Jamaat Ul Sahih Al Islam Tamilnadu

முஸ்லிஹ் மவூது தினத்தின் உண்மைநிலை

*முஸ்லிஹ் மவூது  நாளான இன்று (20 FEB) நம்முடன்  இந்த நூற்றாண்டின் முஸ்லிஹ் மவூதுதை  நமக்காக இறைவன் அனுப்பி உள்ளான் இருப்பினும் மௌலவிகளுக்கு பின்னால் சடங்கு சம்பர்தாயம் போல் முஸ்லிஹ் மவூது  நாளை கொண்டாடுவது முறையா

 முஸ்லிஹ் மவூது  பற்றி  ஹஸ்ரத்  மஸீஹ் (as) அவர்களின் முன்னறிவிப்பு  :–


“சிராஜுல் ஹக் (ரலி ) அவர்கள் அறிவிக்கின்றார்கள்  ஒருமுறை வாக்களிக்கப்பட்ட மஸிஹ் (அலை ) அவர்கள்  கூறினார்கள் :


இறைவன் என்னிடம்  இவ்வாறு தெரிவித்தான் அதாவது இந்த உலகத்தில் மிகப்பெரிய எழுச்சி ஒன்று உருவாகும் அது முதல் எழுச்சியாக இருக்கும். அரசர்களுக்கு அரசர்கள் படையெடுப்பார்கள் அப்போது இந்த பூமியே நிரம்பும் அளவுக்கு ரத்த ஆறு ஓடும். அந்த அந்த அரசர்களின் குடிமக்களும் தங்களுக்கிடையே உள்ள அச்சத்தினால் போராடுவார்கள். அப்பொழுது உலகளாவிய அளவில் மிகப்பெரிய அழிவு ஏற்படும். இந்த அணைத்து நிகழ்வுக்கும் மையப்புள்ளியாக *சிரியா* தோன்றும் இதுவேவாக்களிக்கப்பட்ட *மகன் தோன்றும் காலம் ஆகும்.* 


இறைவன் இந்த நிகழ்ச்சிகளை வாக்களிக்கப்பட்ட வர் வருகையுடன் சம்பந்த படுத்தியுள்ளான். இதற்குப் பிறகு என்னுடைய இந்த இயக்கம் உலகத்தில் பரவத் தொடங்கும் இன்னும் கூறுவதென்றால் அரசர்களும் இதன் உறுப்பினர் ஆவார்கள். அப்பொழுது நிச்சயமாக நீங்கள் *வாக்களிக்கப்பட்ட வரை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்* 
[Tadhkiratul-Mahdi, part 2, new ed., p. 274], Cited from Tadhkirah, pp.1065-66, 2009 edition).

  
 இந்த முன்னறிவிப்பை அஹ்மதிகள்  இரண்டாவது கலீஃபதுல் மஸீஹ்  ஹஜ்ரத்  மிர்சா  பசுரூதீன் மஹ்மூத்  அகமது(ra) அவர்கள் மட்டுமே என்று கூறுகின்றார்கள் ஆனால்  ஒருசில இறை அறிவிப்புக்கள் *ஒன்றுக்கு மேற்பட்ட முறை நிறைவேறுகின்றன என்பதை அவர்கள் மறந்து விட்டனர்*  ஹஜ்ரத்  மிர்சா  பசுரூதீன் மஹ்மூத்  அஹமத் (ra) அவர்கள் (1889-1965)  அவர்கள் தன்னை ஹஜரத் அஹ்மது (AS) அவர்களின் முன்னறிவித்த  முஸ்லிஹ் மவூது    என்றும் வாதம் செய்துள்ளார்கள் மேலும் இவர் தன் வாதத்தை அதிகாரப்பூர்வமாக 


 1944  வருடம் பிப்ரவரி மாதம் இருபதாம் தேதி நடந்த கூட்டத்தில் அறிவித்தார்கள். அந்தச் சொற்பொழிவில் அவர்கள் கூறுகின்றார்கள்: 

நான் இவ்வாறாக வாதம் செய்யவில்லை ,நான் ஒருவனே வாக்களிக்கப்பட்ட மகன் என்றும்எனக்கு *பிறகு கியாமத் நாள் வரை எவருமே வர மாட்டார்* என்றும், மாறாக வாக்களிக்கப்பட்ட  வாக்களிக்க￰￰பட்ட  மஸீஹ் (as)முன்னறிவிப்பின் படி மேலும் வாக்களிக்கப்பட்டவர்கள் வருவார்கள் அவர்களில் சிலர் நூற்றாண்டுகளுக்குப் பின் தோன்றுவார்கள். நான் உண்மையாக கூறுகின்றேன், எனக்கு இறைவன் இவ்வாறு அறிவித்தான் அதாவது இரண்டாவது முறை இந்த உலகத்தை சீர்திருத்த மீண்டும் என்னை அனுப்புவேன் என்று அந்த நேரத்தில் இறைவனுக்கு இணை வைப்பது பரவியிருக்கும். இதன் அர்த்தம் என்னவென்றால் என்னைப் போன்று ஞானம் மற்றும் ஆற்றல் பொதிந்து என்னை பின்பற்றுகின்ற ஒருவருக்கு   இந்த ஆத்மா வழங்கப்படும் என்பதாகும். எனவே வாக்களிக்க பட்டவர்கள் பிறகு அவர்கள் அவர்களோட காலகட்டத்தில் தோன்றுவார்கள் இது இறைவனு டைய வாக்குறுதியாகும் ஆகும் (Ref: Ahmadiyyat, the Renaissance of Islam by Sir Zafrullah Khanp.293-294)

நிச்சயமாக  உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்; உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?* (அல்குர்ஆன் : 41:53) பொதுவாக ஒரு சில அஹ்மதி  நண்பர்கள் இவ்வாறு கேட்கின்றார்கள்அதாவது இறைபுறத்திலிருந்து  நமது சமுதாயத்தின் வரக்கூடியவர்கள் பற்றி அஹ்மதியா  கலிபாக்கள் கூறியுள்ளார்களா என்று?
இதற்கான நமது பதில்ஆம்கூறியுள்ளார்கள்என்பதாகும்.

ஹஜ்ரத்  மிர்சா  பசுரூதீன் மஹ்மூத்  அகமது(ra) (1889-1965) அவர்கள் ஒரு அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தின் கலீஃபா மட்டுமல்ல மாறாக அவர்கள் தன்னை ஹஜரத் அகமது(அலை ) முன்னறிவித்த  முஸ்லி மவூது என்றும் வாதம் செய்து ள்ளார்கள் மேலும் இவர் தன் வாதத்தை அதிகாரப்பூர்வமாக 1944  வருடம் பிப்ரவரி மாதம் இருபதாம்(20.02.1944) தேதி நடந்த கூட்டத்தில் அறிவித்தார்கள். இது சம்பந்தமாக இறைவனால் *இந்நூற்றாண்டின்*  மஸீஹ்யாக அனுப்பப்பட்ட ஹஜ்ரத் முனீர் அஹ்மத்  அசிம்(அலை) கூறுகின்றார்கள்:-


நான் உங்கள் முன்னே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸலம் அவர்களின் ஆன்மீக மகனாகவும் மற்றும் வாக்களிக்கப்பட்ட மஹதி (அலை ) அவர்களின் ஆன்மீக மகனாகவும் வந்துள்ளேன். என்னை இறைவன் முஸ்லி மவுதே* என்று பிப்ரவரி 2004ஆம் ஆண்டு அழைத்தான். மேலும் அவன் என்னை படிப்படியாக உயர்த்திக் கௌரவப்படுத்தினான் அதாவது முதலில் என்னை ஹமரம்  முனீராவிலிருந்து காஜா நூருதீன், அமீனுல்  முஃமீ நூன், முஹையதீன், கலீஃதுல்லாஹ் மற்றும் அவனது நபியாகவும் ரஸூலாகவும்  உயர்த்தினான். இம் மதிப்பை  நான் எவரிடமும் சண்டையிட்டு பெற்ற தில்லை மாறாக  அந்த ஏக இறைவனே இந்த எளியவன் மீது கருணையாக பொழிந்தான்,  மேலும் இதை அனைத்தையும் ஒரு அடிப்படை குறிக்கோளுக்காக அளித்துள்ளான்,  அதாவது அவனது தூது செய்தியைக்  கூறுவதற்காகவும்* உலக மக்கள் அனைவரையும் *சிலைகளை விட்டு ஓரிறை கொள்கைக்குதிரும்புவதற்காக  இதை அவன் எனக்கு  அளித்தான். கடந்த *12* ஆண்டுகளில்    இறைவன் என்னை பசீர் என்றும் நதீ(d)ர் மற்றும் முபசிர் என்றும் பலமுறை அழைத்துள்ளான்.


எனது நோக்கம் உங்களை எச்சரிப்பது மட்டுமே உங்கள் *மனங்களை மாற்றும்  சக்தி எனக்கில்லை,*  அது இறைவனிடம் மட்டுமேயுள்ளது, மேலும்  நான் மிக பெரிய அறிவாளி இல்லை,  மாறாக நான் நபி  ஸல்லாஹு அலைஹிவஸல்லம்  அவர்களால்  சுரா ஜுமுஆவில் உருவகமாக கூறப்பட்ட  அவரது இரண்டாவது வருகையாகயுள்ளேன். நான் அசாதாரணமக கல்வியோ அல்லது பெரிய  பட்டமோ பெறவில்லை, ஆனால் அந்த ஏக இறைவனே என் வழிநடத்துபவனும் என் ஆசானுமாவான், அவனே இந்த எளியவனை *நபியாக* *தேர்தெடுத்து அறிவிக்குமாறு கூறினான்.* எனக்கு எந்த மனிதனை பார்த்தும்  அச்சமில்லை,என் இறைவன் என்னை வழிநடத்தும் போது நான் யாரை  பார்த்து அஞ்சவேண்டும்.


– ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் (அலை ) அவர்கள் 

                                                                  உங்கள் அனைவருக்கும் முஸ்லிஹ் மவூது  தின வாழ்த்துக்கள்