததே என்பதி ல்லை. மாறாக மஸிஹ் என்று வாதம் செய் பவருக்கு அத்தாட்சியாக அமைந்ததில்லை என்பதை குறிக்கின்றது.

    உலக மக்கள் அனைவரும் குறிப்பாக முஸ்லிம்கள் உண்மையான இறை நம்பிக்கையின் சாரத்தை  மறந்துவிட்டார்கள். மேலும் இஸ்லாத்தின் உண்மையான போதனைகள் உட்பட உலக அனைத்தையும் படைத்த இறைவனையும் கூட மறந்து விட்டார்கள்

     

     

     

  • ஒரு நபி வருகையின் நோக்கம்

    ரு நபி வருகையின் நோக்கம்

    அல்ஹம்துலில்லாஹ்!!! இந்த கேள்வி பொதுவாக ஒரு நபி வருகையின் நோக்கம் சம்பந்தமாக இருப்பதால் இந்த கேள்விக்கு அழகியமுறையில் பதில் அளிக்க புனித திருகுர்ஆனில் இருந்தும் இமாம்களின் கூற்றில்லிருந்தும் இந்த நூற்றாண்டில் இறைவனின் அருளாகவும் பெருமானார் (ஸல்) அவர்களின் கிலாபத்தின் 14 வது கலீபா ஹசரத் முஹையதீன் அல் கலீபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் (அலை) அவர்களின் கூற்றுகளில்லிருந்து பார்க்கலாம், மேலும் இது சிறிது நீண்ட பதிவாக இருக்கும், ஏனென்றால் இந்த அருளுக்குரிய நூற்றாண்டில் குறைமதி கொண்ட மக்கள் இக்காலத்தில் தூதர்களின் தேவை என்ன? மேலும் அவர், குறிப்பாக முன் சென்ற தூதர்களின் பெயரை குறிப்பிட்டு இதைப்போன்று இவர் என்ன செய்தார்? இவர் சமுதாயத்திற்கு என்ன தொண்டு செய்தார்? இன்னும் என்ன புரட்சி செய்தார்? என்று அடிப்படை திருகுர்ஆன்னின் போதனைகளை விட்டுவிட்டு தங்களது மறுக்கும் மனப்பான்மையால் தங்களது மனோஇச்சைகளை பின்பற்றுகின்றனர்
     
     
     இவர்களை பார்த்து திருமறை இவ்வாறு கூறுகின்றது:-
     
    இதற்கு முன்னர் யூஸுஃப் தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்தார். ஆனால் அவர் உங்களிடம் கொண்டு வந்தது குறித்து நீங்கள் ஐயப்பாட்டிலேயே இருந்தீர்கள். அவர் மரணமடைந்த போது, அவருக்குப் பின்னர் எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒருபோதும் அனுப்ப மாட்டான் என்று நீங்கள் கூறினீர்கள். இவ்வாறே அல்லாஹ், வரம்பு மீறுபவர்களாகவும், ஐயம் கொள்பவர்களாகவும் இருப்பவர் களை வழி தவறியவர்கள் என்று (முடிவு எடுத்துக்) கொள்கிறான். ( திருக்குர்ஆன் 40: 35 )
     
     இது எவ்வாறு இருக்கிறது என்றால் மனிதனின் நிலை நபிமார்கள் தோன்றும் போது அவர்களை எதிர்ப்பதும் அவர்கள் காலம் சென்றதிற்கு பிறகு அவரை போன்று அல்லது வேறு எவரும் வரமாட்டார்கள் என்று கூறி அருளாக தோன்றக் கூடியவர்களை மறுப்பதும் முந்திய காலத்திலிருந்து தொன்று தொட்டு வரும் ஒருநடைமுறையாக உள்ளது. மேலும் நபிமார்கள் சென்ற பிறகு அவர்களுக்கு இறங்கிய வஹீயை ஒரு கதையை போல படிக்க ஆரம்பிக்கின்றனர் ஆனால் சென்ற நூற்றாண்டில் அல்லாஹ்வின் அருளாக நபி (ஸல்) அவர்களின் கிலபாத்தின் 13 வது கலீபா ஹசரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்;-
     
     
     “வஹீ” என்பது ஒரு நிரூபிக்கப்படாத முந்திய காலத்தில் நடந்த சம்பவம் போல நினைக்கின்றார்கள் இது ஒரு தவறான எண்ணமாகும் நபிமார்கள் அலைஹி வஸ்ஸலாம்  உலகிலிருந்து   வாரிசு  இல்லாமல்  சென்று விடுகின்றார்கள்  என்ற எண்ணமும் ஒருபோதும்  சரியானது  அல்ல. இப்போது  அவர்கள்  தொடர்பாக கூறப்படும்  எந்த ஒரு கருத்திற்கும்  கதையைப் படிப்பதை விட அதிகமாக  சிறிதளவு கூட நம்பகத்தன்மை  இருக்காது. ஆனால்  ஒவ்வொரு  நூற்றாண்டிலும்  தேவைகேற்ப  அவர்களின்  வாரிசுகள்  உருவாகி  கொண்டே இருப்பர். ( பரக்காத்துத் துஆ ரூஹானி கஸாயின் தொகுதி 6 பக்கம்21-24).  
     
     
    அன்னார் மிகத்தெளிவாக நபிமார்களின் தொடர் அதாவது நூற்றாண்டின் இறை வெளிப்பாட்டின் தேவையை பற்றி குறிப்பிடுகின்றார்கள். மேலும் ஒரு தூதர் வருகையின் முக்கிய நோக்கம் அவர் மூலம் குறிப்பாக அவருக்கு இறக்கும் வஹீயின் மூலம் இறைவன் தனது முகத்தை தான் நாடிய அவனது அடியானுக்கு காட்டுகின்றான்.
     
    இதையே அன்னார் (அலை) இவ்வாறு நமக்கு அழகாக புரியும் வகையில் ஒரு தூதரின் வருகையின் நோக்கத்தை பற்றி குறிப்பிடுகின்றார்கள்:-
     
    ஏகத்துவம் கற்களில் மறைந்து இருக்கின்ற அந்த நெருப்பை போன்றே வைக்கப்பட்டுள்ளது என்பதே இதில் உள்ள ரகசியம் ஆகும். தூதர், நெருப்பு மறைந் திருக்கும் கல் போன்றவர், அந்த கல்லின் மீது தனது கவனத்தை செலுத்துகின்ற அடியின் மூலமாக அந்த நெருப்பு வெளியில் கொண்டு வரப்படுகின்றது எனவே தூதர் என்ற இந்த  கல் இல்லாமல் ஏகத்துவத்தின் நெருப்பு  ஏதோ ஒரு உள்ளத்தில் உருவானது என்பது ஒருபோதும் சாத்தியமாகாது* ,ஏகத்துவத்தை தூதர்கள் மட்டுமே பூமிக்கு கொண்டு வருகின்றார்கள் அவர்கள் மூலமாகவே இது பெறப் படுகின்றது இறைவன் மறைவானவனாக இருக்கின்றான், அவன் தனது முகத்தை தூதர் மூலமாக காட்டுகினறான்.எனவே ஒரு தூதர் வருகையின் நோக்கம் இந்த உலகத்தில் உயிருள்ள ஓர் இறைவனை அவனது அடியானுக்கு காட்டுவதே ஆகும்.
     
     எல்லா நபிமார்களும் ஒரே நோக்கத்திற்காகவே வருகை   தருகின்றார்கள்!!!  இந்த உலகில் நபிமார்களது வருகையின் முக்கிய நோக்கம், அவர்களது போதனை மற்றும்   பிரச்சாரத்தின் மகத்தான நோக்கம் என்னவென்றால், மனிதகுலம் சர்வவல்லமையுள்ள இறைவனை அங்கீகரிக்க வேண்டும், என்பதும் பாவகரமான வாழ்க்கை என்று அழைக்கப்படுகின்ற நரகத்திற்கும் அழிவிற்கும் இட்டுச் செல்கின்ற  வாழ்க்கையிலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதும் ஆகும். உண்மையில், இதுவே அவர்களுக்கு முன் இருக்கின்ற மிக முக்கியமான குறிக்கோள் ஆகும்.இப்போது சர்வவல்ல மையுள்ள இறைவன் ஓர் (இறை) அமைப்பை  நிறுவி என்னை எழுப்பி உள்ளான். (இதுவே) எல்லா நபிமார்களுக்கு உரிய பொதுவான அதே நோக்கமும், நான் வருவதன் நோக்கமும் ஆகும்.அதாவது, மிகத்தெளிவாக கூறுவதென்றால், இறைவன் என்றால் என்ன என்பதை உலகுக்கு (எடுத்துக்)கூறுவது மட்டுமல்லாமல், உண்மையில்  அவர்கள் அவனைப் பார்க்க வேண்டும் என்பதும், பாவத்திலிருந்து விலகி இருப்பதற்கான வழியை (அவர்களுக்கு) காட்ட வேண்டும் என்பதும் எனது விருப்பமாகும்.( மல்யூஷத் தொகுதி 3 பக்கம் 11( ஆங்கில மொழி பெயர்ப்பு Essence of Islam Vol 4 page 108)
     
     
     அல்ஹம்துலில்லாஹ் இவ்வளவு அழகான வழிகாட்டல் இருந்தும் சில குறைமதி கொண்ட மக்கள் தங்கள் கொண்ட கொள்கையை காப்பாற்றுவதற்காக உலக காரணிகளை முன் வைத்து இந்த மேலான அருளை எதிர்க்கின்றனர். மேலும், அவர் என்ன தொண்டு செய்தார்? என்ன புத்தகம் எழுதினார்? சமூக சேவை செய்தாரா? அவரை எத்தனை பேர் பின்பற்றுகின்றார்கள்? பின்பற்றுபவர்களிடம் என்ன குறையுள்ளது? அவர் பள்ளிக்கட்டினாரா? மாற்று சமைய மக்களுக்கு சென்று கூறினாரா? இன்னும் சில அறிவிலிகள் தொலைக்காட்சி சேனலில் வந்து தினம் தோறும் அல்லாஹ்வின் மேல் சத்தியம் செய்யவேண்டும் என்று கூறுகின்றனர்.
     
     
     ஆனால் மாறாக அல்லாஹ் தனது தூதர் மூலம் அவனை வெளிப்படுத்துகின்றான், மேலும் ஹஸ்ரத் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களின் உம்மத்தில் இந்த அருளின் கதவு இன்னும் விசாலமாக திறக்கப்பட்டுள்ளது. எப்போதெல்லம் சில சாக்கு போக்குகளை உருவாக்கி இறைவனின் தொன்மையான சட்டம் தாக்கப்படுமோ அப்பொதெல்லாம் நம்பிக்கைகொண்ட மக்களில் ஒருவரை தேர்வு செய்து அவன் தனது இருப்பை அவனது வஹியின் மூலம் வெளிப்படுத்துகின்றான் , எனவே தான் நம்பிக்கை கொண்ட நிலையில் இறைவன் தனது வஹீயை வைத்து வாதம் செய்ய அவன் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. மேலும்காத்தமுன் நபிய்யீன் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு பிறகு வேதம் மற்றும் ஷரியத் முற்றுப் பெற்றுவிட்டதால் இனி அன்னாரின் நிழல்களாக தோன்றும் அருளுக்குரியவர்கள் இறைஇருப்பை பற்றிய செய்தியையே கொண்டுவருவார்கள்.  
     
     
     இதை  இறைவேதம் இவ்வாறு கூறுகின்றது
     
     நற்செய்தி உடையவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமன்றி நாம் தூதர்களை அனுப்புவதில்லை. ஆகவே, நம்பிக்கைக் கொண்டு (தம்மைச்) சீர்திருத்திக் கொள்கின்றவர்களுக்கு (வருங்காலத்தைப் பற்றி) எவ்விதப் பயமும் ஏற்படாது; அவர்கள் (சென்ற காலம் பற்றிக்) கவலைப்படவும் மாட்டார்கள். ( திருக்குர்ஆன் 6: 49)
     
     
    ஒரு தூதர் வருகையால் நம்பிக்கை கொண்டோருக்கு இறைஇருப்பை பற்றிய நற்செய்தியும் அந்த வஹீயை மறுப்பவர்களுக்கு எச்சரிக்கையாகவும் உள்ளது. இன்னும் ஹசரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் வருகையின் நோக்கம் சம்பந்தமாக இந்த கூற்று மேலும் நமக்கு உண்மைப்படுத்துகின்றது:-
     
     
     இந்த எளியவன் மீண்டும் மீண்டும் இதைத்தான் கூறுகின்றேன் அதாவது சகோதரர்களே!!! நான் எந்த புதிய மார்க்கத்தையும் புதிய போதனையையும் கொண்டு வரவில்லை இன்னும் சொல்வதென்றால் நான் உங்களிடம் இருந்து வந்துள்ள உங்களைப் போன்ற ஒரு முஸ்லிமாக இருக்கின்றேன் முஸ்லிம்களாகிய நாம்  செயல்படுவதற்கும்  வழி காட்டுவதற்கும்  திருக்குர்ஆனைத் தவிர வேறு எந்த வேதமும் இல்லை. ஜனாப் காத்தமுள் முர்ஸலீன் அஹ்மதே அரபி (ஸல்) அவர்களை தவிர நாம் பின்பற்றி நடப்பதற்கு அல்லது மற்றவர்களை பின்பற்ற வைக்கும் வேறு எந்த ஒரு வழிகாட்டியும் பின்பற்றத்தகுந்தவரல்ல. இதை நான் கூறும் நிலையில் மார்க்கப்பற்றுள்ள முஸ்லிமுக்கு இறைஅறிவிப்பின் அடிப்படை யில் உள்ள எனது வாதத்தின் மீது நம்பிக்கை கொள்வதில் அபாயம் என்ன இருக்க முடியும் எனது இந்த இல்ஹாம்களும் கஷ்ஃபுகளும்  தவறானது என்றும் எனக்கு எதுவெல்லாம் கட்டளையிடப்பட்டுள்ளதோ  அதை புரிந்து கொள்வதில் எனக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது என்று கற்பனையாக வைத்துக்கொண்டாலும், இதை ஏற்றுக் கொள்பவர்கள் மீது என்ன குற்றம் இருக்க முடியும் இது மார்க்கத்தில் ஏதாவது இடையூறு ஏற்படுத்தக் கூடிய ஏதாவது ஒரு விஷயத்தின் மீது நம்பிக்கை கொண்டு விட்டாரா?…( இஸ்லயே அவ்ஹாம் ரூஹானீ கஸாயின் தொகுதி 3 பக்கம்186-189)
     
     இன்னும் ஒரு ஈஷாவின் வருகையின் நோக்கத்தை பற்றி திருக்குர்ஆன் கூறும்போது
     
     எனக்கு முன்னுள்ளதை அதாவது தவ்ராத்தை மெய்பிக்கக் கூடியவனாகவும் ,உங்களுக்கு விலக்கப்பட்டிருந்த ஒரு சிலவற்றை உங்களுக்கு அனுமதிக் கப்பட்டதாக ஆக்குவதற்காகவும் (வந்துள்ளேன்). உங்களிடம் உங்கள் இறை வனிடமிருந்து ஓர் அடையாளத்துடன் நான் வந்துள்ளேன். எனவே அல்லாஹ்விற்கு அஞ்சி எனக்குக் கட்டுப்பட்டு நடங்கள். ( திருக்குர்ஆன் 3: 51 )
     
    இந்த வசனத்தில் விலக்கப்பட்டது என்பதன் பொருள் அதாவது அவர்களின் தீய செயல்கள் காரணமாக உங்களுக்கு தடை செய்யப்பட்டிருந்த இறைவஹீ என்முலம் மீண்டும் ஆரம்பமாகும் என்பதாகும்.(திருக்குரான் அஹ்மதிய்யா தமிழ் மொழிபெயர்ப்பு பக்கம் 139)
     
    எனவே சகோதரர்களே! ஒரு இறைத்தூதர் வருகையின் முதன்மை நோக்கம் மிகத்தெளிவாக விளங்குகின்றது,மேலும் நாம் வாழும் அருளுக்குரிய நூற்றாண்டில் இந்த காலத்தின் இறைத்தூதர் முஹையதீன் அல் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் (அலை) அவர்களும் இவ்வாறு போதிக்கின்றார்கள்
     
    ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது ஆன்மீக அருள் என்னவென்றால் அது அன்னாரை பின்பற்றும் ஒருவரால் இறைவனை நேரடியாக தொடர்பு கொள்ள முடியும் என்பதாகும், இதன் மூலமாக இறைவனை அவனது ஆன்மாவாலும், உயிராலும் அவனுடன் ஒன்றிவிடவும், இதன் மூலம் அந்த அருளாலனின் இனிமையான குரலையும் மற்றும் அவனுடைய தொடர்பினையும்வெளிப்படுத்தலாம்.இதுவே நபிமார்களை பின்பற்று வதால் கிடைக்கும் பிரத்யேகமான அருளாகும், இந்த அருளே முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கிடையே யான வித்தியாசம் ஆகும். இதுவே இஸ்லாத்தின் தனிசிறப்பாகும், இதனை முஸ்லீம்களும், அஹ்மதிகளும்மறந்துவிட்டனர், இதனையே இவர்களது
     
    கவனத்திற்கு ஜமாத்துல் சஹீஹ் அல் இஸ்லாம் கொண்டு வருகிறது.( புத்தகம் WHY CREATING JAMAAT UL SAHIH AL ISLAM? பக்கம் 17)
     
    மேலும் அன்னார் இக்காலத்தில் ஒரு இறை தூதர் வருகையின் அவசியம் பற்றி இவ்வாறு கூறுகின்றார்கள்
     
    இப்போது உள்ள இக்கட்டான ஒரு முக்கிய காலகட்டத்தில் அல்லாஹ் சுபஹானஹுதாலா ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா(ஸல்) அவர்களையும் ஹஸ்ரத் மஸீஹ் மவூது(அலை) அவர்களையும் ஏற்றுக்கொண்டுள்ள தனது உண்மையான அடியார்களுக்காக ஒரு சிறந்த ஜமாஅத்தை எழுப்பியுள்ளான், அதாவது ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாமை எழுப்பியுள்ளான். இது எப்படிப்பட்ட ஜமாஅத் என்றால் எல்லாவிதமான அநீதிகளுக்கு எதிராக உண்மை இஸ்லாத்தை பாதுகாக்கின்றது. மேலும் முஸ்லீம் அல்லாத மாற்று மதங்கள் இஸ்லாத்திற்கு எதிராக வைக்கும் அனைத்து கேள்விகளுக்கும் மிக சிறந்த முறையில் பரஸ்பரம் முழு திருப்தியாகும் வகையில் பதிலை வழங்குகின்றது, இன்னும் இந்த ஜமாஅத்தை இந்த எளியவனின் இந்தகாலத்தின் முகையூதீன் என்றும் அல்லாஹ்வின் கலீஃபா (கலீபஃத்துல்லாஹ்) மற்றும் பல்வேறு வாதத்துடன் எழுப்பியுள்ளான். இவற்றை கேட்டு கோபமும் எரிச்சலும் அடைந்த எனது எதிரிகளும் நயவஞ்சகர்களும் எல்லையை மீறி என்மீது அவதூறுகளையும் அபாண்டங்களையும் பரப்புகின்றனர், இவர்களின் அவதூறு எவ்வளவு கீழ்த்தரமாக ஆகிவிட்டது என்றால் அவர்கள் என்னை பார்த்து போதைக்கு அடிமையானவன், சூனியக்காரன் (மந்திரவாதி), குழப்பவாதி, ஒரு பொய்யன், நாய் பன்றி போன்ற எந்த பெயரையும் விட்டுவைக்கவில்லை,இன்னும் இவர்கள் என்னை காஃபீர் என்றும் போலி நபி என்றும் ஃபத்துவாவும் கொடுக்கின்றனர்
     
    அல்ஹம்துலில்லாஹ் சும்ம அல்ஹம்துலில்லாஹ் இதில் எந்த அதிசயமும் இல்லை மேலும் எனக்கு இதில் ஆச்சரியமும் இல்லை ஏனென்றால் எப்பொழுதெல்லாம் இறைபுரத்திலிருந்து ஒருவர் தோன்றும் போது  இவ்வாறே நடந்துள்ளது. சிறிது காலம் சென்றதிற்கு பிறகே இவர்களின் (இறைபுரத்தில் இருந்து வந்தவர்களின்) உண்மையான நிலையை புரிந்துகொள்ளமுடியும். அவர்கள் என்மீது கொடுக்கும் காஃபீர் ஃபத்துவாக்களையும் அவர்கள் எனக்கு எதிராக வைக்கும் பெயர்களையும் பார்த்து நான் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை ஏனென்றால் அவர்கள் எனக்கு கஷ்டம் கொடுக்கவேண்டும் என்று செய்வதெல்லாம் அவர்களின் ரூஹுவை (ஆத்மாவை) தீங்கு இழைத்து கொள்கிறார்களே அன்றி அந்த ஏக இறைவனால் தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு அதனால் எந்த குறைவும் ஏற்படப்போவதில்லை. மேலும் இவர்கள் எவ்வளவு மூர்க்கத்தனமாக என்னை எதிர்த்து என்னை துன்புறுத்தவேண்டும் எற்று முயல்கின்றார்களோ அவ்வளவு அதிகமாக என்னை கொண்டு அவனது தீனை மேலோங்க செய்கிறான். மேலும் அவன் இதன் மூலம் பெருமானார் (ஸல்), மஸீஹ் மௌவூது(அலை) மற்றும் திருகுரானின் சிறப்பையும் நிரூபித்துக்காட்டுகின்றான்.
     
    எனது அன்பிற்குரியவர்களே! நான் நிச்சயமாக அல்லாஹ்வின் கையில் உள்ள பாத்திரமே ஆவேன் இந்த எளியவனை அவன் என்ன நாடுகின்றானோ அதை என்னை கொண்டு செய்கின்றான், அல்லாஹ் எந்த ஒரு நோக்கத்திற்காக ஒருவரை தேர்வு செய்கிறானே அப்போதிலிருந்தே அவர் முழுவதும் அவனையுடையதாகின்றார், மேலும் அவர் அல்லாஹ்வின் விருப்பப்படியே செய்கின்றார். அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் அனுமதி மற்றும் வழிகாட்டல் இல்லாமல்  அவர் எதையும் செய்வதில்லை, அவர்களின் அனைத்து செயல்களும் அவன் வகுத்த எல்லைக்குட்பட்டே செய்கின்றார்கள், ஒவ்வொன்றும் குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும் ஒரு குறிப்பிட்ட வேலைக்காகவே படைக்க ப்படுகின்றது, அதுபோலவே நம்மிடையே தோன்றும் தூதர்களும் மேலும் அவர்களுக்கு தூதை கொண்டுவரும் தேவதூதர்களும் (மலக்குகள்) ஒருகுறிப்பிட்ட பணிக்காகவே எழுப்பப்படுகின்றனர்.
     
    இஸ்லாமிய மக்களாகிய நாம் ஒரு சிறந்த முஸ்லிம்களாக மாற நாம் என்ன செய்யவேண்டும் என்பதை குறிப்பாக ஒரு ஆணோ அல்லது பெண்ணோ அத்தகைய உயர்ந்த நிலையை எவ்வாறு அடைவது என்பதை பற்றி சிந்திக்கவேண்டும், இஸ்லாம் ஒரு உயிருள்ள வாழும் மார்க்கமாகும் எனவே தான் எந்த ஒரு காலத்திலும் அதன் வெற்றி முஸ்லிம்களின் கையில் மட்டுமே தான் உள்ளது.
     
    எனது அருமையானவர்களே! இந்த உலகத்தில் இந்த உண்மையை தேடும் எத்தனையோ மனிதர்களை பார்க்கலாம். அவர்கள் இந்த உண்மை மார்க்கமாகிய இஸ்லாத்தை ஏற்ற பிறகு இறைவனின் மாபெரும் அருளால் அவர்களின் ஆன்மிக மற்றும் பௌதிக வாழ்க்கையில் மிக சிறந்த மாற்றம் ஏற்பட்டு முன்னேற்றத்தின் பாதையில் செல்கின்றனர். ஆனால் இஸ்லாம் காட்டும் கொள்கை மற்றும் கருத்தின் பக்கம் நாம் பயணம் செய்வது முதலில் கஷ்டமாகவும் கடினமாகவும்  இருந்தாலும், எவர் அல்லாஹ்வையும் அவனது அனைத்து கட்டளைகளையும் பேணி  இஸ்லாத்தின் அனைத்து போதனைகளையும் கடமைகளையும் உண்மையான நம்பிக்கை கொள்கின்றோம் என்று கூறும் அனைத்து முஸ்லிம்களும் உண்மையான தியாகம், செயல் சீர்த்திருத்தம் மற்றும் உண்மையான இறைநாட்டம் இல்லாமல் முன்னேறுவது சாத்தியமானதன்று,
     
    உங்கள் அனைவரையும் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதற்காக அந்த ஏக இறைவனே எனக்கு கட்டளையிட்டு நியமித்துள்ளான், மேலும் என்னை இழிவாகவும் கீழ்த்தரமாக பெயரை வைத்தும் அழைப்பவர்கள்  அல்லது எனது செய்தியை பாரபட்சமாக பார்ப்பவர்களுக்கும் அல்லது என்மீது வெறுப்பு கொண்டவர்களுக்கும் அல்லது எனது வாதத்தை புரியாதவர்களுக்கும் என்று அனைத்து மக்களுக்கும் இன்னும் ஏன் மௌலவிகளையும் மார்க்க அறிஞர்களையும் (முப்திகள்) என்னை எதிரியாக பார்ப்பவர்களுக்காகவும் நயவஞ்சர்களுக்கும் என்று அனைவரையும் அவன் பக்கம் அழைப்பதற்காக வந்துள்ளேன், எனவே என்னை அனுப்பிய அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் சுபஹானஹுதாலாவிடம் உண்மையாகவும் உருக்க மாகவும் இறையச்சத்துடன் தூய உள்ளத்துடன் அதிக அதிகமாக துஆ செய்து யார் நேரான வழியில் உள்ளார்கள் யார் வழிதவறிவிட்டார்கள் என்பதை கேளுங்கள், ஆனால் நான் உங்களிடம் உறுதியாக கூறுகின்றேன்   எவர் இந்த எளியவனின் உண்மைத்தன்மையை ஏற்றுக்கொண்டார்களோ அல்லது என்னை அவர்களின் எதிர்காலம் என்று ஏற்று என்மீதும் எனது வாதத்தின் மீதும் நம்பிக்கை கொள் கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக நான் உறுதியளிக்கின்றேன், நீங்களே அருளுக்குரிய மக்கள் ஒருபோதும் நீங்கள் நஷ்டவாதிகள் அல்ல. இந்த உலக வாழ்க்கை ஒரு எல்லைக்குட்பட்டதும் தற்காலிகமானதாகும் ஆனால் உண்மையான வாழ்க்கையும் அதற்கான கூலியும் உண்மையான வெகுமதியும் உங்கள் உழைப்பின் உண்மையான பலன்களையும் அருட்கொடைகளையும் அந்த ஏக இறைவன் உங்களுக்கு தற்காலிக இந்த உலகத்தில் மட்டும் இல்லாமல் மறுமையிலும் வழங்குவான். அங்கு உங்களுக்கு கிடைக்கும் அருள்கள் எல்லையற்றதாகும் அங்கு எப்போதும் சாந்தியும் சமாதானமும் நிலவும் மேலும் ஒரு அடியான் அவனது இறைவனுடன் இணக்கமாக ஒரு நிரந்தரமான தொடர்பில் இருப்பான், இதுவே ஒரு உண்மையை தேடும் இறையாடினின் உண்மையான வெற்றியாகும்.
     
    இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட எந்த மதத்தையும் பின்பற்ற கூடியவர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால் நிச்சயமாக அந்த ஏக இறைவன் பல்வேறு சமயங்களில் பல்வேறு இடங்களில் பல்வேறு நபிமார்களை அனுப்பியுள்ளான்  என்பதையும் நம்பிக்கை கொண்டே ஆகவேண்டும், ஒவ்வொரு சமுதாயத்திற்கும் (நாட்டிற்கும்) ஒரு தூதர்  இல்லாமல் இல்லை என்பத்திற்கேற்ப ஆப்பிரிக்கா கண்டத்தில் இன்னும் சொல்வதென்றால் ஆப்பிரிக்கா கண்டதில்லிருந்து தொலைவில் அனைத்து பக்கத்திலும் கடலினால் சூழப்பட்ட வெறும் 13 லட்சம் மக்கள் தொகை கொண்ட மிகச்சிறிய தீவு நாடான மௌரீஷியஸ் நாட்டில் அல்லாஹ் சுபஹானஹுதாலா அவனது அருளாக அவனுடைய கலீஃபத்துல்லாஹ்வை அவனது நபியை தேர்தெடுத்துள்ளான் ஏனென்றால் இந்தியாவுக்கும் இங்கிலாந்திருக்கும் பிறகு மஸீஹ் மௌவூது(அலை) அவர்களின் ஜமாஅத் ஆரம்பித்த நாடு இந்த சிறிய தீவான  மௌரீஷியஸ் தான். இங்கு 1915 ஆம்  ஆண்டே மிஷன் தொடங்கப்பட்டுவிட்டது மேலும் மௌரீஷியஸ் நாடு பன்முக கலாச்சாரம் கொண்ட உலகின் முக்கிய மதங்களின் பல பிரதிநிதித்துவம் கொண்ட ஒரு சிறிய தீவு நாடாகும்
     
    மனித குலத்தின் ஆன்மிக முன்னேற்றம் என்பது இதைப்போன்ற உன்னதவர்களின் அடிப்படையிலே உள்ளது எனவே இறைவனால் தேர்தெடுக்கப்பட்டவர்கள் அவர்களிடையே தோன்றாமல் வெறும் (ஆன்மிக) இருளை தவிர இந்த உலகத்தில் வேறு ஒன்றும் இருக்காது.  இதைத்தான் அந்த ஏக இறைவன் அவனது திருமறையில் கூறும்போதுஎச்சரிக்கை செய்பவர் எவரும் வராத எந்தச் சமுதாயமும் இல்லை என்று விளக்குகின்றான்
     
    எனவே இப்போது நபிமார்கள் வருகைக்கான பொதிந்துள்ள இரகசியத்தை ஆராய்ந்தால் அதற்கு முக்கிய காரணமாக அந்த மக்களிடையே ஆன்மிக சீரழிவு காணப்படும் மேலும் மனித இனம் மற்றும் இறைவனின் நேரடியாக தொடர்பு துண்டிக்கப்பட்டிற்கும், இது எவ்வாறென்றால் இந்த பூமி நெடுக்காலமாக வறண்டு காய்ந்து உயிரற்ற வறட்சி காலத்திற்கு பிறகு அந்த மேகக்கூட்டங்களுக்கு இடையில் மழையாக இந்த பூமியை உயிர்ப்பித்து புத்துணர்ச்சியை மலர செய்வது போல் எப்போதும் நபிமார்கள் நம்மிடையே தோன்றுவார்கள். எனவே நம்பிக்கைக் குரியவர்களே! நம்மிடையே கடந்த காலத்தில் நபிமார்கள் வந்தது போன்று எதிர்காலத்திலும் வந்துகொண்டே இருப்பார்கள், என்பதில் திட்டமாக நம்பிக்கை கொள்ளுங்கள், அவர்களின் வருகையை தடுக்கும் அனைத்து காரண காரியங்களிலிருந்து முற்றிலும் தவிர்ந்து கொள்ளுங்கள், மேலும் இறைவஹீயின் கதவு ஒருபோதும் அடைக்கப்படுவதில்லை அது எப்போதும் திறந்தே உள்ளது, இதுவே நமது உறுதியான நம்பிக்கையாகும். இறுதிக் காலங்களில் ஈமானை மீட்டெடுக்க வாக்களிக்கப்பட்ட சீர்திருத்தவாதிகள் தேவை என்பதற்கேற்ப நாம் வாழும் இந்த காலத்தில் ஒரு நபியின் தேவையின் பக்கம் நம்மை கொண்டுசெல்கின்றது, இன்னும் நமது நம்பிக்கை நம்மிடையே தோன்று பவரை அவரின் சாட்சியத்தை வைத்து மட்டும் ஏற்றுக்கொள்வதில்லை மாறாக முந்திய நபிமார்களை ஏற்று அவர்களின் சாட்சியத்தின் மூலமுமே நாம் நம்பிக்கை கொள்கின்றோம், மக்கள் மனிதில் இழந்துபோன நம்பிக்கையை மீட்டு இறையச்சதை மீண்டும் ஏற்படுத்தவே அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் என்னை நியமித்துள்ளான்.முன்னுள்ள நபிமார்களின் மற்றும் சீர்த்திருத்த வாதிகளின் உண்மையான போதனைகளை உறுதிப்படுத்துவதற்கு ஒவ்வொரு காலத்தில் இறைவனிடம் இருந்து அவனுடைய தூதர்கள் வருவது அவசியமா கின்றது,அவ்வாறு தோன்றும் தூதர்கள் முன்சென்ற அல்லாஹ்வின் தூதர்களின் மான்பை பாதுகாப்பதுடன் அவர்களின் தெளிவான செய்தியையும் இறைவனின் தெளிவான போதனைகளையும் நமக்கு அளிக்கின்றார்கள் எனது அருமையானவர்களே! நீங்கள் ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளுங்கள், எனது வருகையின் மூலம் எனக்கு முன் சென்றவர்களை பொய்யர்கள் என்று முத்திரைகுத்திவிட்டு எனது வாதத்தை நான் வைக்கவில்லை  மாறாக உண்மையில்
     
    எனது வாதம் முன்சென்ற அனைவர்களில் வாதத்தையும்  உண்மைப் படுத்துவதுடன் இந்த உறுதியான அழகான முத்து மாலையில் மேன்மேலும்  முத்துக்கள் சேரும் என்றும் இது கியாமத்து நாள் வரை தொடரும் என்றும்  தோன்றக்கூடியவர்கள் அனைவரும் ஒன்றன்பின் ஒன்றாக ஒருவரை ஒருவர் உண்மைப்படுத்திக்கொண்டே செல்வார்கள் என்பதே ஆகும், இதுவும் இறைவெளிப்பாடுகள் (வஹீ) வைத்தும் வாதம் செய்பவர்களை அடையாளம் கண்டு கொள்ள ஒரு சிறந்த வழியாகும், மேலும் இறைவன் எனக்கு நியமித்துள்ள முக்கிய பணி அதாவது எனது வருகையின் முக்கிய நோக்கம் அடியார்கள் மறந்துபோன நிலையில் உள்ள ஆன்மிக உண்மைகளை போதித்து இறைவனுடன் அவனது அடியானின் அன்பையும் இறையச்சத்தையும் இறைபக்தியையும் மீட்டெ டுப்பதே ஆகும். இதற்க்கு எல்லாம் மேலாக அல்லாஹ்வின் ஒளியை மீட்டு அந்த ஓரிறைவனை மீண்டும் அவர்களின் இதயத்தில் நிறந்தரமாக எத்திவைத்து அனைத்து பொய்த்தெய்வங்களில்லிருந்து அதை உருவாக்கும் கருத்துக்களிலிருந்தும் முற்றிலுமாக தூய்மைபடுத்தவே ஆகும். எனவே என்னை இறைவன் இந்த ஆன்மிக அவலநிலையிலிருந்து மனிதனை மீண்டும் அந்த உண்மையான தூய இறை நெருக்கத்தின் பக்கம் எடுத்துச்செல்ல அனுப்பியுள்ளான்
     
    எத்தனையோ பேர் இறைவனை பற்றியும் ஆன்மிகத்தை பற்றியும் பேசுவதை பார்த்திருக்கின்றோம், ஆனால் உண்மையில் அவர்களின் உள்ளங்களில் பௌதீக உலக ஆசைகள் நிறைந்திருக்கும், எனவே அனைவரும் அந்த ஏக இறைவனுடைய உதவியுடனும்  அவனது வார்த்தையுடனும் மனித குலத்தை சந்தேகம் தவறான நம்பிக்கை தவறான உறுதிப்பாடுகளிலிருந்து வழிநடத்த இந்த காலத்தில் தேவையு ள்ளது என்பதில் நீங்கள் அனைவரும் என்னுடன் நிச்சயமாக உடன்படுவீர்கள் என்று நினைக்கின்றான் ,மேலும் எப்போது மார்க்கம் என்பது வெற்று பேச்சுகளாகவும் உண்மையின் நிலை கவலைக்கிடமாகவும் இன்னும் உலகின்  சிலப்பகுதியில் உண்மை ஆற்றல் இழந்து போன நிலையிலும் மற்றும் உணர்வில்லாமலும் இறந்து கிடக்கும் நிலையில் இருக்கும்போது மனிதகுலத்திற்கு ஒரு நபியின் தேவை இருப்பதை புரிந்துகொள்ளலாம் மேலும் அவ்வாறே இன்றும் தேவைப்படுகின்றார் என்பதை புரிந்துகொள்ளுங்கள்!
     
     
    மேலும் அல்லாஹ் தனது தூதர்கள் மற்றும் நபிமார்களின் மூலம் சத்தியத்தின் உண்மையை மக்களை உணர செய்து அவர்களை பாதுகாப்பானாக, உலகத்தின் தலை சிறந்த மனிதரும் உலகில் தோன்றிய நபிமார்களுக்கெல்லாம் முத்திரையாக விளங்கும் நமது பெருமானார் காத்தமுன் அன்பியா முஹம்மது முஸ்தபா (ஸல்) உம்மத்திற்கு இதை போன்ற சீர்த்திருத்தவாதிகளை எழுப்புவதன் மூலம் அன்னாரின் மதிப்பை யுகனாள் (கியாமத்து) வரை மேலோங்க செய்வானாக அல்லாஹ் தனது தூய உடன்படிக்கையை பாதுகாப்பானாக மேலும் அவர்கள் மூலம் இந்த உலக மக்கள் அனைவரும் ஒருங்கிணைத்து அந்த தூய ஓரிறைவனை வணக்கும் ஆனந்தத்தை அடைவோமாக.
     
     
    தொடர்ச்சியாக இறைவஹீயை வெளிப்பாடுகளை பற்றியும் பார்ப்போம், இறைவெளிப்பாடு என்பது இறைவனுடைய வார்தை மற்றும் அவனுடைய வழிகாட்டலும் ஆகும், மேலும் அல்லாஹ் தான் நாடும் அடியானை தேர்ந்தெடுத்து அவனுடன் உரையாடுவதன் மூலம் இறைவன் அவனை படைக்கப்பட்டதன் நோக்கத்தை வெளிப்படுத்துகின்றான் , மேலும் இந்த வெளிபாடுகளை பெறுபவர் அதன் அர்தத்தையோ அல்லது வார்த்தையையோ பெறுகின்றார் இவ்விவரண்டுமே அல்லாஹ்விடம் இருந்துதான் வருகின்றது, இறைவஹீயே மனிதனின் உண்மையான (ஆன்மிக)வாழ்வாதரமாகும், இதன்முலமாகவே அவன் வாழ்கின்றான் மேலும் இதுவே அவருடைய படைத்தவுடனுடன் ஒரு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்து கின்றது, இறைவனிடம் இருந்து வெளிபடும் இத்தகைய வார்த்தைகள் ஒரு தனித்தன்மைவாய்த்த ஆற்றலையும் வல்லமையையும் கொண்டது மேலும் இறைவனை தவிர ஒருவராலும் இதை உருவாக்கமுடியாது மேலும் அதுவே ஞானம் மற்றும் அறிவின் கருவூளம் ஆகும். இன்னும் இவை மிக மிக ஆழமான அர்த்தத்தை கொண்டுள்ளது இதை எவ்வாறு சொல்வதென்றால் ஒரு சுரங்கத்தில் ஆழமாக செல்ல செல்ல அதிக விலைமதிப்புமிக்க கற்கள் கிடைக்கின்றது என்று வைத்துக் கொண்டாலும் இறைவஹி என்பதன் அற்புதத்தின் ஆழம் இந்த சுரங்கத்துடன் கூட ஒப்பிடமுடியாது ஏனென்றால் இதன் ஆழத்தின் மகிமை அந்த சுரங்கம் அதன் எல்லையை எட்டிவிட்டாலும் அதன் ஞானத்தின் ஆழத்தை  அடையமுடியாது.
     
     
    இன்னும் இறைவஹீயை பற்றி கூறுவதென்றால், இது ஒரு கடலை போன்றது அந்த கடலின் மேற்பரப்பில் அழகிய நறுமணத்தையும் அந்த கடலின் அடிப்பகுதியில் விலையுயர்ந்த உயர்ரக முத்துக்களும் விரிக்கப்பட்டுள்ளது,எனவே எவர் அதன் மேற்பரப்பை மட்டும் அடைகிறார்களோ அவர்கள் அந்த மேற்பரப்பில் உள்ள வாசனை யை அனுபவித்து மகிழ்கின்றனர்,ஆனால் எவர் அதில் ஆழமாக மூழ்குவாரோ அவர்களுக்கு நறுமணத்தையும்  அந்த அழகிய முத்தையும் அடைகின்றார், மேலும் இறைவெளிப்பாடுகள் பல்வேறு வகைப்படும் சிலவேளைகளில் அது கட்டளை மற்றும் சட்டதிட்டங்களாகவும் சிலவேளைகளில் அது அறிவுரை போதனை களாகவும், சிலவேளைகளில் மறைவானவற்றின் அறிவாகவும்,சில வேளைகளில் உண்மையான ஆன்மிக ஞானமாகவும், சில வேளைகளில் அது அல்லாஹ் நம் மீது காட்டும் நல்லெண்ணமாகவும் மற்றும்   நமது கோரிக்கைகளின் ஒப்புதலாகவும் , சிலவேளைகளில் அவனுடைய மறுப்பு மற்றும் அதிருப்தியில் வெளிப்பாடாகவும் , சிலவேளைகளில் அவனுடைய அன்பும் அரவணைப்பாகவும்  சிலவேளைகளில் அவனுடைய கோபம் மற்றும் எச்சரிக்கையாகவும்,  சிலவேளை களில் அது அறநெறி களை போதிப்பதாகவும், சிலவேளைகளில் மறைவான தீமைகளை பற்றி அவனிடம் இருந்து கிடைக்கும் நுண்ணறிவாகவும் இருக்கிறது. சுருக்கமாக கூறுவதென்றால்  ,நமது நம்பிக்கை இதுவாகும் அதாவது இறைவன் தனது அடியார்களுடன் தான் நாடியவர்களிடம் பேசக்கூடியவன் அவ்வாறு பேசும் அவனது தொடர்பு சூழ்நிலைக்கு ஏற்றாற்ப்போலும் அதை பெறுபவர் ஆன்மிக நிலையை பொருத்தும் மாறுபடுகின்றது.
     
    எப்போது இந்த உலகத்தில் இருள் பரவத்தொடங்குமோ அப்போதில்லிருந்து மனிதன் பாவத்திலும் தீமையிலும் மூழ்கிவிடுகின்றான் ,இந்த நேரத்தில் இறைவனின் உதவி கிடைக்கவில்லை என்றால் மனிதன் ஷைத்தானின் பிடியில்லிருந்து அவர்களாகவே விடுபடுவது மிக கடினமாகிவிடுகின்றது, இந்த சமயத்தில் அல்லாஹ் அவனது கருணையாலும் கிருபையாலும் தனது அடியார்களில் அன்பு மற்றும் விசுவாசம் கொண்ட தான் நாடியவரை தானே தேர்வு செய்து அவர்க்கு இந்த உலகை வழிநடத்த பணிக்கின்றான்.
     
    எனவே ஒரு நபி தோன்றும்போது, அவரும் அவரை ஏற்றுக்கொண்ட உலகத்தின் ஒரு பிரிவை சார்ந்த மக்களும் அந்த ஓரிறைவனாகிய அல்லாஹ் சுபஹானஹுதாலாவை மட்டுமே வணங்குவார்கள் மேலும் அவனுக்கு எதையும் இணைவைக்க மாட்டார்கள், எனது அருமையானவர்ளே! ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ஒரு நபி தோன்றும் போது தான் அங்கு அநீதிக்கு பதிலாக நீதியும் கொடுமைக்கும் பதிலாக கருணையும் பிறக்கின்றது, எனவே ஒரு இறைத்தூதர் மூலமே இறைவன் அவருடைய சித்தத்தையும் நோக்கத்தையும் வெளிப்படுத்துகின்றான், எவர் அவரை விட்டு விலகுகின்றார்களோ அவர்கள் தங்களுக்கு தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள், ஆனால் எவர் இதன் பக்கமாக தனது கவனத்தை செலுத்து கின்றார்களோ அவர்கள் அந்த ஏக இறைவனின் அன்பை பெறுகின்றனர், மேலும் அவனது மேலான கிருபையாலும், கருணையாலும்  அந்த அருள்களின் கதவுகளை அவர்களுக்காக அவன் திறக்கிறான், இன்னும்  இந்த மேன்மையான அருளை அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் பெறுகின்றார்கள் , மேலும் அவர்களே இவர்களுக்கு பிறகு வரும் சந்ததியினருக்கு ஆன்மிக போதனைகளுக்கு முன்னோடியாகின்றார்கள்.
     
    பெருமானார் (ஸல்) அவர்கள் தனது ஸஹாபிகளுக்கு போதித்த இஸ்லாம் இன்று எங்கே சென்றது, இந்த உண்மையான போதனைகளை ஏற்றுக்கொள்ளாத பெயர் தாங்கிய மௌலவிகளும் , அஹ்மதியா ஜமாஅத்தின் முல்லாக்களும் ,பெயர் தாங்கிய அமீர்களும் அப்பாவி மக்களை தனது பிடியில் வைப்பதற்காக மார்க்கத்தில் உள்ள இறை போதனைகளை தங்களுக்கு ஏற்றார் வகையில் திரித்து கொள்ள சிறிதும் தயங்குவதில்லை, இதனாலேயே இறைவன் எங்களுடன் பேசுகின்றான் என்று கூறியதற்காக  நம்மை புறக்கணிப்பதில் எந்த வித தயக்கமும் அவர்களுக்கிடையே இல்லை, இன்னும் அவர்களின் நம்பிக்கை எவ்வாறு உள்ளதென்றால் இப்பொது இறைவெளிப்பாடு பெறக்கூடிய தகுதியை உடையவர் கலிபஃஅதுல் மஸீஹ் மட்டுமே என்று கூறுகின்றனர், மேலும் இது எந்த அளவிற்கு போய்விட்டது என்றால் இது தான் உண்மை என்று மார்க்க விவாதங்களிலும் கூற ஆரம்பித்துவிட்டனர், இதை எல்லாம் கேட்கும்போது இப்பொது உள்ள இஸ்லாத்தின் மீது சில சமயங்களின் நமக்கு சிறிது சந்தேகம் தோன்ற ஆரம்பிக்கின்றது, மேலும் இப்பொது உள்ள முஸ்லிம்கள் நடைமுறைகளை பார்க்கும்போது  நிச்சயமாக உண்மை இஸ்லாத்தை பிரதிபலிப்பதில்லை என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும் ஏனென்றால் இஸ்லாம் எதற்காக தோற்றிவிக்கப்பட்டதோ அதன் நோக்கத்தை இப்போது அது வெளிப்டுத்துவதில்லை.
     
     
    இந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியை நினைவு படுத்துகின்றான் அன்னார் இவ்வாறு கூறினார்கள் அதாவது:-
     
    “ஒரு காலம் வரும் அப்போது இஸ்லாத்தில் அதன் பெயரை தவிர வேறு எதுமே எஞ்சியிருக்காது”
     
    இப்போது இவர்கள் நம்பிக்கை கொண்டு பின்பற்றி வருகின்ற இவ்வகையான இஸ்லாமால் எவ்வாறு அதன் பொன்னான சமயத்தில் அது வெளிப்படுத்திய சிறந்த தாக்கத்தை போல் இன்று  ஏற்படுத்துவதில்லை, மேலும் இப்போது இவர்களால் தடம் பாதிக்கப்பட்ட இஸ்லாமாலும்,இறைவனின் இறுதிமார்கத்தின் பாதுகாவலர்கள் என்றும் மார்க்க அறிஞர்கள் என்று கூறிக்கொள்ளும் இவர்களாலும் மேலும்,  இவர்களின் மார்க்கத்தின் அரைகுறை விளக்கத்தாலும் சடங்குசம்பிரதாயங்களும்,அந்த மறைத்த பொற்காலத்தின் இஸ்லாத்தின் மேன்மையை பார்த்து கவரப்பட்ட மாற்றுமத சகோதரர்கள் இஸ்லாத்தின் ஏற்றுக்கொண்டாலும் துரதிஷ்டவசமாக அவர்களால் அந்த உண்மையான இஸ்லாத்தின் போதனையை உறுதியாக பிடிக்க முடியவில்லை
     
     மேலும் பெருமானார் (ஸல்) அவர்களின் மற்றுமொறு நபி மொழியின் பாகம் நான் உங்களை அழைத்து செல்வேன் அதாவது அன்னார் கூறும்போது
     
    “எனது உம்மத் பொழிந்துகொண்டிருக்கும் மழையை போன்றது இந்த மழையின் முந்தியது சிறந்ததா அல்லது பிந்தியது சிறந்ததா என்று எனக்கு தெரியாது”( முஸ்னத் அஹ்மத் திர்மிதீ)
     
     
    இந்த (குர்ஆனாகிய) அறிவுரையை நாமே இறக்கினோம். நிச்சயமாக நாமே இதனைப் பாதுகாப்போம் (15: 10)
     
    இந்த ஹதீதில் இருந்து மிக தெளிவாக இறைவனின் இந்த இறுதி மார்க்கம் ஆகிய இஸ்லாம் ஒவ்வொரு காலமும் அந்த காலத்திற்கு ஏற்ற எல்லையில்லா புத்துயிரை வழங்குவதற்கான நோக்கத்தை தன்னுள்ளே கொண்டுள்ளது ,மேலும் திருகுரானின் தெளிவான விளக்கத்தின் மூலம் கிடைக்கும் வாக்குறுதி படியும் இதை மேலும் பெருமானார் (ஸல்) அவர்கள் உறுதியளித்துள்ள வாக்குறுதியின் படியும் அன்னாரின் இறைபோதனைகளுக்கு பாதுகாவர்களாக வாக்களிக்கப்பட்ட சீர்த்திருத்தவாதிகள், ஷரியத் அல்லாத நபிமார்கள் மற்றும் அல்லாஹ்வின் பிரதிநிதிகள் கியாமத்து நாள் வரை வந்துகொண்டே இருப்பார்கள். மேலும் அல்லாஹ் மிக உறுதியாக அவன் இறக்கிய திருகுரானை அவனே பாதுகாக்கின்றான் இந்த உறுதிமொழியை அவன் சூரத்துல் ஹிஜிர்ரில் இவ்வாறு கூறுகின்றான்
     
    இப்போது கேள்வி என்னெவன்றால் அல்லாஹ் அவன் இறக்கிய திருகுரானை மனிதனின் உள்ளத்திலும் செயல்வடிவிலும் எவ்வாறு பாதுகாக்கின்றான் மேலும் அது வெறும் எழுத்துக்களாக “கல்வெட்டை” போல பாதுகாக்கின்றான் என்று எடுத்துக்கொள்ளமுடியுமா இப்போது ஒருவேளை இவ்வாறு தான் பாதுகாக்கின்றான் என்று இருந்தால் பிற்காலத்தில் தங்களை முஸ்லீம்கள் என்று வாதம் செய்பவர்களிடம் ஒரு நூல் இலை அளவிற்கு கூட உண்மை இஸ்லாம் அவர்களிடம் இருக்காது எனவே இங்கே கூறப்படுகின்ற பாதுகாப்பு என்பது என்ன?
     
    மேலும் பெருமானார் (ஸல்) அவர்கள் இறுதிநாட்கள்களில் தனது தோழர்களின் ஒத்த காலத்தை அடைவார்கள் என்று முன்னறிவித்துள்ளார்கள், இஸ்லாத்தின் முதலில் உதித்த ஒளிக்கதிர் மகிமையுடையது இதையே பெருமானார் (ஸல்) அந்த நபிமொழியில் மழைக்கு ஒப்பிட்டு கூறுகிறார், மேலும் இந்த அருளுக்குரிய இந்த மழை தொடர்ச்சியாக இந்த உம்மத்திற்கு அன்னாரின் காலத்திற்கு பிறகும் நீடிக்கிறது, இன்னும் கவனமாக படித்தால் உங்களிலிருந்து உங்களுக்கு பிறகு வரக்கூடியவர்கள் யார் என்று அறியலாம், மேலும் அவர்கள் உண்மையான முஸ்லிம்களாக அவர்களுக்கு முன் அவ்வாறு தோண்றியவர்களை கிட்டத்தட்ட ஓத்திருப்பார்கள் ஆனால்  முழுவதும் அவர்களை போல் இருப்பார்கள் என்று கூறுவது கடினம் , ஏனென்றால் இந்த எளியவனின் கருத்தின் படி இஸ்லாத்தின் தோற்றத்தில் அதாவது ஆரம்ப காலத்தின் மகிமை வேறு எந்த காலத்துடனும் ஒப்பிடமுடியாது,இருப்பினும் இந்த இறுதி நாட்களில் அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் அவனது நபியின் மூலம் அந்த மழைக்கு உத்தரவாதம் வழங்குகின்றான், இதையே அவன் தனது திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்
     
    இன்னுமொன்று,முதன்மையானவர்கள்,இவர்கள்முதன்மையானவர்களேயாவர்.
     
    இவர்களே (இறைவனுக்கு) நெருங்கியவர்களாவார்கள். பேரின்பத் தோட்டங்களில் (இவர்கள் வாழ்ந்து வருவர்). முன்னவரைச் சேர்ந்தவர்கள் பெருங்கூட்டமாகஇருப்பார்கள். பின்னவரைச் சேர்ந்தவர்கள் சிறு கூட்டமாக இருப்பார்கள். (56: 11-15)
     
    மேலும் இதுவரை  அவர்களுடன் சேராத மற்றவர்களுக்கிடையிலும் (அவரை எழுப்புவான்). அவன் வல்லமை மிக்கவனும், நுண்ணறிவுள்ளவனுமாவான்.(62: 4)
     
     
     
    மேலும் ஒரு நபி மொழியில் இவ்வாறாக கூறப்பட்டுள்ளது:-
     
     
     
    “ எனது உம்மத்தில் முதல் மற்றும் கடைசி பகுதியை சார்ந்தவர்கள் சிறப்புடையவர்கள், இவர்களுக்கு இடையில் சில கோணல்புத்தியுள்ளவர்கள் இருப்பார்கள். என்று கூறியபின்   “ நம் சகோதரர்களை பார்க்க நான் ஆசைப்படுகிறேன்” என்று சொன்னார்கள்.மக்கள் (நபித்தோழர்கள்) , அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் “சகோதரர்கள்” இல்லையா? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் என் தோழர்கள் தாம்” என்று அன்னார் பதிலளித்தார்கள்
     
    முஸ்லீம் ஹதீத் தொகுப்பில் உள்ள இந்த நபிமொழியில் மிக தெள்ளத்தெளிவாக இங்கே குறிப்பிடுகின்ற “சகோதரர்கள்” என்று பெருமானார் (ஸல்) கூறுபவர்களை அன்னார் பார்த்ததே இல்லை என்பதும் அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த உலகத்தைவிட்டு சென்றதிற்கு பிறகு இறுதிக்காலத்தில் தோன்றக்கூடியவர்கள் என்பதும், இன்னும் பல்வேறு விளக்கங்களில் இங்கே குறிப்பிடப்படும் “சகோதரர்கள்”  இறுதிக்காலத்தில் தோன்றக்கூடியவர்கள் என்பதும் தெளிவாகின்றது.
     
    எனவே திருகுரானும் நபி மொழியும் எதிர்காலத்திலும் இறைத்தூதர்கள் தோன்றுவார்கள் என்பதையே மிகத்தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது, மேலும் இறைவனால் தேர்வு செய்து இனி வரக்கூடியவர்கள் இறுதிவேதத்தை கொண்டுவந்த காத்தமுன் அன்பிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிம்பமாகவும் அன்னாருக்கு இறைவன் அருளிய உண்மையான போதனைக்கு புத்துணர்வு வழங்குபவர்களாகவும் வருவார்கள், மேலும் அல்லாஹ் இந்த போதனைக்கையும் வாழ்கை நெறிமுறைகளையும் மறுமை வரை பாதுகாப்பதாக உறுதிமொழி அளித்துள்ளான்
     
    நான் உங்களிடம் மேலே கூறிய ஹதிதுகளில் ஞானத்திலிருந்து, எத்தனையோ முஸ்லீம் அமைப்புகள் அவர்களுக்கிடையே எண்ணற்ற கருத்து வேறுபாட்டை கொண்டுள்ளனர். மேலும், அதில் உள்ள எந்த அமைப்பும் நபியே கரீம் (ஸல்) அவர்களுடன் அவர்களின் ஸஹாபிகள் வாழ்ந்துபோல் அல்லது பெருமானார் (ஸல்) அவர்கள் தனது இதயத்துக்கு இதயமாக சந்திக்கவிற்கும் அந்த “சகோதரர்கள் போலவும் இல்லை, ஏனென்றால் இவ்விவரண்டிருக்கும் அவர்கள் வாழும் காலத்தில் ஒரு அல்லாஹ்வின் நபியின் ஆன்மிக அருளின் கீழ் வரமால் இது சாத்தியமற்றது.
     
    இன்னும் ஒரு முக்கியமான விஷயத்தை நான் உங்களுக்கு தெளிவுபடுத்த விருப்புகின்றேன் அதாவது ஜமாஅத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாம் என்பது ஒரு புதிய மார்க்கம் அல்ல, என்பதை நீங்கள் அனைவரும் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ,மேலும் இந்த ஜமாஅத் இஸ்லாத்தில் பிரிவினையை ஏற்படுத்துவற்காகவும் தோன்ற வில்லை ,மாறாக அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் தனது மகிமை வாய்த்த அந்த இஸ்லாத்தை மீண்டும் உருவாக்குகின்ற ஒரு கருவியாக இதை எழுப்பியுள்ளான்.
     
    எனவே நான் உங்களிடம் மீண்டும் தெளிவுபடுத்துகின்றான் இந்த ஜமாஅத் ஒரு புதிய மார்க்கத்தை தன்னுள் கொண்டுவரவில்லை, மாறாக இதன் பெயர் அதாவது ஜமாத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாம் திருக்குரானில் மார்க்கம் என்பதற்க்கு என்ன பெயர் விளக்கப்ட்டுள்ளதோ அல்லது அறிவிக்கபட்டுள்ளதோ அந்த பெயரின் மறுவடிவமாகும், இந்த மறுவடிவத்தை மீண்டும் இந்த காலத்தின் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட எளியவனான என் மூலமாக இறைவழிகாட்டலின் கீழ் அருளியுள்ளான், மேலும் ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம் என்ற இந்த பெயரை இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவனின் இந்த காலத்தின் கலீபத்துல்லாஹ் ஆன இந்த எளியவனுக்கு அவனே வழங்கியுள்ளான், அந்த ஏக இறைவனே இதன் பெயரை வைத்து அவனுடைய  அடியானையும் அவனே தேர்வு செய்வதை விட சிறந்த அருள் வேறு என்ன இருக்கமுடியும், மேலும் அவன் இந்த அருளுக்குரிய முதலீடை அந்த தூய தீனே இஸ்லாத்தை மீட்டெடுக்கும் நோக்கத்தில் செய்துள்ளான், இப்பொது எத்தனையோ முஸ்லீம் அமைப்புகள் இஸ்லாத்தில் மாறுபட்ட காணோட்டத்தினாலோ அல்லது அவர்களின் சில நம்பிக்கைகளின் அடிப்படையில் அவர்களின் அமைப்புகளுக்கு பல்வேறு வேறுபட்ட பெயர்களை தாங்களாகவே வைத்துக்கொள்கின்றனர், ஆனால் நம்மிடையே அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் சுபஹானஹுதாலாவின் வெளிப்பாடுகளும் அவனால் நியமிக்கப்பட்ட அவனது கலீபாவும் மேலும் அவனால் பெயரிடப்பட்ட அமைப்பும் இருக்கும்போது இவ்வகை அமைப்புகளின் தேவை என்ன இருக்கிறது என்பதை சிந்தித்து பாருங்கள், மேலும் அல்லாஹ் அவனது இறைவஹீயியை அனுப்புவதன் மூலமே அவனால் உருவாக்கப்பட்ட ஜமாத்தை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றான், எனது அருமையானவர்களே இந்த தொடர் மூலம் என்னுடைய செய்தியை உங்களுக்கு தெளிவாக விளக்கிவிட்டேன் என்று நினைக்கின்றேன்.
     
     நான் அல்லாஹ்விடம் துஆ செய்கின்றேன், அவன் முஸ்லிம்களுக்கு உண்மையையும் அவர்கள் அந்த மேலாக நோக்கத்தை ஒளிரூட்டும் தெளிவான கருத்துக்களின் வழியாக பெற செய்வானாக, இதன் மூலமாக அல்லாஹ் நம்மிடம் என்ன நாடுகிறான் என்பதை நமக்கு புரியசெய்வானாக ,மேலும் நாம் எல்லாவிதமான ஷைத்தானின் ஈர்ப்பில்லிருந்து முற்றிலும் விலகி அவனிடம் முழுமையாக அர்ப்பணிக்க செய்வானாக, இதன்முலமாக அவனை அறிந்து அவனுடைய இருப்பின் ஆனந்தத்தை அடைவோமாக, இன்னும் அவனால் தேர்தெடுக்கப்பட்ட இறை அடியார்களின் பொதுவான பணியான மனித இனத்தையும் ஆன்மிகத்தையும் பாதுகாப்பானாக இன்ஷாஅல்லாஹ் ஆமீன்
     
     எனவே சகோதரர்களே ஒரு இறை தூதர் வருகையின் நோக்கம் “ஐனுல் யகீன்” ஆகும் இறுதியாக மஸீஹ் (அலை) அவர்களின் கூற்றுடன் முடித்து கொள்கின்றேன் நிறைவு செய்கின்றோம்.
     
    முழுமையான இறைஞானம் பெறும் வழி அன்புமிக்க நண்பர்களே! இறைவனுடைய நோக்கங்களுக்கு எதிராக எவனாலும் போரிட முடியாது. இறைவனின் தூய தூதர்களுக்கு இறைவன் புறமிருந்து கிட்டும் இல்ஹாம் (இறையறிவிப்பு)தான் முழுமையான இறைஞானத்திற்கான வழியாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்த அருட்கடலான இறைவன் தனது இல்ஹாம் எனும் அருளை அடைத்து வைத்து உலகத்தை ஒருபோதும் அழிவிற்குள்ளாக்க நாடவில்லை. மாறாக தனது இல்ஹாம் என்னும் இறையறிவிப்பின் வாசல்களை என்றென்றும் திறந்தே வைத்திருக்கின்றான். ஆனால் அவற்றை அவற்றிற்குரிய சரியான வழியின் மூலமே தேடவேண்டும். அப்போதுதான் அவற்றை எளிதில் பெறமுடியும். அந்த ஜீவநீர் வானத்திலிருந்து இறங்கி அதற்கேற்ற இடத்தில் தேக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஜீவநீரை அருந்துவதற்கு, நீங்கள் எப்படியாவது அந்நீரூற்றை அனுகி அதில் உங்கள் உதடுகளைப் பதித்து அந்த ஜீவநீரை மனநிறைவோடு பருகுங்கள். ( இஸ்லாமிய போதனைகளின் தத்துவ ஞானம்)
     
    இன்ஷாஅல்லாஹ் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ் சுபஹானஹுதாலா அருள்புரிவனாக ஆமீன்