Jamaat Ul Sahih Al Islam Tamilnadu

நேர்வழி பெறுபவர் எவர்?

ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை ) அவர்கள் போதிக்கின்றார்கள்:-

அல்லாஹ்வின்‌ பிரதிநிதியாகிய நான்  கூறியதை அவர்‌ ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால்‌ என்னையும்‌ என்மீது நேர்மையான முறையில்‌ நம்பிக்கை கொண்ட மக்களையும்‌ அல்லாஹ்‌ பாதுகாத்தான்‌. இன்று வரையில்‌ அப்பாதுகாப்பு தொடர்கிறது. இன்ஷா அல்லாஹ்‌! வரும்‌ காலங்களிலும்‌ அவன்‌ தனது அருட்கொடைகளை நம்மீது பொழிவான்‌. இன்ஷா அல்லாஹ்‌, இஸ்லாத்தின் என்றென்றும் மகத்துவம்‌ நிலைநிற்கும்‌. மேலும் நம்‌ வழியாக- *ஜமாத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம்‌* வழியாக அதனை அவன்‌ நிலை நாட்டுவான். இன்ஷா அல்லாஹ்‌


 ஹஸ்ரத்‌ மஸீஹ்‌ மவூது ‌ (அலை) அவர்கள்‌ தனது ஒரு கட்டுரையில் விவரித்திருப்பதை போன்று! அதவாது 

ஹஸ்ரத்‌ அஹ்மது (அலை) அவர்கள்‌ கூறுகின்றார்‌ :-


.“பலதரப்பட்ட மத நிறுவுனர்களாகிய மதிப்புமிக்க நபர்களுக்க எதிராக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தும்‌ செயலானது மிக இழிவானதும் ‌தீயதானதும்‌ ஆகும்‌. இறைவன்‌ தனது எண்ணற்ற ஞானத்தால்‌, தனது பிரத்யோகமான விருப்பத்தால்‌ மக்களுக்கு நேர்வழியினை காட்டுவதற்கு *இமாம்கள் மற்றும்‌ சீர்திருத்தவாதிகளை நியமிக்கின்றான்‌.* அதன்‌ விளைவாக அந்த *ஆன்மீக ஒளி* பரிணமிக்கும், இன்னும் ‌ அவர்களின்‌ ஆன்மாக்கள்‌ காரணமாக உலகம்‌ அருளுக்குரியதாக மாறிவிடுகிறது. அதுமட்டுமின்றி அவர்கள்‌ வாயிலாக இறைவனின்‌ ஏகத்துவமும்‌, *இறைவணக்கமும்‌ உலகெங்கும்‌ ஒளிர்கிறது.* அவர்களின்‌ ஆற்றல்‌ வாய்ந்த போதனைகள்‌ காரணமாக *சிலைவணக்கம்‌* , இறைவனுக்கு இணை வைத்தல்‌ போன்றவற்றின்‌ வேர்‌ அறுந்துவிடுகிறது. *சிலைவணக்கம்‌* , இறைவனுக்கு இணைவைத்தல்‌ போன்றவை எல்லாவகையான தீமைகளுக்கும் தாயாக இருக்கிறது. இந்த போதனைகள்‌ மூலமாக இவ்வாறான தீமைகள்‌ (சிலை வணக்கம்‌) உலகின்‌ பல பகுதிகளிலிருந்தும் நீங்கி விடுகிறது. வரண்டு போன மரம்‌ புத்துயிரை பெறுவதைப்‌ போன்று அவர்கள்‌ ஏக இறை வழிப்பாட்டின்‌ நினைவை பூமியில்‌ அழைத்துவருகின்றனர்‌. விழுந்து போன ஏக இறை வழிப்பாடு என்னும்‌ கட்டிடத்தை அவர்கள்‌ மேலும்‌ திடமான அஸ்திவாரத்தால்‌ அமைக்கின்றனர்‌. அவன்‌ மிக்க மகிழ்ச்சியுடன்‌ அவர்களுக்கு பாதுகாப்பை அளிக்கின்றான்‌. மிக சிறந்த முறையில்‌ அவர்களுக்கு ஆதரவை வழங்குகின்றான்‌. இலட்சகணக்கான மக்கள்‌ அவர்களுக்கு எதிராக எழுந்துநின்றால்‌ கூட அவர்கள்‌ *அஞ்சமாட்டார்கள்‌* . அவர்களின்‌ *அப்பணியில்‌உறுதியுடன்‌ நிலைத்திருப்பார்கள்‌* . எல்லா விதமான அபாயங்களிலிருந்தும்‌ *இறைவன்‌ அவர்களை பாதுகாப்பான்‌. பகைவர்களின்‌ திட்டங்களை அவன்‌ தோற்கடிப்பான்‌.* இறுதியில்‌ அவர்கள்‌ உண்மையினை இப்பூமியில்‌ நிலை நாட்டுவார்கள்‌.. இத்தகைய *இறைப்பிரதிநிதிகள்‌ மீது சாபவார்த்தையினை கூறுவது இறையச்சம் இல்லாதவர்களின் செயலாகும்‌.”* (P.110:  பராஹீனே அஹ்மதிய்யா Part  I  and  II,  UK:  இஸ்லாம்  International Publications  Ltd  2012)

சிந்திக்கும்‌ மக்களுக்கு இவற்றில்‌ படிப்பினை உள்ளது**  எவர்‌ இதிலிருந்து பயன் பெறுவார்‌உண்மையை தேடும் மற்றும்‌ நல்லறிவுவைப் பயன்படுத்துகின்றவர்கள்‌ இதிலிருந்து பலன்‌ பெறுவார்கள்‌. அவர்களுக்கு சிலவேளை உயர்ந்த *கல்வித்தகுதி இல்லாமல்‌ இருக்கலாம்‌* . *எழுதுவதற்கும்‌* *படிப்பதற்க்கும்‌ தெரியாதவர்களாக இருக்கலாம்‌* . ஆனால்‌ அவர்கள்‌, தங்களது *மனதை சுத்தம்‌ செய்து வைத்திருப்பார்கள்‌* . உண்மையினை ஏற்றுக்கொள்வதற்கும்‌ அங்கீகரித்துக்‌ கொள்வதற்குமான *ஆற்றலை அல்லாஹ்‌ அவர்களுக்கு அளித்திருப்பான்‌. அல்லாஹ்வின்‌ அனுமதியின்றி, எவருக்கும்‌ நம்பிக்கை கொள்ள இயலாது* . அல்லாஹ்‌ நாடுகின்றவர்களை அவன்‌ *நோ்வழியில்‌* செலுத்துகின்றான்‌.


                                                                                                          இன்ஷாஅல்லாஹ் ஆமீன்