Author: admin

  • இறைவனின் இருப்பு

    பார்வைகள் அவனை அடைய முடியாது. ஆனால் அவனே எல்லோருடைய  பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன். (அல் அன்ஆம் 6:104)

    இந்த வசனத்தில், மனிதனுடைய  கண்கள் இறைவனைக் காணும் திறன் கொண்டவை அல்ல எனும் உண்மையின் பக்கம் இறைவன் மனிதனின் கவனத்தை ஈர்க்கிறான்.  ஏனென்றால் அவன் நுட்பமானவன்; நுட்பமான விஷயங்களை கண்களால் உணர முடியாது. அப்படியானால், இறைவனை அறிவதற்கான வழி என்ன?  இந்த கேள்விக்கு இறைவன், “ஆனால் அவன் பார்வைகளை அடைகிறான்” என்று கூறி பதிலளிக்கிறான். அதாவது, மனிதனின் கண்களுக்கு இறைவனைக் காணும் திறன் இல்லை என்றாலும், அவன் தனது ஆற்றலைக் காண்பிப்பதன் மூலமும், அவனுடைய பண்புகளின் வெளிப்பாட்டினாலும் மனிதனுக்கு தன்னை வெளிப்படுத்துகிறான். எனவே, மனிதனுக்கு இறைவன் தன்னை வெளிப்படுத்தும் வழிகள் பன்மடங்காக உள்ளது. அவன் தனது எல்லையில்லா ஆற்றலை, சில நேரங்களில் அழிவுகளைத் தூண்டும் அறிகுறிகளாலும், சில நேரங்களில் தீர்க்கதரிசிகளின் வழியாகவும், சில நேரங்களில் கருணையின் அறிகுறிகளாலும், சில நேரங்களில் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வதன் மூலமாகவும் காட்டுகிறான்.பொருள்முதல்வாதத்தைச் சார்ந்திருக்கும் இந்த யுகத்தில் காணப்படும்  அனைத்து கோட்பாடுகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு மத்தியில் இறைவன் இருக்கிறான் என்பதை நம்பிக்கை கொள்வது மிகப் பெரும் விஷயமாகும்.  சிலைகளை வணங்குபவர் இறைவனுடன் மற்ற கடவுள்களை வணங்க ஏற்படுத்தியிருந்தாலும், குறைந்தபட்சம் அவர் இறைவனின் இருப்பை நம்புகிறார்.  நாத்திகர் எவ்வாறாயினும், உயர்ந்த இறைவனின் இருப்பை மறுக்கிறார். காரணம், இன்றைய அறிவியலில் அனைத்துமே  கண்களால் நேரடியாக காண்பதை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. எனவே, இறைவன் என்றொருவன் இருக்கிறான் என்றால், அவனை எங்களுக்குக் காட்டுங்கள். அவனைப் பார்க்காமல் நாங்கள் எவ்வாறு அவனை நம்புவது? என்பதே ஒரு நாத்திகரின் வாதமாகும். 

    இன்றைய சூழலில், மேற்கத்திய கலாச்சாரத்தின்  தாக்கங்கள் பல இளைஞர்களின் இதயங்களிலிருந்து தெய்வீகத்தின் அடையாளத்தை அழிப்பதன் பாதையில் வெகுதூரம் சென்றுள்ளதாலும், நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்கள் மற்றும் பாரிஸ்டர்கள் போன்றவர்கள் இறைவனின் இருப்பை மறுக்கத் தொடங்கியுள்ளதாலும்,  சமூகத்தின் மீதுள்ள பயத்தின் காரணமாக தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக அறிவிப்பதைத் தவிர்க்கும் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு இறைவன்மீது உண்மையில் நம்பிக்கை  இல்லாததாலும், இந்த பிரசங்கத்தை எழுத்து வடிவில் எழுத  அல்லாஹ் என்னை ஊக்கப்படுத்தினான். எனவே, இதன்மூலம் சில அதிர்ஷ்டசாலிகளான மனிதர்கள்  பலன் பெறலாம்.

    ஒரு நாத்திகர் முன்வைக்கும் முதல் கோரிக்கை, “நீங்கள் இறைவனை எங்களுக்குக் காட்டினால், நாங்கள் அவனை நம்புவோம்” என்பதேயாகும். மனிதனைப் பொறுத்தவரை அவன் வெவ்வேறு விஷயங்களை வெவ்வேறு புலன்களின் மூலமாக உணர்கிறான். சில விஷயங்களை நாம் பார்ப்பதன் மூலமாகவும், சிலவற்றைத் தொடுவதன் மூலமாகவும், சிலவற்றை வாசனையினாலும், சிலவற்றைக் கேட்பதன் மூலமாகவும், சிலவற்றை சுவைப்பதன் மூலமாகவும் உணர்கிறோம். ஒரு வண்ணம், பார்ப்பதன் மூலமாகவே அறியப்படுகிறது. அது வாசனை, தொடுதல் அல்லது சுவைத்தலின்  மூலமாக அறியப்படுவதில்லை. ஒரு வண்ணத்தின் சத்தத்தைக் கேட்கும்படி செய்தால் மட்டுமே  நான் அந்த வண்ணத்தை ஏற்றுக்கொள்வேன் என்று ஒருவர் கூறினால், அந்த மனிதர் ஒரு முட்டாளாக கருதப்படமாட்டாரா? வண்ணத்தைப் பார்ப்பதன் மூலமாக அறியப்படுவது போன்றே, வாசனையை நுகர்வதன் மூலமாகவே அறிய முடியும். 

    இப்போது, ஒருவர் ஒரு ரோஜாவின் மணத்தை சுவைக்கும்படி செய்தால் மட்டுமே அதை மணமுள்ளதாக ஏற்றுக்கொள்வதாக  கூறினால், அத்தகைய நபர் அறிவுள்ளவராக கருதப்படுவாரா? மற்றொரு புறம், புளிப்பு, இனிப்பு, கசப்பு மற்றும் உவர்ப்புத்தன்மை ஆகியவைப் போன்று சுவைப்பதன் மூலம் மட்டுமே அறியக்கூடிய விஷயங்களை வாசனையின் மூலம் யாராவது தெரிந்து கொள்ள முயன்றால், அவரால் ஒருபோதும் அவற்றை உணர முடியாது. ஆகவே, நம் கண்களால் காணக்கூடியவற்றை மட்டுமே நாம் ஏற்றுக்கொள்வதும், கண்களால் அறிய முடியாதவற்றை நம்ப மறுப்பதும் சரியல்ல. அவ்வாறு செய்வது சரியானது என்றால், ரோஜாவின் வாசனை, எலுமிச்சையின் புளிப்பு, தேனின் இனிப்பு, இரும்பின் கடினத்தன்மை மற்றும் ஒலியின் மெல்லிசை ஆகியவற்றை நாம் மறுக்க வேண்டும், ஏனென்றால் இவற்றை நாம் கண்களின் உதவியால் உணரவில்லை. எனவே, நாம் அவனை நம்புவதற்கு முன்பு இறைவன் நமக்குக் காட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை வைப்பது எவ்வளவு பொருத்தமில்லாதது! அத்தகைய கோரிக்கையை முன்வைப்பவர்கள் ரோஜாவின் நறுமணத்தையோ அல்லது தேனின் இனிமையையோ கண்களால் பார்த்தா அதை நம்புகிறார்கள்? அப்படியானால், உயர்ந்த இறைவனைப் பொறுத்தவரையில், அவனை அவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு அவசியமான  நிபந்தனையாக அவனை பார்க்க வேண்டும் என்று ஏன் முன்மொழிகிறார்கள்? 

    மேலும், மனிதனுக்குள் சில விஷயங்கள் இருக்கின்றன. அவை இருப்பதைக் பார்க்காமலே அவன் அதை அங்கீகரிக்கிறான். மனிதன் தன் இதயம், கல்லீரல், மூளை, குடல், நுரையீரல் மற்றும் மண்ணீரல் ஆகியவற்றைப் கண்களால் பார்த்த பின்னரா நம்புகிறான்? இந்த உறுப்புக்கள் அவனுக்குக் காண்பிக்கப்படும்படி அவனது உடலிலிருந்து வெளியே எடுக்கப்பட்டால், அவற்றைப் பார்ப்பதற்குமுன் அவன் இறந்துவிடுவான். எனவே,எல்லாவற்றையும் பார்ப்பதன் மூலம் நம்மால் அறிய முடியாதெனினும் அவை ஐந்து வெவ்வேறு புலன்களின் மூலமாகவே அறியப்படுகின்றன என்பதைக் காண்பிப்பதற்காகவே இந்த எடுத்துக்காட்டுகளை நான் இங்கே கொடுத்திருக்கிறேன். இந்நிலையில்,  ஐந்து புலன்களால் கூட அறிய முடியாத பல விஷயங்கள் உள்ளன என்பதற்கும், அவற்றை அறிந்து கொள்வதற்கு மற்றொரு வழியும் உள்ளது என்பதற்கும்  இப்போது நான் உதாரணமாக காண்பிக்கிறேன்.  காரணம் கற்பித்தல், நினைவாற்றல் மற்றும் அறிவுத்திறன் ஆகியவற்றை இந்த உலகத்தில்  யாரும் மறுப்பதில்லை. எனினும்  அவற்றை பார்க்கவோ, கேட்கவோ, சுவைக்கவோ, நுகரவோ, தொடவோ முடிவதில்லை. காரணம் கற்பித்தல், நினைவாற்றல் மற்றும் அறிவுத்திறன் ஆகியவை இருப்பதாக நாம் எப்படி அறிந்தோம்? அல்லது சக்தியை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். பலவீனமாகவோ அல்லது வலிமையாகவோ இருக்கும் ஒவ்வொரு நபரும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சக்தியைப் பெற்றிருக்கின்றனர். ஆனால் எவரேனும் இதுவரை அந்த சக்தியை பார்க்கவோ, நுகரவோ, தொடவோ  அல்லது சுவைத்தோ இருக்கிறார்களா? எனவே, ஐந்து புலன்களின் மூலம் நாம் இந்த விஷயங்களை அறிந்திருக்கவில்லை என்பதையும் அவற்றின் இருப்பை உளப்பூர்வமாக  உணர வேறு சான்றுகள் உள்ளன  என்பதையும் நம்மில் இருக்கும் சாதாரணமான மனிதனும் அறிந்தே இருக்கிறான். 

    ஆனால் இறைவன் இந்த எல்லா பொருள்களைவிடவும்   நுட்பமானவனாக இருக்கிறான். இறைவன் நமக்குக் காட்டப்படாவிட்டால், இறைவன் இருப்பதை  நம்ப முடியாது என்று நாம் உரைப்பது எவ்வளவு அநியாயமானது . மின்சாரத்தை எவரேனும் இதுவரை பார்த்ததுண்டா? ஆனால் தொலைதூரங்களுக்கு செய்திகளையும் சிக்னல்களையும் கடத்துவது, விளக்குகள் மற்றும் இயந்திரங்களை மின்சாரம் மூலம் இயங்க வைப்பது போன்றவற்றை நம்மால் மறுக்க முடியுமா? இந்த மின்சாரத்தின் கண்டுபிடிப்பு இயற்பியல் அறிவியலின் களத்தில் ஒரு புரட்சியைக் கொண்டுவந்துள்ளது. ஆனால் விஞ்ஞானிகளில் எவரேனும் அதைப் பார்ப்பது, கேட்பது, சுவைப்பது, நுகர்வது அல்லது தொடுவது ஆகியவற்றின் மூலம் அதைக் கண்டுபிடித்ததுண்டா? ஆனால் அதன் இருப்பை நாம் மறுத்தால், சூரியனின் கதிர்கள் எவ்வாறு பூமியை அடைகின்றன என்பதற்கு நம்மால் விளக்கமளிக்க முடியாது. எனவே,கண்களுக்கு புலப்படாமலும், வேறெந்த ஐம்புலன்களாலும் உணரப்படாமலும் இருக்கும்  பல விஷயங்கள் நம்பப்படும் நிலையில்  இறைவனை நம்புவதற்கு, அவர் கண்ணுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பது எவ்வளவு அநியாயமானது?  இறைவனைக் கண்களால் காண முடியும். எனினும், அவனைப் பார்க்கக்கூடிய ஆற்றலுடைய  கண்களால் மட்டுமே அவனைப் பார்க்க முடியும். எனினும், எவரேனும் அவனைக் காண விரும்பினால், அவன் தனது ஆற்றலின் மூலமாக இந்த உலகம் முழுவதையும் சூழ்ந்திருக்கிறான். அவன் கண்களைவிட்டு மறைந்திருந்தாலும் கூட  எல்லா பொருள்களைவிடவும் தனது ஆற்றலால்  மிகவும் வெளிப்படையானவனாக இருக்கிறான். துவக்கத்தில் நாம் விளக்கமளித்தது போன்று இந்த உண்மை சுருக்கமாக இருப்பினும் மிகவும் நேர்த்தியாக புனித குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    இந்த வசனங்களின் மூலம், ஒவ்வொரு செயலுக்கும் ஒரு முகவர் இருக்க வேண்டும் என்பதையும், இந்த முழு பிரபஞ்சத்தையும் நாம் ஆராய்ந்துப் பார்த்தால், இறைவனே எல்லாவற்றிற்கும் முடிவாக இருக்கிறான் என்பதையும், அவன்தான் இந்த பிரபஞ்சத்தை வழிநடத்துகிறான் என்பதையும் இறைவன்  சுட்டிக்காட்டி மனிதனின்  கவனத்தை ஈர்க்கிறான். இந்த பிரம்மாண்டமான பிரபஞ்சத்தின் படைப்பைப் பற்றி ஒரு நபர் சிந்தித்தால், இந்த பிரபஞ்சத்தை ஒரு படைப்பாகக் கொண்டுவந்த ஒரு இறைவனின் இருப்பை ஏற்றுக்கொள்வதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.



  • நபிமார்களின் வருகையின் நோக்கம்

     ஒரு நபி வருகையின் நோக்கம் சம்பந்தமாக இருப்பதால் இந்த கேள்விக்கு அழகிய முறையில் பதில் அளிக்க புனித திருகுர்ஆனில் இருந்தும் இமாம்களின் கூற்றில்லிருந்தும் இந்த நூற்றாண்டில் இறைவனின் அருளாகவும் பெருமானார் (ஸல்) அவர்களின் கிலாபத்தின் 14 வது கலீஃபா ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்களின் கூற்றுகளில்லிருந்து பார்க்கலாம் மேலும் இது சிறிது நீண்ட பதிவாக இருக்கும். ஏனென்றால் இந்த அருளுக்குரிய நூற்றாண்டில் குறைமதி கொண்ட மக்கள் இக்காலத்தில் தூதர்களின் தேவை என்ன? மேலும் அவர் குறிப்பாக முன் சென்ற தூதர்களின் பெயரை குறிப்பிட்டு இதைப் போன்று இவர் என்ன செய்தார்? இவர் சமுதாயத்திற்கு என்ன தொண்டு செய்தார்? இன்னும் என்ன புரட்சி செய்தார்? என்று அடிப்படை திருகுர்ஆனின் போதனைகளை விட்டுவிட்டு தங்களது மறுக்கும் மனப்பான்மையால் தங்களது மனோ இச்சைகளை பின்பற்றுகின்றனர்

    இவர்களை பார்த்து திருமறை இவ்வாறு கூறுகின்றது:-

    இதற்கு முன்னர் யூஸுஃப் தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்தார். ஆனால் அவர் உங்களிடம் கொண்டு வந்தது குறித்து நீங்கள் ஐயப்பாட்டிலேயே இருந்தீர்கள். அவர் மரணமடைந்த போது அவருக்குப் பின்னர் எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒருபோதும் அனுப்ப மாட்டான் என்று நீங்கள் கூறினீர்கள். இவ்வாறே அல்லாஹ் வரம்பு மீறுபவர்களாகவும், ஐயம் கொள்பவர்களாகவும் இருப்பவர் களை வழி தவறியவர்கள் என்று (முடிவு எடுத்துக்) கொள்கிறான். ( திருக்குர்ஆன் 40: 35 )

    இது எவ்வாறு இருக்கின்றது என்றால் மனிதனின் நிலை நபிமார்கள் தோன்றும் போது அவர்களை எதிர்ப்பதும் அவர்கள் காலம் சென்றதற்க்கு பிறகு அவரை போன்று அல்லது வேறு எவரும் வரமாட்டார்கள் என்று கூறி அருளாக தோன்றக் கூடியவர்களை மறுப்பதும் முந்திய காலத்திலிருந்து தொன்று தொட்டு வரும் ஒரு நடைமுறையாக இருக்கிறது.

    மேலும் நபிமார்கள் சென்ற பிறகு அவர்களுக்கு இறங்கிய வஹீயை ஒரு கதையை போன்று படிக்க ஆரம்பிக்கின்றனர். ஆனால் சென்ற நூற்றாண்டில் அல்லாஹ்வின் அருளாக தோன்றிய நபி (ஸல்) அவர்களின் கிலபாத்தின் 13 வது கலீஃபா ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்;-

    “வஹீ” என்பது ஒரு நிரூபிக்கப்படாத முந்திய காலத்தில் நடந்த சம்பவம் போன்று நினைக்கின்றார்கள். இது ஒரு தவறான எண்ணமாகும். நபிமார்கள் அலைஹி வஸ்ஸலாம்  உலகிலிருந்து   வாரிசு  இல்லாமல்  சென்று விடுகின்றார்கள்  என்ற எண்ணமும் ஒருபோதும்  சரியானது  அல்ல. இப்போது  அவர்கள்  தொடர்பாக கூறப்படும்  எந்த ஒரு கருத்திற்கும்  கதையைப் படிப்பதை விட அதிகமாக  சிறிதளவு கூட நம்பகத்தன்மை  இருக்காது. ஆனால்  ஒவ்வொரு  நூற்றாண்டிலும்  தேவைகேற்ப  அவர்களின்  வாரிசுகள்  உருவாகி  கொண்டே இருப்பர். ( பரக்காத்துத் துஆ ரூஹானி கஸாயின் தொகுதி 6 பக்கம்21-24).  

    அன்னார் மிகத்தெளிவாக நபிமார்களின் தொடர் அதாவது நூற்றாண்டின் இறை வெளிப்பாட்டின் தேவையை பற்றி குறிப்பிடுகின்றார்கள். மேலும் ஒரு தூதர் வருகையின் முக்கிய நோக்கம் அவர் மூலம் குறிப்பாக அவருக்கு இறக்கும் வஹீயின் மூலம் இறைவன் தனது முகத்தை தான் நாடிய அவனது அடியானுக்கு காட்டுகின்றான்.

    இதையே அன்னார் (அலை) இவ்வாறு நமக்கு அழகாக புரியும் வகையில் ஒரு தூதரின் வருகையின் நோக்கத்தை பற்றி குறிப்பிடுகின்றார்கள்:-

    ஏகத்துவம் கற்களில் மறைந்து இருக்கின்ற அந்த நெருப்பை போன்றே வைக்கப்பட்டுள்ளது என்பதே இதில் உள்ள ரகசியம் ஆகும். தூதர் நெருப்பு மறைந்திருக்கும் கல் போன்றவர் அந்த கல்லின் மீது தனது கவனத்தை செலுத்துகின்ற அடியின் மூலமாக அந்த நெருப்பு வெளியில் கொண்டு வரப்படுகின்றது எனவே தூதர் என்ற இந்த  கல் இல்லாமல் ஏகத்துவத்தின் நெருப்பு  ஏதோ ஒரு உள்ளத்தில் உருவானது என்பது ஒருபோதும் சாத்தியமாகாது. ஏகத்துவத்தை தூதர்கள் மட்டுமே பூமிக்கு கொண்டு வருகின்றார்கள் அவர்கள் மூலமாகவே இது பெறப் படுகின்றது இறைவன் மறைவானவனாக இருக்கின்றான் அவன் தனது முகத்தை தூதர் மூலமாக காட்டுகினறான்.

    எனவே ஒரு தூதர் வருகையின் நோக்கம் இந்த உலகத்தில் உயிருள்ள ஓர் இறைவனை அவனது அடியானுக்கு காட்டுவதே ஆகும்.

    எல்லா நபிமார்களும் ஒரே நோக்கத்திற்காகவே வருகை   தருகின்றார்கள். இந்த உலகில் நபிமார்களது வருகையின் முக்கிய நோக்கம் அவர்களது போதனை மற்றும்   பிரச்சாரத்தின் மகத்தான நோக்கம் என்னவென்றால் மனிதகுலம் சர்வ வல்லமையுள்ள இறைவனை அங்கீகரிக்க வேண்டும் என்பதும் பாவகரமான வாழ்க்கை என்று அழைக்கப்படுகின்ற நரகத்திற்கும் அழிவிற்கும் இட்டுச் செல்கின்ற  வாழ்க்கையிலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதும் ஆகும். உண்மையில் இதுவே அவர்களுக்கு முன் இருக்கின்ற மிக முக்கியமான குறிக்கோள் ஆகும்.இப்போது சர்வவல்ல மையுள்ள இறைவன் ஓர் (இறை) அமைப்பை  நிறுவி என்னை எழுப்பி உள்ளான். (இதுவே) எல்லா நபிமார்களுக்கும் உரிய பொதுவான அதே நோக்கமும் நான் வருவதன் நோக்கமும் ஆகும். அதாவது மிகத்தெளிவாக கூறுவதென்றால் இறைவன் என்றால் என்ன என்பதை உலகுக்கு (எடுத்துக்)கூறுவது மட்டுமல்லாமல் உண்மையில்  அவர்கள் அவனைப் பார்க்க வேண்டும் என்பதும். பாவத்திலிருந்து விலகி இருப்பதற்க்கான வழியை (அவர்களுக்கு) காட்ட வேண்டும் என்பதும் எனது விருப்பமாகும்.( மல்ஃபூஸாத் தொகுதி 3 பக்கம் 11( ஆங்கில மொழி பெயர்ப்பு Essence of Islam Vol 4 page 108)

    அல்ஹம்துலில்லாஹ்..இவ்வளவு அழகான வழிகாட்டல் இருந்தும் சில குறைமதி கொண்ட மக்கள் தங்கள் கொண்ட கொள்கையை காப்பாற்றுவதற்க்காக உலக காரணிகளை முன் வைத்து இந்த மேலான அருளை எதிர்க்கின்றனர். மேலும் அவர் என்ன தொண்டு செய்தார்? என்ன புத்தகம் எழுதினார்? சமூக சேவை செய்தாரா? அவரை எத்தனை பேர் பின்பற்றுகின்றார்கள்? பின்பற்றுபவர்களிடம் என்ன குறையுள்ளது? அவர் பள்ளி கட்டினாரா? மாற்று சமைய மக்களுக்கு சென்று கூறினாரா? இன்னும் சில அறிவிலிகள் தொலைக்காட்சி சேனலில் வந்து தினம் தோறும் அல்லாஹ்வின் மேல் சத்தியம் செய்யவேண்டும் என்று கூறுகின்றனர்.

    ஆனால் மாறாக அல்லாஹ் தனது தூதர் மூலம் அவனை வெளிப்படுத்துகின்றான். மேலும் ஹஸ்ரத் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களின் உம்மத்தில் இந்த அருளின் கதவு இன்னும் விசாலமாக திறக்கப்பட்டுள்ளது. எப்பொழுதெல்லம் சில சாக்கு போக்குகளை உருவாக்கி இறைவனின் தொன்மையான சட்டம் தாக்கப்படுமோ அப்பொழுதெல்லாம் இறைவன் நம்பிக்கைகொண்ட மக்களில் ஒருவரை தேர்வு செய்து அவன் தனது இருப்பை அவனது வஹியின் மூலம் வெளிப்படுத்துகின்றான். எனவே தான் நம்பிக்கை கொண்ட நிலையில் இறைவன் தனது வஹீயை வைத்து பொய்யாக வாதம் செய்ய அவன் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. காத்தமுன் நபிய்யீன் முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பிறகு வேதம் மற்றும் ஷரியத் முற்றுப் பெற்றுவிட்டதால் இனி அன்னாரின் நிழல்களாக தோன்றும் அருளுக்குரியவர்கள் இறை இருப்பை பற்றிய செய்திகளையே கொண்டு வருவார்கள்.

    இதை குறித்து இறைவேதம் இவ்வாறு கூறுகின்றது:-

    நற்செய்தி உடையவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமன்றி நாம் தூதர்களை அனுப்புவதில்லை. ஆகவே நம்பிக்கைக் கொண்டு (தம்மைச்) சீர்திருத்திக் கொள்கின்றவர்களுக்கு (வருங்காலத்தைப் பற்றி) எவ்விதப் பயமும் ஏற்படாது. அவர்கள் (சென்ற காலம் பற்றிக்) கவலைப்படவும் மாட்டார்கள். ( திருக்குர்ஆன் 6: 49)

    ஒரு தூதர் வருகையால் நம்பிக்கை கொண்டோருக்கு இறைஇருப்பை பற்றிய நற்செய்தியும் அந்த வஹீயை மறுப்பவர்களுக்கு எச்சரிக்கையாகவும் உள்ளது. இன்னும் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் வருகையின் நோக்கம் சம்பந்தமாக இந்த கூற்று மேலும் நமக்கு உண்மைப்படுத்துகின்றது:-

    இந்த எளியவன் மீண்டும் மீண்டும் இதைத்தான் கூறுகின்றேன் அதாவது சகோதரர்களே!!! நான் எந்த புதிய மார்க்கத்தையும் புதிய போதனையையும் கொண்டு வரவில்லை இன்னும் சொல்வதென்றால் நான் உங்களிடம் இருந்து வந்துள்ள உங்களைப் போன்ற ஒரு முஸ்லீமாக இருக்கின்றேன். முஸ்லீம்களாகிய நாம்  செயல்படுவதற்கும்  வழி காட்டுவதற்கும்  திருக்குர்ஆனைத் தவிர வேறு எந்த வேதமும் இல்லை. ஜனாப் காத்தமுள் முர்ஸலீன் அஹ்மதே அரபி (ஸல்) அவர்களை தவிர நாம் பின்பற்றி நடப்பதற்கு அல்லது மற்றவர்களை பின்பற்ற வைக்கும் வேறு எந்த ஒரு வழிகாட்டியும் பின்பற்றத்தகுந்தவரல்ல. இதை நான் கூறும் நிலையில் மார்க்கப்பற்றுள்ள முஸ்லிமுக்கு இறைஅறிவிப்பின் அடிப்படையில் உள்ள எனது வாதத்தின் மீது நம்பிக்கை கொள்வதில் அபாயம் என்ன இருக்க முடியும். எனது இந்த இல்ஹாம்களும் கஷ்ஃபுகளும்  தவறானது என்றும் எனக்கு எதுவெல்லாம் கட்டளையிடப்பட்டுள்ளதோ  அதை புரிந்து கொள்வதில் எனக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது என்று கற்பனையாக வைத்துக்கொண்டாலும். இதை ஏற்றுக் கொள்பவர்கள் மீது என்ன குற்றம் இருக்க முடியும். இது மார்க்கத்தில் ஏதாவது இடையூறு ஏற்படுத்தக் கூடிய ஏதாவது ஒரு விஷயத்தின் மீது நம்பிக்கை கொண்டு விட்டாரா?…( இஸ்லயே அவ்ஹாம் ரூஹானீ கஸாயின் தொகுதி 3 பக்கம்186-189)

    இன்னும் ஒரு ஈஸாவின் வருகையின் நோக்கத்தை பற்றி திருக்குர்ஆன் கூறும்போது:-

    எனக்கு முன்னுள்ளதை அதாவது தவ்ராத்தை மெய்பிக்கக் கூடியவனாகவும் ,உங்களுக்கு விலக்கப்பட்டிருந்த ஒரு சிலவற்றை உங்களுக்கு அனுமதிக் கப்பட்டதாக ஆக்குவதற்காகவும் (வந்துள்ளேன்). உங்களிடம் உங்கள் இறை வனிடமிருந்து ஓர் அடையாளத்துடன் நான் வந்துள்ளேன். எனவே அல்லாஹ்விற்கு அஞ்சி எனக்குக் கட்டுப்பட்டு நடங்கள். ( திருக்குர்ஆன் 3: 51 )

    இந்த வசனத்தில் விலக்கப்பட்டது என்பதன் பொருள் அதாவது அவர்களின் தீய செயல்கள் காரணமாக உங்களுக்கு தடை செய்யப்பட்டிருந்த இறைவஹீ என் மூலம் மீண்டும் ஆரம்பமாகும் என்பதாகும்.(திருக்குரான் அஹ்மதிய்யா தமிழ் மொழிபெயர்ப்பு பக்கம் 139)

    எனவே சகோதரர்களே! ஒரு இறைத்தூதர் வருகையின் முதன்மை நோக்கம் மிகத்தெளிவாக விளங்குகின்றது.மேலும் நாம் வாழும் அருளுக்குரிய நூற்றாண்டில் இந்த காலத்தின் இறைத்தூதர் முஹையதீன் அல் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்களும் இவ்வாறு போதிக்கின்றார்கள்:-

    ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது ஆன்மீக அருள் என்னவென்றால் அது அன்னாரை பின்பற்றும் ஒருவரால் இறைவனை நேரடியாக தொடர்பு கொள்ள முடியும் என்பதாகும். இதன் மூலமாக இறைவனை அவனது ஆன்மாவாலும், உயிராலும் அவனுடன் ஒன்றிவிடவும் இதன் மூலம் அந்த அருளாளனின் இனிமையான குரலையும் மற்றும் அவனுடைய தொடர்பினையும் வெளிப்படுத்தலாம்.இதுவே நபிமார்களை பின்பற்றுவதால் கிடைக்கும் பிரத்யேகமான அருளாகும். இந்த அருளே முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கிடையே யான வித்தியாசம் ஆகும். இதுவே இஸ்லாத்தின் தனிசிறப்பாகும். இதனை முஸ்லீம்களும், அஹ்மதிகளும் மறந்துவிட்டனர். இதனையே இவர்களதுகவனத்திற்கு ஜமாத்துல் சஹீஹ் அல் இஸ்லாம் கொண்டு வருகிறது.( புத்தகம் WHY CREATING JAMAAT UL SAHIH AL ISLAM? பக்கம் 17)

    மேலும் அன்னார் இக்காலத்தில் ஒரு இறை தூதர் வருகையின் அவசியம் பற்றி இவ்வாறு கூறுகின்றார்கள்

    இப்போது உள்ள இக்கட்டான ஒரு முக்கிய காலகட்டத்தில் அல்லாஹ் சுபஹானல்லாஹுதாலா ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா(ஸல்) அவர்களையும் ஹஸ்ரத் மஸீஹ் மவூது(அலை) அவர்களையும் ஏற்றுக்கொண்டுள்ள தனது உண்மையான அடியார்களுக்காக ஒரு சிறந்த ஜமாஅத்தை எழுப்பியுள்ளான். அதாவது ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாமை எழுப்பியுள்ளான். இது எப்படிப்பட்ட ஜமாஅத் என்றால் எல்லாவிதமான அநீதிகளுக்கு எதிராக உண்மை இஸ்லாத்தை பாதுகாக்கின்றது. மேலும் இஸ்லாம் அல்லாத மாற்று மதங்கள் இஸ்லாத்திற்கு எதிராக வைக்கும் அனைத்து கேள்விகளுக்கும் மிக சிறந்த முறையில் பரஸ்பரம் முழு திருப்தியாகும் வகையில் பதிலை வழங்குகின்றது. இன்னும் இந்த ஜமாஅத்தை இந்த எளியவனின் இந்த காலத்தின் முகையூதீன் என்றும் அல்லாஹ்வின் கலீஃபா (கலீபஃத்துல்லாஹ்) மற்றும் பல்வேறு வாதத்துடன் எழுப்பியுள்ளான். இவற்றை கேட்டு கோபமும் எரிச்சலும் அடைந்த எனது எதிரிகளும் நயவஞ்சகர்களும் எல்லையை மீறி என்மீது அவதூறுகளையும் அபாண்டங்களையும் பரப்புகின்றனர். இவர்களின் அவதூறு எவ்வளவு கீழ்த்தரமாக ஆகிவிட்டது என்றால் அவர்கள் என்னை பார்த்து போதைக்கு அடிமையானவன், சூனியக்காரன் (மந்திரவாதி), குழப்பவாதி, ஒரு பொய்யன், நாய், பன்றி போன்ற எந்த பெயரையும் விட்டுவைக்கவில்லை. இன்னும் இவர்கள் என்னை காஃபீர் என்றும் போலி நபி என்றும் ஃபத்துவாவும் கொடுக்கின்றனர்.

    அல்ஹம்துலில்லாஹ் சும்ம அல்ஹம்துலில்லாஹ் இதில் எந்த அதிசயமும் இல்லை மேலும் எனக்கு இதில் ஆச்சரியமும் இல்லை ஏனென்றால் எப்பொழுதெல்லாம் இறைபுரத்திலிருந்து ஒருவர் தோன்றும் போது  இவ்வாறே நடந்துள்ளது. சிறிது காலம் சென்றதிற்கு பிறகே இவர்களின் (இறைபுரத்தில் இருந்து வந்தவர்களின்) உண்மையான நிலையை புரிந்துகொள்ளமுடியும். அவர்கள் என்மீது கொடுக்கும் காஃபிர் ஃபத்துவாக்களையும் அவர்கள் எனக்கு எதிராக வைக்கும் பெயர்களையும் பார்த்து நான் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. ஏனென்றால் அவர்கள் எனக்கு கஷ்டம் கொடுக்கவேண்டும் என்று செய்வதெல்லாம் அவர்களின் ரூஹுவை (ஆத்மாவை) தீங்கு இழைத்து கொள்கிறார்களே அன்றி அந்த ஏக இறைவனால் தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு அதனால் எந்த குறைவும் ஏற்படப்போவதில்லை. மேலும் இவர்கள் எவ்வளவு மூர்க்கத்தனமாக என்னை எதிர்த்து என்னை துன்புறுத்தவேண்டும் எற்று முயல்கின்றார்களோ அவ்வளவு அதிகமாக என்னை கொண்டு அவனது தீனை மேலோங்க செய்கிறான். மேலும் அவன் இதன் மூலம் பெருமானார் (ஸல்) மஸீஹ் மௌவூது(அலை) மற்றும் திருகுரானின் சிறப்பையும் நிரூபித்துக்காட்டுகின்றான்.

    எனது அன்பிற்குரியவர்களே! நான் நிச்சயமாக அல்லாஹ்வின் கையில் உள்ள பாத்திரமே ஆவேன். இந்த எளியவனை அவன் என்ன நாடுகின்றானோ அதை என்னை கொண்டு செய்கின்றான். அல்லாஹ் எந்த ஒரு நோக்கத்திற்காக ஒருவரை தேர்வு செய்கிறானே அப்போதிலிருந்தே அவர் முழுவதும் அவனையுடையதாகின்றார். மேலும் அவர் அல்லாஹ்வின் விருப்பப்படியே செய்கின்றார். அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் அனுமதி மற்றும் வழிகாட்டல் இல்லாமல்  அவர் எதையும் செய்வதில்லை, அவர்களின் அனைத்து செயல்களும் அவன் வகுத்த எல்லைக்குட்பட்டே செய்கின்றார்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும் ஒரு குறிப்பிட்ட வேலைக்காகவே படைக்கப்படுகின்றது அதுபோலவே நம்மிடையே தோன்றும் தூதர்களும் மேலும் அவர்களுக்கு தூதை கொண்டுவரும் தேவதூதர்களும் (மலக்குகள்) ஒருகுறிப்பிட்ட பணிக்காகவே எழுப்பப்படுகின்றனர்.

    இஸ்லாமிய மக்களாகிய நாம் ஒரு சிறந்த முஸ்லிம்களாக மாற நாம் என்ன செய்யவேண்டும் என்பதை குறிப்பாக ஒரு ஆணோ அல்லது பெண்ணோ அத்தகைய உயர்ந்த நிலையை எவ்வாறு அடைவது என்பதை பற்றி சிந்திக்கவேண்டும் இஸ்லாம் ஒரு உயிருள்ள வாழும் மார்க்கமாகும். எனவே தான் எந்த ஒரு காலத்திலும் அதன் வெற்றி முஸ்லிம்களின் கையில் மட்டுமே தான் உள்ளது.

    எனது அருமையானவர்களே! இந்த உலகத்தில் இந்த உண்மையை தேடும் எத்தனையோ மனிதர்களை பார்க்கலாம். அவர்கள் இந்த உண்மை மார்க்கமாகிய இஸ்லாத்தை ஏற்ற பிறகு இறைவனின் மாபெரும் அருளால் அவர்களின் ஆன்மிக மற்றும் பௌதிக வாழ்க்கையில் மிக சிறந்த மாற்றம் ஏற்பட்டு முன்னேற்றத்தின் பாதையில் செல்கின்றனர். ஆனால் இஸ்லாம் காட்டும் கொள்கை மற்றும் கருத்தின் பக்கம் நாம் பயணம் செய்வது முதலில் கஷ்டமாகவும் கடினமாகவும்  இருந்தாலும் எவர் அல்லாஹ்வையும் அவனது அனைத்து கட்டளைகளையும் பேணி  இஸ்லாத்தின் அனைத்து போதனைகளையும் கடமைகளையும் உண்மையான நம்பிக்கை கொள்கின்றோம் என்று கூறும் அனைத்து முஸ்லிம்களும் உண்மையான தியாகம் செயல் சீர்த்திருத்தம் மற்றும் உண்மையான இறைநாட்டம் இல்லாமல் முன்னேறுவது சாத்தியமானதன்று.

    உங்கள் அனைவரையும் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதற்காக அந்த ஏக இறைவனே எனக்கு கட்டளையிட்டு நியமித்துள்ளான். மேலும் என்னை இழிவாகவும் கீழ்த்தரமாக பெயரை வைத்தும் அழைப்பவர்கள்  அல்லது எனது செய்தியை பாரபட்சமாக பார்ப்பவர்களுக்கும் அல்லது என்மீது வெறுப்பு கொண்டவர்களுக்கும் அல்லது எனது வாதத்தை புரியாதவர்களுக்கும் என்று அனைத்து மக்களுக்கும் இன்னும் ஏன் மௌலவிகளையும் மார்க்க அறிஞர்களையும் (முப்திகள்) என்னை எதிரியாக பார்ப்பவர்களுக்காகவும் நயவஞ்சர்களுக்கும் என்று அனைவரையும் அவன் பக்கம் அழைப்பதற்காக வந்துள்ளேன். எனவே என்னை அனுப்பிய அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் சுபஹானஹுதாலாவிடம் உண்மையாகவும் உருக்க மாகவும் இறையச்சத்துடன் தூய உள்ளத்துடன் அதிக அதிகமாக துஆ செய்து யார் நேரான வழியில் உள்ளார்கள் யார் வழிதவறிவிட்டார்கள் என்பதை கேளுங்கள், ஆனால் நான் உங்களிடம் உறுதியாக கூறுகின்றேன்.எவர் இந்த எளியவனின் உண்மைத்தன்மையை ஏற்றுக்கொண்டார்களோ அல்லது என்னை அவர்களின் எதிர்காலம் என்று ஏற்று என்மீதும் எனது வாதத்தின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக நான் உறுதியளிக்கின்றேன். நீங்களே அருளுக்குரிய மக்கள் ஒருபோதும் நீங்கள் நஷ்டவாதிகள் அல்ல. இந்த உலக வாழ்க்கை ஒரு எல்லைக்குட்பட்டதும் தற்காலிகமானதாகும் ஆனால் உண்மையான வாழ்க்கையும் அதற்கான கூலியும் உண்மையான வெகுமதியும் உங்கள் உழைப்பின் உண்மையான பலன்களையும் அருட்கொடைகளையும் அந்த ஏக இறைவன் உங்களுக்கு தற்காலிக இந்த உலகத்தில் மட்டும் இல்லாமல் மறுமையிலும் வழங்குவான். அங்கு உங்களுக்கு கிடைக்கும். அருள்கள் எல்லையற்றதாகும் அங்கு எப்போதும் சாந்தியும் சமாதானமும் நிலவும் மேலும் ஒரு அடியான் அவனது இறைவனுடன் இணக்கமாக ஒரு நிரந்தரமான தொடர்பில் இருப்பான். இதுவே ஒரு உண்மையை தேடும் இறையாடினின் உண்மையான வெற்றியாகும்.

    இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட எந்த மதத்தையும் பின்பற்ற கூடியவர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால் நிச்சயமாக அந்த ஏக இறைவன் பல்வேறு சமயங்களில் பல்வேறு இடங்களில் பல்வேறு நபிமார்களை அனுப்பியுள்ளான்  என்பதையும் நம்பிக்கை கொண்டே ஆகவேண்டும், ஒவ்வொரு சமுதாயத்திற்கும் (நாட்டிற்கும்) ஒரு தூதர்  இல்லாமல் இல்லை என்பத்திற்கேற்ப ஆப்பிரிக்கா கண்டத்தில் இன்னும் சொல்வதென்றால் ஆப்பிரிக்கா கண்டதில்லிருந்து தொலைவில் அனைத்து பக்கத்திலும் கடலினால் சூழப்பட்ட வெறும் 13 லட்சம் மக்கள் தொகை கொண்ட மிகச்சிறிய தீவு நாடான மௌரீஷியஸ் நாட்டில் அல்லாஹ் சுபஹானஹுதாலா அவனது அருளாக அவனுடைய கலீஃபத்துல்லாஹ்வை அவனது நபியை தேர்தெடுத்துள்ளான் ஏனென்றால் இந்தியாவுக்கும் இங்கிலாந்திருக்கும் பிறகு மஸீஹ் மௌவூது(அலை) அவர்களின் ஜமாஅத் ஆரம்பித்த நாடு இந்த சிறிய தீவான  மௌரீஷியஸ் தான். இங்கு 1915 ஆம்  ஆண்டே மிஷன் தொடங்கப்பட்டுவிட்டது. மேலும் மௌரீஷியஸ் நாடு பன்முக கலாச்சாரம் கொண்ட உலகின் முக்கிய மதங்களின் பல பிரதிநிதித்துவம் கொண்ட ஒரு சிறிய தீவு நாடாகும்.

    மனித குலத்தின் ஆன்மிக முன்னேற்றம் என்பது இதைப்போன்ற உன்னதவர்களின் அடிப்படையிலே உள்ளது எனவே இறைவனால் தேர்தெடுக்கப்பட்டவர்கள் அவர்களிடையே தோன்றாமல் வெறும் (ஆன்மீக) இருளை தவிர இந்த உலகத்தில் வேறு ஒன்றும் இருக்காது.  இதைத்தான் அந்த ஏக இறைவன் அவனது திருமறையில் கூறும்போதுஎச்சரிக்கை செய்பவர் எவரும் வராத எந்தச் சமுதாயமும் இல்லை என்று விளக்குகின்றான்.

    எனவே இப்போது நபிமார்கள் வருகைக்கான பொதிந்துள்ள இரகசியத்தை ஆராய்ந்தால் அதற்கு முக்கிய காரணமாக அந்த மக்களிடையே ஆன்மீக சீரழிவு காணப்படும் மேலும் மனித இனம் மற்றும் இறைவனின் நேரடியாக தொடர்பு துண்டிக்கப்பட்டிற்கும், இது எவ்வாறென்றால் இந்த பூமி நெடுக்காலமாக வறண்டு காய்ந்து உயிரற்ற வறட்சி காலத்திற்கு பிறகு அந்த மேகக்கூட்டங்களுக்கு இடையில் மழையாக இந்த பூமியை உயிர்ப்பித்து புத்துணர்ச்சியை மலர செய்வது போல் எப்போதும் நபிமார்கள் நம்மிடையே தோன்றுவார்கள். எனவே நம்பிக்கைக் குரியவர்களே! நம்மிடையே கடந்த காலத்தில் நபிமார்கள் வந்தது போன்று எதிர்காலத்திலும் வந்துகொண்டே இருப்பார்கள் என்பதில் திட்டமாக நம்பிக்கை கொள்ளுங்கள். அவர்களின் வருகையை தடுக்கும் அனைத்து காரண காரியங்களிலிருந்து முற்றிலும் தவிர்ந்து கொள்ளுங்கள். மேலும் இறைவஹீயின் கதவு ஒருபோதும் அடைக்கப்படுவதில்லை அது எப்போதும் திறந்தே உள்ளது. இதுவே நமது உறுதியான நம்பிக்கையாகும். இறுதிக் காலங்களில் ஈமானை மீட்டெடுக்க வாக்களிக்கப்பட்ட சீர்திருத்தவாதிகள் தேவை என்பதற்கேற்ப நாம் வாழும் இந்த காலத்தில் ஒரு நபியின் தேவையின் பக்கம் நம்மை கொண்டு செல்கின்றது. இன்னும் நமது நம்பிக்கை நம்மிடையே தோன்று பவரை அவரின் சாட்சியத்தை வைத்து மட்டும் ஏற்றுக்கொள்வதில்லை மாறாக முந்திய நபிமார்களை ஏற்று அவர்களின் சாட்சியத்தின் மூலமுமே நாம் நம்பிக்கை கொள்கின்றோம. மக்கள் மனிதில் இழந்துபோன நம்பிக்கையை மீட்டு இறையச்சதை மீண்டும் ஏற்படுத்தவே அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் என்னை நியமித்துள்ளான்.முன்னுள்ள நபிமார்களின் மற்றும் சீர்த்திருத்த வாதிகளின் உண்மையான போதனைகளை உறுதிப்படுத்துவதற்கு ஒவ்வொரு காலத்தில் இறைவனிடம் இருந்து அவனுடைய தூதர்கள் வருவது அவசியமாகின்றது. அவ்வாறு தோன்றும் தூதர்கள் முன்சென்ற அல்லாஹ்வின் தூதர்களின் மாண்பை பாதுகாப்பதுடன் அவர்களின் தெளிவான செய்தியையும் இறைவனின் தெளிவான போதனைகளையும் நமக்கு அளிக்கின்றார்கள். எனது அருமையானவர்களே! நீங்கள் ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளுங்கள்! எனது வருகையின் மூலம் எனக்கு முன் சென்றவர்களை பொய்யர்கள் என்று முத்திரைகுத்திவிட்டு எனது வாதத்தை நான் வைக்கவில்லை  மாறாக உண்மையில்

    எனது வாதம் முன்சென்ற அனைவர்களில் வாதத்தையும்  உண்மைப் படுத்துவதுடன் இந்த உறுதியான அழகான முத்து மாலையில் மேன்மேலும்  முத்துக்கள் சேரும் என்றும் இது கியாமத்து நாள் வரை தொடரும் என்றும்  தோன்றக்கூடியவர்கள் அனைவரும் ஒன்றன்பின் ஒன்றாக ஒருவரை ஒருவர் உண்மைப்படுத்திக்கொண்டே செல்வார்கள் என்பதே ஆகும். இதுவும் இறைவெளிப்பாடுகள் (வஹீ) வைத்தும் வாதம் செய்பவர்களை அடையாளம் கண்டு கொள்ள ஒரு சிறந்த வழியாகும். மேலும் இறைவன் எனக்கு நியமித்துள்ள முக்கிய பணி அதாவது எனது வருகையின் முக்கிய நோக்கம் அடியார்கள் மறந்துபோன நிலையில் உள்ள ஆன்மிக உண்மைகளை போதித்து இறைவனுடன் அவனது அடியானின் அன்பையும் இறையச்சத்தையும் இறைபக்தியையும் மீட்டெ டுப்பதே ஆகும். இதற்க்கு எல்லாம் மேலாக அல்லாஹ்வின் ஒளியை மீட்டு அந்த ஓரிறைவனை மீண்டும் அவர்களின் இதயத்தில் நிறந்தரமாக எத்திவைத்து அனைத்து பொய்த்தெய்வங்களில்லிருந்து அதை உருவாக்கும் கருத்துக்களிலிருந்தும் முற்றிலுமாக தூய்மைபடுத்தவே ஆகும். எனவே என்னை இறைவன் இந்த ஆன்மீக அவலநிலையிலிருந்து மனிதனை மீண்டும் அந்த உண்மையான தூய இறை நெருக்கத்தின் பக்கம் எடுத்துச்செல்ல அனுப்பியுள்ளான்.

    எத்தனையோ நபர்கள் இறைவனை பற்றியும் ஆன்மிகத்தை பற்றியும் பேசுவதை பார்த்திருக்கின்றோம். ஆனால் உண்மையில் அவர்களின் உள்ளங்களில் பௌதீக உலக ஆசைகள் நிறைந்திருக்கும். எனவே அனைவரும் அந்த ஏக இறைவனுடைய உதவியுடனும்  அவனது வார்த்தையுடனும் மனித குலத்தை சந்தேகம் தவறான நம்பிக்கை தவறான உறுதிப்பாடுகளிலிருந்து வழிநடத்த இந்த காலத்தில் தேவையு ள்ளது என்பதில் நீங்கள் அனைவரும் என்னுடன் நிச்சயமாக உடன்படுவீர்கள் என்று நினைக்கின்றான். மேலும் எப்பொழுது மார்க்கம் என்பது வெற்று பேச்சுகளாகவும் உண்மையின் நிலை கவலைக்கிடமாகவும் இன்னும் உலகின்  சிலப்பகுதியில் உண்மை ஆற்றல் இழந்து போன நிலையிலும் மற்றும் உணர்வில்லாமலும் இறந்து கிடக்கும் நிலையில் இருக்கும்போது மனிதகுலத்திற்கு ஒரு நபியின் தேவை இருப்பதை புரிந்து கொள்ளலாம். மேலும் அவ்வாறே இன்றும் தேவைப்படுகின்றார் என்பதை புரிந்துகொள்ளுங்கள்!

    மேலும் அல்லாஹ் தனது தூதர்கள் மற்றும் நபிமார்களின் மூலம் சத்தியத்தின் உண்மையை மக்களை உணர செய்து அவர்களை பாதுகாப்பானாக!! உலகத்தின் தலை சிறந்த மனிதரும் உலகில் தோன்றிய நபிமார்களுக்கெல்லாம் முத்திரையாக விளங்கும் நமது பெருமானார் காத்தமுன் அன்பியா முஹம்மது முஸ்தபா (ஸல்) உம்மத்திற்கு இதை போன்ற சீர்த்திருத்தவாதிகளை எழுப்புவதன் மூலம் அன்னாரின் மதிப்பை யுகனாள் (கியாமத்து) வரை மேலோங்க செய்வானாக அல்லாஹ் தனது தூய உடன்படிக்கையை பாதுகாப்பானாக மேலும் அவர்கள் மூலம் இந்த உலக மக்கள் அனைவரும் ஒருங்கிணைத்து அந்த தூய ஓரிறைவனை வணக்கும் ஆனந்தத்தை அடைவோமாக.

    தொடர்ச்சியாக இறைவஹீயை வெளிப்பாடுகளை பற்றியும் பார்ப்போம் இறைவெளிப்பாடு என்பது இறைவனுடைய வார்தை மற்றும் அவனுடைய வழிகாட்டலும் ஆகும். மேலும் அல்லாஹ் தான் நாடும் அடியானை தேர்ந்தெடுத்து அவனுடன் உரையாடுவதன் மூலம் இறைவன் அவனை படைக்கப்பட்டதன் நோக்கத்தை வெளிப்படுத்துகின்றான். மேலும் இந்த வெளிபாடுகளை பெறுபவர் அதன் அர்தத்தையோ அல்லது வார்த்தையையோ பெறுகின்றார் இவ்விவரண்டுமே அல்லாஹ்விடம் இருந்துதான் வருகின்றது. இறைவஹீயே மனிதனின் உண்மையான (ஆன்மீக)வாழ்வாதரமாகும். இதன்முலமாகவே அவன் வாழ்கின்றான் மேலும் இதுவே அவருடைய படைத்தவுடனுடன் ஒரு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்து கின்றது. இறைவனிடம் இருந்து வெளிபடும் இத்தகைய வார்த்தைகள் ஒரு தனித்தன்மைவாய்ந்த ஆற்றலையும் வல்லமையையும் கொண்டது மேலும் இறைவனை தவிர ஒருவராலும் இதை உருவாக்கமுடியாது மேலும் அதுவே ஞானம் மற்றும் அறிவின் கருவூலம் ஆகும். இன்னும் இவை மிக மிக ஆழமான அர்த்தத்தை கொண்டுள்ளது இதை எவ்வாறு சொல்வதென்றால் ஒரு சுரங்கத்தில் ஆழமாக செல்ல செல்ல அதிக விலை மதிப்புமிக்க கற்கள் கிடைக்கின்றது என்று வைத்துக் கொண்டாலும் இறைவஹி என்பதன் அற்புதத்தின் ஆழம் இந்த சுரங்கத்துடன் கூட ஒப்பிடமுடியாது ஏனென்றால் இதன் ஆழத்தின் மகிமை அந்த சுரங்கம் அதன் எல்லையை எட்டிவிட்டாலும் அதன் ஞானத்தின் ஆழத்தை  அடையமுடியாது.

    மேலும் இறைவஹீயை பற்றி கூறுவதென்றால். இது ஒரு கடலை போன்றது அந்த கடலின் மேற்பரப்பில் அழகிய நறுமணத்தையும் அந்த கடலின் அடிப்பகுதியில் விலையுயர்ந்த உயர்ரக முத்துக்களும் விரிக்கப்பட்டுள்ளது.எனவே எவர் அதன் மேற்பரப்பை மட்டும் அடைகிறார்களோ அவர்கள் அந்த மேற்பரப்பில் உள்ள வாசனையை அனுபவித்து மகிழ்கின்றனர் ஆனால் எவர் அதில் ஆழமாக மூழ்குவாரோ அவர்களுக்கு நறுமணத்தையும்  அந்த அழகிய முத்தையும் அடைகின்றார்‌. மேலும் இறைவெளிப்பாடுகள் பல்வேறு வகைப்படும் சிலவேளைகளில் அது கட்டளை மற்றும் சட்டதிட்டங்களாகவும் சிலவேளைகளில் அது அறிவுரை போதனைகளாகவும், சிலவேளைகளில் மறைவானவற்றின் அறிவாகவும், சில வேளைகளில் உண்மையான ஆன்மீக ஞானமாகவும், சில வேளைகளில் அது அல்லாஹ் நம் மீது காட்டும் நல்லெண்ணமாகவும், மற்றும்   நமது கோரிக்கைகளின் ஒப்புதலாகவும் , சிலவேளைகளில் அவனுடைய மறுப்பு மற்றும் அதிருப்தியில் வெளிப்பாடாகவும் ,சிலவேளைகளில் அவனுடைய அன்பும் அரவணைப்பாகவும்  சிலவேளைகளில் அவனுடைய கோபம் மற்றும் எச்சரிக்கையாகவும், சிலவேளை களில் அது அறநெறி களை போதிப்பதாகவும் சிலவேளைகளில் மறைவான தீமைகளை பற்றி அவனிடம் இருந்து கிடைக்கும் நுண்ணறிவாகவும் இருக்கிறது. சுருக்கமாக கூறுவதென்றால் நமது நம்பிக்கை இதுவாகும் அதாவது இறைவன் தனது அடியார்களுடன் தான் நாடியவர்களிடம் பேசக்கூடியவன் அவ்வாறு பேசும் அவனது தொடர்பு சூழ்நிலைக்கு ஏற்றாற்ப்போலும் அதை பெறுபவர் ஆன்மிக நிலையை பொருத்தும் மாறுபடுகின்றது.

    எப்பொழுது இந்த உலகத்தில் இருள் பரவத்தொடங்குமோ அப்போதில்லிருந்து மனிதன் பாவத்திலும் தீமையிலும் மூழ்கிவிடுகின்றான்.இந்த நேரத்தில் இறைவனின் உதவி கிடைக்கவில்லை என்றால் மனிதன் ஷைத்தானின் பிடியில்லிருந்து அவர்களாகவே விடுபடுவது மிக கடினமாகிவிடுகின்றது. இந்த சமயத்தில் அல்லாஹ் அவனது கருணையாலும் கிருபையாலும் தனது அடியார்களில் அன்பு மற்றும் விசுவாசம் கொண்ட தான் நாடியவரை தானே தேர்வு செய்து அவர்க்கு இந்த உலகை வழிநடத்த பணிக்கின்றான்.

    எனவே ஒரு நபி தோன்றும்போது அவரும் அவரை ஏற்றுக்கொண்ட உலகத்தின் ஒரு பிரிவை சார்ந்த மக்களும் அந்த ஓரிறைவனாகிய அல்லாஹ் சுபஹானல்லாஹுதாலாவை மட்டுமே வணங்குவார்கள் மேலும் அவனுக்கு எதையும் இணைவைக்க மாட்டார்கள் எனது அருமையானவர்ளே! ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு நபி தோன்றும் போது தான் அங்கு அநீதிக்கு பதிலாக நீதியும் கொடுமைக்கும் பதிலாக கருணையும் பிறக்கின்றது. எனவே ஒரு இறைத்தூதர் மூலமே இறைவன் அவருடைய சித்தத்தையும் நோக்கத்தையும் வெளிப்படுத்துகின்றான். எவர் அவரை விட்டு விலகுகின்றார்களோ அவர்கள் தங்களுக்கு தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள். ஆனால் எவர் இதன் பக்கமாக தனது கவனத்தை செலுத்து கின்றார்களோ அவர்கள் அந்த ஏக இறைவனின் அன்பை பெறுகின்றனர். மேலும் அவனது மேலான கிருபையாலும், கருணையாலும்  அந்த அருள்களின் கதவுகளை அவர்களுக்காக அவன் திறக்கிறான். மேலும் இந்த மேன்மையான அருளை அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் பெறுகின்றார்கள். மேலும் அவர்களே இவர்களுக்கு பிறகு வரும் சந்ததியினருக்கு ஆன்மீக போதனைகளுக்கு முன்னோடியாகின்றார்கள்.

    பெருமானார் (ஸல்) அவர்கள் தனது ஸஹாபிகளுக்கு போதித்த இஸ்லாம் இன்று எங்கே சென்றது. இந்த உண்மையான போதனைகளை ஏற்றுக்கொள்ளாத பெயர் தாங்கிய மௌலவிகளும் , அஹ்மதியா ஜமாஅத்தின் முல்லாக்களும் ,பெயர் தாங்கிய அமீர்களும் அப்பாவி மக்களை தனது பிடியில் வைப்பதற்காக மார்க்கத்தில் உள்ள இறை போதனைகளை தங்களுக்கு ஏற்றார் வகையில் திரித்து கொள்ள சிறிதும் தயங்குவதில்லை. இதனாலேயே இறைவன் எங்களுடன் பேசுகின்றான் என்று கூறியதற்காக  நம்மை புறக்கணிப்பதில் எந்த வித தயக்கமும் அவர்களுக்கிடையே இல்லை. இன்னும் அவர்களின் நம்பிக்கை எவ்வாறு உள்ளதென்றால் இப்பொழுது இறைவெளிப்பாடு பெறக்கூடிய தகுதியை உடையவர் கலீஃபத்துல் மஸீஹ் மட்டுமே என்று கூறுகின்றனர். மேலும் இது எந்த அளவிற்கு போய்விட்டது என்றால் இது தான் உண்மை என்று மார்க்க விவாதங்களிலும் கூற ஆரம்பித்துவிட்டனர். இதை எல்லாம் கேட்கும்போது இப்பொழுது உள்ள இஸ்லாத்தின் மீது சில சமயங்களின் நமக்கு சிறிது சந்தேகம் தோன்ற ஆரம்பிக்கின்றது. மேலும் இப்பொது உள்ள முஸ்லிம்கள் நடைமுறைகளை பார்க்கும்போது  நிச்சயமாக உண்மை இஸ்லாத்தை பிரதிபலிப்பதில்லை என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும் ஏனென்றால் இஸ்லாம் எதற்காக தோற்றிவிக்கப்பட்டதோ அதன் நோக்கத்தை இப்போது அது வெளிப்டுத்துவதில்லை.

    இந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியை நினைவு படுத்துகின்றான் அன்னார் இவ்வாறு கூறினார்கள் அதாவது:-
    “ஒரு காலம் வரும் அப்போது இஸ்லாத்தில் அதன் பெயரை தவிர வேறு எதுமே எஞ்சியிருக்காது”
    இப்போது இவர்கள் நம்பிக்கை கொண்டு பின்பற்றி வருகின்ற இவ்வகையான இஸ்லாமால் எவ்வாறு அதன் பொன்னான சமயத்தில் அது வெளிப்படுத்திய சிறந்த தாக்கத்தை போல் இன்று  ஏற்படுத்துவதில்லை. மேலும் இப்போது இவர்களால் தடம் பாதிக்கப்பட்ட இஸ்லாமாலும்,இறைவனின் இறுதிமார்கத்தின் பாதுகாவலர்கள் என்றும் மார்க்க அறிஞர்கள் என்று கூறிக்கொள்ளும் இவர்களாலும் மேலும்  இவர்களின் மார்க்கத்தின் அரைகுறை விளக்கத்தாலும், சடங்கு சம்பிரதாயங்களும்,அந்த மறைத்த பொற்காலத்தின் இஸ்லாத்தின் மேன்மையை பார்த்து கவரப்பட்ட மாற்றுமத சகோதரர்கள் இஸ்லாத்தின் ஏற்றுக்கொண்டாலும் துரதிஷ்டவசமாக அவர்களால் அந்த உண்மையான இஸ்லாத்தின் போதனையை உறுதியாக பிடிக்க முடியவில்லை.

    மேலும் பெருமானார் (ஸல்) அவர்களின் மற்றுமொறு நபி மொழியின் பாகம் நான் உங்களை அழைத்து செல்வேன் அதாவது அன்னார் கூறும்போது

    “எனது உம்மத் பொழிந்துகொண்டிருக்கும் மழையை போன்றது இந்த மழையின் முந்தியது சிறந்ததா அல்லது பிந்தியது சிறந்ததா என்று எனக்கு தெரியாது”( முஸ்னத் அஹ்மத் திர்மிதீ)


    இந்த (குர்ஆனாகிய) அறிவுரையை நாமே இறக்கினோம். நிச்சயமாக நாமே இதனைப் பாதுகாப்போம் (15: 10)

    இந்த ஹதீதில் இருந்து மிக தெளிவாக இறைவனின் இந்த இறுதி மார்க்கம் ஆகிய இஸ்லாம் ஒவ்வொரு காலமும் அந்த காலத்திற்கு ஏற்ற எல்லையில்லா புத்துயிரை வழங்குவதற்கான நோக்கத்தை தன்னுள்ளே கொண்டுள்ளது.மேலும் திருகுரானின் தெளிவான விளக்கத்தின் மூலம் கிடைக்கும் வாக்குறுதி படியும் இதை மேலும் பெருமானார் (ஸல்) அவர்கள் உறுதியளித்துள்ள வாக்குறுதியின் படியும் அன்னாரின் இறை போதனைகளுக்கு பாதுகாவர்களாக வாக்களிக்கப்பட்ட சீர்த்திருத்தவாதிகள், ஷரியத் அல்லாத நபிமார்கள், மற்றும் அல்லாஹ்வின் பிரதிநிதிகள் கியாமத்து நாள் வரை வந்துகொண்டே இருப்பார்கள். மேலும் அல்லாஹ் மிக உறுதியாக அவன் இறக்கிய திருகுரானை அவனே பாதுகாக்கின்றான். இந்த உறுதிமொழியை அவன் சூரத்துல் ஹிஜிர் அத்தியாயத்தில் இவ்வாறு கூறுகின்றான்:-
    இப்பொழுது கேள்வி என்னெவன்றால் அல்லாஹ் அவன் இறக்கிய திருகுரானை மனிதனின் உள்ளத்திலும் செயல்வடிவிலும் எவ்வாறு பாதுகாக்கின்றான். மேலும் அது வெறும் எழுத்துக்களாக “கல்வெட்டை” போல பாதுகாக்கின்றான் என்று எடுத்துக்கொள்ளமுடியுமா இப்போது ஒருவேளை இவ்வாறு தான் பாதுகாக்கின்றான் என்று இருந்தால் பிற்காலத்தில் தங்களை முஸ்லீம்கள் என்று வாதம் செய்பவர்களிடம் ஒரு நூல் இலை அளவிற்கு கூட உண்மை இஸ்லாம் அவர்களிடம் இருக்காது எனவே இங்கே கூறப்படுகின்ற பாதுகாப்பு என்பது என்ன?

    மேலும் பெருமானார் (ஸல்) அவர்கள் இறுதி நாட்கள்களில் தனது தோழர்களின் ஒத்த காலத்தை அடைவார்கள் என்று முன்னறிவித்துள்ளார்கள். இஸ்லாத்தின் முதலில் உதித்த ஒளிக்கதிர் மகிமையுடையது இதையே பெருமானார் (ஸல்) அந்த நபிமொழியில் மழைக்கு ஒப்பிட்டு கூறுகிறார். மேலும் இந்த அருளுக்குரிய இந்த மழை தொடர்ச்சியாக இந்த உம்மத்திற்கு அன்னாரின் காலத்திற்கு பிறகும் நீடிக்கிறது. இன்னும் கவனமாக படித்தால் உங்களிலிருந்து உங்களுக்கு பிறகு வரக்கூடியவர்கள் யார் என்று அறியலாம். மேலும் அவர்கள் உண்மையான முஸ்லிம்களாக அவர்களுக்கு முன் அவ்வாறு தோண்றியவர்களை கிட்டத்தட்ட ஒத்திருப்பார்கள் ஆனால்  முழுவதும் அவர்களை போல் இருப்பார்கள் என்று கூறுவது கடினம். ஏனென்றால் இந்த எளியவனின் கருத்தின் படி இஸ்லாத்தின் தோற்றத்தில் அதாவது ஆரம்ப காலத்தின் மகிமை வேறு எந்த காலத்துடனும் ஒப்பிடமுடியாது இருப்பினும் இந்த இறுதி நாட்களில் அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் அவனது நபியின் மூலம் அந்த மழைக்கு உத்தரவாதம் வழங்குகின்றான். இதையே அவன் தனது திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்

    இன்னுமொன்று முதன்மையானவர்கள் இவர்கள் முதன்மையானவர்களேயாவர்.
    இவர்களே (இறைவனுக்கு) நெருங்கியவர்களாவார்கள். பேரின்பத் தோட்டங்களில் (இவர்கள் வாழ்ந்து வருவர்). முன்னவரைச் சேர்ந்தவர்கள் பெருங்கூட்டமாகஇருப்பார்கள். பின்னவரைச் சேர்ந்தவர்கள் சிறு கூட்டமாக இருப்பார்கள். (56: 11-15)


    மேலும் இதுவரை  அவர்களுடன் சேராத மற்றவர்களுக்கிடையிலும் (அவரை எழுப்புவான்). அவன் வல்லமை மிக்கவனும் நுண்ணறிவுள்ளவனுமாவான்.
    (62: 4)

    மேலும் ஒரு நபி மொழியில் இவ்வாறாக கூறப்பட்டுள்ளது:-

    “ எனது உம்மத்தில் முதல் மற்றும் கடைசி பகுதியை சார்ந்தவர்கள் சிறப்புடையவர்கள். இவர்களுக்கு இடையில் சில கோணல் புத்தியுள்ளவர்கள் இருப்பார்கள். என்று கூறியபின்   “ நம் சகோதரர்களை பார்க்க நான் ஆசைப்படுகிறேன்” என்று சொன்னார்கள்.மக்கள் (நபித்தோழர்கள்)  அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் “சகோதரர்கள்” இல்லையா? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீங்கள் என் தோழர்கள் தாம்” என்று அன்னார் பதிலளித்தார்கள்.

    முஸ்லீம் ஹதீஸ் தொகுப்பில் உள்ள இந்த நபிமொழியில் மிக தெள்ளத்தெளிவாக இங்கே குறிப்பிடுகின்ற “சகோதரர்கள்” என்று பெருமானார் (ஸல்) கூறுபவர்களை அன்னார் பார்த்ததே இல்லை என்பதும் அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த உலகத்தைவிட்டு சென்றதிற்கு பிறகு இறுதிக்காலத்தில் தோன்றக்கூடியவர்கள் என்பதும் இன்னும் பல்வேறு விளக்கங்களில் இங்கே குறிப்பிடப்படும் “சகோதரர்கள்”  இறுதிக்காலத்தில் தோன்றக்கூடியவர்கள் என்பதும் தெளிவாகின்றது.

    எனவே திருகுரானும் நபி மொழியும் எதிர்காலத்திலும் இறைத்தூதர்கள் தோன்றுவார்கள் என்பதையே மிகத்தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது மேலும் இறைவனால் தேர்வு செய்து இனி வரக்கூடியவர்கள் இறுதிவேதத்தை கொண்டுவந்த காத்தமுன் அன்பியா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிம்பமாகவும் அன்னாருக்கு இறைவன் அருளிய உண்மையான போதனைக்கு புத்துணர்வு வழங்குபவர்களாகவும் வருவார்கள் மேலும் அல்லாஹ் இந்த போதனைக்கையும் வாழ்கை நெறிமுறைகளையும் மறுமை வரை பாதுகாப்பதாக உறுதிமொழி அளித்துள்ளான்

    நான் உங்களிடம் மேலே கூறிய ஹதிதுகளில் ஞானத்திலிருந்து எத்தனையோ முஸ்லீம் அமைப்புகள் அவர்களுக்கிடையே எண்ணற்ற கருத்து வேறுபாட்டை கொண்டுள்ளனர். மேலும் அதில் உள்ள எந்த அமைப்பும் நபியே கரீம் (ஸல்) அவர்களுடன் அவர்களின் ஸஹாபிகள் வாழ்ந்துபோல் அல்லது பெருமானார் (ஸல்) அவர்கள் தனது இதயத்திற்க்கு இதயமாக சந்திக்கவிற்கும் அந்த “சகோதரர்கள் போலவும் இல்லை” ஏனென்றால் இவ்விவரண்டிற்க்கும் அவர்கள் வாழும் காலத்தில் ஒரு அல்லாஹ்வின் நபியின் ஆன்மீக அருளின் கீழ் வரமால் இது சாத்தியமற்றது.

    இன்னும் ஒரு முக்கியமான விஷயத்தை நான் உங்களுக்கு தெளிவுபடுத்த விருப்புகின்றேன். அதாவது ஜமாஅத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாம் என்பது ஒரு புதிய மார்க்கம் அல்ல என்பதை நீங்கள் அனைவரும் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மேலும் இந்த ஜமாஅத் இஸ்லாத்தில் பிரிவினையை ஏற்படுத்துவற்காகவும் தோன்ற வில்லை மாறாக அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் தனது மகிமை வாய்த்த அந்த இஸ்லாத்தை மீண்டும் உருவாக்குகின்ற ஒரு கருவியாக இதை எழுப்பியுள்ளான்.

    எனவே நான் உங்களிடம் மீண்டும் தெளிவுபடுத்துகின்றான் இந்த ஜமாஅத் ஒரு புதிய மார்க்கத்தை தன்னுள் கொண்டுவரவில்லை. மாறாக இதன் பெயர் அதாவது ஜமாத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாம் திருக்குரானில் மார்க்கம் என்பதற்க்கு என்ன பெயர் விளக்கப்ட்டுள்ளதோ அல்லது அறிவிக்கபட்டுள்ளதோ அந்த பெயரின் மறுவடிவமாகும். இந்த மறுவடிவத்தை மீண்டும் இந்த காலத்தின் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட எளியவனான என் மூலமாக இறைவழிகாட்டலின் கீழ் அருளியுள்ளான் மேலும் ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம் என்ற இந்த பெயரை இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவனின் இந்த காலத்தின் கலீபத்துல்லாஹ் ஆன இந்த எளியவனுக்கு அவனே வழங்கியுள்ளான். அந்த ஏக இறைவனே இதன் பெயரை வைத்து அவனுடைய  அடியானையும் அவனே தேர்வு செய்வதை விட சிறந்த அருள் வேறு என்ன இருக்கமுடியும். மேலும் அவன் இந்த அருளுக்குரிய முதலீட்டை அந்த தூய தீனே இஸ்லாத்தை மீட்டெடுக்கும் நோக்கத்தில் செய்துள்ளான். இப்பொது எத்தனையோ முஸ்லீம் அமைப்புகள் இஸ்லாத்தில் மாறுபட்ட காணோட்டத்தினாலோ அல்லது அவர்களின் சில நம்பிக்கைகளின் அடிப்படையில் அவர்களின் அமைப்புகளுக்கு பல்வேறு வேறுபட்ட பெயர்களை தாங்களாகவே வைத்துக்கொள்கின்றனர். ஆனால் நம்மிடையே அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் சுபஹானல்லாஹுதாலாவின் வெளிப்பாடுகளும் அவனால் நியமிக்கப்பட்ட அவனது கலீபாவும் மேலும் அவனால் பெயரிடப்பட்ட அமைப்பும் இருக்கும்போது இவ்வகை அமைப்புகளின் தேவை என்ன இருக்கிறது என்பதை சிந்தித்து பாருங்கள் மேலும் அல்லாஹ் அவனது இறைவஹீயியை அனுப்புவதன் மூலமே அவனால் உருவாக்கப்பட்ட ஜமாத்தை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றான். எனது அருமையானவர்களே இந்த தொடர் மூலம் என்னுடைய செய்தியை உங்களுக்கு தெளிவாக விளக்கிவிட்டேன் என்று நினைக்கின்றேன்.

    நான் அல்லாஹ்விடம் துஆ செய்கின்றேன் அவன் முஸ்லிம்களுக்கு உண்மையையும் அவர்கள் அந்த மேலாக நோக்கத்தை ஒளிரூட்டும் தெளிவான கருத்துக்களின் வழியாக பெற செய்வானாக! இதன் மூலமாக அல்லாஹ் நம்மிடம் என்ன நாடுகிறான் என்பதை நமக்கு புரியசெய்வானாக மேலும் நாம் எல்லாவிதமான ஷைத்தானின் ஈர்ப்பில்லிருந்து முற்றிலும் விலகி அவனிடம் முழுமையாக அர்ப்பணிக்க செய்வானாக, இதன்முலமாக அவனை அறிந்து அவனுடைய இருப்பின் ஆனந்தத்தை அடைவோமாக! இன்னும் அவனால் தேர்தெடுக்கப்பட்ட இறை அடியார்களின் பொதுவான பணியான மனித இனத்தையும் ஆன்மீகத்தையும் பாதுகாப்பானாக இன்ஷாஅல்லாஹ் ஆமீன்




    எனவே சகோதரர்களே ஒரு இறை தூதர் வருகையின் நோக்கம் “ஐனுல் யகீன்” ஆகும் இறுதியாக மஸீஹ் (அலை) அவர்களின் கூற்றுடன் முடித்து கொள்கின்றேன் நிறைவு செய்கின்றோம்.

    முழுமையான இறைஞானம் பெறும் வழி

    அன்புமிக்க நண்பர்களே! இறைவனுடைய நோக்கங்களுக்கு
    எதிராக எவனாலும் போரிட முடியாது. இறைவனின் தூய
    தூதர்களுக்கு இறைவன் புறமிருந்து கிட்டும் இல்ஹாம்
    (இறையறிவிப்பு)தான் முழுமையான இறைஞானத்திற்கான
    வழியாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்த அருட்கடலான
    இறைவன் தனது இல்ஹாம் எனும் அருளை அடைத்து வைத்து
    உலகத்தை ஒருபோதும் அழிவிற்குள்ளாக்க நாடவில்லை. மாறாக
    தனது இல்ஹாம் என்னும் இறையறிவிப்பின் வாசல்களை
    என்றென்றும் திறந்தே வைத்திருக்கின்றான். ஆனால் அவற்றை
    அவற்றிற்குரிய சரியான வழியின் மூலமே தேடவேண்டும்.
    அப்போதுதான் அவற்றை எளிதில் பெறமுடியும். அந்த ஜீவநீர்
    வானத்திலிருந்து இறங்கி அதற்கேற்ற இடத்தில்
    தேக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஜீவநீரை அருந்துவதற்கு நீங்கள்
    எப்படியாவது அந்நீரூற்றை அனுகி அதில் உங்கள் உதடுகளைப்
    பதித்து அந்த ஜீவநீரை மனநிறைவோடு பருகுங்கள்.

              ( இஸ்லாமிய போதனைகளின் தத்துவ ஞானம்)



    இன்ஷாஅல்லாஹ் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ் சுபஹானல்லாஹுதாலா அருள்புரிவனாக.!ஆமீன்…!!

  • நேர்வழி பெறுபவர் எவர்?

    ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை ) அவர்கள் போதிக்கின்றார்கள்:-

    அல்லாஹ்வின்‌ பிரதிநிதியாகிய நான்  கூறியதை அவர்‌ ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால்‌ என்னையும்‌ என்மீது நேர்மையான முறையில்‌ நம்பிக்கை கொண்ட மக்களையும்‌ அல்லாஹ்‌ பாதுகாத்தான்‌. இன்று வரையில்‌ அப்பாதுகாப்பு தொடர்கிறது. இன்ஷா அல்லாஹ்‌! வரும்‌ காலங்களிலும்‌ அவன்‌ தனது அருட்கொடைகளை நம்மீது பொழிவான்‌. இன்ஷா அல்லாஹ்‌, இஸ்லாத்தின் என்றென்றும் மகத்துவம்‌ நிலைநிற்கும்‌. மேலும் நம்‌ வழியாக- *ஜமாத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம்‌* வழியாக அதனை அவன்‌ நிலை நாட்டுவான். இன்ஷா அல்லாஹ்‌


     ஹஸ்ரத்‌ மஸீஹ்‌ மவூது ‌ (அலை) அவர்கள்‌ தனது ஒரு கட்டுரையில் விவரித்திருப்பதை போன்று! அதவாது 

    ஹஸ்ரத்‌ அஹ்மது (அலை) அவர்கள்‌ கூறுகின்றார்‌ :-


    .“பலதரப்பட்ட மத நிறுவுனர்களாகிய மதிப்புமிக்க நபர்களுக்க எதிராக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தும்‌ செயலானது மிக இழிவானதும் ‌தீயதானதும்‌ ஆகும்‌. இறைவன்‌ தனது எண்ணற்ற ஞானத்தால்‌, தனது பிரத்யோகமான விருப்பத்தால்‌ மக்களுக்கு நேர்வழியினை காட்டுவதற்கு *இமாம்கள் மற்றும்‌ சீர்திருத்தவாதிகளை நியமிக்கின்றான்‌.* அதன்‌ விளைவாக அந்த *ஆன்மீக ஒளி* பரிணமிக்கும், இன்னும் ‌ அவர்களின்‌ ஆன்மாக்கள்‌ காரணமாக உலகம்‌ அருளுக்குரியதாக மாறிவிடுகிறது. அதுமட்டுமின்றி அவர்கள்‌ வாயிலாக இறைவனின்‌ ஏகத்துவமும்‌, *இறைவணக்கமும்‌ உலகெங்கும்‌ ஒளிர்கிறது.* அவர்களின்‌ ஆற்றல்‌ வாய்ந்த போதனைகள்‌ காரணமாக *சிலைவணக்கம்‌* , இறைவனுக்கு இணை வைத்தல்‌ போன்றவற்றின்‌ வேர்‌ அறுந்துவிடுகிறது. *சிலைவணக்கம்‌* , இறைவனுக்கு இணைவைத்தல்‌ போன்றவை எல்லாவகையான தீமைகளுக்கும் தாயாக இருக்கிறது. இந்த போதனைகள்‌ மூலமாக இவ்வாறான தீமைகள்‌ (சிலை வணக்கம்‌) உலகின்‌ பல பகுதிகளிலிருந்தும் நீங்கி விடுகிறது. வரண்டு போன மரம்‌ புத்துயிரை பெறுவதைப்‌ போன்று அவர்கள்‌ ஏக இறை வழிப்பாட்டின்‌ நினைவை பூமியில்‌ அழைத்துவருகின்றனர்‌. விழுந்து போன ஏக இறை வழிப்பாடு என்னும்‌ கட்டிடத்தை அவர்கள்‌ மேலும்‌ திடமான அஸ்திவாரத்தால்‌ அமைக்கின்றனர்‌. அவன்‌ மிக்க மகிழ்ச்சியுடன்‌ அவர்களுக்கு பாதுகாப்பை அளிக்கின்றான்‌. மிக சிறந்த முறையில்‌ அவர்களுக்கு ஆதரவை வழங்குகின்றான்‌. இலட்சகணக்கான மக்கள்‌ அவர்களுக்கு எதிராக எழுந்துநின்றால்‌ கூட அவர்கள்‌ *அஞ்சமாட்டார்கள்‌* . அவர்களின்‌ *அப்பணியில்‌உறுதியுடன்‌ நிலைத்திருப்பார்கள்‌* . எல்லா விதமான அபாயங்களிலிருந்தும்‌ *இறைவன்‌ அவர்களை பாதுகாப்பான்‌. பகைவர்களின்‌ திட்டங்களை அவன்‌ தோற்கடிப்பான்‌.* இறுதியில்‌ அவர்கள்‌ உண்மையினை இப்பூமியில்‌ நிலை நாட்டுவார்கள்‌.. இத்தகைய *இறைப்பிரதிநிதிகள்‌ மீது சாபவார்த்தையினை கூறுவது இறையச்சம் இல்லாதவர்களின் செயலாகும்‌.”* (P.110:  பராஹீனே அஹ்மதிய்யா Part  I  and  II,  UK:  இஸ்லாம்  International Publications  Ltd  2012)

    சிந்திக்கும்‌ மக்களுக்கு இவற்றில்‌ படிப்பினை உள்ளது**  எவர்‌ இதிலிருந்து பயன் பெறுவார்‌உண்மையை தேடும் மற்றும்‌ நல்லறிவுவைப் பயன்படுத்துகின்றவர்கள்‌ இதிலிருந்து பலன்‌ பெறுவார்கள்‌. அவர்களுக்கு சிலவேளை உயர்ந்த *கல்வித்தகுதி இல்லாமல்‌ இருக்கலாம்‌* . *எழுதுவதற்கும்‌* *படிப்பதற்க்கும்‌ தெரியாதவர்களாக இருக்கலாம்‌* . ஆனால்‌ அவர்கள்‌, தங்களது *மனதை சுத்தம்‌ செய்து வைத்திருப்பார்கள்‌* . உண்மையினை ஏற்றுக்கொள்வதற்கும்‌ அங்கீகரித்துக்‌ கொள்வதற்குமான *ஆற்றலை அல்லாஹ்‌ அவர்களுக்கு அளித்திருப்பான்‌. அல்லாஹ்வின்‌ அனுமதியின்றி, எவருக்கும்‌ நம்பிக்கை கொள்ள இயலாது* . அல்லாஹ்‌ நாடுகின்றவர்களை அவன்‌ *நோ்வழியில்‌* செலுத்துகின்றான்‌.


                                                                                                              இன்ஷாஅல்லாஹ் ஆமீன் 

  • முஸ்லிஹ் மவூது தினத்தின் உண்மைநிலை

    *முஸ்லிஹ் மவூது  நாளான இன்று (20 FEB) நம்முடன்  இந்த நூற்றாண்டின் முஸ்லிஹ் மவூதுதை  நமக்காக இறைவன் அனுப்பி உள்ளான் இருப்பினும் மௌலவிகளுக்கு பின்னால் சடங்கு சம்பர்தாயம் போல் முஸ்லிஹ் மவூது  நாளை கொண்டாடுவது முறையா

     முஸ்லிஹ் மவூது  பற்றி  ஹஸ்ரத்  மஸீஹ் (as) அவர்களின் முன்னறிவிப்பு  :–


    “சிராஜுல் ஹக் (ரலி ) அவர்கள் அறிவிக்கின்றார்கள்  ஒருமுறை வாக்களிக்கப்பட்ட மஸிஹ் (அலை ) அவர்கள்  கூறினார்கள் :


    இறைவன் என்னிடம்  இவ்வாறு தெரிவித்தான் அதாவது இந்த உலகத்தில் மிகப்பெரிய எழுச்சி ஒன்று உருவாகும் அது முதல் எழுச்சியாக இருக்கும். அரசர்களுக்கு அரசர்கள் படையெடுப்பார்கள் அப்போது இந்த பூமியே நிரம்பும் அளவுக்கு ரத்த ஆறு ஓடும். அந்த அந்த அரசர்களின் குடிமக்களும் தங்களுக்கிடையே உள்ள அச்சத்தினால் போராடுவார்கள். அப்பொழுது உலகளாவிய அளவில் மிகப்பெரிய அழிவு ஏற்படும். இந்த அணைத்து நிகழ்வுக்கும் மையப்புள்ளியாக *சிரியா* தோன்றும் இதுவேவாக்களிக்கப்பட்ட *மகன் தோன்றும் காலம் ஆகும்.* 


    இறைவன் இந்த நிகழ்ச்சிகளை வாக்களிக்கப்பட்ட வர் வருகையுடன் சம்பந்த படுத்தியுள்ளான். இதற்குப் பிறகு என்னுடைய இந்த இயக்கம் உலகத்தில் பரவத் தொடங்கும் இன்னும் கூறுவதென்றால் அரசர்களும் இதன் உறுப்பினர் ஆவார்கள். அப்பொழுது நிச்சயமாக நீங்கள் *வாக்களிக்கப்பட்ட வரை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்* 
    [Tadhkiratul-Mahdi, part 2, new ed., p. 274], Cited from Tadhkirah, pp.1065-66, 2009 edition).

      
     இந்த முன்னறிவிப்பை அஹ்மதிகள்  இரண்டாவது கலீஃபதுல் மஸீஹ்  ஹஜ்ரத்  மிர்சா  பசுரூதீன் மஹ்மூத்  அகமது(ra) அவர்கள் மட்டுமே என்று கூறுகின்றார்கள் ஆனால்  ஒருசில இறை அறிவிப்புக்கள் *ஒன்றுக்கு மேற்பட்ட முறை நிறைவேறுகின்றன என்பதை அவர்கள் மறந்து விட்டனர்*  ஹஜ்ரத்  மிர்சா  பசுரூதீன் மஹ்மூத்  அஹமத் (ra) அவர்கள் (1889-1965)  அவர்கள் தன்னை ஹஜரத் அஹ்மது (AS) அவர்களின் முன்னறிவித்த  முஸ்லிஹ் மவூது    என்றும் வாதம் செய்துள்ளார்கள் மேலும் இவர் தன் வாதத்தை அதிகாரப்பூர்வமாக 


     1944  வருடம் பிப்ரவரி மாதம் இருபதாம் தேதி நடந்த கூட்டத்தில் அறிவித்தார்கள். அந்தச் சொற்பொழிவில் அவர்கள் கூறுகின்றார்கள்: 

    நான் இவ்வாறாக வாதம் செய்யவில்லை ,நான் ஒருவனே வாக்களிக்கப்பட்ட மகன் என்றும்எனக்கு *பிறகு கியாமத் நாள் வரை எவருமே வர மாட்டார்* என்றும், மாறாக வாக்களிக்கப்பட்ட  வாக்களிக்க￰￰பட்ட  மஸீஹ் (as)முன்னறிவிப்பின் படி மேலும் வாக்களிக்கப்பட்டவர்கள் வருவார்கள் அவர்களில் சிலர் நூற்றாண்டுகளுக்குப் பின் தோன்றுவார்கள். நான் உண்மையாக கூறுகின்றேன், எனக்கு இறைவன் இவ்வாறு அறிவித்தான் அதாவது இரண்டாவது முறை இந்த உலகத்தை சீர்திருத்த மீண்டும் என்னை அனுப்புவேன் என்று அந்த நேரத்தில் இறைவனுக்கு இணை வைப்பது பரவியிருக்கும். இதன் அர்த்தம் என்னவென்றால் என்னைப் போன்று ஞானம் மற்றும் ஆற்றல் பொதிந்து என்னை பின்பற்றுகின்ற ஒருவருக்கு   இந்த ஆத்மா வழங்கப்படும் என்பதாகும். எனவே வாக்களிக்க பட்டவர்கள் பிறகு அவர்கள் அவர்களோட காலகட்டத்தில் தோன்றுவார்கள் இது இறைவனு டைய வாக்குறுதியாகும் ஆகும் (Ref: Ahmadiyyat, the Renaissance of Islam by Sir Zafrullah Khanp.293-294)

    நிச்சயமாக  உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்; உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?* (அல்குர்ஆன் : 41:53) பொதுவாக ஒரு சில அஹ்மதி  நண்பர்கள் இவ்வாறு கேட்கின்றார்கள்அதாவது இறைபுறத்திலிருந்து  நமது சமுதாயத்தின் வரக்கூடியவர்கள் பற்றி அஹ்மதியா  கலிபாக்கள் கூறியுள்ளார்களா என்று?
    இதற்கான நமது பதில்ஆம்கூறியுள்ளார்கள்என்பதாகும்.

    ஹஜ்ரத்  மிர்சா  பசுரூதீன் மஹ்மூத்  அகமது(ra) (1889-1965) அவர்கள் ஒரு அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தின் கலீஃபா மட்டுமல்ல மாறாக அவர்கள் தன்னை ஹஜரத் அகமது(அலை ) முன்னறிவித்த  முஸ்லி மவூது என்றும் வாதம் செய்து ள்ளார்கள் மேலும் இவர் தன் வாதத்தை அதிகாரப்பூர்வமாக 1944  வருடம் பிப்ரவரி மாதம் இருபதாம்(20.02.1944) தேதி நடந்த கூட்டத்தில் அறிவித்தார்கள். இது சம்பந்தமாக இறைவனால் *இந்நூற்றாண்டின்*  மஸீஹ்யாக அனுப்பப்பட்ட ஹஜ்ரத் முனீர் அஹ்மத்  அசிம்(அலை) கூறுகின்றார்கள்:-


    நான் உங்கள் முன்னே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸலம் அவர்களின் ஆன்மீக மகனாகவும் மற்றும் வாக்களிக்கப்பட்ட மஹதி (அலை ) அவர்களின் ஆன்மீக மகனாகவும் வந்துள்ளேன். என்னை இறைவன் முஸ்லி மவுதே* என்று பிப்ரவரி 2004ஆம் ஆண்டு அழைத்தான். மேலும் அவன் என்னை படிப்படியாக உயர்த்திக் கௌரவப்படுத்தினான் அதாவது முதலில் என்னை ஹமரம்  முனீராவிலிருந்து காஜா நூருதீன், அமீனுல்  முஃமீ நூன், முஹையதீன், கலீஃதுல்லாஹ் மற்றும் அவனது நபியாகவும் ரஸூலாகவும்  உயர்த்தினான். இம் மதிப்பை  நான் எவரிடமும் சண்டையிட்டு பெற்ற தில்லை மாறாக  அந்த ஏக இறைவனே இந்த எளியவன் மீது கருணையாக பொழிந்தான்,  மேலும் இதை அனைத்தையும் ஒரு அடிப்படை குறிக்கோளுக்காக அளித்துள்ளான்,  அதாவது அவனது தூது செய்தியைக்  கூறுவதற்காகவும்* உலக மக்கள் அனைவரையும் *சிலைகளை விட்டு ஓரிறை கொள்கைக்குதிரும்புவதற்காக  இதை அவன் எனக்கு  அளித்தான். கடந்த *12* ஆண்டுகளில்    இறைவன் என்னை பசீர் என்றும் நதீ(d)ர் மற்றும் முபசிர் என்றும் பலமுறை அழைத்துள்ளான்.


    எனது நோக்கம் உங்களை எச்சரிப்பது மட்டுமே உங்கள் *மனங்களை மாற்றும்  சக்தி எனக்கில்லை,*  அது இறைவனிடம் மட்டுமேயுள்ளது, மேலும்  நான் மிக பெரிய அறிவாளி இல்லை,  மாறாக நான் நபி  ஸல்லாஹு அலைஹிவஸல்லம்  அவர்களால்  சுரா ஜுமுஆவில் உருவகமாக கூறப்பட்ட  அவரது இரண்டாவது வருகையாகயுள்ளேன். நான் அசாதாரணமக கல்வியோ அல்லது பெரிய  பட்டமோ பெறவில்லை, ஆனால் அந்த ஏக இறைவனே என் வழிநடத்துபவனும் என் ஆசானுமாவான், அவனே இந்த எளியவனை *நபியாக* *தேர்தெடுத்து அறிவிக்குமாறு கூறினான்.* எனக்கு எந்த மனிதனை பார்த்தும்  அச்சமில்லை,என் இறைவன் என்னை வழிநடத்தும் போது நான் யாரை  பார்த்து அஞ்சவேண்டும்.


    – ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் (அலை ) அவர்கள் 

                                                                      உங்கள் அனைவருக்கும் முஸ்லிஹ் மவூது  தின வாழ்த்துக்கள் 

  • இயேசு வந்துவிட்டார்

    இதோ வருகிறார் இயேசு என்று இயேசுவின் அன்பர்கள் இயேசுவின் இரண்டாம் வருகைக்குத் தொடர்ந்து கட்டியம் கூறிக் கொண்டிருப்பதை நாம் நன்கறிவோம். இன்று நேற்றல்ல; பல காலமாகவே இயேசு கிறிஸ்து வானத்திலிருந்து இறங்கி வருவதை காண கிறிஸ்தவ உலகு மிகுந்த ஆர்வத்தோடும் ஆரவாரத்தோடும் காத்துக்கிடப்பது நமக்குத் தெரியும். 
     
    இதே போன்றுதான் இயேசுவின் காலத்தில் யூத சமுதாயம், வானத்திலிருந்து இறங்கி வருகின்ற ஒருவருக்காக ஆவலோடு காத்திருந்தது: அவர்தான் மெசியா, வானத்திலிருந்து இறங்கி வந்து. பூமியில் தோன்றும் இந்த மெசியாதான் தங்களை ரோமானிய அடிமைத் தளையிலிருந்து விடுவிப்பார் என்றும், தங்களுக்கு ஒரு சுதந்திர நல்வாழ்வை வழங்குவார் என்றும் அவர்கள், காலங்காலமாக நம்பி வந்தனர். மேசிய என்ற சொல்லின் கிரேக்க மொழி வடிவம்தான் கிறிஸ்து ஆகும். ஆகவே அன்றைய யூத சமுதாய மக்கள் கிறிஸ்து என்ற ஒருவர் வானத்திலிருந்து இறங்கி வரக் காத்திருந்தார்கள் எனச் சுருங்கக் கூறலாம். 
     
    இப்போது நாம் அவர்களின் மற்றொரு நம்பிக்கையையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். முன்னொரு காலத்தில் எலியா தீர்க்கதரிசி என்பவர் உயிருடன் வானத்திற்கு ஏறிச் சென்றுள்ளார்கள் என்பதும் அவர் மீண்டும் அதே உடலோடும் உயிரோடும் இப்பூவுலகிற்குத் திரும்பி வருவார் என்பதும் அந்த யூத மக்களின் நம்பிக்கையாகும். மேசியா என்ற கிறிஸ்து வானத்திலிருந்து இறங்கி தங்களுக்கு மத்தியில் வந்து தோன்றுவதற்கு முன்னர், ஏற்கனவே வானத்திற்கு ஏறிச் சென்றிருந்த அதே எலியா தீர்க்கதரிசி அங்கிருந்து இறங்கி வந்து மேசியாவுக்காக அவரது வழியை ஆயத்தப் படுத்துவார் என்றும் யூத கோத்திரத்தினர் நம்பி வந்தனர். 
     
    ‘எலியா வருவார்’ என்ற தமது நீண்ட கால நம்பிக்கைக்கு ஆதாரமாக அவர்கள், பைபிள் பழைய ஏற்பாட்டில் உள்ள மல்கியா என்ற புத்தகத்தையே சுட்டிக்காட்டினார்கள். மல்கியாவில் எலியா தீர்க்கதரிசியின் இரண்டாம் வருகை குறித்து இவ்வாறு கூறப்பட்டுள்ளது: 
     
    “இதோ கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.” (மல்கியா 4:5) 

    “எலியா சுழல் காற்றில் பரலோகத்திற்கு ஏறிப்போனான்” (11 இராஜாக்கள் 2:7)
     
    இந்த எலியா, மேசியா தோன்றுவதற்கு முன்னர் வானத்திலிருந்து உயிருடன் இப்பூமிக்கு வந்து அதாவது பாலஸ்தீனத்துக்கு வந்து மேசியாவின் வருகைக்கான பாதையை ஆயத்தப் படுத்துவார் என்றும் அக்கால யூத மக்கள் நம்பி இருந்தனர். 
     
    எனவே இயேசு பிரான் பாலஸ்தீனத்தில் அவதரித்து யூத மக்களுக்கு மத்தியில் போதித்து வந்த வேலையில் அவரை நோக்கி, நீர் கிறிஸ்து என்பது உண்மையானால் எலியா தீர்க்கதரிசி உமக்கு முன்னர் தோன்றியிருக்க வேண்டுமே….. அவர் எங்கே? என்று அவர்கள் தமது நியாயமான உண்மையான ஐயப்பாட்டை அவர் முன் எடுத்து வைத்தனர். 
     
    அதற்கு மறுமொழியாக இயேசு கூறிய பதில் அறிய ஆவலாக உள்ளவர்களுக்கு மத்தேயு சுவிசேஷகர் என்ன கூறியுள்ளார் என்பதை இங்கு பார்ப்போம்: 
     
    ‘நீங்கள் ஏற்றுக் கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான் கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக் கடவன்.’ (மத்தேயு 11:14-15) என்று அவர்களுக்கு மத்தியில் யோர்தான் நதிக்கரையில் ஞானஸ்நானம் வழங்கி வந்த யோவானைச் சுட்டிக் காட்டி நீங்கள் எதிர்பார்த்திருக்கும் எலியா ‘இவன்தான்’ என அடையாளம் காட்டினார். 
     
    மேலும். ‘……….. அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வர வேண்டும் என்று வேதபாரகர் சொல்கிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள், இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்தி வந்து எல்லாவற்றையும் சீர்படுத்துவது மெய்தான் ஆனாலும் எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்கிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள். இவ்விதமாய் மனுஷ குமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். அவர் யோவானைக் குறித்து தங்களுக்குச் சொன்னார் என்று சீசர்கள் அப்பொழுது அறிந்து கொண்டனர்.” (மத்தேயு 17:10) என்று இயேசு பிரான் சொல்லிக் காட்டியதன் மூலம் எலியா தமக்கு ‘முந்தி வந்து’ தோன்றிவிட்டார் என்பதையும் அவர் தமக்காகச் செய்ய வேண்டிய ‘எல்லாவற்றையும்’ சீர்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதையும் அப்பாமார யூதர்களுக்கு புரிய வைத்தார். இயேசு கிறிஸ்து தமது வாயால் தந்துள்ள இந்த விளக்கத்திலிருந்து ஒரு தீர்க்கதரிசியின் மறுஅவதாரம் அல்லது அவரது இரண்டாம் வருகை என்பது அவரைப் போன்ற இன்னொருவரின் வருகைதானே தவிர அவரே மீண்டும் வருவதல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது 
     
    மற்றொரு நிகழ்வு மூலமும் ஒரு தீர்க்கதரிசியில் இரண்டாவது வருகை என்பதன் உண்மையான பொருள் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். சகரியா தீர்க்கதரிசிக்கு யோவான் என்ற ஒரு மகன் பிறப்பான் என்னும் அறிவிப்பு தேவதூதன் மூலம் அவருக்கு அருளப்பட்டிருந்தது அந்த அருள்வாக்கிலிருந்து எலியா தீர்க்கதரிசியின் இரண்டாவது வருகை என்பது அதே எலியா தோன்றுவார் என்பதல்ல மாறாக யோவான் (ஞானஸ்நானன்) தோன்றியதால் நிறைவேறிவிட்டது என்பதை கீழ்க்கண்ட திருவசனங்கள் தெரிவிக்கின்றன.
     
    கர்த்தருடைய தூதன் சகரியாவை நோக்கி, ‘…………உன் மனைவியாகிய எலிசபத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள். அவனுக்கு யோவான் என்று பெயரிடுவாயாக……..’ அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான்……….’ என்று தீக்கதரிசனம் உரைத்தான். (லூக்கா 1:13-17) அதாவது சகரிய தீர்க்கதரிசிக்கு ஒரு மகன் பிறப்பான்; அந்த மகன் எலியா தீர்க்கதரிசியின் ஆவியும் பலமும் கொண்டவனாக இயேசுவுக்கு முன்னர் தோன்றுவான் என்பதையே இத்திரு வசனம் நமக்கு எடுத்துரைக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் எலியா தீர்க்க தரிசியின் இரண்டாம் வருகை என்பது அவரைப் போன்ற வேறொருவரால் அதாவது யோவான் (ஞானஸ்நானன்) இவ்வுலகில் தோன்றியதால் நிறைவேறிவிட்டது. 
     
    மேற்கொண்ட பைபிள் திருவசனங்களிலிருந்து ஒரு தீர்க்கதரிசியின் இரண்டாம் வருகை என்றால் அதே பழைய தீர்க்கதரிசி இரண்டாவது தோன்றமாட்டார் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம். மாறாக முன்னர் சென்ற அதே தீர்க்கதரிசியின் பண்புகலோடும் தத்துவத்தோடும் புதிதாக வேறொரு தீக்கதரிசி தோன்றுவார் என்றுமே நம் பொருள் கொள்ள வேண்டும் என்பதை மேற்சொன்ன திருவசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன. எனவே யூத மக்களுக்கு மத்தியில் ஏற்கனவே தோன்றி நற்போதனை செய்து மறைந்த இயேசு பெருமானின் இரண்டாவது வருகையும் இப்படித்தான் நிகழ வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதாவது இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்றுவிட இயேசு பிரான் மீண்டும் இரண்டாவதாக இபூமிக்கு வருவாரென்றால், அதே பழைய இயேசு வரமாட்டார்; அவரது பண்புகளோடும், தத்துவத்தோடும் அவரைப் போன்ற வேறு ஒருவர் தோன்றுவார் என்பதுதான் அதற்குப் பொருளாகும். 
     
    இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்ற ஒருவர் அல்லது இறந்து போன ஒரு மனிதன் மீண்டும் இவ்வுலகிற்கு வரமுடியாது என்பது இயற்கைச் சட்டமாகும். அதுவே இறைவன் வகுத்த விதியுமாகும். உண்மையிலேயே கிறிஸ்துவாகிய இயேசு சிலுவையில் உயிர் துறந்துவிட்டார் என்றால் அல்லது இவ்வுலகைத் துறந்து வானத்திற்கு ஏறிச் சென்றுவிட்டார் என்றால் அவர் மீண்டும் இவ்வுலகிற்கு உயிருடன் திரும்பி வர முடியாது என்பது எவராலும் மீற முடியாத ஒரு விதியாகும். அவ்வாறாயின் இயேசு பிரான் மீண்டும் இரண்டாவது இவ்வுலகிற்கு வருவார் என்று கூறும் பைபிள் தீர்க்கதரிசனங்களின் உண்மையான பொருள்தான் என்ன? என்ற கேள்வி இங்கு எழுகின்றது. அந்தக் கேள்விக்கும் விடை இருக்கிறது. 
     
    இவ்வுலகைத் துறந்து வானத்திற்கு சென்ற தீர்க்கதரிசி ஒருவர், உயிரோடு வானத்திற்குச் சென்ற பின்னர், மீண்டும் இவ்வுலகிற்குத் திரும்ப வருவாரென்றால் இதைக் குறித்து பைபிளின் தீர்க்கதரிசனங்கள் என்ன கூறுகின்றன? என்பதை நாம் முதலில் கண்டறிய வேண்டும். அதன் பின்னர் அத்தீர்க்கதரிசனங்கள் எந்த வேதாகமத்தில் என்ன பொருள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும். அத்துடன் இவற்றைப் போன்ற முந்தைய தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு நிறைவேறி உள்ளன என்பதையும் நாம் கண்டறிய வேண்டியது அவசியமாகும். இதன் மூலம் இயேசுவின் இரண்டாவது வரோகையைப் பற்றி தீர்க்கதரிசனத்தின் பொருளையும், அது எவ்வாறு நிறைவேறும் என்பதையும், பைபிள் அடிப்படையில் நாம் அறிந்து கொள்ளலாம். 
     
    இவ்விடத்தில் நம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான மற்றொரு கருத்து உள்ளது அதாவது இயேசு பிரான் தம்மை எதிர்த்துக் கொடுமைகளுக்குள்ளாக்கிய யூதர்களை நோக்கி ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதன்படி தேவனின் இராஜ்ஜியம் கொடிய உள்ளங்கொண்ட அந்த யூத சமுதாயாத்தை விட்டு நீக்கப்பட்டு வேறொரு சமுதாய மக்களிடம் வழங்கப்படும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இறைவனின் திட்டப்படி யூத மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்த ‘தீர்க்கதரிசி’ என்ற இறையருள் (நபித்துவம்) இனி அந்த யூத கோத்திரத்தார்களிடமிருந்து பிடுங்கப்பட்டு அதற்குத் தகுதியான வேறொரு சமுதாயத்தாருக்கு வழங்கப்பட்டுவிடும். ஆகவே இயேசுவுக்குப் பிறகு யூத சமுதாயத்தில் தீர்க்கதரிசிகள் (நபிமார்கள்) தோன்றமாட்டார்கள். இதுவே இயேசு பிரான் விடுத்த எச்சரிக்கையின் நுட்பமான கருத்தாகும்.
  • இந்த நூற்றாண்டில் கலீஃபதுல்லாஹ் (அலை) அவர்களுக்கு இறங்கிய நற்செய்தி மற்றும் எச்சரிக்கை வடிவிலான வஹீயின் தொடர்

    *ஹஜ்ரத் முஹைய்யத்தீன் அல்ல கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹமத் அஸிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் 25 – 6 – 2020 அன்று மதியம் 3:25pm மணி அளவில் சில *இறை வஹிகளை பெற்றார்கள்.* அவை அரபி மற்றும் அதன் பொருளுடன் கிடைத்தது.
     
     
                                                                                 பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்
     
     
    *கிராமன் -* கண்ணியமிக்க  *கிதாபின் -* எழுதக்கூடிய 
     
    *அல் அப்ரார் -*  தூய்மையான /  உண்மையான நம்பிக்கையாளர்கள்
     
    *அல் புஜ்ஜார் -* தீயவர்கள் .
     
    அல்லாஹ் ஒருவனே எழுப்பும் போது அவர் கண்ணியமிக்கவராக (கிராமன்) ஆகிறார். அவ்வாறு எழுப்பப் படக்கூடிய  இறைத்தூதருடன் 100 சதவிகிதம் முழுமையா பிணைப்பை ஏற்படுத்திக் கொண்ட நம்பிக்கை கொண்டவர்கள் அவர் (தூதர்) பெறக்கூடிய  இறைவஹியை எழுதப்பட கூடியதாக இருந்தாலும் சரி, அவர் கொடுக்கக்கூடிய தூதுச் செய்தியை முழுமையாக நம்புபவர், அவர் வழங்கக்கூடிய தூதுச் செய்தியின் மீதும், எழுத்துக்கள் மீதும் அவர் எதையெல்லாம் இறைச்செய்தியாக பெறுகிறாரோ அதன் மீதும் உண்மையைத் தேடுபவர்கள், போன்ற அனைவரும் *அப்ரார்களாக* அதாவது பக்தி கொண்டவர்களாக ஆகிவிடுகிறார்கள்.
     
    அவ்வாறு ஒருவர் *அப்ரார்* பயபக்தி உள்ளவராக மாறிவிடும் போது அதாவது அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த கண்ணியமிக்க தூதரிடத்தில் எப்பொழுதும் தொடர்பில் இருக்கக்கூடியவர்களை அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா தனது சிறப்பான அறிவை இறை ஞானத்தை அவர்கள் மீது பொழிகின்றான். இதன்மூலம் இறையச்சமுள்ள நம்பிக்கையாளர்கள்; தீயவர்களான ஃபுஜ்ஜார்களுடைய வாயை அடைத்து விடக்கூடிய அளவிற்கு அறிவை வழங்குகின்றான். அவர்கள் எந்த அளவிற்கு ஆற்றலை பெறுகிறார்கள் என்றால், எழுதக் கூடிய ஆற்றலையும் நான் வன்மையையும் பெற்றுவிடுகிறார்கள். இவர்கள் இந்த பய பக்தி உள்ளவர்கள் என்ற நிலையை அடைகிறார்களோ அவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் வெறும் பயபக்தி உடையவர்கள் மட்டுமல்ல மாறாக அல்லாஹ் அவர்களை *அல் அப்ரார்* களாக மாற்றி விடுகின்றான். 
     
    எதற்காக சிறப்பினை அவர்கள் பெறுகிறார்கள் என்றால், அவர்கள் அந்த (கிராமன்) கண்ணியமிக்க தூதருடன் கொண்ட தொடர்பின் காரணமாக இந்த சிறப்பான அருளைப் பெற்றுக் கொள்கிறார்கள். அந்த கண்ணியமிக்க தூதரோடு மட்டுமல்லாமல் அவர் பெறுகின்ற இறைச் செய்தியின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள். அதன் காரணமாகவும் அல்லாஹ் அவர்களுக்கு அந்த சிறப்பான தகுதியை வழங்குகின்றான். அல்லாஹ் என்னுடைய எல்லா ஸஹாபிகள் மீதும் இறைஞானமாகிய அஸ்மா உல் ஹுஸ்னாவைக்  கொண்டு அருள் புரிவானாக. அல்லாஹ்வின் திருநாமங்கள் கொண்டு தக்வா நீதி நேர்மை மற்றும் மன உறுதியுடன் அவர்களின் அன்றாட வாழ்வினை சமாளிக்க உதவுகின்றன. உங்களுடைய எல்லா பிரச்சினைகளையும் இம்மையிலும் வருங்காலத்திலும் மறுமையிலும் சத்தியத்தின் முன்னேற்றத்திற்காகவும் உங்களது ஆன்மிக அறிவு மற்றும் வளர்ச்சிக்காகவும் வேண்டி ஆன்மீகம் மற்றும் உலக வெற்றிக்கான வழியை திறந்து வைப்பானாக. ஆமீன் . 
     
     
     
     
    2. ஹஸ்ரத் முனீர் அஹ்மத்  அலை அவர்களுக்கு இறங்கிய அதாவது ஜனவரி* *20ம் தேதி 2010 ம்  ஆண்டு மதியம் 12:05 மணிக்கு கிட்ட தட்ட 8 முறை இறங்கிய வஹீ*   
     
    இப்போது உலகின் நிலை என்னவென்றால்,  அது இன்னும் அதிகமான *பேரழிவுகளை சாட்சியாகக் காண்பிக்கும்  இது இவர்கள் இறை  கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாததற்காக மற்றும்  என் வழிபாட்டை விட்டு விலகிவிட்டார்கள் என்பதால்*  இது இவர்களுக்கு ஒரு பாடம் ஆகும். . *ஹெய்டி மிகவும் மோசமான நிலையில்உள்ளது இதைப்போல மற்ற நாடுகளும் ஏனென்றால் இந்த மக்கள்  உலகத்தின் அழுக்குகள்  படிந்து  எனது வழிபாட்டை விட்டு விட்டனர்* . மேலும்  நினைவில் கொள்ளுங்கள்என் கலீஃதுல்லாஹ்வே நான்  பலமுறை கூறிவிட்டேன் அழிவு! அழிவு!! பேரழிவு!!!  இதனால் *இரத்த ஆறுகள் ஓடும் விதவைகளின் கூக்குரல் எங்கும் ஒலிக்கும்* இதை அல்லாஹ் விதித்திருக்கின்றான். எந்த மனித சக்தியாலும் மற்றும்  எந்த மனிதனும் அல்லாஹ்வின் வடிவமைப்பை நிறுத்த முடியாது!!!
     
     
  • வாதம் செய்யாத வஹீயின் நிலை

    அவன் வானவர்களை “வணக்கத்திற்குரியவன் என்னைத் தவிர வேறு எவனும் இல்லை. எனவே எனக்கே அஞ்சுங்கள்” என எச்சரிப்பீராக என்ற வஹியுடன், அடியார்களுள் தான் விரும்பியோரிடம் தன் கட்டளை மூலம் இறக்குகிறான்.
    ( திருக்குர்ஆன் 16: 3 )


    இந்த வசனத்திற்கு ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்கள் தஃப்சீரே கபீரில் விளக்கம் அளிக்கும் போது  இங்கே *الروح* (அர் ரூஹ்-இறை வெளிப்ப்பாடு)   என்பதன் பொருள் இறைவனின்  உயிர் வழங்கும்  வார்த்தை என்பதாகும். இது ஒரு நபியின் செய்தியை அதன் உயிர் வழங்கும் குணங்களை குறிப்பதற்கும் கூட பயன்படுத்தப்படுகின்றது.

    ‘மக்களை எச்சரிக்க’ என்ற வார்த்தைகள் இங்கே சுட்டிக் காட்டுகின்ற ‘ இறை வெளிப்பாடு’  என்பதன் பொருள் ஒரு இறைத் தூதருக்கு வழங்கப்படுகின்ற சிறப்பு வெளிப்பாடாகும். இறை வெளிப்பாடு பொதுவாக இரண்டு வகையானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்:

    (1)பெறக்கூடிய நபரைப் பற்றிய அவருடைய சொந்த வெளிப்பாடு. பொதுவாக அதனை வெளியிடுவதற்கு எந்த ‘சிறப்பு தடை’ யும் இல்லை. என்றாலும், அது அறிந்து கொள்ளப்பட்டு வெளியிட வேண்டிய தேவையில்லை. 

    (2)மனிதகுலத்திற்கான பரந்த (அளவிலான) இறை வெளிப்பாடு. பிந்தைய இந்த வகையிலான இறை வெளிப்பாட்டிற்க்கு பரந்த வகையில் அறிவிக்க  வேண்டும், மேலும் அதனை (வலுக்கட்டாயமாக) அடக்குவது என்பது ஒரு தெளிவான பாவத்திற்குச் சமமாகும்.

    முதல் வகையான வஹீ பொதுவானதாகும், இதையே ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்கள் கூறும்போது ஜிப்ராயீலிய ஒளியின் 46 ஆவது பகுதி முழு உலகிலும் பரவி இருக்கிறது. இன்னும் கூறுவதென்றால், வேசிகளின் குழுவைச் சேர்ந்த மிகவும் துர் நடத்தையுடைய தன் இளமையை முழுவதும் தீய நடத்தையிலேய கழித்த ஒரு பெண், சில நேரத்தில் உண்மையான கனவைப் பார்த்து விடுகிறாள் என்பது அனுபவத்தில் அறிந்த உண்மை என்பதுவரை நான் ஏற்றுக் கொள்கிறேன். இத்தகைய பெண் இரவில் குடித்து விட்டு அந்நிய ஆணுடன் படுக்கையில் கிடக்கும் போது கூட ஏதாவதொரு கனவைப் பார்க்கிறாள். அது உண்மையாகி நிறைவேறியும் விடுகின்றது என்பது இன்னும் ஆச்சரியமான விஷயமாகும். (ஆதாரம்:-குறிக்கோள் பற்றிய விளக்கம் பக்கம் 73) ஆனால் இரண்டாவது வகை அறிவிக்கும்படியான வஹீயை மார்க்கத்தின் உயிர் ஆகும். இந்த அருள் இப்போது இஸ்லாத்தை தவிர வேறு எந்த மார்க்கத்திற்கும் கிட்டாது.

    அன்னார் (அலை) கூறுகிறார்கள்:-


    இறைவனிடமிருந்து இல்ஹாமை (இறைவெளிப்பாட்டைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தை உண்மையான மார்க்கமாகிய உம்மதே முஹம்மதிய்யாவில் நிலைத்து நிற்பவர்களுக்கு அவன் அளிக்கிறான். இறைவனின் சக்திக்கு மட்டும் உட்பட்ட, மறைவான செய்திகளை அவர்களுக்கு அறிவிக்கின்றான். எவர் உண்மையான உள்ளத்துடன் திருக்குர்ஆனை இறைவசனம் என உறுதி கொண்டு, உண்மையான பற்றுடன் அதிலுள்ள கட்டளைகளின்படி நடந்து, நபிகள் நாயகம் ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களை இறைவனின் உண்மையான முழுமை பெற்ற நபி என்றும், எல்லா நபிமார்களையும் விட மிகச் சிறந்த நபி என்றும் காத்தமுன் நபிய்யீன் என்றும் உறுதி கொள்கின்றாரோ, அத்தகு நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே அந்தத் தூய்மையான இல்ஹாமைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தை இறைவன் அளிக்கின்றான். யூதர்கள், கிறித்தவர்கள், ஆரியர்கள், பிராமணர்கள் ஆகியோருக்கு அந்த இல்ஹாம் ஒருபோதும் கிட்டாது. எனினும் திருக்குர்ஆனை முழுமையாகப் பின்பற்றுபவர்களுக்கு அது அப்போதும் கிடைத்தது; இப்போதும் கிடைக்கிறது; இனிமேலும் கிடைக்கும். புதியதொரு ரிஸாலத்தைக் கொண்டுள்ள வஹி அவசியமில்லாமையால் அது முடிவு பெற்று விட்டது. எனினும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் உண்மையான தொண்டர்களுக்கு அந்த இல்ஹாம் கிடைக்கிறது. அது ஒருபோதும் நிற்காது. நமக்குக் கிடைக்கும் இந்த இல்ஹாம் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல) அவர்கள் உண்மை நபி என்பதற்கு மிகப் பெரிய சான்றாகும். இந்த சான்றுக்கு முன்னால் இஸ்லாத்தை மறுப்பவர்களும், எதிர்ப்பவர்களும் இழிவும் அவமானமும் அடைகிறார்கள். (பராஹீனே அஹ்மதிய்யா தொகுதி 3 பக்கம் 216 அடிக்குறிப்பு 11)

    மிகத்தெளிவாக அன்னார் *அறிவிக்கும்படியான வஹீ தான் இஸ்லாத்தின் உயிர்* என்றும்., வாதம் செய்யாத வஹீ தனிமனிதனுக்கு பொதுவாக அதாவது ஜிப்ரீலிய ஒளியின் நாற்பத்து ஆறில் ஒரு பங்கை இன்னும் சொல்ல போனால் இதுபோன்ற வெளிப்பாடு/கனவு ஒரு வேசிக்குக்கூட கிடைக்கின்றது என்று கூறுகின்றார்கள். ஆனால் அந்தோ! பரிதாபம்!! இந்த முல்லாக்கள் அவர்களது கலீஃபாவை எந்த நிலைக்கு அழைத்து செல்கின்றனர் பாருங்கள்.., 

    மேலும் திருக்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடும் போது;

                                                                                     *நிச்சயமாக  உமது பகைவனே ஆண் சந்ததியற்றவன்.*(திருக்குர்ஆன் 108: 4 )

    திருக்குர்ஆனின் கருத்துப்படி இறை அறிவிப்பைப் (இறைவஹீயை) பெறும் கூட்டத்தினரே ஆன்மீக சந்ததிகளாவர். அப்படிப்பட்ட ஆன்மீக சந்ததியினரை முஹம்மது நபி (ஸல்) அவர்களாலேயே பெறமுடியும். அவர்களின் எதிரிகளால் பெற இயலாது, என்பது தெளிவாகின்றது.இன்னும் ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி)  அவர்கள் கீழ்காணும் வசனத்திற்கு விளக்கம் அளிக்கும்போது, *அந்த இரவை அது மூடிக் கொள்ளும் போது சான்றாகக் காட்டுகிறேன்.* *அந்தப் பகலை அது ஒளி வீசும் போது சான்றாகக் காட்டுகிறேன். ஆணையும், பெண்ணையும் படைத்ததை சான்றாகக் காட்டுகிறேன்.*.( திருக்குர்ஆன் 92: 2-4 )

    வருகின்ற முஜத்தித் ஆன்மீக ஆண்கள் என்ற பொருள் வருகின்ற அதாவது முஜத்தித்மார்கள் நபிமார்களை போன்று ஆன்மீக ஆண்கள் அதாவது வாதம் செய்யும் ஆன்மீக சந்ததி என்று தெளிவாக ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (ஆதாரம்:-HQ, 92: 2-4, pp. 2835)

    மற்றுமொரு வியக்கத்தக்க ஆட்சேபனை என்னவென்றால், “இந்த மூட முல்லாக்கள்  இறைபுரத்திலிருந்து தோன்றும் முஜத்தித்மார்கள் வாதம் செய்வதில்லை” என்ற கூற்றை முன் வைக்கின்றனர். ஆனால் திருகுர்ஆன் மற்றும் மஸீஹ் (அலை) அவர்களின் கூற்றின் அடிப்படையில் நாம் பார்த்தால் இந்த கூற்றும் தவறானது எனபதை அறியலாம்.

    மேலும் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்கள் ஹகீகத்துல் வஹீயில் அன்னாரின் வருகையின் முதல் அடையாளமாக நூற்றாண்டின் முஜத்தித்மார்களின் வருகையை பற்றி  குறிப்பாக “நூற்றாண்டின் தலைமையில் தோன்றும் இத்தகைய முஜத்தித் மார்கள்  தத்தமது காலத்தில் வாதம் செய்துத்துள்ளனர்.”  என்று தெளிவாக குறிப்பிட்டுளார்கள். (HaqIqatul-WaHI—The Philosophy of Divine Revelation page no:241)


     எனவே திருமறை மிக தெளிவாக இறை வஹீயை வைத்து வாதம் செய்பவரே *ஆன்மீக ஆண்* என்று கூறுகின்றது.  
    அப்படியானால், இந்த முல்லாக்கள் கருத்தின் படி அவர்களது கலீஃபாவின் நிலை கேள்விக்குறியே?!  *எனவே எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் இருக்கிறாரோ அவர் எவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளதோ, இன்னும், எவர்கள் தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றார்களோ அத்தகையோருக்கு ஓப்பாவாரா?* (அல்குர்ஆன் : 47:14)

    ReplyForward