Author: admin

  • உம்மத்தே முஹம்மதியாவில் மஸீஹ்மார்கள் ஒருவர் அல்ல

    உம்மத்தே முஹம்மதியாவில் மஸீஹ்மார்கள் ஒருவர் அல்ல!!!!

    அல்ஹம்துலில்லாஹ்..இந்த நூற்றாண்டில் நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய மிக இன்றியமையாத ஒரு ஆன்மீக கேள்வியாகும். ஏன்னென்றால், நிஸாமிகளின் இந்த கொள்கையை, இந்த காலத்தின் இமாம் ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபத்துல்லாஹ்(அலை) அவர்கள் இந்த நிலையை மிகத்தெளிவாக இறுதி நபி கொள்கையின் *மற்றொரு* வடிவம் என்று கூறுகின்றார்கள். எனவே எந்த நோக்கத்திற்காக நாம் அஹமதியத்தை ஏற்றுகொண்டோமோ இந்த கொள்கையின் மீதும், மேலும் திருக்குர்ஆன் எந்த கொள்கையை வழிகேட்டு கொள்கை என்று கூறுகின்றதோ அந்த நிலையை பற்றி இந்த கேள்வி நமக்கு உணர்துவதால், இதன் பதிலை ஒரு உண்மையை தேடும் ஒவ்வொரு சகோதரர்களும் தவறாமல் முழுமையாக படித்து சிந்திக்கவேண்டிய இன்றியமையாத நிலை நமக்கு உள்ளது.(https://sahih-al-islam.blogspot.com/2018/03/khalifatullah-performs-tawaf-in-kaaba.html)

    மஸீஹ் ஒருவர் அவர் தோன்றிவிட்டார் என்ற நம்பிக்கை ஹசரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் நம்பிக்கையாக இல்லை!!! மாறாக இந்த நம்பிக்கையை அன்னாருக்கு பிறகு தோன்றிய கலீபதுல் ரசூல்மார்களின் காலத்தில் இன்னும் குறிப்பாக கூறினால் மூன்றாவது கலீபதுல் மஸீஹ் அவர்களின் காலத்தில் தோன்றியது. (ஆதாரம் ஆங்கில புத்தகம் Khilafat and mujaddidiyyat பக்கம்  37)

    மேலும் நிசாமிகளால் இன்றளவும் இத்தகைய கொள்கையை இந்த நபிமார்கள் அல்லாத கலீஃபாக்களை தீர்ப்புநாள் வரை கொண்டு செல்வதற்காக ஹஸ்ரத் மஸீஹ் மஊத் (அலை) அவர்களின் வருகைக்கு பிறகு இந்த கதவை அடைக்க *முயல்கின்றனர்.* இவர்களின் முரண்பட்ட கொள்கை இப்போது எவ்வாறு உள்ளது என்றால், 

    ஒரு சாரார் மஸீஹ் இனி வரமாட்டார். ஆனால் நபி வராலம். என்றும் மற்றும் சிலரோ இந்த கடைசி 1000ம் வருடத்திற்க்கு யாரும் வரமாட்டர்கள் ஏன்னென்றால் நம்முடைய ஆதமின் காலம் 7000 வருடம் கடைசியாக தோன்றிய மஸீஹ் தோன்றிவிட்டதால் இனி நபிமார்கள் அடுத்த ஆதாமின் அதாவது மற்றும்மொரு 7000 வருட *சூழற்ச்சியின்* போது வருவார்கள் என்றும் முற்றிலும் ஒற்றுக்கொன்று முரண்பட்ட நிலைப்பாட்டில் உள்ளனர்.ஆனால் திரு குர்ஆன் இத்தகைய கூற்றுக்களை முற்றிலும் மறுக்கின்றது. சகோதரர்களே!!! அல்லாஹ் திருமறையில் மஸீஹ்மார்களின் அதாவது ஹசரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் நிழல்களின் வருகையை பற்றி குறிப்பிடும்போது இவ்வாறு கூறுகிறான்.

    *“வ ஆகரீன மின்ஹும் லம்மா யல்ஹக்கூ பிஹிம்”* “மேலும் இதுவரை, அவர்களுடன் சேராத மற்றவர்களுக்கிடையிலும் (அவரை எழுப்புவான்)”. (அல் ஜுமுஆ 62:4)

    இந்த திருமறை வசனம் பற்றி நபி பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வாறு நமக்கு விளக்குகின்றார்கள். 

    அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :-நாங்கள் (ஒரு சமயம்) நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுக்கு ‘அல்ஜுமுஆ’ எனும் (62 வது) அத்தியாயத்தில் ‘இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதரை அவன் அனுப்பியுள்ளான்)’ எனும் (3 வது வசனம் அருளப்பெற்றது. அப்போது, ‘அந்த (ஏனைய) மக்கள் யார்? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்டேன். நான் மூன்று முறை கேட்டும் அவர்கள் (எனக்கு) பதிலளிக் கவில்லை. எங்களிடையே *சல்மான்-அல்-ஃபார்ஸி*(ரலி) இருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் சல்மான் ஃபார்ஸி (ரலி)அவர்கள் மீது தம் கரத்தை வைத்தார்கள். பிறகு, கிருத்திகை (ஸுரய்யா) நட்சத்திரக் குழுமத்தின் அருகில் இறைநம்பிக்கை இருந்தாலும் ‘சில மனிதர்கள்’ அல்லது ‘இவர்களில் ஒருவர்’ அதனை அடைந்தே தீருவார்’ என்று கூறினார்கள்.

    அபுல் ஃகைஸ் சாலிம்(ரஹ்) அறிவித்தார் அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், ‘இவர்களில் சில மனிதர்கள் இதனை அடைந்தே தீருவர்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது. ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 65. திருக்குர்ஆன் விளக்கவுரை ஹதீஸ் எண் 4897 மற்றும் 4898

    மேற்கண்ட ஹதீஸின் படி,  இறுதி காலத்தில் தோன்றும் ஈசா மஸீஹ் பற்றியும் அவர்கள் கடந்த நூற்றாண்டில் பஞ்சாபில் தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களை அன்னாரின் வஹீ வாதத்தின் அடிப்படையில் அஹ்மதிகளாகிய நாம் ஏற்றுள்ளோம்,

    அன்னார் (அலை) அவர்கள் இந்த வசனத்தை பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள்

    (மேலும் இதுவரை அவர்களுடன் சேராத மற்றவர்களுக்கிடையிலும் (அவரை எழுப்புவான்) என்ற (62:3)

    திருக்குர்ஆன் வசனத்தின்படி பிரதிபிம்பமான முறையில் நான் அதே காத்தமுல் அன்பியாவாக இருக்கிறேன். என்பதை நான் பலமுறையும் கூறியுள்ளேன். மேலும் இன்றிலிருந்து 20 ஆண்டுகளுக்கு முன் நான் வெளியிட்ட பராஹீனே அஹ்மதிய்யா என்ற நூலில் என் பெயரை இறைவன் முஹம்மது என்றும் அஹ்மது என்றும் கூறி, எனது வருகையை ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களின் வருகை என்றே கூறியுள்ளான்.

    ஆனால் *காத்தமுல் அன்பியா முஹம்மது முஸ்தபா (ஸல்)* அவர்களின் நபிமொழியின் அடிப்படையில் அவர்கள் பலர் என்பதும் காத்தமுள் குலஃபா ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவ்வாறு தோன்றுவார்கள் அன்னாரின் பிம்பங்கள் என்பதும் இன்னும் விளக்கமாக தோன்றக்கூடியவர்கள் ஒருவரல்ல பலர் என்பதும் அவர்கள் அனைவரும் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் பிரதி பிம்பங்களாக இருப்பார்கள் என்பதும் தெளிவாகின்றது.

    ஆனால் மஸீஹ் மார்கள் ஒருவர்தான் என்ற கொள்கையை நிலைநாட்ட நிஜாமிகள் இந்த நபிமொழியில் உள்ள பலர் என்பது ஹசரத் மஸீஹ் (அலை) அவர்களை பின்தொடரும் கலீபதுல் மஸீஹ்கள் தான் என்ற அடிப்படை ஆதாரம் இல்லாத ஒருநிலைப்பாட்டை முன்வைக்கின்றனர். இதற்காக அவர்கள் *தோன்றக்கூடியவர்கள்* சல்மான் பார்சி (ரலி) அவர்களின் பௌதிக சந்ததியாக மட்டுமே இருப்பார்கள் என்ற இஸ்லாத்திற்க்கு முற்றிலும் ஒரு மாறுபட்ட கருத்தை முன்வைக்கின்றனர்.

    ஆனால் சந்ததிகளை பற்றி திருகுர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடும் போது;

    *நிச்சயமாக  உமது பகைவனே ஆண் சந்ததியற்றவன்.* ( திருக்குர்ஆன் 108: 4 )

    திருக்குர்ஆனின் கருத்துப்படி இறை அறிவிப்பைப்(இறைவஹீயை) பெறும் கூட்டத்தினரே ஆன்மீக சந்ததிகளாவர். அப்படிப்பட்ட ஆன்மீக சந்ததியினரை முஹம்மது நபி (ஸல்) அவர்களாலேயே பெறமுடியும்; அவர்களின் எதிரிகளால் பெற *இயலாது*, என்பது தெளிவாகின்றது.

    மேலும் அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் கூறும்போது, 

    மேலும் இப்ராஹீம் அவருடைய இறைவன் சில கட்டளைகளைக் கொண்டு சோதித்து, அவற்றை அவர் நிறைவேற்றிய நேரத்தையும் (எண்ணிப் பாருங்கள்). நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக்குவேன்  என்று அவன் கூறினான். என் சந்ததிகளிலிருந்தும்  என்று (இப்ராஹீம்) கேட்டார். (அதற்கு அல்லாஹ் ஆம்! எனினும்) என் வாக்குறுதி அநீதியிழைப்பவர்களைச் சேராது என்று கூறினான். ( திருக்குர்ஆன் 2: 125 )

    இங்கும் அல்லாஹ் இறை செய்தியை ஏற்றுக்கொள்பவர்களே சந்ததியினர் என்று மிகத்தெளிவாக கூறிப்பிடுகின்றான்.

    மேலும் இது தொடர்பாக கிலாஃபதே முஹம்மதிய்யாவின் *13* வது கலீஃபா ஹசரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) இவ்வாறு நம்மை எச்சரிக்கின்றார்கள்.

    (வ ஆஹரீன மின்ஹும்)(மேலும் இதுவரை அவர்களுடன் சேராத)

    என்ற இந்த (62:4)வசனத்தில் வாக்களிக்கப்பட்டவரின் தோழர்களை தமது சஹாபாக்களாக ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏன் கூறினார்கள்? மேலும் பிரதிபிம்பமாகத் தோன்றுதல் என்ற கருத்தை மறுப்பதனால் இவ்வசனம் பொய்ப்படுத்தப்படுகிறது.

    தோன்றக்கூடியவர்கள் பிரதிபிம்பங்களான ஆன்மீக சந்ததிகள் என்பதை மிகவும் அழுத்தமாக இன்னும் அவ்வாறு இல்லை என்றால் இந்த வசனமே பொய்யாகிவிடும் (நஊதுபில்லாஹ்) என்று நம்மை எச்சரிக்கின்றார்கள்

    மேலும் இந்த இறைவசனத்தை பௌதீகமாக பொருள் கொள்பவர்களை பார்த்து அன்னார் இவ்வாறு கூறுகின்றார்கள்:

    பௌதீகமான பொருள் கொள்ளும் மக்கள் வாக்களிக்கப்பட்டவர் ஹஸன் (ரலி) அவர்களின் சந்ததியில் தோன்றுவாரென்றும் ஹுஸைன் (ரலி) அவர்களின் சந்ததியில் தோன்றுவார் என்றும், சிலர் அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹுமா) அவர்களின் சந்ததியில் தோன்றுவார் என்றும் கூறுகின்றனர். ஆனால் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்சொன்ன முன்னறிவிப்பைப் பற்றி கொண்டிருந்த கருத்து வாக்களிக்கப்பட்டவர் தங்கள் பிள்ளைகளைப் போல் தங்கள் வாரிசாகவே திகழ்வார் என்பதேயாகும். அதாவது அவர்களின் பெயர்களின் வாரிசாக, அவர்களின் குண இயல்புகளின் வாரிசாக, அவர்களின் ஞானத்தின் வாரிசாக, அவர்களின் ஆத்மீக தன்மையின் வாரிசாக வாக்களிக்கப்பட்டவர் திகழ்வார் என்பதேயாகும். எனவே ஒவ்வொரு வகையிலும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரதிபிம்பத்தை வாக்களிக்கப்பட்டவர் தன்னுள் காட்டுவார்; அவர் சுயமாக இக்குண இயல்புகளைக் காட்டுவதில்லை. மாறாக எல்லாவற்றையும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புறமிருந்தே பெறுவார். தாம் அவர்களிலே ஃபனாவாகி (மாய்ந்து, அர்ப்பணமாகி) அவர்களின் முகத்தையே பிரதிபலிப்பவராக திகழ்வார். எனவே அவர் நிழலாக ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களின் பெயரைப் பெறுவதைப் போன்று, அன்னாரின் பண்புகளை பெறுவதைப் போன்று, அன்னாரின் ஞானத்தைப் பெறுவதைப் போன்று அவருடைய நபிப்பட்டத்தையும் பெறுவார்.

    சகோதரர்களே! இந்த இடத்தை படித்து ஆழ்ந்து சிந்தியுங்கள். தோன்றக்கூடிய பிம்பமானவர் ஒரு நபியாக இருப்பார் என்பது தெளிவாகிறது. *ஏனென்றால்* எந்த ஒரு பொருளின் நிழல் அந்த பொருளாகவே உள்ளது. ஒரு மனிதன் நிழல் மனிதனாக *இருப்பது போல்* ஒரு பறவையின் நிழல் பறவையாக இருக்கிறது. அதே போலவே ஒரு நபியின் நிழல் ஒரு நபியாக இருக்குமே அன்றி நபிமார்கள் அல்லாத *கலீஃபதுல் மஸீஹாக *மட்டும்* *எவ்வாறு இருக்க முடியும்?*  *சகோதரர்களே!* சற்று சிந்தியுங்கள்!!! ஹஸ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்களின் நிழல் அபூபக்கர் (ரலி) அவர்களா? அல்லது மஸீஹ் மஹதியான ஹசரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களா?

    மேலும் அன்னார் (அலை) மஸீஹ்காக நபி (ஸல்) அவர்களின் பிம்பங்களாக தோன்றக்கூடியவர்களின் குலம், கோத்திரம் என்று கிறித்தவர்களை போல் கேட்பவர்களுக்கு அழகிய முறையில் தனது நிலையை பற்றி விளக்கியுள்ளார்கள்.

    அன்னார் (அலை) கூறுகின்றார்கள்:-

    *இன்னா அஃதய்னாகல் கவ்ஸர்* நிச்சயமாக நாம் உமக்கு மிகுதியான நன்மையினை வழங்கியுள்ளோம். (108:2)

    என்ற வசனத்திலும் பிரதிபிம்பமான ஒருவரைப் பற்றி வாக்களிக்கப்பட்டிருக்கிறது. அவரது காலத்தில் “கவ்ஸர்” என்ற மிகுதியான நன்மைகள் வெளியாகும் எனக்கூறப்பட்டிருக்கிறது. அதாவது ஆத்மீக அருள்களின் நீருற்றுகள் வெளிப்படும். மேலும் அதன் மூலம் உலகில் இஸ்லாத்தை உண்மையாக ஏற்றுக்கொள்பவர்கள் அதிகமாகி விடுவர். இந்த வசனத்திலும் உலகியல் ரீதியான (வெளிப்படையான) சந்ததிகளின் தேவை அற்பமாகக் கருதப்பட்டு பிரதிபிம்பமான சந்ததியைப் பற்றி முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது.

    நான் இஸ்ராயீல் சந்ததியைச் சேர்ந்தவனாகவும் ஹஸ்ரத் ஃபாத்திமா (ரலி) அவர்களின் சந்ததியைச் சேர்ந்தவனாகவும். இருக்கக்கூடிய பாக்கியத்தை இறைவன் எனக்கு வழங்கிய போதிலும், இவ்விரு குடும்பங்களின் இரத்தங்கள் என் நரம்புகளில் ஓடுகின்ற சிறப்பை நான் அடைந்த போதிலும், *நான் ஆத்மீக உறவையே முதன்மையாகக் கருதுகிறேன்.* எனது பிரதிபிம்பமான தன்மையே இந்த ஆத்மீக உறவாகும்.

    எனவே தோன்றக்கூடிய பிம்பமானவர்கள் ஒருவரல்ல பலர் என்பதும் அவர்கள் இறைவஹீயை பெற்று வாதம் செய்யும் ஆன்மீக சந்ததிகளான கவ்ஸர்”கள் நபிமார்கள் அதாவது மஸீஹ்மார்கள் என்பதும் தெளிவாகின்றது.

    இவ்வாறு பிம்பமானவர்கள் அதாவது மஸீஹ் மார்கள் ஒருவர் அல்ல என்பதற்கு ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் போதனைகளில் இருந்தும் பல்வேறு சான்றுகள் உள்ளது. 

    வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:-

    முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு முறையல்ல; ஆயிரம் முறை உலகில் பிரதிபிம்பமாகத் தோன்றுவதும், பிரதிபிம்பமான முறையில் வேறு பல முழுமை பெற்ற தன்மைகளுடன் தமது நுபுவ்வத்தை வெளிப்படுத்துவதும் சாத்தியமேயாகும்.

    மேலும் அன்னார் கூறுகின்றார்கள்:-

    நிழலான /பின்பமான மஸிஹ் மார்களாகப் பலர் வரலாம் – இதுவும் எனது தனிப்பட்ட கருத்தில்லை. பெருமதிப்புக்குரிய நபிமார்களின் பரப்பரியத்தின் சாரம் இதுவே ஆகும். கியாமத் நாள் வரை  தஜ்ஜால்கள் வரமுடியும். இவ்வாறு  30 தஜ்ஜால்கள் உலகில் தோன்றக்கூடும் “லீ குல்லி தஜ்ஜாலி ஈஸா ” என்ற நபி மொழிக்கு ஏற்ப குறைந்தது 30 *மஸிஹ்மார்கள்* வருவார்கள். பிற மஸீஹ்மார்கள் பின்வரும் காலத்தில் தோன்றுவார்கள். இவை அனைத்தும் நிச்சயம் சாத்தியமே. மேலும் அந்த வாக்களிக்கப்பட்ட மஸீஹ் வாதம் செய்பவன் நானே. ஆனால் நான் ஒருவனே மஸீஹ் என்றும் நானே முதலாவது மற்றும் கடைசி வாக்களிக்கப்பட்ட மஸீஹ் என்றும் வாதம் செய்யவில்லை. என் பார்வையில் எனக்கு பிறகு 10000 க்கும் மேற்பட்ட வாக்களிக்கப்பட்ட மஸீஹ்மார்கள் வருவார்கள், நான் இந்த காலத்திற்கு மட்டுமே மஸீஹ் ஆக உள்ளேன்.(Isaalaye Auhaam,
    p.197)

    அதாவது பல மஹ்திகள் (இதற்கு) முன்னர் வந்திருக்கலாம் என்றும் ஒரு வேளை எதிர்காலத்திலும் அது போல வருவார்கள் என்றும் இனிமேலும் இமாம் முஹம்மது என்ற பெயரைக் கொண்ட எவராவது கூடத் தோன்றுவதற்கான சாத்தியமுள்ளது என்பதையும் நாம் ஒப்புக் கொள்கிறோம்.( ரூஹானி கஸாயின் தொகுதி 3  பக்கம் 379)

    எதிர்காலத்திலும் எண்ணற்ற மஸீஹ்கள் வருவது சாத்தியமே. பத்தாயிரத்திற்கும் அதிகமான மஸீஹ்கள் வருவதற்கும் அவர்களுள் எவரேனும் ஒருவர் டமாஸ்கஸில் இறங்குவற்கும் சாத்தியம் உள்ளது. .( Isaalaye Auhaam ,ரூஹானி கஸாயின் தொகுதி 3  பக்கம் 251)

    இன்னும் அன்னார் தன்னை போன்ற “மஸீஹ்லே மஸீஹ்” பற்றியும் குறிப்பிட்டு கூறுகின்றார்கள். 

    “அநேகமாக வேறு சில மஸுஹ்  மவூதும் இருக்கலாம் என்பதை என்னால் மறுக்கவும் முடியாது. மேலும் நான் அதனை மறுக்கவும் மாட்டேன்”.( (Majmooa Ishteharat, vol. 1, p. 207)

    “அதாவது எனக்கும் கூடுதலாக மற்ற சில மஸுஹ் போன்றவர்(களும்) வரக்கூடும் என்பதையும் நான் மறுக்கவில்லை” . (Majmooa
    Ishteharat, vol. 1, p. 208)

    மேற்கண்ட ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) கூற்றுக்கள் மஸீஹ் ஒருவர் அல்ல, பலர் என்று தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் போது இக்கால அஹ்மதிகள் இந்த கூற்றுக்களுக்கு என்ன மதிப்பளீத்தார்கள் என்பதற்கு அவர்கள் இதனை தன் முதுகிற்கு பின்னால் தூக்கி எறிந்து விட்டார்கள் என்பதே கசப்பான உண்மையாகும்.

    இன்னும் இது தொடர்பாக இந்த நூற்றாண்டில் இறைபுரத்தில்லிருந்து அருளாக தோன்றிய இக்காலத்தின் மஸீஹ் கிலாஃபதே முஹம்மதியாவின் *14* வது கலீஃபா ஹசரத் முனீர் அஹ்மத் (அலை) அவர்கள் இவ்வாறு வாதம் செய்கின்றார்கள்;

    வாக்களிக்கப்பட்ட மஸீஹான, ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் இஸ்லாத்தின் அழகை வெளிக்காட்டுவதற்காகவும், அல்லாஹ், மற்றும் நபி பெருமானார் (ஸல்) அவர்களின் மீது அன்னாருக்கு இருந்த அற்புதமான உறவைக் குறித்து எடுத்துக் காட்டுவதற்காகவும் வந்தார்கள். அதாவது, நபி பெருமானார் (ஸல்) அவர்களைப் பின்பற்றாதிருக்கும் பட்சத்தில், அன்னாரின்  நபித்துவ வாதம் ஏற்கத்தகுந்ததாக இருக்காது. அதாவது, எந்தவொரு நபியும் திருக்குர்ஆனின் சட்டத்தை மாற்றி அமைப்பதற்கோ, மற்றொரு ஷரியத்தின் இறை வேதத்தை நடைமுறைப் படுத்துவதற்கோ தோன்ற இயலாது. அன்றியும் எந்தவொரு நபியும், மாநபி பெருமானார் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களைப் போன்ற சிறப்புடனும், கம்பீரத் தோற்றத்துடனும், பரிபூரணத் தன்மையுடனும் இனி வரப்போவதில்லை. எனினும், அல்லாஹ், மற்றும்  நபி பெருமானார் (ஸல்) அவர்களின் அன்பிற்காக,  தங்களை முழுமையாக அர்ப்பணிக்கின்ற இது போன்ற  நபிமார்கள் வருவார்கள் என்பது ஒரு மறுக்க இயலாத  உண்மையாகும். அவ்வாறு வரும் இந்த நபிமார்கள், மனிதர்களிலும் நபிமார்களிலும் எல்லாம் சிறந்தவரான  நபி பெருமானார் (ஸல்) அவர்களுடைய முழுமையான பிரதிபலிப்பாக(நிழல்களாக) வருவார்கள். இவ்வாறு வரும் இச்சிறிய முஹம்மதுகள்,  இறுதிக் காலத்தில் பரவும்  இருளை அகற்றுகின்ற   ஒளி விளக்குகளாக இருப்பார்கள். மேலும், எல்லா மார்க்கங்களைச் சேர்ந்த மக்களையும், அதாவது  முஸ்லிம்கள் உட்பட அனைவரையும்  இஸ்லாம், மற்றும் அவர்கள் பிறந்த உண்மையான மார்க்கத்தின் பக்கம் மீண்டும் திரும்ப செய்வார்கள். 

    நிச்சயமாக, வாக்களிக்கப்பட்ட மஸீஹான, மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள், “
    Ek-Ghalati-Ka-Izala” (ஒரு தவறான எண்ணம் அகற்றப்பட்டது) என்ற தனது புத்தகத்தில் கூறியுள்ளதாவது:

    “சுருக்கமாக, “காத்தமுன்னபிய்யீன்” என்ற சொல்லிற்கு, ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நுபுவ்வத்தின் மீது இருக்கின்ற அந்த ஏக இறைவனின் முத்திரையாகும் இந்த முத்திரை ஒருபோதும் உடைந்துபோக சாத்தியமே இல்லை ஆயினும் நமது கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் ஒருமுறை அல்ல ஆயிரம் முறை உலகில் பிரதிபிம்பமாக தோன்றுவதும். பிரதிபிம்பமான முறையில் வேறு பல முழுமை பெற்ற தன்மைகளுடன் தமது நுபுவ்வத்தை வெளிப்படுத்துவதும் சாத்தியமேயாகும். இந்த பிரதிபிம்ப நிலை இறைவன் புறத்திலிருந்து நியமிக்கப்பட்ட ஒரு பதவியை ஆகும். 

    இதை பற்றி இறைவன் திருமறையில் கூறும்போது:

                 “வ ஆஹரீ ன மின்ஹும் லம்மா யல்ஹக்கு பிஹிம்”

    “மேலும் இதுவரை, அவர்களுடன் சேராத மற்றவர்களுக்கிடையிலும் (அவரை எழுப்புவான்)”. (அல் ஜுமுஆ 62:4)

    பிரதிபிம்பமாக தோன்றுபவர்கள் குறித்து நபிமார்களுக்கு எந்தவிதமான குறையும் ஏற்படுவதில்லை எனினும் நபிமார்களின் தோற்றமாகவும் அவர்களின் உருவமாகவே திகழ்வார்கள். ஆனால் இவர்களை தவிர வேறு யாரும் வருவதால் (சுதந்திரமாக) அவர்களுக்கு நிச்சயமாக அவமானம் உண்டாகும்.

    மேலும் அல்லாஹ்,  எல்லா நாடுகளுக்கும் முன் சென்ற காலங்களிலும்  நபிமார்களையும், தூதர்களையும், மஸீஹ்மார்களையும், சீர்திருத்தவாதிகளையும் அனுப்பியுள்ளான். இவ்வாறு இருக்க தற்போது மட்டும்  இறைவன்,  இவ்வுலகில் வாழும்  புதிய தலைமுறை மக்களுக்காக,  இனி  நபிமார்கள், மற்றும் சீர்திருத்தவாதிகள் யாரையும்   அனுப்பமாட்டான் என்று கூறுவதும் , அல்லாஹ் பேசுவதையே நிறுத்திவிட்டான் என்று கூறுவதும்  உங்களுக்கு விவேகமுள்ள செயலாக இருக்கின்றதா? சற்று சிந்தியுங்கள். எனது அருமையானவர்களே! அதாவது, அவர்களை இறைவனிடமிருந்து வந்த  ஒரு எச்சாரிக்கையாளரோ,  அல்லாஹ்வின் ஒரு தூதரோ வரவில்லை என்றால், அவர்களின் தவறான வழிகளின் காரணமாக, அவர்களை குற்றம் சுமத்த எவ்வாறு முடியும்?  நிச்சயமாக, அல்லாஹ் தனது படைப்பினங்களிடையே ஒருபோதும் அநியாயமாக நடந்து கொள்வதில்லை. இந்த பூமியில், ஒரு மனிதர் கூட இல்லாத அந்த நாள் வருகின்ற வரையிலும், அல்லாஹ்வின் நபிமார்கள் தொடர்ந்து வந்துக்கொண்டே தான் இருப்பார்கள். அதாவது, மக்களை அவர்களின் செயல்களின் காரணமாக எச்சரிக்கை செய்வதற்காகவும், இஸ்லாத்தின் (அல்லாஹ்வின் பக்கம் முழுமையாக கீழ்படிதல்) பக்கம் மீண்டும்  அவர்களைக்  கொண்டு வருவதற்காகவும் தொடர்ந்து வந்து கொண்டேதான் இருப்பார்கள். எங்கெல்லாம் மக்களும், நாடுகளும் இருக்கின்றதோ, அங்கெல்லாம்  மக்களை எச்சரிக்கை செய்ய  எச்சரிக்கையாளர்கள் வருவார்கள். அன்றியும், அவர்கள் தங்களை சீர்திருத்தம் செய்யவேண்டும் என்ற காரணத்தினால், அல்லாஹ்வின் நேசம், மற்றும் கருணைக்கான நற்செய்தியை வழங்குவதற்காகவும், தற்காலிக தங்குமிடமான இப்பூமியில் யாரும் உயிருடன் இல்லாதிருக்கின்ற வரையிலும்,  அல்லாஹ்வுடைய  நாட்டத்தை  இப்பூமியில் நிறைவேற்றுவதற்காகவும் அவர்கள்  வருவார்கள்.

    அல்லாஹ், தனது நேசத்திற்குரிய, மிகவும் பரிபூரண அடியாரும்,  போற்றதக்க மனிதருமான, காத்தமுன் நபீயீன் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களை வாழ்க்கையின் வழிமுறையான இஸ்லாத்துடனும்,  முழுமையான  மார்க்கத்துடனும்  இவ்வுலகிற்கு  அனுப்பி அருள்புரிந்துள்ளான். இதன் மூலம்  இவ்வுலகம்,  அன்னாரது இருப்பிற்கு ஏற்றார் போன்று  தங்களது இருப்பை வடிவமைப்பதற்கும், அன்னாரை அச்சில் வார்த்தார் போன்று நடப்பதற்கும், அன்னாரது  பிரதிபலிப்பாகவும் (புரூஸாக),  நிழலாகவும் (ஜில்லியாகவும்) நடப்பதற்கும்,  ஒரு முழுமையான  முன்மாதிரியை  பெற்றுள்ளது என்பதே ஒரு பெரும் அடையாளமாகும். அன்றியும், நபி பெருமானார் (ஸல்) அவர்களின் பிரதிபிம்பமாக பலர் வருவதன் மூலம், இஸ்லாத்தின் மகிமை பிரதிபலிக்கப்படுகின்றது. எனினும் இவ்வுலகிற்கு வருவதற்கு முன்பே,  அல்லாஹ்,  அவர்களில் யாரை இஸ்லாத்தின் சீர்திருத்தவாதிகளாகவும், அல்லாஹ்வுடைய நபிமார்களாகவும் நியமித்து  தூய்மைப்படுத்தியுள்ளானோ , நிச்சயமாக  அவர்களே  உண்மையான நற்பேறு பெற்றவர் ஆவார்கள். இவ்வாறான நபிமார்களே, உலக நாடுகளிலுள்ள மக்களிடையே இஸ்லாம், மற்றும் அதன் உண்மையின் ஒளிவிளக்கை ஏந்தி வருபவர்களாக இருப்பார்கள். இதுவே, நிச்சயமாக பழைய நாடுகளுக்கும், தற்போதைய நாடுகளுக்கும், வருங்கால நாடுகளுக்கும் இடையே உள்ள மிக முக்கியமான வித்தியாசமாகும். கடந்தகாலங்களில் உள்ள நாடுகளும் இவ்வாறான  நபிமார்களையே பெற்றுள்ளது. இப்படிப்பட்டவர்களே, மனிதகுலத்தின் சிறப்பான பிறப்பாக உள்ள நபி பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்தையும், அன்னாரது சிறப்புக்களையும் முன்னறிவிக்க வந்தவர்கள். அப்படியிருக்க, தற்போதைய நாடுகளைச் சேர்ந்த நமக்கு மத்தியிலும், வருங்கால நாடுகளுக்கு மத்தியிலும் நபிமார்கள் தோன்றும் போதெல்லாம், நாம்  அந்த  முழுமையான மாமனிதரைப் பரிசுத்தப்படுத்துவதற்கும், மற்றவர்கள் அவரை  அவமானப்படுத்தும் போதெல்லாம்,  அவரது கண்ணியத்தை மீண்டும் அவருக்காக ஏற்படுத்தி தருவதற்கும்  நாம் முயற்சி செய்யவேண்டும். அல்லாஹ்வின் கடுங்கோபம் அவர்களை சூழ்ந்துக் கொள்ளும்போது, அவமானப்படுத்துபவர்களும், அவர்களது அவமானங்களும்  அவர்களுக்கு எந்த பலனும் அளிக்காது. ஏனெனில், என்ன நிகழ்ந்தாலும், அல்லாஹ் தனது நபிமார்களின் கண்ணியத்தை எப்போதும் பாதுகாப்பவனாகவும், இரட்சிப்பவனாகவும் இருக்கின்றான். அன்றியும், வாக்களிக்கப்பட்ட மஸீஹான, ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள், “

    Ek-Ghalati-Ka-Izala” (ஒரு தவறான எண்ணம் அகற்றப்பட்டது) என்ற தனது புத்தகத்தில் இன்னும் கூறியுள்ளதாவது:

    “அதாவது இறுதி நாள் வரை நபித்துவத்தின் முத்திரை ஹஜ்ரத் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தோற்றமாகவே   விளங்குகின்ற,  அவர்களின் பிரதிபிம்பமாகவே  இருக்கின்ற வரை  தவிர வேறு எவராலும் நபிமார்களை போன்று இறைவனிடமிருந்து தெளிவான எந்த மறைவான ஞானத்தை பெற முடியாது, அந்த பிரதிபிம்பமானவர்  ஹஜ்ரத் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உருவமாகவே இருப்பதால் அத்தகையவரே இதை பெற முடியும்,  இதன் படி முற்காலத்திலிருந்தே முஹம்மதின் பிரதிபிம்பமாக வாக்களிக்கப்பட்டவன்  நான் இருக்கிறேன். எனவே பிரதிபிம்பமான முறையில் எனக்கு நுபுவத் அளிக்கப்படுகின்றது. தற்போது முழு உலகமும் முத்திரை இடப்பட்ட  இந்த நுபுவ்வத்தின் முன் நிற்க எவருக்கும் சக்தியில்லை  .முஹம்மதின் முழுமையான தன்மை கொண்ட முஹம்மதின் பிரதிபிம்பமானவர்  பிற்காலத்தில்  தோன்றுவார் என்பது முன்னரே விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர் தோன்றி விட்டார் இப்பொழுது இந்த வாசல் வழியாக இல்லாமல் வேறு எந்த வழியிலும் நுபுவ்வத்தின் ஊற்றிலிருந்து நுபுவ்வத்தின் தண்ணீரை அருந்த முடியாது.

    மேலும்,  உண்மையில்  வாக்களிக்கப்பட்ட மஸீஹான, ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களே,  காத்தமுன் நபீயீன் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களின் அத்தகைய பிரதிபலிப்பாகவும் (புரூஸாக),  நிழலாகவும் (ஜில்லியாகவும்) தனது காலத்தில்   தோன்றியுள்ளார்கள். மேலும், நிச்சயமாக அல்லாஹ் அன்னாருடைய ஜமாத்தை அருளுக்குரிய ஜமாஅத்தாக விருப்புகின்றான் எனவே அவன் இந்த அருளுக்குரிய ஜமாத்திலிருந்து இஸ்லாத்தின முக்கியத்துவமான முஹம்மதுகளையும் குலாம் அஹ்மத்துகளையும் எழுப்புவதாக வாக்குறுதியளித்துள்ளான்.. இவர்களே,  அல்லாஹ்வின் இந்த அருளுக்குரிய அடியார்களின் கண்ணியத்தையும், தூதர்களின் கண்ணியத்தையும் உயிருடன் வைத்திருக்கக்கூடியவர்கள்.  இவ்வாறான மனிதர்களே, இம்மையாயினும், மறுமையாயினும், இரட்சிப்பிற்கான வாசலை  திறக்க வந்த திறவுகோலாகவும் பிரதிபலிப்பார்கள். இது எவ்வாறு எற்படுகின்றது என்றால்  அவர்களுக்கு அல்லாஹ்வின் மீது இருக்கும் மறுக்கயியலாத அன்பின் காரணமாகவும், அல்லாஹ்வின் நபிமார்களுக்கு இடையே பகிர்ந்து கொள்ளப்படும் நெருக்கமான பந்தத்தின் காரணமாகவும் ஆகும். நிச்சயமாக, வாக்களிக்கப்பட்ட ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களுக்கு அல்லாஹ்வின் மீதும், அவனது நேசத்திற்குரிய தூதரான,  மனிதர்களிலும், நபிமார்களிலும் சிறந்தவரான  ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களின் மீதும் இருக்கும் அன்பு உண்மையில் எல்லையற்றதாகும். 

    அல்லாஹ்,  பிற்காலத்திற்கான வழிதவறிய நாடுகளுக்கு வழிக்காட்டுவதற்காக,  இஸ்லாத்தை   உள்ளத்தில்  பாதுகாக்கக்கூடிய தனது இறையச்சமுள்ள  நபிமார்களைக் கொண்டு மனிதகுலத்திற்கு அருள்புரிவானாக ஆமீன், ஸும்மா ஆமீன். ஆதாரம்: http://www.jamaat-ul-sahih-al-islam.com/jusai2016/fseng_25mar16.pdf

    மேலும் அன்னார் கூறும்போது ஹசரத் மஸீஹ் மவூது (அலை) அவர்கள் இஸ்லாத்தின் தோன்றிய கடைசி மஸீஹ்ஹல்ல மாறாக அன்னார் நபி (ஸல்) அவர்களின் முன்னறிவித்த அந்த வாக்களிக்கப்பட்ட மஸீஹ்ஹில் முதன்மை யானவர் ஹஸ்ரத் மிர்சா குலாம் காதியானி (அலை) அவர்கள் இதற்கு முன்னால் உள்ளவர்கள் வாக்களிக்கப்பட்டவர்களாக அதாவது அவர்களை பற்றி எந்த ஒரு முன்னறிவிப்பும் ஹதீதில் இருக்காது இதன் அர்த்தம் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் இறுதியானவர்கள் அல்ல மாறாக அன்னார் முஹம்மதிய மஸீஹ் மார்களின் வருகையின் கதவை திறப்பதற்காக வந்துள்ளார்கள் என்று அல்-கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள் (ஆதாரம்: http://sahih-al-islam.blogspot.com/2013/03/the-elixir-of-truth-in-divine-prophecies.html)

    இதையே மஸீஹ் அலை அவர்கள் தன்னை பற்றி கூறும்போது

    “நான் இந்த விதையை என் கையால் விதைப்பவராக வந்துள்ளேன் என்று நமக்கு போதித்துள்ளார்கள்” (ஆதாரம்
    :Tadhira-tus-Shahadatain, pp. 64-65) இங்கே கவனிக்கத்தக்கது என்னவென்றால் அவர்கள் தம்மைப் பற்றி ‘கடைசி ஃகலீஃபா மஸீஹே மவூத்’ என்று கூறியதன் பொருள் அவர்கள் ஃகாத்தமுல் ஃகுலஃபா(ஃ ஃகலீஃபாக்களில் தலை சிறந்தவர்) என்ற பதவியினாலும், மஸீஹின் வாசலைத் திறப்பதற்காக வருகை தந்ததாலுமே அவ்வாறு கூறியுள்ளார்கள்.அவ்வாறு இல்லை என்றால் ‘தனக்குப் பிறகும் கூட ஃகலீஃபாக்கள் ‘கியாமத் நாள் வரை தொடர்ந்து வந்து கொண்டிருப்பார்கள்’

    பெருமானார் ஸல் அவர்களின் முன்னறிவிப்பு படி அன்னாருக்கு மஸீஹிக்கும் இடையில் நபி இல்லை மஸீஹ் (ஒரு நபியுல்லாஹ்) மற்றும் அல்லாஹ்வின் கலிபா என்பதை நாம் அறிந்ததே[min ba‘di]. (Al-Mu’jamAl-Ausat, by Hafiz  Tibrani)

    எனவே மிகத்தெளிவாக மஸீஹ் நபி ஸல் அவர்களின் கிலாபாத்தில் அதாவது கிலாபதே முஹ்மதிய்யாவின் இறுதி கலீபா ஆவார் ஆனால் அவர் ஒருவர் அல்ல அதாவது இனி தோன்றக்கூடியவர்கள் மஸீஹ்காகவும் நபியாகவும் இருப்பார்கள் என்பதே உண்மை இது அனைத்தும் ஒரு சங்கிலி தொடர்போல் உள்ளது இதில் இருந்து மஸீஹ் ஒருவர் என்று கூறினால் அது திருக்குரான் போதனைக்கு மாற்றமான இறுதிநபி கொள்கையாகும்

    இதற்கு முன்னர் யூஸுஃப் தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்தார். ஆனால் அவர் உங்களிடம் கொண்டு வந்தது குறித்து நீங்கள் ஐயப்பாட்டிலேயே இருந்தீர்கள். அவர் மரண மடைந்த போது, அவருக்குப் பின்னர் எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒருபோதும் அனுப்ப மாட்டான் என்று நீங்கள் கூறினீர்கள். இவ்வாறே அல்லாஹ், வரம்பு மீறுபவர்களாகவும், ஐயம் கொள்பவர்களாகவும் இருப்பவர்களை வழி தவறியவர்கள் என்று (முடிவு எடுத்துக்) கொள்கிறான்.(திருக்குர்ஆன் 40: 35 )

    எனவே பலர் அல்ல ஒருவர் என்பது கடைசி நபி கொள்கையின் மறு வடிவமே ஆகும்.ஹஜ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது சமூகம் எல்லா சமூகங்களை விட சிறந்ததாகும் ஆனால் ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்களது உம்மத்தில் அன்னாரின் நிழலாக பலர் தோன்றி இருக்க கைருல் உம்மத்தான இந்த முஹம்மதிய்ய உம்மத்தில் ஒரே ஒரு மஸீஹ் தான் கியாமத் வரை என்றால் இது மூஸா (அலை) அவர்களது உம்மத்தை விட எந்த வகையில் சிறந்த சமூகம் என்பதற்கு இக்கொள்கையை கொண்டவர்கள் விளக்குவதற்கு கடமைப்பட்டுள்ளார்கள்.

    முஸ்லிம்கள் நபி (ஸல்) இறுதியானவர் என்றும் வானத்திலிருந்து ஈஷா (அலை) வானத்திலிருந்து இறங்குவர் ஆனால் அவர் நபியாக இருக்கமாட்டார் என்று கூறுவதை போல் இப்போது நிஜாமிகள் மஸீஹ் இறுதியானவர் இனி வரக்கூடியவர்கள் நபிமார்கள் அல்லாத கலீபதுல் ரசூல்மார்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனபதே நிதர்சனமான உண்மை!!!

    சிந்திக்கும் மக்களுக்கு நிச்சயமாக இதுஒரு பெரும் எச்சரிக்கையாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை

    உங்களுக்கும் எங்களுக்கும் இந்த உண்மையை அறிந்துகொள்ளும் வாய்ப்பை அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் வழங்குவானாக! ஆமீன்.


  • இறைவனின் மாபெரும் அத்தாட்சி

    இறைவனின் மாபெரும் அத்தாட்சி

    ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம்(அலை) அவர்கள் தன்னுடைய வருகைக்கான இறைவனின் மாபெரும் அத்தாட்சிகளில் ஒன்றாக தொடச்சியாக தோன்றும் இரத்த சந்திரன் மற்றும் சூப்பர் மூன் பற்றி அன்னார், ஒவ்வொரு நூற்றாண்டில் மட்டுமே தோன்ற கூடிய இந்த அறிய நிகழ்வு இந்த நூற்றாண்டில் இமாம் ஆக தோன்றியுள்ள தனது வருகைக்கான இறைஅடையாளமாகும் என்று கூறியுள்ளார்கள்.இந்த அத்தாட்சிகளை பற்றி அன்னார் கூறும்போதுஆகவே, பார்வையும் மழுங்கி;சந்திரனின் ஒளியும் மங்கி;சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்போது.{ திருகுரான் 75:7-10}

    வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன்.கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வரும் முன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும் (பைபிள்பழைய ஏற்பாடு JOEL 2:30-31)

    கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வரும் முன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும் (பைபிள் புதிய ஏற்பாடு ACTS 2:20)

    திருக்குர்ஆன்,பைபிள் மற்றும் மற்ற இறைவேதங் களும் இந்த நிகழ்வுகள் பூமியில் இறைவனால் தேர்தெடுக்கப்பட்ட தூதர் உங்களிடையே உள்ளார் என்பதை முன்னறி விக்கின்றது. நான் எனது நாட்டின் இந்துக்கள் மற்றும் தமிழர்களிடம் எனது வருகையை பற்றி உரையாற்றும் போது,மேலும் முக்கியமாக அவர்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியின் போதும் இந்த நிகழ்வுகள் தோன்றியது, இன்னும் சில நிகழ்வுகள் ஒவ்வொரு நூற்றாண்டிலும் மட்டுமே நிகழக்கூடியவை. மேலும் 01.09.2016 அன்று மிக நீண்ட சூரிய கிரகணம் ஏற்பட்டது. மேலும் இதற்கு பிறகு இந்த நிகழ்வு 2200 ஆண்டிற்கு பிறகே நிகழும்.

    :இந்த நிகழ்வுகள் 2014 -2015 ல் சரியாக யூதர்களின் புனித நாட்களில் தோன்றியுள்ளது.மேலும் இந்த அத்தாட்சிகள் இறை வஹீயை பெறக்கூடிய ஒரு தூதர், ஒரு மார்க்க சீர்திருத்தவாதி, ஒரு கலீஃபதுல்லாஹ் (தோன்றி) உள்ளார் என்பதை பூமிக்கு உணர்த்து கின்றது, இன்னும் இவர்களின் வருகையை பற்றி நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு நூற்றாண்டும் ஒரு மார்க்க சீர்திருத்தவாதி தோன்றி இந்த மார்க்கத்திற்கு புத்துயிர் வழங்குவார் என்று முன்னறிவித்துள்ளார் கள். நபி (ஸல்) அவர்களின் உம்மத்தில் தோன்றும் இவர்கள் புதிய ஷரீயத்தை கொண்டு வருவதில்லை; மாறாக இந்த உண்மை மார்க்கம் எப்போதெல்லாம் மார்க்க சீர்கேட்டையும் , திருக்குர் ஆனிற்கு மாற்றமான கொள்கையையும் கொண்டு பாதிக்கப்படும் போது இறைவனின் அருளாக இவர்கள் தோன்றி உங் களுக்கு எச்சரிக்கை செய்கின்றனர். இது இறுதிநாள் வரைத் தொடரும். இவ்வாறு தோன்றும் இவர்களால் இறைவன் தனது திருக்குர்ஆனின் போதனைகளை பாதுகாக்கின்றான் ([ஆதாரம் HQ, 15: 10, Five Volume Commentary on the Holy Qur’an(tafseer-e-Kabir), Volume III, pp. 1265-66].

    மேலும் அவர்கள் அக்காலத்தின் இமாம்களாகவும், நபி (ஸல்) அவர்களது ஷரீஅத்துடைய கிலாஃபத்தின் கலீபாக்களாகவும் தோன்றுகின்றனர். நபி (ஸல்) அவர்களின் உம்மத்தில், முதல் நூற்றாண்டின் மார்க்க சீர்திருத்தவாதி உமர் பின் அப்துல் அஸீஸ்(ரஹ்) அன்னாரிலிருந்து தொடங்கி பதினான்காம் நூற்றாண்டின் மார்க்க சீர்திருத்தவாதியும், வாக்களி க்கப்பட்ட மஹ்தியும் மஸுஹூமான ஹஜ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது(அலை) அவர்கள் தோன்றியுள்ளனர் .அன்னார் நபி (ஸல்) அவர்களின் கிலாஃபத்தைப் பற்றி கூறும்போது; பதிமூன்றாம் நூற்றாண்டின் மார்க்க சீர்திருத்தவாதி ஸயீத் அஹமத் பரேல்வி (ரஹ்) அவர்கள் முஹம்மதிய்ய கிலாஃபத்தின் 12 வது கலீஃபா என்றும், அன்னார் (தன்னை) இஸ்லாத்தின் 13 வது  கலீஃபா என்றும் மிகத் தெளிவாக கூறியுள்ளார்கள்(ஆதாரம்: ரூஹானி கசாயின்உருது, தொகுதி17 பக்கம் 193)

     

    இதை விளக்குவதென்றால் ஹஜ்ரத் மஸீஹ் (அலை) அவர்களின் காலத்தில் ஒருவர் உங்களுக்கு பிறகு மார்க்க சீர்திருத்தவாதி வருவார்களா? என்று கேட்டார் அதற்கு வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை )அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள் :-“

    எனக்கு பிறகு ஒரு  மார்க்க சீர்திருத்தவாதி வருவதில் என்ன தவறு இருக்கின்றது? மூஸா (அலை) அவர்களின் கிலாஃபத், ஈஸா(அலை)அவர்களுடன் முடிந்தது; ஆனால் நபி (ஸல்) அவர்களின் கிலாஃபத், கியாமத் வரை தொடரும்; எனவே ஒன்றுக்கு பின் ஒன்றாக முஜத்தித்கள் வருவார்கள். ஒருவேளை கியாமத்து நாள் நீட்டிக்கப்பட்டாலும் அதற்கும் ஒருவர் தோன்றுவார். நாம்  ஒருபோதும் இறைநேசர்களும், புனிதர்களும் வருவதை ஏற்றுக்கொள்ளாமல் விடமுடியாது; அப்போது திடீரென்று மறுமை தோன்றும். ( Malfoozat, Volume 7, Page 119)

    மேலும், எனக்குப் பிறகு வரும் மஸீஹ், நபி (ஸல்அவர்களின் ஹதீஸை வைத்து வாதம் செய்வார்.(ஆதாரம்: உருது ரூஹானி கசாயின் , தொகுதி 3 பக்கம் 379) ,எனக்கு பிறகு வரும் மஸிஹ், நபி (ஸல்அவர்களின் ஹதீதை வைத்து வாதம் செய்வார். (ஆதாரம்: ஆதாரம் உருது ரூஹானி கசாய்ன், தொகுதி; 3 பக்கம்: 379)

    மேலும் கீழ் காணும் நபி மொழியும் என்னுடைய வருகையை உறுதி செய்கின்றது. ஹிஜ்ரி 1400ல் இருந்து 20 அல்லது 30 வருடத்தை கூட்டி கொள்ளுங்கள். அப்போது  உங்களிடையே மஹதி தோன்றுவர்….. (ஆதாரம்: Asmal Masalik Lieyyam Mahdiyy Maliki Li Kull-id Dunya Biemrillah-il Malik, Qalda bin Zayd, p. 216)

    மேலும் இந்த ஹதீஸின்அறிவிப்பாளர் அபு ஹுரைரா (ரலி ) அவர்கள் ஆவார்கள்இந்த காலத்தின் அல்லாஹ்வின் கலீஃபாவாகிய முனீர் அஹ்மத் ஆஸிம் ஆகிய நான் பகிரங்க அறிவிப்பு செய்கின்றேன்அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் சுபஹானஹுதாலா  ஒரு கூரிய வாளை போன்று என் பக்கம் இருக்கிறான். அவன் எனக்கு இவ்வாறு கூறினான்: எவர் எனக்கு எதிராக அவதூறு மற்றும் அப்பாவி மக்களை குழப்புகின் றார்களோ அவரை அவன் நிச்சயம் இழிவுபடுத்துவான்.நான் அந்த அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்து கூறுகிறேன்:அவனே என்னை இந்த நூற்றாணடின் அமீருல் முஃமின், முஹையதீன், அல் கலீஃபதுல்லாஹ்வாக எழுப்பியுள்ளான். நான் உங்கள் முன்னே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸலம் அவர்களின் ஆன்மீக புதல்வனாகவும் மற்றும் வாக்களிக் கப்பட்ட மஹதி (அலை ) அவர்களின் ஆன்மீக மகனாகவும் வந்துள்ளேன். என்னை இறைவன் முஸ்லிஹ் மவூதே என்று 20 பிப்ரவரி 2004ஆம் ஆண்டு அன்று அழைத்தான். மேலும், அவன் என்னை படிப்படியாக உயர்த்திக் கௌரவ படுத்தினான் அதாவது முதலில் என்னை *கமரம்  முனீரா என்பதிலிருந்து காஜா நூருதீன், அமீருள் முஃமினீன், முஹைய் யுத்தீன், கலீஃபதுல்லாஹ், ரஸூலல்லாஹ் மற்றும் நபியுல்லாஹ்வாக  உயர்த்தினான் இம் மதிப்பை  நான் எவரிடமும் சண்டையிட்டு பெற்றவதில்லை. மாறாக, அந்த ஏக இறைவன்  இந்த எளியவன் மீது கருணையாக பொழிந்தான். நான் இந்த உலகிற்கு ஒரு வெளிச்சமாக வந்துள்ளேன். என்னை பின்பற்றுபவர் இருளிலிருந்து விலகி அந்த வெளிச்சத்தை பெறுகின்றார்.

    எனது வாதத்திற்கு இறைவன் 2003 ம் ஆண்டில் ரமலான் மாதத்தில் சூரிய மற்றும் சந்திர கிரகணத்தை அத்தாட்சியாக்கினான், இதே போன்ற ஒரு நிகழ்வை 1894 ம் ஆண்டு எனக்கு முன் தோன்றிய மஸிஹ் வூது  (அலை ) அவர்களுக்கு அத்தாட்சியாக்கினான்.

    மேலும் நபி மொழியில்லிருந்து வரக்கூடிய மஹ்திமார்கள்  ஒருவரல்ல பலர் என்றும் நாம் அறியலாம்(ஆதாரம்:ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 65. திருகுறான் விரிவுரை :4897&4988)

    வாக்களிக்கப்பட்ட மஹ்தியும் ஆன மஸிஹ் மவுது (அலை) அவர்களும் இதை உறுதிசெய்கின்றார்கள், அன்னார் கூறும்போது:- நாங்கள் இதற்கு முன்பும் பல மஹதிகள் வந்துள்ளார்கள் என்றும்  மேலும் பல மஹதிகள் வரக்கூடும் என்றும் ஏற்றுக்கொள்கின்றோம்இன்னும் சில மஹதிகள் *இமாம் முஹம்மது* என்ற பெயரில் கூட வரலாம். (ஆதாரம் :ரூஹானி காசயின் தொகுதி 3 பக்கம் 379)

    ரமலான் மாதத்தில் தோன்றும் சூரிய சந்திர கிரகணத்தை பற்றிய ஹதீதில் இதை போன்ற ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை என்பதில்லை. மாறாக, வாதம் செய்யும் ஒருவருக்கு அத்தாட் சியாக அமைந்ததில்லை என்பதே ஆகும், ஏனென்றால், இதில்லும் தக்குன” (“lum takuna”) என்று பெண்பாலில் உள்ளது, அது ஒருமுறை யை தோன்றவேண்டும் என்றிருந்தால்லும் யக்குன” (“lum yakuna”) என்ற ஆண்பாலில் வந்திருக்கவேண்டும், இதிலிருந்து மிக தெளிவாக இந்த நிகழ்வு நடந்ததே என்பதி ல்லை. மாறாக மஸிஹ் என்று வாதம் செய் பவருக்கு அத்தாட்சியாக அமைந்ததில்லை என்பதை குறிக்கின்றது.

    உலக மக்கள் அனைவரும் குறிப்பாக முஸ்லிம்கள் உண்மையான இறை நம்பிக்கையின் சாரத்தை  மறந்துவிட்டார்கள். மேலும் இஸ்லாத்தின் உண்மையான போதனைகள் உட்பட உலக அனைத்தையும் படைத்த இறைவனையும் கூட மறந்து விட்டார்கள்

     

     

     

  • ஒரு நபி வருகையின் நோக்கம்

    ரு நபி வருகையின் நோக்கம்

    அல்ஹம்துலில்லாஹ்!!! இந்த கேள்வி பொதுவாக ஒரு நபி வருகையின் நோக்கம் சம்பந்தமாக இருப்பதால் இந்த கேள்விக்கு அழகியமுறையில் பதில் அளிக்க புனித திருகுர்ஆனில் இருந்தும் இமாம்களின் கூற்றில்லிருந்தும் இந்த நூற்றாண்டில் இறைவனின் அருளாகவும் பெருமானார் (ஸல்) அவர்களின் கிலாபத்தின் 14 வது கலீபா ஹசரத் முஹையதீன் அல் கலீபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் (அலை) அவர்களின் கூற்றுகளில்லிருந்து பார்க்கலாம், மேலும் இது சிறிது நீண்ட பதிவாக இருக்கும், ஏனென்றால் இந்த அருளுக்குரிய நூற்றாண்டில் குறைமதி கொண்ட மக்கள் இக்காலத்தில் தூதர்களின் தேவை என்ன? மேலும் அவர், குறிப்பாக முன் சென்ற தூதர்களின் பெயரை குறிப்பிட்டு இதைப்போன்று இவர் என்ன செய்தார்? இவர் சமுதாயத்திற்கு என்ன தொண்டு செய்தார்? இன்னும் என்ன புரட்சி செய்தார்? என்று அடிப்படை திருகுர்ஆன்னின் போதனைகளை விட்டுவிட்டு தங்களது மறுக்கும் மனப்பான்மையால் தங்களது மனோஇச்சைகளை பின்பற்றுகின்றனர்
     
     
     இவர்களை பார்த்து திருமறை இவ்வாறு கூறுகின்றது:-
     
    இதற்கு முன்னர் யூஸுஃப் தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்தார். ஆனால் அவர் உங்களிடம் கொண்டு வந்தது குறித்து நீங்கள் ஐயப்பாட்டிலேயே இருந்தீர்கள். அவர் மரணமடைந்த போது, அவருக்குப் பின்னர் எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒருபோதும் அனுப்ப மாட்டான் என்று நீங்கள் கூறினீர்கள். இவ்வாறே அல்லாஹ், வரம்பு மீறுபவர்களாகவும், ஐயம் கொள்பவர்களாகவும் இருப்பவர் களை வழி தவறியவர்கள் என்று (முடிவு எடுத்துக்) கொள்கிறான். ( திருக்குர்ஆன் 40: 35 )
     
     இது எவ்வாறு இருக்கிறது என்றால் மனிதனின் நிலை நபிமார்கள் தோன்றும் போது அவர்களை எதிர்ப்பதும் அவர்கள் காலம் சென்றதிற்கு பிறகு அவரை போன்று அல்லது வேறு எவரும் வரமாட்டார்கள் என்று கூறி அருளாக தோன்றக் கூடியவர்களை மறுப்பதும் முந்திய காலத்திலிருந்து தொன்று தொட்டு வரும் ஒருநடைமுறையாக உள்ளது. மேலும் நபிமார்கள் சென்ற பிறகு அவர்களுக்கு இறங்கிய வஹீயை ஒரு கதையை போல படிக்க ஆரம்பிக்கின்றனர் ஆனால் சென்ற நூற்றாண்டில் அல்லாஹ்வின் அருளாக நபி (ஸல்) அவர்களின் கிலபாத்தின் 13 வது கலீபா ஹசரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்;-
     
     
     “வஹீ” என்பது ஒரு நிரூபிக்கப்படாத முந்திய காலத்தில் நடந்த சம்பவம் போல நினைக்கின்றார்கள் இது ஒரு தவறான எண்ணமாகும் நபிமார்கள் அலைஹி வஸ்ஸலாம்  உலகிலிருந்து   வாரிசு  இல்லாமல்  சென்று விடுகின்றார்கள்  என்ற எண்ணமும் ஒருபோதும்  சரியானது  அல்ல. இப்போது  அவர்கள்  தொடர்பாக கூறப்படும்  எந்த ஒரு கருத்திற்கும்  கதையைப் படிப்பதை விட அதிகமாக  சிறிதளவு கூட நம்பகத்தன்மை  இருக்காது. ஆனால்  ஒவ்வொரு  நூற்றாண்டிலும்  தேவைகேற்ப  அவர்களின்  வாரிசுகள்  உருவாகி  கொண்டே இருப்பர். ( பரக்காத்துத் துஆ ரூஹானி கஸாயின் தொகுதி 6 பக்கம்21-24).  
     
     
    அன்னார் மிகத்தெளிவாக நபிமார்களின் தொடர் அதாவது நூற்றாண்டின் இறை வெளிப்பாட்டின் தேவையை பற்றி குறிப்பிடுகின்றார்கள். மேலும் ஒரு தூதர் வருகையின் முக்கிய நோக்கம் அவர் மூலம் குறிப்பாக அவருக்கு இறக்கும் வஹீயின் மூலம் இறைவன் தனது முகத்தை தான் நாடிய அவனது அடியானுக்கு காட்டுகின்றான்.
     
    இதையே அன்னார் (அலை) இவ்வாறு நமக்கு அழகாக புரியும் வகையில் ஒரு தூதரின் வருகையின் நோக்கத்தை பற்றி குறிப்பிடுகின்றார்கள்:-
     
    ஏகத்துவம் கற்களில் மறைந்து இருக்கின்ற அந்த நெருப்பை போன்றே வைக்கப்பட்டுள்ளது என்பதே இதில் உள்ள ரகசியம் ஆகும். தூதர், நெருப்பு மறைந் திருக்கும் கல் போன்றவர், அந்த கல்லின் மீது தனது கவனத்தை செலுத்துகின்ற அடியின் மூலமாக அந்த நெருப்பு வெளியில் கொண்டு வரப்படுகின்றது எனவே தூதர் என்ற இந்த  கல் இல்லாமல் ஏகத்துவத்தின் நெருப்பு  ஏதோ ஒரு உள்ளத்தில் உருவானது என்பது ஒருபோதும் சாத்தியமாகாது* ,ஏகத்துவத்தை தூதர்கள் மட்டுமே பூமிக்கு கொண்டு வருகின்றார்கள் அவர்கள் மூலமாகவே இது பெறப் படுகின்றது இறைவன் மறைவானவனாக இருக்கின்றான், அவன் தனது முகத்தை தூதர் மூலமாக காட்டுகினறான்.எனவே ஒரு தூதர் வருகையின் நோக்கம் இந்த உலகத்தில் உயிருள்ள ஓர் இறைவனை அவனது அடியானுக்கு காட்டுவதே ஆகும்.
     
     எல்லா நபிமார்களும் ஒரே நோக்கத்திற்காகவே வருகை   தருகின்றார்கள்!!!  இந்த உலகில் நபிமார்களது வருகையின் முக்கிய நோக்கம், அவர்களது போதனை மற்றும்   பிரச்சாரத்தின் மகத்தான நோக்கம் என்னவென்றால், மனிதகுலம் சர்வவல்லமையுள்ள இறைவனை அங்கீகரிக்க வேண்டும், என்பதும் பாவகரமான வாழ்க்கை என்று அழைக்கப்படுகின்ற நரகத்திற்கும் அழிவிற்கும் இட்டுச் செல்கின்ற  வாழ்க்கையிலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதும் ஆகும். உண்மையில், இதுவே அவர்களுக்கு முன் இருக்கின்ற மிக முக்கியமான குறிக்கோள் ஆகும்.இப்போது சர்வவல்ல மையுள்ள இறைவன் ஓர் (இறை) அமைப்பை  நிறுவி என்னை எழுப்பி உள்ளான். (இதுவே) எல்லா நபிமார்களுக்கு உரிய பொதுவான அதே நோக்கமும், நான் வருவதன் நோக்கமும் ஆகும்.அதாவது, மிகத்தெளிவாக கூறுவதென்றால், இறைவன் என்றால் என்ன என்பதை உலகுக்கு (எடுத்துக்)கூறுவது மட்டுமல்லாமல், உண்மையில்  அவர்கள் அவனைப் பார்க்க வேண்டும் என்பதும், பாவத்திலிருந்து விலகி இருப்பதற்கான வழியை (அவர்களுக்கு) காட்ட வேண்டும் என்பதும் எனது விருப்பமாகும்.( மல்யூஷத் தொகுதி 3 பக்கம் 11( ஆங்கில மொழி பெயர்ப்பு Essence of Islam Vol 4 page 108)
     
     
     அல்ஹம்துலில்லாஹ் இவ்வளவு அழகான வழிகாட்டல் இருந்தும் சில குறைமதி கொண்ட மக்கள் தங்கள் கொண்ட கொள்கையை காப்பாற்றுவதற்காக உலக காரணிகளை முன் வைத்து இந்த மேலான அருளை எதிர்க்கின்றனர். மேலும், அவர் என்ன தொண்டு செய்தார்? என்ன புத்தகம் எழுதினார்? சமூக சேவை செய்தாரா? அவரை எத்தனை பேர் பின்பற்றுகின்றார்கள்? பின்பற்றுபவர்களிடம் என்ன குறையுள்ளது? அவர் பள்ளிக்கட்டினாரா? மாற்று சமைய மக்களுக்கு சென்று கூறினாரா? இன்னும் சில அறிவிலிகள் தொலைக்காட்சி சேனலில் வந்து தினம் தோறும் அல்லாஹ்வின் மேல் சத்தியம் செய்யவேண்டும் என்று கூறுகின்றனர்.
     
     
     ஆனால் மாறாக அல்லாஹ் தனது தூதர் மூலம் அவனை வெளிப்படுத்துகின்றான், மேலும் ஹஸ்ரத் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களின் உம்மத்தில் இந்த அருளின் கதவு இன்னும் விசாலமாக திறக்கப்பட்டுள்ளது. எப்போதெல்லம் சில சாக்கு போக்குகளை உருவாக்கி இறைவனின் தொன்மையான சட்டம் தாக்கப்படுமோ அப்பொதெல்லாம் நம்பிக்கைகொண்ட மக்களில் ஒருவரை தேர்வு செய்து அவன் தனது இருப்பை அவனது வஹியின் மூலம் வெளிப்படுத்துகின்றான் , எனவே தான் நம்பிக்கை கொண்ட நிலையில் இறைவன் தனது வஹீயை வைத்து வாதம் செய்ய அவன் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. மேலும்காத்தமுன் நபிய்யீன் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு பிறகு வேதம் மற்றும் ஷரியத் முற்றுப் பெற்றுவிட்டதால் இனி அன்னாரின் நிழல்களாக தோன்றும் அருளுக்குரியவர்கள் இறைஇருப்பை பற்றிய செய்தியையே கொண்டுவருவார்கள்.  
     
     
     இதை  இறைவேதம் இவ்வாறு கூறுகின்றது
     
     நற்செய்தி உடையவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமன்றி நாம் தூதர்களை அனுப்புவதில்லை. ஆகவே, நம்பிக்கைக் கொண்டு (தம்மைச்) சீர்திருத்திக் கொள்கின்றவர்களுக்கு (வருங்காலத்தைப் பற்றி) எவ்விதப் பயமும் ஏற்படாது; அவர்கள் (சென்ற காலம் பற்றிக்) கவலைப்படவும் மாட்டார்கள். ( திருக்குர்ஆன் 6: 49)
     
     
    ஒரு தூதர் வருகையால் நம்பிக்கை கொண்டோருக்கு இறைஇருப்பை பற்றிய நற்செய்தியும் அந்த வஹீயை மறுப்பவர்களுக்கு எச்சரிக்கையாகவும் உள்ளது. இன்னும் ஹசரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் வருகையின் நோக்கம் சம்பந்தமாக இந்த கூற்று மேலும் நமக்கு உண்மைப்படுத்துகின்றது:-
     
     
     இந்த எளியவன் மீண்டும் மீண்டும் இதைத்தான் கூறுகின்றேன் அதாவது சகோதரர்களே!!! நான் எந்த புதிய மார்க்கத்தையும் புதிய போதனையையும் கொண்டு வரவில்லை இன்னும் சொல்வதென்றால் நான் உங்களிடம் இருந்து வந்துள்ள உங்களைப் போன்ற ஒரு முஸ்லிமாக இருக்கின்றேன் முஸ்லிம்களாகிய நாம்  செயல்படுவதற்கும்  வழி காட்டுவதற்கும்  திருக்குர்ஆனைத் தவிர வேறு எந்த வேதமும் இல்லை. ஜனாப் காத்தமுள் முர்ஸலீன் அஹ்மதே அரபி (ஸல்) அவர்களை தவிர நாம் பின்பற்றி நடப்பதற்கு அல்லது மற்றவர்களை பின்பற்ற வைக்கும் வேறு எந்த ஒரு வழிகாட்டியும் பின்பற்றத்தகுந்தவரல்ல. இதை நான் கூறும் நிலையில் மார்க்கப்பற்றுள்ள முஸ்லிமுக்கு இறைஅறிவிப்பின் அடிப்படை யில் உள்ள எனது வாதத்தின் மீது நம்பிக்கை கொள்வதில் அபாயம் என்ன இருக்க முடியும் எனது இந்த இல்ஹாம்களும் கஷ்ஃபுகளும்  தவறானது என்றும் எனக்கு எதுவெல்லாம் கட்டளையிடப்பட்டுள்ளதோ  அதை புரிந்து கொள்வதில் எனக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது என்று கற்பனையாக வைத்துக்கொண்டாலும், இதை ஏற்றுக் கொள்பவர்கள் மீது என்ன குற்றம் இருக்க முடியும் இது மார்க்கத்தில் ஏதாவது இடையூறு ஏற்படுத்தக் கூடிய ஏதாவது ஒரு விஷயத்தின் மீது நம்பிக்கை கொண்டு விட்டாரா?…( இஸ்லயே அவ்ஹாம் ரூஹானீ கஸாயின் தொகுதி 3 பக்கம்186-189)
     
     இன்னும் ஒரு ஈஷாவின் வருகையின் நோக்கத்தை பற்றி திருக்குர்ஆன் கூறும்போது
     
     எனக்கு முன்னுள்ளதை அதாவது தவ்ராத்தை மெய்பிக்கக் கூடியவனாகவும் ,உங்களுக்கு விலக்கப்பட்டிருந்த ஒரு சிலவற்றை உங்களுக்கு அனுமதிக் கப்பட்டதாக ஆக்குவதற்காகவும் (வந்துள்ளேன்). உங்களிடம் உங்கள் இறை வனிடமிருந்து ஓர் அடையாளத்துடன் நான் வந்துள்ளேன். எனவே அல்லாஹ்விற்கு அஞ்சி எனக்குக் கட்டுப்பட்டு நடங்கள். ( திருக்குர்ஆன் 3: 51 )
     
    இந்த வசனத்தில் விலக்கப்பட்டது என்பதன் பொருள் அதாவது அவர்களின் தீய செயல்கள் காரணமாக உங்களுக்கு தடை செய்யப்பட்டிருந்த இறைவஹீ என்முலம் மீண்டும் ஆரம்பமாகும் என்பதாகும்.(திருக்குரான் அஹ்மதிய்யா தமிழ் மொழிபெயர்ப்பு பக்கம் 139)
     
    எனவே சகோதரர்களே! ஒரு இறைத்தூதர் வருகையின் முதன்மை நோக்கம் மிகத்தெளிவாக விளங்குகின்றது,மேலும் நாம் வாழும் அருளுக்குரிய நூற்றாண்டில் இந்த காலத்தின் இறைத்தூதர் முஹையதீன் அல் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் (அலை) அவர்களும் இவ்வாறு போதிக்கின்றார்கள்
     
    ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது ஆன்மீக அருள் என்னவென்றால் அது அன்னாரை பின்பற்றும் ஒருவரால் இறைவனை நேரடியாக தொடர்பு கொள்ள முடியும் என்பதாகும், இதன் மூலமாக இறைவனை அவனது ஆன்மாவாலும், உயிராலும் அவனுடன் ஒன்றிவிடவும், இதன் மூலம் அந்த அருளாலனின் இனிமையான குரலையும் மற்றும் அவனுடைய தொடர்பினையும்வெளிப்படுத்தலாம்.இதுவே நபிமார்களை பின்பற்று வதால் கிடைக்கும் பிரத்யேகமான அருளாகும், இந்த அருளே முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கிடையே யான வித்தியாசம் ஆகும். இதுவே இஸ்லாத்தின் தனிசிறப்பாகும், இதனை முஸ்லீம்களும், அஹ்மதிகளும்மறந்துவிட்டனர், இதனையே இவர்களது
     
    கவனத்திற்கு ஜமாத்துல் சஹீஹ் அல் இஸ்லாம் கொண்டு வருகிறது.( புத்தகம் WHY CREATING JAMAAT UL SAHIH AL ISLAM? பக்கம் 17)
     
    மேலும் அன்னார் இக்காலத்தில் ஒரு இறை தூதர் வருகையின் அவசியம் பற்றி இவ்வாறு கூறுகின்றார்கள்
     
    இப்போது உள்ள இக்கட்டான ஒரு முக்கிய காலகட்டத்தில் அல்லாஹ் சுபஹானஹுதாலா ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா(ஸல்) அவர்களையும் ஹஸ்ரத் மஸீஹ் மவூது(அலை) அவர்களையும் ஏற்றுக்கொண்டுள்ள தனது உண்மையான அடியார்களுக்காக ஒரு சிறந்த ஜமாஅத்தை எழுப்பியுள்ளான், அதாவது ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாமை எழுப்பியுள்ளான். இது எப்படிப்பட்ட ஜமாஅத் என்றால் எல்லாவிதமான அநீதிகளுக்கு எதிராக உண்மை இஸ்லாத்தை பாதுகாக்கின்றது. மேலும் முஸ்லீம் அல்லாத மாற்று மதங்கள் இஸ்லாத்திற்கு எதிராக வைக்கும் அனைத்து கேள்விகளுக்கும் மிக சிறந்த முறையில் பரஸ்பரம் முழு திருப்தியாகும் வகையில் பதிலை வழங்குகின்றது, இன்னும் இந்த ஜமாஅத்தை இந்த எளியவனின் இந்தகாலத்தின் முகையூதீன் என்றும் அல்லாஹ்வின் கலீஃபா (கலீபஃத்துல்லாஹ்) மற்றும் பல்வேறு வாதத்துடன் எழுப்பியுள்ளான். இவற்றை கேட்டு கோபமும் எரிச்சலும் அடைந்த எனது எதிரிகளும் நயவஞ்சகர்களும் எல்லையை மீறி என்மீது அவதூறுகளையும் அபாண்டங்களையும் பரப்புகின்றனர், இவர்களின் அவதூறு எவ்வளவு கீழ்த்தரமாக ஆகிவிட்டது என்றால் அவர்கள் என்னை பார்த்து போதைக்கு அடிமையானவன், சூனியக்காரன் (மந்திரவாதி), குழப்பவாதி, ஒரு பொய்யன், நாய் பன்றி போன்ற எந்த பெயரையும் விட்டுவைக்கவில்லை,இன்னும் இவர்கள் என்னை காஃபீர் என்றும் போலி நபி என்றும் ஃபத்துவாவும் கொடுக்கின்றனர்
     
    அல்ஹம்துலில்லாஹ் சும்ம அல்ஹம்துலில்லாஹ் இதில் எந்த அதிசயமும் இல்லை மேலும் எனக்கு இதில் ஆச்சரியமும் இல்லை ஏனென்றால் எப்பொழுதெல்லாம் இறைபுரத்திலிருந்து ஒருவர் தோன்றும் போது  இவ்வாறே நடந்துள்ளது. சிறிது காலம் சென்றதிற்கு பிறகே இவர்களின் (இறைபுரத்தில் இருந்து வந்தவர்களின்) உண்மையான நிலையை புரிந்துகொள்ளமுடியும். அவர்கள் என்மீது கொடுக்கும் காஃபீர் ஃபத்துவாக்களையும் அவர்கள் எனக்கு எதிராக வைக்கும் பெயர்களையும் பார்த்து நான் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை ஏனென்றால் அவர்கள் எனக்கு கஷ்டம் கொடுக்கவேண்டும் என்று செய்வதெல்லாம் அவர்களின் ரூஹுவை (ஆத்மாவை) தீங்கு இழைத்து கொள்கிறார்களே அன்றி அந்த ஏக இறைவனால் தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு அதனால் எந்த குறைவும் ஏற்படப்போவதில்லை. மேலும் இவர்கள் எவ்வளவு மூர்க்கத்தனமாக என்னை எதிர்த்து என்னை துன்புறுத்தவேண்டும் எற்று முயல்கின்றார்களோ அவ்வளவு அதிகமாக என்னை கொண்டு அவனது தீனை மேலோங்க செய்கிறான். மேலும் அவன் இதன் மூலம் பெருமானார் (ஸல்), மஸீஹ் மௌவூது(அலை) மற்றும் திருகுரானின் சிறப்பையும் நிரூபித்துக்காட்டுகின்றான்.
     
    எனது அன்பிற்குரியவர்களே! நான் நிச்சயமாக அல்லாஹ்வின் கையில் உள்ள பாத்திரமே ஆவேன் இந்த எளியவனை அவன் என்ன நாடுகின்றானோ அதை என்னை கொண்டு செய்கின்றான், அல்லாஹ் எந்த ஒரு நோக்கத்திற்காக ஒருவரை தேர்வு செய்கிறானே அப்போதிலிருந்தே அவர் முழுவதும் அவனையுடையதாகின்றார், மேலும் அவர் அல்லாஹ்வின் விருப்பப்படியே செய்கின்றார். அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் அனுமதி மற்றும் வழிகாட்டல் இல்லாமல்  அவர் எதையும் செய்வதில்லை, அவர்களின் அனைத்து செயல்களும் அவன் வகுத்த எல்லைக்குட்பட்டே செய்கின்றார்கள், ஒவ்வொன்றும் குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும் ஒரு குறிப்பிட்ட வேலைக்காகவே படைக்க ப்படுகின்றது, அதுபோலவே நம்மிடையே தோன்றும் தூதர்களும் மேலும் அவர்களுக்கு தூதை கொண்டுவரும் தேவதூதர்களும் (மலக்குகள்) ஒருகுறிப்பிட்ட பணிக்காகவே எழுப்பப்படுகின்றனர்.
     
    இஸ்லாமிய மக்களாகிய நாம் ஒரு சிறந்த முஸ்லிம்களாக மாற நாம் என்ன செய்யவேண்டும் என்பதை குறிப்பாக ஒரு ஆணோ அல்லது பெண்ணோ அத்தகைய உயர்ந்த நிலையை எவ்வாறு அடைவது என்பதை பற்றி சிந்திக்கவேண்டும், இஸ்லாம் ஒரு உயிருள்ள வாழும் மார்க்கமாகும் எனவே தான் எந்த ஒரு காலத்திலும் அதன் வெற்றி முஸ்லிம்களின் கையில் மட்டுமே தான் உள்ளது.
     
    எனது அருமையானவர்களே! இந்த உலகத்தில் இந்த உண்மையை தேடும் எத்தனையோ மனிதர்களை பார்க்கலாம். அவர்கள் இந்த உண்மை மார்க்கமாகிய இஸ்லாத்தை ஏற்ற பிறகு இறைவனின் மாபெரும் அருளால் அவர்களின் ஆன்மிக மற்றும் பௌதிக வாழ்க்கையில் மிக சிறந்த மாற்றம் ஏற்பட்டு முன்னேற்றத்தின் பாதையில் செல்கின்றனர். ஆனால் இஸ்லாம் காட்டும் கொள்கை மற்றும் கருத்தின் பக்கம் நாம் பயணம் செய்வது முதலில் கஷ்டமாகவும் கடினமாகவும்  இருந்தாலும், எவர் அல்லாஹ்வையும் அவனது அனைத்து கட்டளைகளையும் பேணி  இஸ்லாத்தின் அனைத்து போதனைகளையும் கடமைகளையும் உண்மையான நம்பிக்கை கொள்கின்றோம் என்று கூறும் அனைத்து முஸ்லிம்களும் உண்மையான தியாகம், செயல் சீர்த்திருத்தம் மற்றும் உண்மையான இறைநாட்டம் இல்லாமல் முன்னேறுவது சாத்தியமானதன்று,
     
    உங்கள் அனைவரையும் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதற்காக அந்த ஏக இறைவனே எனக்கு கட்டளையிட்டு நியமித்துள்ளான், மேலும் என்னை இழிவாகவும் கீழ்த்தரமாக பெயரை வைத்தும் அழைப்பவர்கள்  அல்லது எனது செய்தியை பாரபட்சமாக பார்ப்பவர்களுக்கும் அல்லது என்மீது வெறுப்பு கொண்டவர்களுக்கும் அல்லது எனது வாதத்தை புரியாதவர்களுக்கும் என்று அனைத்து மக்களுக்கும் இன்னும் ஏன் மௌலவிகளையும் மார்க்க அறிஞர்களையும் (முப்திகள்) என்னை எதிரியாக பார்ப்பவர்களுக்காகவும் நயவஞ்சர்களுக்கும் என்று அனைவரையும் அவன் பக்கம் அழைப்பதற்காக வந்துள்ளேன், எனவே என்னை அனுப்பிய அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் சுபஹானஹுதாலாவிடம் உண்மையாகவும் உருக்க மாகவும் இறையச்சத்துடன் தூய உள்ளத்துடன் அதிக அதிகமாக துஆ செய்து யார் நேரான வழியில் உள்ளார்கள் யார் வழிதவறிவிட்டார்கள் என்பதை கேளுங்கள், ஆனால் நான் உங்களிடம் உறுதியாக கூறுகின்றேன்   எவர் இந்த எளியவனின் உண்மைத்தன்மையை ஏற்றுக்கொண்டார்களோ அல்லது என்னை அவர்களின் எதிர்காலம் என்று ஏற்று என்மீதும் எனது வாதத்தின் மீதும் நம்பிக்கை கொள் கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக நான் உறுதியளிக்கின்றேன், நீங்களே அருளுக்குரிய மக்கள் ஒருபோதும் நீங்கள் நஷ்டவாதிகள் அல்ல. இந்த உலக வாழ்க்கை ஒரு எல்லைக்குட்பட்டதும் தற்காலிகமானதாகும் ஆனால் உண்மையான வாழ்க்கையும் அதற்கான கூலியும் உண்மையான வெகுமதியும் உங்கள் உழைப்பின் உண்மையான பலன்களையும் அருட்கொடைகளையும் அந்த ஏக இறைவன் உங்களுக்கு தற்காலிக இந்த உலகத்தில் மட்டும் இல்லாமல் மறுமையிலும் வழங்குவான். அங்கு உங்களுக்கு கிடைக்கும் அருள்கள் எல்லையற்றதாகும் அங்கு எப்போதும் சாந்தியும் சமாதானமும் நிலவும் மேலும் ஒரு அடியான் அவனது இறைவனுடன் இணக்கமாக ஒரு நிரந்தரமான தொடர்பில் இருப்பான், இதுவே ஒரு உண்மையை தேடும் இறையாடினின் உண்மையான வெற்றியாகும்.
     
    இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட எந்த மதத்தையும் பின்பற்ற கூடியவர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால் நிச்சயமாக அந்த ஏக இறைவன் பல்வேறு சமயங்களில் பல்வேறு இடங்களில் பல்வேறு நபிமார்களை அனுப்பியுள்ளான்  என்பதையும் நம்பிக்கை கொண்டே ஆகவேண்டும், ஒவ்வொரு சமுதாயத்திற்கும் (நாட்டிற்கும்) ஒரு தூதர்  இல்லாமல் இல்லை என்பத்திற்கேற்ப ஆப்பிரிக்கா கண்டத்தில் இன்னும் சொல்வதென்றால் ஆப்பிரிக்கா கண்டதில்லிருந்து தொலைவில் அனைத்து பக்கத்திலும் கடலினால் சூழப்பட்ட வெறும் 13 லட்சம் மக்கள் தொகை கொண்ட மிகச்சிறிய தீவு நாடான மௌரீஷியஸ் நாட்டில் அல்லாஹ் சுபஹானஹுதாலா அவனது அருளாக அவனுடைய கலீஃபத்துல்லாஹ்வை அவனது நபியை தேர்தெடுத்துள்ளான் ஏனென்றால் இந்தியாவுக்கும் இங்கிலாந்திருக்கும் பிறகு மஸீஹ் மௌவூது(அலை) அவர்களின் ஜமாஅத் ஆரம்பித்த நாடு இந்த சிறிய தீவான  மௌரீஷியஸ் தான். இங்கு 1915 ஆம்  ஆண்டே மிஷன் தொடங்கப்பட்டுவிட்டது மேலும் மௌரீஷியஸ் நாடு பன்முக கலாச்சாரம் கொண்ட உலகின் முக்கிய மதங்களின் பல பிரதிநிதித்துவம் கொண்ட ஒரு சிறிய தீவு நாடாகும்
     
    மனித குலத்தின் ஆன்மிக முன்னேற்றம் என்பது இதைப்போன்ற உன்னதவர்களின் அடிப்படையிலே உள்ளது எனவே இறைவனால் தேர்தெடுக்கப்பட்டவர்கள் அவர்களிடையே தோன்றாமல் வெறும் (ஆன்மிக) இருளை தவிர இந்த உலகத்தில் வேறு ஒன்றும் இருக்காது.  இதைத்தான் அந்த ஏக இறைவன் அவனது திருமறையில் கூறும்போதுஎச்சரிக்கை செய்பவர் எவரும் வராத எந்தச் சமுதாயமும் இல்லை என்று விளக்குகின்றான்
     
    எனவே இப்போது நபிமார்கள் வருகைக்கான பொதிந்துள்ள இரகசியத்தை ஆராய்ந்தால் அதற்கு முக்கிய காரணமாக அந்த மக்களிடையே ஆன்மிக சீரழிவு காணப்படும் மேலும் மனித இனம் மற்றும் இறைவனின் நேரடியாக தொடர்பு துண்டிக்கப்பட்டிற்கும், இது எவ்வாறென்றால் இந்த பூமி நெடுக்காலமாக வறண்டு காய்ந்து உயிரற்ற வறட்சி காலத்திற்கு பிறகு அந்த மேகக்கூட்டங்களுக்கு இடையில் மழையாக இந்த பூமியை உயிர்ப்பித்து புத்துணர்ச்சியை மலர செய்வது போல் எப்போதும் நபிமார்கள் நம்மிடையே தோன்றுவார்கள். எனவே நம்பிக்கைக் குரியவர்களே! நம்மிடையே கடந்த காலத்தில் நபிமார்கள் வந்தது போன்று எதிர்காலத்திலும் வந்துகொண்டே இருப்பார்கள், என்பதில் திட்டமாக நம்பிக்கை கொள்ளுங்கள், அவர்களின் வருகையை தடுக்கும் அனைத்து காரண காரியங்களிலிருந்து முற்றிலும் தவிர்ந்து கொள்ளுங்கள், மேலும் இறைவஹீயின் கதவு ஒருபோதும் அடைக்கப்படுவதில்லை அது எப்போதும் திறந்தே உள்ளது, இதுவே நமது உறுதியான நம்பிக்கையாகும். இறுதிக் காலங்களில் ஈமானை மீட்டெடுக்க வாக்களிக்கப்பட்ட சீர்திருத்தவாதிகள் தேவை என்பதற்கேற்ப நாம் வாழும் இந்த காலத்தில் ஒரு நபியின் தேவையின் பக்கம் நம்மை கொண்டுசெல்கின்றது, இன்னும் நமது நம்பிக்கை நம்மிடையே தோன்று பவரை அவரின் சாட்சியத்தை வைத்து மட்டும் ஏற்றுக்கொள்வதில்லை மாறாக முந்திய நபிமார்களை ஏற்று அவர்களின் சாட்சியத்தின் மூலமுமே நாம் நம்பிக்கை கொள்கின்றோம், மக்கள் மனிதில் இழந்துபோன நம்பிக்கையை மீட்டு இறையச்சதை மீண்டும் ஏற்படுத்தவே அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் என்னை நியமித்துள்ளான்.முன்னுள்ள நபிமார்களின் மற்றும் சீர்த்திருத்த வாதிகளின் உண்மையான போதனைகளை உறுதிப்படுத்துவதற்கு ஒவ்வொரு காலத்தில் இறைவனிடம் இருந்து அவனுடைய தூதர்கள் வருவது அவசியமா கின்றது,அவ்வாறு தோன்றும் தூதர்கள் முன்சென்ற அல்லாஹ்வின் தூதர்களின் மான்பை பாதுகாப்பதுடன் அவர்களின் தெளிவான செய்தியையும் இறைவனின் தெளிவான போதனைகளையும் நமக்கு அளிக்கின்றார்கள் எனது அருமையானவர்களே! நீங்கள் ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளுங்கள், எனது வருகையின் மூலம் எனக்கு முன் சென்றவர்களை பொய்யர்கள் என்று முத்திரைகுத்திவிட்டு எனது வாதத்தை நான் வைக்கவில்லை  மாறாக உண்மையில்
     
    எனது வாதம் முன்சென்ற அனைவர்களில் வாதத்தையும்  உண்மைப் படுத்துவதுடன் இந்த உறுதியான அழகான முத்து மாலையில் மேன்மேலும்  முத்துக்கள் சேரும் என்றும் இது கியாமத்து நாள் வரை தொடரும் என்றும்  தோன்றக்கூடியவர்கள் அனைவரும் ஒன்றன்பின் ஒன்றாக ஒருவரை ஒருவர் உண்மைப்படுத்திக்கொண்டே செல்வார்கள் என்பதே ஆகும், இதுவும் இறைவெளிப்பாடுகள் (வஹீ) வைத்தும் வாதம் செய்பவர்களை அடையாளம் கண்டு கொள்ள ஒரு சிறந்த வழியாகும், மேலும் இறைவன் எனக்கு நியமித்துள்ள முக்கிய பணி அதாவது எனது வருகையின் முக்கிய நோக்கம் அடியார்கள் மறந்துபோன நிலையில் உள்ள ஆன்மிக உண்மைகளை போதித்து இறைவனுடன் அவனது அடியானின் அன்பையும் இறையச்சத்தையும் இறைபக்தியையும் மீட்டெ டுப்பதே ஆகும். இதற்க்கு எல்லாம் மேலாக அல்லாஹ்வின் ஒளியை மீட்டு அந்த ஓரிறைவனை மீண்டும் அவர்களின் இதயத்தில் நிறந்தரமாக எத்திவைத்து அனைத்து பொய்த்தெய்வங்களில்லிருந்து அதை உருவாக்கும் கருத்துக்களிலிருந்தும் முற்றிலுமாக தூய்மைபடுத்தவே ஆகும். எனவே என்னை இறைவன் இந்த ஆன்மிக அவலநிலையிலிருந்து மனிதனை மீண்டும் அந்த உண்மையான தூய இறை நெருக்கத்தின் பக்கம் எடுத்துச்செல்ல அனுப்பியுள்ளான்
     
    எத்தனையோ பேர் இறைவனை பற்றியும் ஆன்மிகத்தை பற்றியும் பேசுவதை பார்த்திருக்கின்றோம், ஆனால் உண்மையில் அவர்களின் உள்ளங்களில் பௌதீக உலக ஆசைகள் நிறைந்திருக்கும், எனவே அனைவரும் அந்த ஏக இறைவனுடைய உதவியுடனும்  அவனது வார்த்தையுடனும் மனித குலத்தை சந்தேகம் தவறான நம்பிக்கை தவறான உறுதிப்பாடுகளிலிருந்து வழிநடத்த இந்த காலத்தில் தேவையு ள்ளது என்பதில் நீங்கள் அனைவரும் என்னுடன் நிச்சயமாக உடன்படுவீர்கள் என்று நினைக்கின்றான் ,மேலும் எப்போது மார்க்கம் என்பது வெற்று பேச்சுகளாகவும் உண்மையின் நிலை கவலைக்கிடமாகவும் இன்னும் உலகின்  சிலப்பகுதியில் உண்மை ஆற்றல் இழந்து போன நிலையிலும் மற்றும் உணர்வில்லாமலும் இறந்து கிடக்கும் நிலையில் இருக்கும்போது மனிதகுலத்திற்கு ஒரு நபியின் தேவை இருப்பதை புரிந்துகொள்ளலாம் மேலும் அவ்வாறே இன்றும் தேவைப்படுகின்றார் என்பதை புரிந்துகொள்ளுங்கள்!
     
     
    மேலும் அல்லாஹ் தனது தூதர்கள் மற்றும் நபிமார்களின் மூலம் சத்தியத்தின் உண்மையை மக்களை உணர செய்து அவர்களை பாதுகாப்பானாக, உலகத்தின் தலை சிறந்த மனிதரும் உலகில் தோன்றிய நபிமார்களுக்கெல்லாம் முத்திரையாக விளங்கும் நமது பெருமானார் காத்தமுன் அன்பியா முஹம்மது முஸ்தபா (ஸல்) உம்மத்திற்கு இதை போன்ற சீர்த்திருத்தவாதிகளை எழுப்புவதன் மூலம் அன்னாரின் மதிப்பை யுகனாள் (கியாமத்து) வரை மேலோங்க செய்வானாக அல்லாஹ் தனது தூய உடன்படிக்கையை பாதுகாப்பானாக மேலும் அவர்கள் மூலம் இந்த உலக மக்கள் அனைவரும் ஒருங்கிணைத்து அந்த தூய ஓரிறைவனை வணக்கும் ஆனந்தத்தை அடைவோமாக.
     
     
    தொடர்ச்சியாக இறைவஹீயை வெளிப்பாடுகளை பற்றியும் பார்ப்போம், இறைவெளிப்பாடு என்பது இறைவனுடைய வார்தை மற்றும் அவனுடைய வழிகாட்டலும் ஆகும், மேலும் அல்லாஹ் தான் நாடும் அடியானை தேர்ந்தெடுத்து அவனுடன் உரையாடுவதன் மூலம் இறைவன் அவனை படைக்கப்பட்டதன் நோக்கத்தை வெளிப்படுத்துகின்றான் , மேலும் இந்த வெளிபாடுகளை பெறுபவர் அதன் அர்தத்தையோ அல்லது வார்த்தையையோ பெறுகின்றார் இவ்விவரண்டுமே அல்லாஹ்விடம் இருந்துதான் வருகின்றது, இறைவஹீயே மனிதனின் உண்மையான (ஆன்மிக)வாழ்வாதரமாகும், இதன்முலமாகவே அவன் வாழ்கின்றான் மேலும் இதுவே அவருடைய படைத்தவுடனுடன் ஒரு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்து கின்றது, இறைவனிடம் இருந்து வெளிபடும் இத்தகைய வார்த்தைகள் ஒரு தனித்தன்மைவாய்த்த ஆற்றலையும் வல்லமையையும் கொண்டது மேலும் இறைவனை தவிர ஒருவராலும் இதை உருவாக்கமுடியாது மேலும் அதுவே ஞானம் மற்றும் அறிவின் கருவூளம் ஆகும். இன்னும் இவை மிக மிக ஆழமான அர்த்தத்தை கொண்டுள்ளது இதை எவ்வாறு சொல்வதென்றால் ஒரு சுரங்கத்தில் ஆழமாக செல்ல செல்ல அதிக விலைமதிப்புமிக்க கற்கள் கிடைக்கின்றது என்று வைத்துக் கொண்டாலும் இறைவஹி என்பதன் அற்புதத்தின் ஆழம் இந்த சுரங்கத்துடன் கூட ஒப்பிடமுடியாது ஏனென்றால் இதன் ஆழத்தின் மகிமை அந்த சுரங்கம் அதன் எல்லையை எட்டிவிட்டாலும் அதன் ஞானத்தின் ஆழத்தை  அடையமுடியாது.
     
     
    இன்னும் இறைவஹீயை பற்றி கூறுவதென்றால், இது ஒரு கடலை போன்றது அந்த கடலின் மேற்பரப்பில் அழகிய நறுமணத்தையும் அந்த கடலின் அடிப்பகுதியில் விலையுயர்ந்த உயர்ரக முத்துக்களும் விரிக்கப்பட்டுள்ளது,எனவே எவர் அதன் மேற்பரப்பை மட்டும் அடைகிறார்களோ அவர்கள் அந்த மேற்பரப்பில் உள்ள வாசனை யை அனுபவித்து மகிழ்கின்றனர்,ஆனால் எவர் அதில் ஆழமாக மூழ்குவாரோ அவர்களுக்கு நறுமணத்தையும்  அந்த அழகிய முத்தையும் அடைகின்றார், மேலும் இறைவெளிப்பாடுகள் பல்வேறு வகைப்படும் சிலவேளைகளில் அது கட்டளை மற்றும் சட்டதிட்டங்களாகவும் சிலவேளைகளில் அது அறிவுரை போதனை களாகவும், சிலவேளைகளில் மறைவானவற்றின் அறிவாகவும்,சில வேளைகளில் உண்மையான ஆன்மிக ஞானமாகவும், சில வேளைகளில் அது அல்லாஹ் நம் மீது காட்டும் நல்லெண்ணமாகவும் மற்றும்   நமது கோரிக்கைகளின் ஒப்புதலாகவும் , சிலவேளைகளில் அவனுடைய மறுப்பு மற்றும் அதிருப்தியில் வெளிப்பாடாகவும் , சிலவேளைகளில் அவனுடைய அன்பும் அரவணைப்பாகவும்  சிலவேளைகளில் அவனுடைய கோபம் மற்றும் எச்சரிக்கையாகவும்,  சிலவேளை களில் அது அறநெறி களை போதிப்பதாகவும், சிலவேளைகளில் மறைவான தீமைகளை பற்றி அவனிடம் இருந்து கிடைக்கும் நுண்ணறிவாகவும் இருக்கிறது. சுருக்கமாக கூறுவதென்றால்  ,நமது நம்பிக்கை இதுவாகும் அதாவது இறைவன் தனது அடியார்களுடன் தான் நாடியவர்களிடம் பேசக்கூடியவன் அவ்வாறு பேசும் அவனது தொடர்பு சூழ்நிலைக்கு ஏற்றாற்ப்போலும் அதை பெறுபவர் ஆன்மிக நிலையை பொருத்தும் மாறுபடுகின்றது.
     
    எப்போது இந்த உலகத்தில் இருள் பரவத்தொடங்குமோ அப்போதில்லிருந்து மனிதன் பாவத்திலும் தீமையிலும் மூழ்கிவிடுகின்றான் ,இந்த நேரத்தில் இறைவனின் உதவி கிடைக்கவில்லை என்றால் மனிதன் ஷைத்தானின் பிடியில்லிருந்து அவர்களாகவே விடுபடுவது மிக கடினமாகிவிடுகின்றது, இந்த சமயத்தில் அல்லாஹ் அவனது கருணையாலும் கிருபையாலும் தனது அடியார்களில் அன்பு மற்றும் விசுவாசம் கொண்ட தான் நாடியவரை தானே தேர்வு செய்து அவர்க்கு இந்த உலகை வழிநடத்த பணிக்கின்றான்.
     
    எனவே ஒரு நபி தோன்றும்போது, அவரும் அவரை ஏற்றுக்கொண்ட உலகத்தின் ஒரு பிரிவை சார்ந்த மக்களும் அந்த ஓரிறைவனாகிய அல்லாஹ் சுபஹானஹுதாலாவை மட்டுமே வணங்குவார்கள் மேலும் அவனுக்கு எதையும் இணைவைக்க மாட்டார்கள், எனது அருமையானவர்ளே! ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ஒரு நபி தோன்றும் போது தான் அங்கு அநீதிக்கு பதிலாக நீதியும் கொடுமைக்கும் பதிலாக கருணையும் பிறக்கின்றது, எனவே ஒரு இறைத்தூதர் மூலமே இறைவன் அவருடைய சித்தத்தையும் நோக்கத்தையும் வெளிப்படுத்துகின்றான், எவர் அவரை விட்டு விலகுகின்றார்களோ அவர்கள் தங்களுக்கு தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள், ஆனால் எவர் இதன் பக்கமாக தனது கவனத்தை செலுத்து கின்றார்களோ அவர்கள் அந்த ஏக இறைவனின் அன்பை பெறுகின்றனர், மேலும் அவனது மேலான கிருபையாலும், கருணையாலும்  அந்த அருள்களின் கதவுகளை அவர்களுக்காக அவன் திறக்கிறான், இன்னும்  இந்த மேன்மையான அருளை அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் பெறுகின்றார்கள் , மேலும் அவர்களே இவர்களுக்கு பிறகு வரும் சந்ததியினருக்கு ஆன்மிக போதனைகளுக்கு முன்னோடியாகின்றார்கள்.
     
    பெருமானார் (ஸல்) அவர்கள் தனது ஸஹாபிகளுக்கு போதித்த இஸ்லாம் இன்று எங்கே சென்றது, இந்த உண்மையான போதனைகளை ஏற்றுக்கொள்ளாத பெயர் தாங்கிய மௌலவிகளும் , அஹ்மதியா ஜமாஅத்தின் முல்லாக்களும் ,பெயர் தாங்கிய அமீர்களும் அப்பாவி மக்களை தனது பிடியில் வைப்பதற்காக மார்க்கத்தில் உள்ள இறை போதனைகளை தங்களுக்கு ஏற்றார் வகையில் திரித்து கொள்ள சிறிதும் தயங்குவதில்லை, இதனாலேயே இறைவன் எங்களுடன் பேசுகின்றான் என்று கூறியதற்காக  நம்மை புறக்கணிப்பதில் எந்த வித தயக்கமும் அவர்களுக்கிடையே இல்லை, இன்னும் அவர்களின் நம்பிக்கை எவ்வாறு உள்ளதென்றால் இப்பொது இறைவெளிப்பாடு பெறக்கூடிய தகுதியை உடையவர் கலிபஃஅதுல் மஸீஹ் மட்டுமே என்று கூறுகின்றனர், மேலும் இது எந்த அளவிற்கு போய்விட்டது என்றால் இது தான் உண்மை என்று மார்க்க விவாதங்களிலும் கூற ஆரம்பித்துவிட்டனர், இதை எல்லாம் கேட்கும்போது இப்பொது உள்ள இஸ்லாத்தின் மீது சில சமயங்களின் நமக்கு சிறிது சந்தேகம் தோன்ற ஆரம்பிக்கின்றது, மேலும் இப்பொது உள்ள முஸ்லிம்கள் நடைமுறைகளை பார்க்கும்போது  நிச்சயமாக உண்மை இஸ்லாத்தை பிரதிபலிப்பதில்லை என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும் ஏனென்றால் இஸ்லாம் எதற்காக தோற்றிவிக்கப்பட்டதோ அதன் நோக்கத்தை இப்போது அது வெளிப்டுத்துவதில்லை.
     
     
    இந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியை நினைவு படுத்துகின்றான் அன்னார் இவ்வாறு கூறினார்கள் அதாவது:-
     
    “ஒரு காலம் வரும் அப்போது இஸ்லாத்தில் அதன் பெயரை தவிர வேறு எதுமே எஞ்சியிருக்காது”
     
    இப்போது இவர்கள் நம்பிக்கை கொண்டு பின்பற்றி வருகின்ற இவ்வகையான இஸ்லாமால் எவ்வாறு அதன் பொன்னான சமயத்தில் அது வெளிப்படுத்திய சிறந்த தாக்கத்தை போல் இன்று  ஏற்படுத்துவதில்லை, மேலும் இப்போது இவர்களால் தடம் பாதிக்கப்பட்ட இஸ்லாமாலும்,இறைவனின் இறுதிமார்கத்தின் பாதுகாவலர்கள் என்றும் மார்க்க அறிஞர்கள் என்று கூறிக்கொள்ளும் இவர்களாலும் மேலும்,  இவர்களின் மார்க்கத்தின் அரைகுறை விளக்கத்தாலும் சடங்குசம்பிரதாயங்களும்,அந்த மறைத்த பொற்காலத்தின் இஸ்லாத்தின் மேன்மையை பார்த்து கவரப்பட்ட மாற்றுமத சகோதரர்கள் இஸ்லாத்தின் ஏற்றுக்கொண்டாலும் துரதிஷ்டவசமாக அவர்களால் அந்த உண்மையான இஸ்லாத்தின் போதனையை உறுதியாக பிடிக்க முடியவில்லை
     
     மேலும் பெருமானார் (ஸல்) அவர்களின் மற்றுமொறு நபி மொழியின் பாகம் நான் உங்களை அழைத்து செல்வேன் அதாவது அன்னார் கூறும்போது
     
    “எனது உம்மத் பொழிந்துகொண்டிருக்கும் மழையை போன்றது இந்த மழையின் முந்தியது சிறந்ததா அல்லது பிந்தியது சிறந்ததா என்று எனக்கு தெரியாது”( முஸ்னத் அஹ்மத் திர்மிதீ)
     
     
    இந்த (குர்ஆனாகிய) அறிவுரையை நாமே இறக்கினோம். நிச்சயமாக நாமே இதனைப் பாதுகாப்போம் (15: 10)
     
    இந்த ஹதீதில் இருந்து மிக தெளிவாக இறைவனின் இந்த இறுதி மார்க்கம் ஆகிய இஸ்லாம் ஒவ்வொரு காலமும் அந்த காலத்திற்கு ஏற்ற எல்லையில்லா புத்துயிரை வழங்குவதற்கான நோக்கத்தை தன்னுள்ளே கொண்டுள்ளது ,மேலும் திருகுரானின் தெளிவான விளக்கத்தின் மூலம் கிடைக்கும் வாக்குறுதி படியும் இதை மேலும் பெருமானார் (ஸல்) அவர்கள் உறுதியளித்துள்ள வாக்குறுதியின் படியும் அன்னாரின் இறைபோதனைகளுக்கு பாதுகாவர்களாக வாக்களிக்கப்பட்ட சீர்த்திருத்தவாதிகள், ஷரியத் அல்லாத நபிமார்கள் மற்றும் அல்லாஹ்வின் பிரதிநிதிகள் கியாமத்து நாள் வரை வந்துகொண்டே இருப்பார்கள். மேலும் அல்லாஹ் மிக உறுதியாக அவன் இறக்கிய திருகுரானை அவனே பாதுகாக்கின்றான் இந்த உறுதிமொழியை அவன் சூரத்துல் ஹிஜிர்ரில் இவ்வாறு கூறுகின்றான்
     
    இப்போது கேள்வி என்னெவன்றால் அல்லாஹ் அவன் இறக்கிய திருகுரானை மனிதனின் உள்ளத்திலும் செயல்வடிவிலும் எவ்வாறு பாதுகாக்கின்றான் மேலும் அது வெறும் எழுத்துக்களாக “கல்வெட்டை” போல பாதுகாக்கின்றான் என்று எடுத்துக்கொள்ளமுடியுமா இப்போது ஒருவேளை இவ்வாறு தான் பாதுகாக்கின்றான் என்று இருந்தால் பிற்காலத்தில் தங்களை முஸ்லீம்கள் என்று வாதம் செய்பவர்களிடம் ஒரு நூல் இலை அளவிற்கு கூட உண்மை இஸ்லாம் அவர்களிடம் இருக்காது எனவே இங்கே கூறப்படுகின்ற பாதுகாப்பு என்பது என்ன?
     
    மேலும் பெருமானார் (ஸல்) அவர்கள் இறுதிநாட்கள்களில் தனது தோழர்களின் ஒத்த காலத்தை அடைவார்கள் என்று முன்னறிவித்துள்ளார்கள், இஸ்லாத்தின் முதலில் உதித்த ஒளிக்கதிர் மகிமையுடையது இதையே பெருமானார் (ஸல்) அந்த நபிமொழியில் மழைக்கு ஒப்பிட்டு கூறுகிறார், மேலும் இந்த அருளுக்குரிய இந்த மழை தொடர்ச்சியாக இந்த உம்மத்திற்கு அன்னாரின் காலத்திற்கு பிறகும் நீடிக்கிறது, இன்னும் கவனமாக படித்தால் உங்களிலிருந்து உங்களுக்கு பிறகு வரக்கூடியவர்கள் யார் என்று அறியலாம், மேலும் அவர்கள் உண்மையான முஸ்லிம்களாக அவர்களுக்கு முன் அவ்வாறு தோண்றியவர்களை கிட்டத்தட்ட ஓத்திருப்பார்கள் ஆனால்  முழுவதும் அவர்களை போல் இருப்பார்கள் என்று கூறுவது கடினம் , ஏனென்றால் இந்த எளியவனின் கருத்தின் படி இஸ்லாத்தின் தோற்றத்தில் அதாவது ஆரம்ப காலத்தின் மகிமை வேறு எந்த காலத்துடனும் ஒப்பிடமுடியாது,இருப்பினும் இந்த இறுதி நாட்களில் அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் அவனது நபியின் மூலம் அந்த மழைக்கு உத்தரவாதம் வழங்குகின்றான், இதையே அவன் தனது திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்
     
    இன்னுமொன்று,முதன்மையானவர்கள்,இவர்கள்முதன்மையானவர்களேயாவர்.
     
    இவர்களே (இறைவனுக்கு) நெருங்கியவர்களாவார்கள். பேரின்பத் தோட்டங்களில் (இவர்கள் வாழ்ந்து வருவர்). முன்னவரைச் சேர்ந்தவர்கள் பெருங்கூட்டமாகஇருப்பார்கள். பின்னவரைச் சேர்ந்தவர்கள் சிறு கூட்டமாக இருப்பார்கள். (56: 11-15)
     
    மேலும் இதுவரை  அவர்களுடன் சேராத மற்றவர்களுக்கிடையிலும் (அவரை எழுப்புவான்). அவன் வல்லமை மிக்கவனும், நுண்ணறிவுள்ளவனுமாவான்.(62: 4)
     
     
     
    மேலும் ஒரு நபி மொழியில் இவ்வாறாக கூறப்பட்டுள்ளது:-
     
     
     
    “ எனது உம்மத்தில் முதல் மற்றும் கடைசி பகுதியை சார்ந்தவர்கள் சிறப்புடையவர்கள், இவர்களுக்கு இடையில் சில கோணல்புத்தியுள்ளவர்கள் இருப்பார்கள். என்று கூறியபின்   “ நம் சகோதரர்களை பார்க்க நான் ஆசைப்படுகிறேன்” என்று சொன்னார்கள்.மக்கள் (நபித்தோழர்கள்) , அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் “சகோதரர்கள்” இல்லையா? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் என் தோழர்கள் தாம்” என்று அன்னார் பதிலளித்தார்கள்
     
    முஸ்லீம் ஹதீத் தொகுப்பில் உள்ள இந்த நபிமொழியில் மிக தெள்ளத்தெளிவாக இங்கே குறிப்பிடுகின்ற “சகோதரர்கள்” என்று பெருமானார் (ஸல்) கூறுபவர்களை அன்னார் பார்த்ததே இல்லை என்பதும் அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த உலகத்தைவிட்டு சென்றதிற்கு பிறகு இறுதிக்காலத்தில் தோன்றக்கூடியவர்கள் என்பதும், இன்னும் பல்வேறு விளக்கங்களில் இங்கே குறிப்பிடப்படும் “சகோதரர்கள்”  இறுதிக்காலத்தில் தோன்றக்கூடியவர்கள் என்பதும் தெளிவாகின்றது.
     
    எனவே திருகுரானும் நபி மொழியும் எதிர்காலத்திலும் இறைத்தூதர்கள் தோன்றுவார்கள் என்பதையே மிகத்தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது, மேலும் இறைவனால் தேர்வு செய்து இனி வரக்கூடியவர்கள் இறுதிவேதத்தை கொண்டுவந்த காத்தமுன் அன்பிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிம்பமாகவும் அன்னாருக்கு இறைவன் அருளிய உண்மையான போதனைக்கு புத்துணர்வு வழங்குபவர்களாகவும் வருவார்கள், மேலும் அல்லாஹ் இந்த போதனைக்கையும் வாழ்கை நெறிமுறைகளையும் மறுமை வரை பாதுகாப்பதாக உறுதிமொழி அளித்துள்ளான்
     
    நான் உங்களிடம் மேலே கூறிய ஹதிதுகளில் ஞானத்திலிருந்து, எத்தனையோ முஸ்லீம் அமைப்புகள் அவர்களுக்கிடையே எண்ணற்ற கருத்து வேறுபாட்டை கொண்டுள்ளனர். மேலும், அதில் உள்ள எந்த அமைப்பும் நபியே கரீம் (ஸல்) அவர்களுடன் அவர்களின் ஸஹாபிகள் வாழ்ந்துபோல் அல்லது பெருமானார் (ஸல்) அவர்கள் தனது இதயத்துக்கு இதயமாக சந்திக்கவிற்கும் அந்த “சகோதரர்கள் போலவும் இல்லை, ஏனென்றால் இவ்விவரண்டிருக்கும் அவர்கள் வாழும் காலத்தில் ஒரு அல்லாஹ்வின் நபியின் ஆன்மிக அருளின் கீழ் வரமால் இது சாத்தியமற்றது.
     
    இன்னும் ஒரு முக்கியமான விஷயத்தை நான் உங்களுக்கு தெளிவுபடுத்த விருப்புகின்றேன் அதாவது ஜமாஅத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாம் என்பது ஒரு புதிய மார்க்கம் அல்ல, என்பதை நீங்கள் அனைவரும் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ,மேலும் இந்த ஜமாஅத் இஸ்லாத்தில் பிரிவினையை ஏற்படுத்துவற்காகவும் தோன்ற வில்லை ,மாறாக அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் தனது மகிமை வாய்த்த அந்த இஸ்லாத்தை மீண்டும் உருவாக்குகின்ற ஒரு கருவியாக இதை எழுப்பியுள்ளான்.
     
    எனவே நான் உங்களிடம் மீண்டும் தெளிவுபடுத்துகின்றான் இந்த ஜமாஅத் ஒரு புதிய மார்க்கத்தை தன்னுள் கொண்டுவரவில்லை, மாறாக இதன் பெயர் அதாவது ஜமாத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாம் திருக்குரானில் மார்க்கம் என்பதற்க்கு என்ன பெயர் விளக்கப்ட்டுள்ளதோ அல்லது அறிவிக்கபட்டுள்ளதோ அந்த பெயரின் மறுவடிவமாகும், இந்த மறுவடிவத்தை மீண்டும் இந்த காலத்தின் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட எளியவனான என் மூலமாக இறைவழிகாட்டலின் கீழ் அருளியுள்ளான், மேலும் ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம் என்ற இந்த பெயரை இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவனின் இந்த காலத்தின் கலீபத்துல்லாஹ் ஆன இந்த எளியவனுக்கு அவனே வழங்கியுள்ளான், அந்த ஏக இறைவனே இதன் பெயரை வைத்து அவனுடைய  அடியானையும் அவனே தேர்வு செய்வதை விட சிறந்த அருள் வேறு என்ன இருக்கமுடியும், மேலும் அவன் இந்த அருளுக்குரிய முதலீடை அந்த தூய தீனே இஸ்லாத்தை மீட்டெடுக்கும் நோக்கத்தில் செய்துள்ளான், இப்பொது எத்தனையோ முஸ்லீம் அமைப்புகள் இஸ்லாத்தில் மாறுபட்ட காணோட்டத்தினாலோ அல்லது அவர்களின் சில நம்பிக்கைகளின் அடிப்படையில் அவர்களின் அமைப்புகளுக்கு பல்வேறு வேறுபட்ட பெயர்களை தாங்களாகவே வைத்துக்கொள்கின்றனர், ஆனால் நம்மிடையே அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் சுபஹானஹுதாலாவின் வெளிப்பாடுகளும் அவனால் நியமிக்கப்பட்ட அவனது கலீபாவும் மேலும் அவனால் பெயரிடப்பட்ட அமைப்பும் இருக்கும்போது இவ்வகை அமைப்புகளின் தேவை என்ன இருக்கிறது என்பதை சிந்தித்து பாருங்கள், மேலும் அல்லாஹ் அவனது இறைவஹீயியை அனுப்புவதன் மூலமே அவனால் உருவாக்கப்பட்ட ஜமாத்தை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றான், எனது அருமையானவர்களே இந்த தொடர் மூலம் என்னுடைய செய்தியை உங்களுக்கு தெளிவாக விளக்கிவிட்டேன் என்று நினைக்கின்றேன்.
     
     நான் அல்லாஹ்விடம் துஆ செய்கின்றேன், அவன் முஸ்லிம்களுக்கு உண்மையையும் அவர்கள் அந்த மேலாக நோக்கத்தை ஒளிரூட்டும் தெளிவான கருத்துக்களின் வழியாக பெற செய்வானாக, இதன் மூலமாக அல்லாஹ் நம்மிடம் என்ன நாடுகிறான் என்பதை நமக்கு புரியசெய்வானாக ,மேலும் நாம் எல்லாவிதமான ஷைத்தானின் ஈர்ப்பில்லிருந்து முற்றிலும் விலகி அவனிடம் முழுமையாக அர்ப்பணிக்க செய்வானாக, இதன்முலமாக அவனை அறிந்து அவனுடைய இருப்பின் ஆனந்தத்தை அடைவோமாக, இன்னும் அவனால் தேர்தெடுக்கப்பட்ட இறை அடியார்களின் பொதுவான பணியான மனித இனத்தையும் ஆன்மிகத்தையும் பாதுகாப்பானாக இன்ஷாஅல்லாஹ் ஆமீன்
     
     எனவே சகோதரர்களே ஒரு இறை தூதர் வருகையின் நோக்கம் “ஐனுல் யகீன்” ஆகும் இறுதியாக மஸீஹ் (அலை) அவர்களின் கூற்றுடன் முடித்து கொள்கின்றேன் நிறைவு செய்கின்றோம்.
     
    முழுமையான இறைஞானம் பெறும் வழி அன்புமிக்க நண்பர்களே! இறைவனுடைய நோக்கங்களுக்கு எதிராக எவனாலும் போரிட முடியாது. இறைவனின் தூய தூதர்களுக்கு இறைவன் புறமிருந்து கிட்டும் இல்ஹாம் (இறையறிவிப்பு)தான் முழுமையான இறைஞானத்திற்கான வழியாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்த அருட்கடலான இறைவன் தனது இல்ஹாம் எனும் அருளை அடைத்து வைத்து உலகத்தை ஒருபோதும் அழிவிற்குள்ளாக்க நாடவில்லை. மாறாக தனது இல்ஹாம் என்னும் இறையறிவிப்பின் வாசல்களை என்றென்றும் திறந்தே வைத்திருக்கின்றான். ஆனால் அவற்றை அவற்றிற்குரிய சரியான வழியின் மூலமே தேடவேண்டும். அப்போதுதான் அவற்றை எளிதில் பெறமுடியும். அந்த ஜீவநீர் வானத்திலிருந்து இறங்கி அதற்கேற்ற இடத்தில் தேக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஜீவநீரை அருந்துவதற்கு, நீங்கள் எப்படியாவது அந்நீரூற்றை அனுகி அதில் உங்கள் உதடுகளைப் பதித்து அந்த ஜீவநீரை மனநிறைவோடு பருகுங்கள். ( இஸ்லாமிய போதனைகளின் தத்துவ ஞானம்)
     
    இன்ஷாஅல்லாஹ் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ் சுபஹானஹுதாலா அருள்புரிவனாக ஆமீன்
     
     
     
     
  • Elementor #3371

    நபிமார்களின் முத்திரை(ஸல்) அவர்கள்

    நபிமார்களின் முத்திரை(ஸல்) அவர்களது பிறப்பிற்கு முந்தைய நிகழ்வுகள்

    எனவே, அல்லாஹ்வின் தூதர் ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களின் பிறப்பதற்கு சில வருடங்களுக்கு முந்தைய உலகத்தையும் அரேபியாவையும் சித்தரிப்போம்.(அப்போது) உலகின் நிலையானது நிலையற்றதாகவும் ஆபத்தானதாகவும் இருந்தது. சீர்கெட்ட பழமைவாதிகளுக்கும்,சீன கலாச்சாரம் மற்றும் இந்தியப் புத்த(மத)த்தில் ஊறிய புதிய தலைமுறையினருக்கும் இடையிலான நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு (ஒருப்)பேரரசின் கூட்டமைப்பை அமைவதில் ஜப்பான் வெற்றி பெற்றது.

    இந்திய தீர்க்கதரிசியான கௌதம சித்தார்த்தாவின் தத்துவத்தை அதாவது புத்த மதத்தை சீனா ஏற்றுக் கொண்டது. கன்பூசியம் பின்வாங்கியது. பட்டு சாலையை(Silk Road) கட்டுப்படுத்தி ஜப்பானுக்கும் கொரியாவுக்கும் நஷ்டம் விளைவிக்கும் வகையில் சீனா போதுமான இராணுவ வலிமையுடன் ஆயுதம் ஏந்தியிருந்தது. பின்னர் அது நான்கு நூற்றாண்டுகள் உள்நாட்டுப் போரில்  மூழ்கியது.

    இந்தியா ராஜகுப்த வம்சத்தால் ஆளப்பட்டது. இது குறிப்பிடத்தக்க பொருளாதார செழிப்புடன் திகழ்ந்தது.பாரஸீகம் தனது சிறுபான்மையினரு டனான உள்நாட்டு நெருக்கடிகளுடன் போராடியது. ஈரானின் அரசியல் உறுதியற்ற தன்மையைப் பயன்படுத்தி யமன்,பாரசீக அடிமைத்தனத்தை சிதறடித்தது.ஈராக்கில், கிறிஸ்தவ லக்மிட் கப்பல்கள் உடன் நுழைந்து பாரசீக பேரரசை அச்சுறுத்தியது. ஃபிரான்ஸ்  அப்போது (ஃபிரான்ஸ்,பெல்ஜியம்,வட இத்தாலி போன்ற நாடுகள் அடங்கிய பழைய) கவ்ல்(Gaul) பகுதியாகத் திகழ்ந்தது.(ஃப்ராங்கிஸ் அரசர்) க்ளோவிஸ் இறந்து இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, (ஃபிரான்ஸானது) போர்கள், கொலைகள் மற்றும் கொள்ளை ஆகியவற்றால் சூரையாடப்பட்டது.நகரங்களும் கிராமப்புறங்களும் முற்றிலும் அழிக்கப்பட்டன.

    ரோமானிய நாகரீகங்களின் தடயங்கள் மறைந்துபோய், காட்டுமிராண்டித்தனத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தது.இங்கிலாந்து ஆங்கிலோ-ஸாக்சன்களால் படையெடுக்கப்பட்டது. ஜெர்மனியில் இருந்து வந்த, பலதெய்வ வழிபாட்டைக் கொண்டவர்களாக இருந்துகொண்டு அவர்கள் ரோமானிய நாகரீகத்தின் வலுவற்றத் தடயங்களை அழித்து தங்களது தெய்வகளை வழிபடும் கோயில்களை அங்குக் கட்டினர்..இஸ்லாத்திற்கு முந்தைய அரேபியாவில், முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பிறப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பு, அரேபியர்கள் (ஜாஹிலியா) அறியாமையிலும், (பல்வேறு) முரண்பாடுகளிலும் வாழ்ந்து வந்தனர். இஸ்லாம் உதயமாகியபோது, கிட்டத்தட்ட அனைத்து அரேபியர்களும் பல தெய்வ வாழிபாடுகளைக் கொண்டிருந்தனர்; மேலும் உருவ வழிபாட்டின் மீது உறுதியான நம்பிக்கைக் கொண்டிருந்தனர்.அவர்கள் பல தெய்வ வாழிபாட்டினராவர். அவர்கள் பழங்குடிப் போர்களால் பிளவுபட்டு, பலம்மிக்கவர்களின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்துவந்தனர்.ஒழுக்கக்கேடு அங்கே உச்சத்தில் இருந்தது; மது பானங்கள், சூதாட்டம், நடனம், வட்டி,

    இளம் பெண்களை உயிருடன் அடக்கம் செய்யும் பழக்கம் போன்றவை அவர்களிடையே வழக்கமான நடைமுறைகளாகும்.இன்னும் கூடுதலாக, அவர்கள் விந்தையான உருவ சிலைகளையும்,மனிதர்கள் அல்லது பிற உருவங்களில் செதுக்கப்பட்ட பிற உருவங்களையும் வணங்கிவந்தனர். அவர்கள் அல்-லாத், அல்-உஸ்ஸா, மனாத், ஹூபல் போன்ற பெயரைக் கொண்ட சிலைகளிடம் வேண்டினர். அவைகளுக்கு குழந்தைகள், குணமளித்தல், செல்வம் போன்ற எல்லாவற்றையும் (அவர்களுக்குக்) கொடுக்கும் திறன் இருப்பதாக அவர்கள் நம்பினர்.முதல் மூன்று (சிலைகளும்) குறிப்பிடத்தக்க முறையில் வணங்கப்பட்டன.(அவர்களது)குலமரபு சார்ந்த அமைப்பில், ஒரு மகனைப் பெற்றிருப்பது  பெரும் மரியாதைக்குரியதாகும். (ஆண்)மைந்தர்களே குடும்பத்தின் பலமாகக் கருதப்பட்டனர். அவர்கள் மேய்ப்பர்களாகவும், போர் வீரர்களாகவும் இருந்தனர். சிறிதளவு சாக்குப்போக்கினால் நடத்தப்பட்ட குலப்போர்கள் முடிவற்றவையாக இருந்தன; தேவைப்பட்டால் அவர்கள் ராஸியாவை நடைமுறைப்படுத்துவர். [அதாவது: மற்றவர்களிடத்தில் மார்க்கப் போர் நிறுத்தங்கள்,  பேச்சுவார்த்தைகள் மற்றும் அகிம்சை ஒப்பந்தங்கள் போன்றவை]. பெண்கள் மட்டுமே பெற்றிருப்பது அவர்களின் பார்வையில் வெறுக்கத்தக்க விஷயமாகும். இந்த கடினமான பதுக்கள்(காட்டரபிகள்) சிறுமிகளை ஒரு பெரிய சுமையாக கருதினர், இன்னும் சிலர் பிறக்கும்போதே அவர்களை(பெண்குழந்தைகளை) உயிருடன் புதைத்தார்கள், ஏனெனில் பெண்குழந்தைகளால் அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என்பதாலும் [அவர்களுக்கு] கண்ணியம் என்பது அரேபியர்களிடையே (மிகவும்) புனிதமான(தாக கருதப்பட்ட)து.

    அரேபியா, தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் வறண்ட நிலமாக இருந்த நிலையில், இஸ்லாத்தை பெற்றெடுத்தது. இது எரிமலை மற்றும் காற்றோட்டமான குன்றுகளுடன் கூடிய மணல் தீவு போல் காணப்படுகிறது. ஆயினும், இந்த பாலைவனப் பகுதிகளிலும், வழிகளிலும் சிரியாவிலிருந்து எமனுக்குச் சென்று வரும் காட்டரபிகள் தலைமையிலான ஒட்டக வணிகர்களால் வழிநடத்தப்படுகின்றன.இந்த வணிகர்கள், அதனுடைய பனை மரங்கள் மற்றும் பிற பேரீச்சமரங்களால்  அடையாளம் காணக்கூடிய பல பாலைவன சோலைகளுக்கும் நன்றிசெலுத்தி (அங்கு)வாழ முடியும்.

    நஜ்ரான், யத்ரிப், ஃபதக், ஃகைபர், மத்யன், தபுக் ஆகியவை அனைத்தும் காட்டரபிகளால் ஓய்வெடுக்கும் இடமாக அறியப்படுகின்றன, அங்கு அவர்கள் பனை மற்றும் பேரீட்ச மரங்களின் நிழலில் அவர்களது தாகத்தைத் தணிக்கிறார்கள், அவை பாலைவன மனிதர்களின் பாதுகாப்பிற்கான இறை ஏற்ப்பாடாகும்.வணிகர்கள் முஸ்லீம் உலகின் ஆன்மீக தலைநகரான மக்காவில் குடியேறினர், இது அல்லாஹ்(தஆலா)வால் அருள்பாலிக்கப்பட்டதும் மேன்மைப்படுத்தப்பட்டதுமான ஓர் இடமாகும். அவர்கள் அனைவரும், அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அறியப்பட்ட குலங்களாகவும்  பழங்குடியினராகவும் அமையப்பெற்ற நாடோடி அல்லது அங்கேயே வசிப்பவர்களாவர், புகழ்பெற்ற குரைஷி குலத்து மக்கள் ஹாஷிம் உட்பட பத்து குலங்களாக பிரிக்கப்பட்டிருந்தனர்.

    இஸ்லாத்திற்கு முந்தைய மக்காவானது, அதன் குறுகிய வீதிகளில் வணிகர்களின் கூட்டத்தை ஈர்க்கின்ற ஒரு வளம் மிக்க நகரமாகும். ஒவ்வொரு ஆண்டும் அரேபியர்கள் எல்லா பக்கங்களிலிருந்தும் யாத்திரை மேற்கொண்டு கஅபா ஆலயத்துக்கு வருகைத் தருகிறார்கள். கனசதுர வடிவிலான இந்த ஆலயத்தின் கல், வெண்கலம் மற்றும் மரத்தால் ஆன 360 சிலைகளை அவர்கள் வணங்குகிறார்கள்.அரேபிய மக்கள் அனைவரும் வருடத்தின் சில மாதங்களை ரஜப் மாதத்தைப் போன்று புனிதமானதாக கருதுகின்றனர். மக்கா (மக்கா) என்பது சமூக மற்றும் ஆன்மீக ரீதியில் தனிநபர் நடத்தையின் சிறிதளவு செல்வாக்கும் இல்லாத (ஆதிக்கமில்லாத), மோசமான உருவ வழிபாட்டை நடைமுறையில் கொண்ட மாபெரும் யாத்திரைக்கான இடமாகும்.மக்காவுக்கு அருகிலுள்ள உகாஸில், மிகப்பெரிய கண்காட்சி நடத்தப்படுகிறது. (புனித)யாத்திரையும், கண்காட்சியும் ஏராளமான செல்வத்தை கொண்டு வருகின்றன, இது மக்காவை மிகவும் வளர்ந்த நகரமாகவும் மாநிலமாகவும் உருவாக்குகிறது. அதிகாரங்களைப் பிரித்து பத்து பரம்பரைத் தலைவர்களின் குழுவால் இது நிர்வகிக்கப்படுகிறது.மக்காவாசிகள் சிறந்த பயண வணிகர்களாவார்கள் (பயண வணிகத்தை எவ்வாறு வழிநடத்துவது என்பது அவர்களுக்கு நன்றாகவேத் தெரியும்). அவர்கள் கவிதை,நல்ல பேச்சுத் திறன் போன்ற கலைகளிலும்

    எழுத்துக்களிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள், மேலும் இரவு கதைகளை எவ்வாறு விவரிப்பது என்பது அவர்களுக்குத் தெரியும். பெண்கள் குறிப்பாக சமூகத்தின் உயர்தரங்களில் உள்ளவர்கள் நல்ல முறையில் நடத்தப் பட்டனர். அவர்களுக்கு சொத்தை தனக்கே உரியதாக்கிக் கொள்ளும் உரிமை இருந்தது. அவர்களுக்கு திருமணத்திற்கு தங்களது ஒப்புதலை வழங்கவோ அல்லது விவாகரத்தை முயன்றுப் பெறுகின்ற உரிமையும் இருந்தது.அரேபியர்களின் குணங்களும் தவறுகளும் அவர்களது வாழ்வியல் சூழல்களினால் உருவான குணங்களும் தவறுகளும் ஆகும். கண்ணியம் என்பது அரேபியர்களிடையே புனிதமானதாகும், இன்னும் அவர்கள் தங்களின் சமூகத்தில் தங்களது மரியாதையை தக்க வைத்துக்கொள்ள தங்களின் மகள்களை உயிருடன் புதைக்கும் அவசியம் ஏற்படுமாயின் அதனையும், அவர்கள் தயக்கமின்றி அவ்வாறே செய்பவர்களாவர். ஒருபுறம், மனிதநேயத்தை பிரதிபலிக்கின்ற பண்பாகிய நட்பு பாராட்டுதலையும், சிறந்த விருந்து உபசாரமளிப்பதையும் அவர்கள் கொண்டிருந்தனர். ஆயினும் மறுபுறமோ, அவர்கள் அதே கண்ணியத்தின் பெயரால் கொலைசெய்யவும் தயங்காதவர்களாயிருந்தனர்.

    வரலாற்றாசிரியர், ஹெர்டர் [இஸ்லாமியத்திற்கு முந்தைய] அரேபியர்களை (பற்றி இவ்வாறு நமக்கு விவரித்துள்ளார்: அவர்கள் தங்கள் மூதாதையர்களின் குல ஆட்சி முறையை பாதுகாத்து வந்தனர்;அவர்கள் இரத்தவெறிபிடித்தவர்களாகவும், ஒரேயடியாக அடிபணிந்துவிடுவதுமான முரண்பாட்டில் தனித்தவர்களாக இருந்தனர்;கோட்பாடுகளிலும், மூட நம்பிக்கைகளிலும் ஆர்வமும், பேராசையும் உடையவர்களாக இருந்தனர்; ஒரு புதிய சிந்தனை அவர்களை ஆதிக்கம் செலுத்தும் போது மிகப் பெரிய விஷயங்களை செய்யும் திறன் கொண்ட போற்றுதல்மிக்க இளைஞர்களைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது, சுதந்திரமும், தாராள மனப்பான்மையும் பெருமையும் கொண்டவர்களாகிய அரபுகள், அதே நேரத்தில் முன்கோபமும் துணிச்சலும் கொண்டவர்கள்; தங்களது தேசத்தின் நற்பண்புகளையும், தீமைகளின் வகைகளையும் ஒருவர் அவர்களிடம் காணமுடியும்.தங்களின் சொந்த தேவைகளுக்காக கொடுக்க வேண்டிய அவசியமானது அவர்களை சுறுசுறுப்பானவர்களாக ஆக்குகிறது.  சகித்துக்கொள்வதற்கு கடமைப்பட்டுள்ள அனைத்து வகையான துன்பங்களிலும் பொறுமையை மேற்கொள்பவராக அவர்(களைக்)காணலாம்;

     அனுபவிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள ஒரே நல்ல (விஷயம்) என்ற அடிப்படையில் அவர்(கள்) சுதந்திரத்தை நேசிக்கிறார்(கள்),ஆயினும், அனைத்து (வித)அடக்குமுறை(கள் மீதான) வெறுப்பினால் அவர் சண்டையிடக் கூடிவரும் ஆவார்.தனக்குத்தானே கடின சித்தத்துடன்  இருப்பதால், அவர் கொடூரமானவராகி,எப்போதும் பழிவாங்குவதற்கு தான் ஆர்வத்துடன் இருப்பதாகவும் காட்டிக்கொள்கிறார்.காட்டரபிக்கு அவரது விடுதலையும், அவரது சுதந்திரத்தையும் விட வேறெதுவும் விருப்பமானதாக இல்லை; அவரிடம் இருந்த இந்த நல்லவிஷயம் காலம்காலமாக அப்படியே வைத்திருக்க முடிந்தது: இவ்வுலகை ஆதிக்கம் செலுத்திய அனைத்து வெற்றியாளர்களுக்கும் அதனை (அவர்களிடமிருந்து) ஒருபோதும் அடிமைப்படுத்திட முடியவில்லை. எப்போதுமே அரேபியர்களின் மீதான எந்த ஆதிக்கமும் குறுகிய காலத்திற்கே நிலைத்திருந்தது, மேலும் அரேபியர்கள்,அரேபியர்களுக்குள் சண்டையிடாத வரை குறுகியக்காலத்திற்குக் கூட (அத்தகைய ஆதிக்கவாதிகள்) நிலைபெற முடியாதவர்களாய் இருந்தனர்.

    மொத்த உலகின் தட்பவெப்பநிலைகளும் பூமியின் வேறு எந்த மண்டலத்தைக் காட்டிலும் (அங்கே) வெளிப்பட்டன.அரேபியா அதன் அனைத்து வேறுபாட்டிலும் உலகின் மிக சிறிய அளவாக இருந்தது. இந்த நிலத்தில் தான்,இந்த காலகட்டத்தில் தான், இந்த சூழலில் தான் ஒரு மனிதன் பிறக்க வேண்டும்.இந்த மனிதன் தான் அப்துல்லாஹ்வின் மகனார் முஹம்மது(ஸல்) அவர்கள் ஆவார்கள்,அப்துல்லாஹ் அவர்கள் அப்துல் முத்தலிஃப்பின் மகனாவார், அப்துல் முத்தலிஃப் ஹாஷிமின் மகனாவார்கள் [முஹம்மது இப்னு அப்துல்லாஹ் இப்னு அப்த் அல்-முத்தலிஃப் இப்னு ஹாஷிம்], தனிச்சிறப்புமிக்க அல்லாஹ்வின் தூதராவார்கள்.

    (ஹஸ்ரத் முஹம்மத்(ஸல்) அவர்கள் கிறிஸ்தவ சகாப்தத்தின் 570 ஆம் ஆண்டில் பிறந்தார்கள். தனது தனித்துவமிக்க படைப்பாளனாகிய, அல்லாஹ்வின்,அருளால் பயபக்தி மற்றும் இரட்சிப்பின் ஜோதியை அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.அவர்களுக்கு இந்த அபத்தமான அறியாமையின் சங்கிலிகளை எவ்வாறு உடைப்பது என்பது தெரிந்திருந்தது. மேலும் ஒரு பயனுள்ள(இலாபகரமான) செய்தியுடன் முழு உலகையும் அழைத்தார்கள்.

    அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

    நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமேயன்றி அனுப்பவில்லை;ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) அறியமாட்டார்கள்.(அஸ் ஸபா 34:29)

    ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்கள் ஒரு உன்னதமான மற்றும் உயர்ந்த குறிக்கோள் பணித்திட்டத்தைக் கொண்ட ஒரு மனிதர் ஆவர்கள்.அனைத்து இஸ்ராயீலிய தூதர்களின் ஒட்டுமொத்த நற்பண்புகளின் தொகுப்பாக அவர்கள் விளங்கினார்கள்: (அவை)மூஸாவின் தைரியம், ஹாரூனின் கூர்ந்து அறியும் திறன், தாவூதின் பொறுமை, சுலைமானின் மகத்துவம்,யஹ்யாவின் எளிமை, ஈஸாவின் பணிவு போன்றவை ஆகும்,அவர்கள் அனைவரும் இறைவனின் அடியார்களாகவும் தூதர்களாகவும் இருந்தார்கள். ஓர் இறைவனை (அல்லாஹ்வை) வணங்குவதன் கீழ் மனிதர்களை ஒன்றிணைப்பதும் இறை சட்டங்கள் மற்றும் கட்டளைகளின்படி நேர்மை மற்றும் (ஒன்றுபட்ட) ஒருமைப்பாட்டின் வாழ்விற்குரிய வழியை அவர்களுக்கு கற்பிப்பதும் அன்னாரது ஒரே குறிக்கோளாக இருந்தது.

    அந்த சயத்தின் போது நாம் வாழவில்லை,என்றபோதிலும் அல்லாஹ்வின் அருளால்,அல்லாஹ் நம்மை முஸ்லிம்களாக தேர்ந்தெடுத்தபோது மனித குல வரலாற்றின் இந்த பக்கம் உறுதியான மற்றும் நேர்மையான நம்பிக்கையுடன் இவற்றை நமக்குக் குறிப்பிட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்.

    எல்லா மனிதப் பணிகளுடனும் ஒப்பிடும்போது, அல்லாஹ்வின் தூதர் ஹஸ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்களின் பணிகள் மிகச் சிறந்ததும்,  அன்னாரது கருணையின்(ரஹ்மத்) அளவுகள் ஒப்பிடமுடியாததும் விலைமதிப்பற்றதும் ஆகும். அவர்களது (ரஹ்மத்)அருளானது ஒரு குடும்பத்திற்கோ,ஒரு சமூகத்திற்கோ மட்டும் வரையறுக்கப்பட்டதாக இருக்கவில்லை.மாறாக, (அது)மனிதகுலம் அனைத்திற்குமாக விரிந்திருந்தது. அவர்கள் ஒரு தனிமனிதனாக இருந்து அனைத்து மனிதர்களையும் மிஞ்சிவிட்டார்கள்.அவரகளின் வருகையுடன், புனித நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் மனித வாழ்க்கையின் அனைத்து கட்டங்களையும் கருத்தில் கொண்டவர்களாய், மனித வாழ்விற்கு தொட்டிலிலிருந்து மரணம் வரை வழிகாட்டி நெறிமுறைப்படுத்தினார்கள்.

    முஹம்மது நபி(ஸல்) அவர்களும் அவர்களின் ஒற்றுமை உணர்வும்

    அடிமைத்தனத்தையும் பாகுபாட்டையும்,சாதியையும் ஒழிப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கிய முதல் மனிதர் முஹம்மது(ஸல்) ஆவார்கள். அன்னார்,தோலின் நிறம், இனம் அல்லது தேசியத்தின் அடிப்படையில் வேறுபாடு அல்லது பாகுபாடு இல்லாமல் எல்லா மனிதர்களையும் ஒரே உடல்,ஒரே குடும்பமாகவேப் பார்த்தார்கள்.அன்னார் அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தில் தான் (தக்வா) மனிதனின் உயர்வு இருக்கின்றது என்றும் அனைத்து மனிதர்களும் ஆதம்(அலை) அவர்களின் குழந்தைகள் ஆவார்கள் (என்றும் கருதினார்கள்).

    “அரேபியர்களல்லாதவர்களை விடவும் அரேபியர்கள் உயர்ந்தவர்கள் அல்ல,அரேபியர்களல்லாதவர்கள் அரேபியர்களை விடவும் உயர்ந்தவர்கள் அல்ல, கருப்பரை விட வெள்ளையருக்கோ அல்லது வெள்ளையரை  மேல் கருப்பருக்கோ எந்த உயர்வும் இல்லை. (உண்மையான) உயர்வு இறையச்சத்தில் தான் இருக்கின்றது.”இந்த வார்த்தைகளின் முலம் ,நமது உன்னத நபி(ஸல்) அவர்கள் மனிதனால் உருவாக்கப்பட்ட அனைத்து செயற்கை தடுப்பு(ச் சுவர்)களையும் உடைத்தெறிந்தார்கள்.

    முஹம்மது நபி (ஸல்) அவர்களும் குழந்தைகளின் உரிமைகளும்

    ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு நேசிக்கும் இயல்பு இருந்தது. அவர்கள் குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் இடையிலான உறவில் தொடர்ந்து அக்கறை கொண்டிருந்தார்கள். பெற்றோர்கள் அறிவு புகட்டி, ஊட்டி வளர்த்து, மரியாதையையும் நல்ல பழக்கவழக்கங்களையும் தங்களின் குழந்தைகளிடத்தில் சிறிது சிறிதாக புகட்டுவதை அவர்கள் ஊக்குவித்தார்கள்.

    “ஒரு தந்தைக்கு தனது பிள்ளைகள் மீதான மிகப் பெரிய கடமை எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களுக்கு மரியாதையை கற்பிப்பதாகும்.” (திர்மிதி)

    இந்த மிகப்பெரிய பொறுப்பின் படித்தரத்தைக் காட்ட, அவர்கள் அதனைப் பற்றி இவ்வாறு கூறினார்கள்: “ஒவ்வொரு மனிதனும் அவரது குடும்பத்திற்கு பொறுப்பாளர் ஆவார், மேலும் அவரது குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரைப் பற்றியும் அவர் கேள்வி கேட்கப்படுவார்” (புஹாரி).

    முஹம்மது நபி(ஸல்) அவர்களும் இளம் வயதினரும்

    அல்லாஹ்வின் பிரதிநிதியான முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இளைஞர்களிடத்தில் (மிகவும்) கவனம் செலுத்தினார்கள்.அன்னார் இளைஞர்கள் ஒரு பயபக்தியுள்ள வாழ்க்கையை கழிக்கவும்,எல்லா நேரத்திலும் நேரான பாதையிலிருந்து அவர்களை விலக்கிவிடக் கூடிய தீய சக்திகளிடமிருந்து விலகி இருக்கவும் வேண்டுகோள் விடுத்தார்கள்.

    “தீர்ப்பு நாளில், (இதனை)பின்பற்றும் வழிகளில் இருந்த உங்களில் ஏழு பேருக்கு அல்லாஹ் நிழலை வழங்குவான்(என்று கூறி பட்டியலிட்டார்கள்) அந்த ஏழு பேரில் ஒருவர் அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்திருக்கும் இளைஞன் ஆவான்”.இந்த இளைஞர்களை அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் தீய சக்திகளுக்கு எதிராக(த் தம்மைப்)பாதுகாத்துக் கொள்ள, நபி (ஸல்) அவர்கள் ஷைத்தானிய தூண்டுதல்களுக்கு எதிராக மிகவும் சக்திவாய்ந்த கேடயமாக

    இருக்கக்கூடிய திருமணத்தை நாடுமாறு அவர்களை வேண்டிக்கொண்டார்கள்.“ஒரு மனிதனுக்கு திருமணமாகும் போது, அவனுடைய மார்க்கத்தின் (கடமைகளில்)பாதி காப்பாற்றப்படுகின்றது. மற்ற பாதியை (பாதுப்புடன்) வைத்திருக்க,அல்லாஹ்விடம் இறையச்சத்திற்காக வேண்டுவது போதுமானதாகும்”(என்று கூறினார்கள்).

    அவர்கள் மேலும் கூறினார்கள்: “இளைஞர்களே! உங்களுள் எவரேனும் அதற்கு வாய்ப்புள்ளவர், தாமதமின்றி திருமணம் செய்து கொள்ளட்டும், ஏனெனில் அது அவருடைய கற்பை பாதுகாக்க உதவுகிறது. அவ்வாறு செய்ய வாய்ப்பில்லாதவர்கள்,நோன்பு நோற்கட்டும்; ஏனெனில் தீமைக்கு எதிரான கேடயம் நோன்பாகும்; மேலும் அது பாலியல் தூண்டுதலைக் குறைக்கிறது. ”

    முஹம்மது நபி (ஸல்) அவர்களும் பெற்றோரின் உரிமைகளும் 

    அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் குறிப்பாக பெற்றோர்களை,அதிலும் குறிப்பாக அவர்களின் வயோதிகக்காலத்தில் (மிகவும்)நல்ல முறையில் அன்புடனும் மென்மையுடனும் நடத்துவதை பரிந்துரை செய்துள்ளார்கள். அன்னார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் மகிழ்ச்சி தந்தையின் மகிழ்ச்சியில் உள்ளது” அதேசமயம் “சுவர்க்கம் தாயின் காலடியில் உள்ளது” (என்று கூறினார்கள்).

    தூய திருக்குர்ஆனில் அல்லாஹ் நமக்கு கூறுகிறான்: ”உம்முடைய இறைவன் மிகவும் வலியுறுத்தி இவ்வாறு கட்டளையிட்டுள்ளான். நீங்கள் அவனையன்றி வேறெதனையும் வணங்காதீர்கள். மேலும் (உங்கள்) பெற்றோரிடம் (மிகவும்)நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். அவர்களுள் ஒருவர் அல்லது அவர்களிருவரும் உம்முடைய வாழ்நாளில் முதுமையை எய்தி விடுவார்களாயின், நீர் (அவர்களது விஷயத்தில் வெறுப்பை காட்டும் விதத்தில்) அவர்களை “சீ!” என்று கூடச்சொல்லாதீர். அவர்களை ஏசவும் வேண்டாம் .அவர்களிடத்து (எப்போதும்)இனிமையாகப் பேசுவீராக!” (பனீ இஸ்ராயீல் 17:24)

    முஹம்மது நபி (ஸல்) அவர்களும் அண்டை அயலவர்களும்.

    அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மற்றவர்களுடன் குறிப்பாக அண்டை அயலவர்களுடன் நல்ல முறையில் உறவைப் பேணுமாறுப் பரிந்துரைத்தார்கள். எந்த அளவிற்கென்றால் தங்களை குற்றங்கூற அவர்களிடத்தில் எதுவும் இருக்க்க்கூடாது (என்று பரிந்துரைத்தார்கள்). ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தனது தீய செயல்களினால் தனது அண்டைஅயலார்களிடம் பாதுகாப்பிற்கு ஊக்கம் (உத்திரவாதம்)கொடுக்காதவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்”.

    அவர்கள் மேலும் கூறினார்கள்: ”அண்டை வீட்டுக்காரர் பசியுடன் இருக்கும்போது தனது உணவை (தான் மட்டும்) உண்ணுகின்றவர்களில்  ஒருவனாக நான் இல்லை”

    முஹம்மது நபி(ஸல்) அவர்களும் வயோதிகர்களும்

    அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் வயதானவர்களை மிகுந்த மரியாதையுடனும் மென்மையுடனும் நடத்தினார்கள். அவர்களைப் பொறுத்தவரை வயதானவர்கள் மதிக்கப்பட்டு, கவனிக்கப்பட்டு,இன்னும் தங்களின் குடும்பங்களால் அதிக சலுகை வழங்கப்பட வேண்டும் என்பதுமாகும். அவர்கள் நிராகரிக்கப்படவோ அல்லது அவர்கள் எஞ்சியிருக்கின்ற காலத்தில் முதியோர் இல்லத்திற்கு அனுப்பப்படக்கூடாது.

    புனித நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முதியவர்களை மதிக்காதவனும் இளையவர்களிடத்தில் இரக்கம் காட்டாதவனும் என்னைச் சார்ந்தவனல்ல” முஹம்மது நபி(ஸல்) அவர்களும் அனாதைகளும்.

    முஹம்மத்(ஸல்) அவர்கள் அனாதைகள், விதவைகள் மற்றும் ஏழைகளுக்கு சமுதாயத்தின் தனிச்சிறப்பானதொரு அந்தஸ்தை வழங்கி, விலை மதிப்பற்ற ஆதரவான பெற்றோர்களின் அன்பினை அவர்கள் இழந்து நிற்பதால், சிறப்பான இரக்கத்தையும் அன்பையும் அவர்களிடத்தில் காட்டுமாறும் அழைப்பு விடுக்கின்றார்கள். அன்னார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அனாதைகளை (நல்ல முறையில்) கவனித்துக்கொள்பவர் என்னுடன் சொர்க்கத்தில் ஆள்காட்டி விரல் நடு விரலை அடுத்து இருப்பது போன்று இருப்பார் ”.விதவைக்காக சேவை செய்பவர் எல்லா இரவு முழுவதும் தொழுதும், பகலில் நோன்பு நோற்பவரையும் போன்றாவார் என்றும் அவர்கள் கூறினார்கள்.

    முஹம்மது நபி (ஸல்) அவர்களும் பெண்களின் உரிமைகளும்

    பெண்களுக்கு எந்த ஒரு மனிதத் தன்மையும்(மதிப்பும்) வழங்கப்படாத ஒரு நாட்டில் முஹம்மத்(ஸல்) அவர்கள் அவளுக்கு உயர்ந்த அந்தஸ்தையும், சமூகத்தின் முக்கிய உரிமைகளையும் அவளுக்கு வழங்கினார்கள்.பெண்ணை தனது கணவரின் வன்முறையிலிருந்தும்,அவளது கணவன் வீட்டார் மற்றும் அவளது உறவினர்களின் கொடுங்கோன்மையிலிருந்தும் அவளது கண்ணியம், மரியாதை மற்றும் கற்பைப் பேணிப் பாதுகாக்க அவர்கள் சட்டங்களை நிறுவினார்கள்.”தனது மனைவியிடம் மிகவும் சிறந்த முறையில் நடந்து கொள்பவரே முஸ்லிம்களில் மிகச் சிறந்தவராவார்” என்று கூறினார்கள்.

    மேலும் அல்லாஹ்வின் தூதர் ஒரு பெண்ணின் மதிப்பின் மீது கருத்தூன்றி அதிகமாகப் பேசவும் தவறவில்லை. அவர்கள் கூறினார்கள்: “ ஒருவருக்கு மகள்கள் மட்டுமே இருந்து அவர் அவர்களை மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் கவனித்துள்ளார் என்றால், அவருக்கு அவர்கள்(மகள்கள்)  நரகத்திற்கெதிரான கேடயமாக  இருப்பார்கள் . ”

    முஹம்மது நபி (ஸல்) அவர்களும் விலங்குகளும்

    நீதி, தர்மம் மற்றும் நற்பண்பிற்கான நபிப் பெருமானாரின்) அக்கறையானது மனிதர்களோடு மட்டும் நின்றுவிடாமல் விலங்குகளுக்கும் கூட கிடைத்துள்ளது. ஒரு உயிருள்ள விலங்கை குறிவைப்பவரை(வேதனை செய்பவரை) அவர்கள் சபித்தார்கள்.அன்னார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு நபர் தனது பாதையில் நடந்து கொண்டிருக்கும்போது தனக்கு மிகவும் தாகம் ஏற்பட்டு,.அவர் (திடீரென்று) ஒரு கிணற்றின் பக்கம் வந்து, தண்ணீர் குடிக்கவேண்டும் என்பதற்காகத் அதில் இறங்குகின்றார்..(அருந்தி விட்டு) வெளியே வந்ததும், மூச்சு வாங்கும் நாய் ஒன்று (தண்ணீரைத் தேடியவாறு) தூய்மையற்றதை உண்பதைக் காண்கிறார்.அந்த மனிதர் தனக்குத்தானே ‘நான் இருந்ததைப் போலவே இந்த நாயும் தாகமாக இருக்கிறது,’ என்று நினைத்துக் கொண்டார்: அதனால் அந்த மனிதன் மீண்டும் கிணற்றில் இறங்கி, தனதுத் தோல் காலுறையை தண்ணீரால் நிரப்பி, அதை வாயில் பிடித்துக் கொண்டு, மீண்டும் மேலே ஏறி, நாயின் தாகத்தைத் தணித்தார்.அல்லாஹ் இந்த செயலை மிகவும் உயர்வானதாகக் கருதி அதனால் அந்த மனிதனை மன்னித்தான். ”

    பிறகு பின்வரும் இந்த கேள்வி நபி(ஸல்) அவர்களுக்கு முன் வைக்கப்பட்டது: “அல்லாஹ்வின் தூதரே!விலங்குகளுக்குச் செய்த நன்மைக்காக, தகுந்த சுவர்க்கத்தின் பிரதிபலன் கிடைக்குமா? ”அப்போது புனித நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்:“ஆம்!, ஒவ்வொரு ஜீவனுக்கும்,ஒவ்வொரு நன்மைக்கும் தகுந்த வெகுமதி (அல்லாஹ்விடம்) கிடைக்கும்”.

    பரிபூரணமான முன்மாதிரி ஹஸ்ரத் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்

    எனவே நமது நேசத்திற்குரிய தூதர் ஒரு குறிப்பிடத்தக்கவரும் சிறந்த மனிதருமாவார்கள். ஒரு மனிதராகவும் அல்லாஹ்வின் தூதராகவும் அவரது உலக வாழ்க்கை இறை கட்டளைகளின் மிகச் சிறந்த செயல்வடிவமாகும். அவர்கள் ஒரு பரிபூரணமான மனிதரும், அல்லாஹ்வின் தூதரும் ஆவார்கள். நமது நம்பிக்கையிலும் நமது மனித வாழ்க்கையிலும் எவ்வாறு உன்னத நிலையை அடைய முடியும் என்பதை நமக்கு கற்றுக் கொடுத்தார்கள்.

    மிகத்தெளிவாக தூய திருக்குர்ஆனில் அல்லாஹ் நமக்கு கூறுகின்றான்:

    “உண்மையாக உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடத்தில் மிக மேலான முன்மாதிரி உண்டு”(அல் அஹ்ஸாப் 33:22)

    என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா தூய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி,”இந்த பூமியில், மார்க்கத்தின் மிகவும் வெற்றிகரமான மனிதர்(தலை சிறந்தவர்) ” “The most successful man of religion on this earth.” என்று அறிவிக்கிறது.

    கிறிஸ்தவ சகாப்தத்தின் 632 ஆம் ஆண்டில் தனது 63 வது வயதில் நமக்கு இவ்வாறு அறிவுறுத்தியவர்களாக இந்த உலகத்தை விட்டு செல்கின்றார்கள்,:

    “நான் உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கிறேன், அவற்றை நீங்கள் பின்பற்றினால், நீங்கள் ஒருபோதும் வழிதவற மாட்டீர்கள்: இறைவனின் வேதம் மற்றும் அவனது நபியின் சுன்னத்(வழிமுறை).”

    இத்துடன், நான் இங்கே முடித்துக்கொள்கிறேன். நாம் தொடர்ந்து பேசினால், நமது நேசத்திற்குரிய நபி ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களைப் பற்றி அதிகமாகக் கூற வேண்டியிருக்கும். பௌதீக, ஒழுக்க மற்றும் ஆன்மீக ரீதியிலான அன்னாரது சிறப்புகளை விவரிக்க (ஒரே)ஒரு சொற்பொழிவு (மட்டும்)போதாது. அல்லாஹ் அன்னார் மீதும், அன்னாரின் குடும்பத்தினருக்கும், அன்னாரின் தோழர்களுக்கும், உம்மத்தே முஹம்மதியாவில் உள்ள நம் அனைவருக்கும் பற்பல அருள்களையும் பொழிவானாக! நம்முடைய நேசத்திற்குரிய நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் நாட்களைப் போலவே இஸ்லாத்தின் வெற்றிக்கும் மகிமைக்கும் அல்லாஹ் நமக்கு வழியைத் திறந்து தருவானாக!.

    உங்களது கவனத்திற்கு நன்றி.

    அஸ்ஸலாமூ அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

    (ஹஸ்ரத் முனீர் அஹ்மத் ஆசிம் (அலை)* அவர்களின்  ஸீரத்துன் நபிப் பேருரை 31 அக்டோபர் 2020 15 ரபிய்யுல் அவ்வல் 1441ஹிஜ்ரி)
    குறிப்பு: மொழிபெயர்ப்பில் தவறுகள் இருக்கலாம்.இதன் ஆங்கில மூலத்தைப் படிக்க விரும்புபவர்கள் இந்த லிங்கிற்குள் செல்லவும்.:

    http://jamaat-ul-sahih-al-islam.com/jusai2020/sphmasun_31oct20.pdf

  • இஸ்லாம் என்றால் என்ன?

    ‘இஸ்லாம்’ என்ற சொல் அரபு மூலச்சொல்லான  “ஸில்ம்” என்பதிலிருந்து வந்தது. அதன் பொருள் ‘அமைதி’ என்பதாகும். ஆனால், இஸ்லாத்தை முழு மனதுடன் ஏற்றுக்கொண்ட பல்வேறு நாட்டவர்களைப் பொருத்தவரை, அவர்கள் அரபு மொழியை நன்கு அறியாததால், இஸ்லாத்தின் சரியான அளவுகோலையும் சரியான குறிப்பீட்டையும் முழுமையாக புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் . ஆகவே, இன்று எனது உரையில் இஸ்லாம் என்றால் என்ன? என்பது பற்றிய விளக்கத்தைத் தொடரலாம் என்று நினைக்கிறேன் . என் அன்பான சகோதர சகோதரிகளே! இஸ்லாம்  நம் இதயத்தை துடிக்கச் செய்கிறது. வானங்களிலும், பூமியிலும் உள்ள எல்லா உயிரினங்கள், மனித இனம் ஆகியவற்றின் உடலையும் உள்ளத்தையும் புத்துயிர் பெறச் செய்கிறது . வானம் மற்றும் பூமியின் அழகிய கட்டமைப்பை நாம் சுற்றிப் பார்க்கும்போது , அது ஒரு பெரிய படைப்பாளனின் படைப்பு என்பதற்கான சாட்சியத்தை  கொண்டிருக்கிறது. நவீன விஞ்ஞானம் தீவிரமான ஆய்வுகளின் மூலம் , நமக்குக் கற்பித்த விஷயமானது, இந்த  பிரபஞ்சத்தின் ஒழுங்குமுறை  மற்றும் இதன் வடிவமைப்பு ஒரு உயர்ந்த சக்தியின் இருப்பை நம்புவதற்கு நம்மை இட்டுச் செல்கிறது.  இந்த சிக்கலான ஆனால் நேர்த்தியான வடிவமைப்பிற்கு பொறுப்பான ஒரு உயர்ந்த கண்காணிப்பு இருக்க வேண்டும் என்பதையும்,  இதைப் படைத்து, இதன் வாழ்க்கை மற்றும் வளர்ச்சிக்கு தேவையான அனைத்தையும் வழங்குகிற  ஒரு பிரம்மாண்டமான படைப்பாளன் இருக்க வேண்டும் என்பதையும் இது நமக்கு உணர்த்துகிறது.  புதிய ஆராய்ச்சிகள் இந்த பூலோகத்தைப் போன்ற பல வான்மண்டலங்கள் உள்ளன என்பதையும் அறிவியல் ஞானத்தின் மூலம் அவை இறைவனின் பரந்த சக்தியையும் பிரம்மாண்டத்தையும் உணர்த்துவதையும்  உறுதி செய்கிறது.
    ஆகவே, நவீன விஞ்ஞானம் கூட   எண்ணற்ற ஆராய்ச்சிகளின் அடிப்படையில்  பரிசுத்த வேதங்களில் அதிலும் குறிப்பாக இறுதி சட்டங்களைக் கொண்ட  திருக்குர்ஆனில் கூறப்படும் இறைவனின் வார்த்தைகள்  அனைத்தும் உண்மை என்று நிரூபிக்க வந்துள்ளது என்பதைக் காண்கிறோம் . இந்த பிரபஞ்சம், அறிவியல் நமக்குத் தெரிவித்தபடி, ஒரு கரிம வடிவமாகும். அதன் பகுதிகள் அனைத்தும் அழகாகவும் இணக்கமாகவும் ஒன்றோடொன்று தொடர்புடையவையாகவும் உள்ளது. மேலும் இது இறைநியதியின் ஒரு களமாகும். அதாவது  இதில் உள்ள ஒவ்வொரு துகளின் இருப்பும் இறைநியதிக்குட்பட்டதாகும். அவை ஒரு நிர்ணயிக்கப்பட்ட, மாற்ற முடியாத நியதிக்கு அடிபணிந்து நகர்கிறது . நமது சூரிய மண்டலத்தில் உள்ள பெரிய கிரகங்களோ (பிற விண்மீன் திரள்கள்) அல்லது உயிராற்றலைக் கொண்டிருக்கும் மண்ணின் சிறிய துகள்களோ இந்த நியதியிலிருந்து சற்றும் விலகிச் செல்ல முடியாது. அவைகளின் வாழ்க்கை ஒரு முழுமையான அர்ப்பணிப்பு வாழ்க்கையாகும். அவை அல்லாஹ்வின் சட்ட திட்டங்களின்படி வாழ்கின்றன. ஒருபோதும் அவை அதன் போக்கிலிருந்தும், அதன் நோக்கத்திலிருந்தும் விலகுவதில்லை . எனவே உண்மையில், அவற்றின் வாழ்க்கை இஸ்லாமிய வாழ்க்கையாகும். அதாவது இறைக்கட்டளைகளுக்கு அடிபணிந்து நடக்கும் வாழ்க்கையாகும் . வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவை முஸ்லிம்களாக இருக்கின்றன. திருக்குர்ஆன் இந்த உண்மையை பின்வரும் வார்த்தைகளில் குறிப்பிடுகிறது: வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தும் விரும்பினாலும், வெறுத்தாலும் அவனுக்கே முழுமையாக கீழ்ப்படிந்து விட்டன.அவர்கள் அனைவரும் அவனிடமே மீண்டு வருவார்கள். (3: 84). இந்த பொது நியதிக்கு ஒரே விதிவிலக்கு மனிதனே. படைப்பினங்களின் முழு கட்டமைப்பிலும் அவன் தனித்துவமானவன். அவன் பகுத்தறிவு மட்டுமல்ல,  சுதந்திரமாக செயல்படும் விருப்ப உரிமையும்  கொண்டிருக்கிறான். இது அவனது செயல்களின் போக்கையும், நடத்தையின் முறையையும் கணிக்க முடியாததாக ஆக்குகிறது . சூரியனின் செயலை ஒருவர் கணக்கிட முடியும் , ஏனெனில் அது ஒரு நிறுவப்பட்ட நியதியின் கீழ் செயல்படுகிறது, மேலும் அதிலிருந்து விலகுவதற்கான சுதந்திரம் அதற்கு இல்லை. ஆனால், மனிதனின் விஷயத்தில் ஒருவரால் அவனை கணிக்க முடியாது . பிரபஞ்சத்தின் அனைத்து பொருட்களின் செயல்பாடும் ஒரு நியமிக்கப்பட்ட ஒழுங்கிலும் சமநிலையிலும் நிர்பந்தமாக வைக்கப்பட்டுள்ளது , ஆனால் மனிதன் மட்டுமே வாழ்க்கையில் தனது போக்கைத் தேர்ந்தெடுப்பதற்கான அனுமதியைப் பெற்றிருக்கிறான் . அவனால் தன்னைக்தானே கட்டமைக்கவோ அல்லது  அழிக்கவோ முடியும். மேலும் அப்படிச் செய்வது அவனுடைய பிந்தைய வாழ்க்கையில் விளைவுகளையும் ஏற்படுத்தும். எனவே, மற்ற படைப்புகளுடன் ஒப்பிடும்போது, மனிதனால் அவனது முடிவுகளைத் தேர்வுசெய்ய முடியும், மேலும் அதற்கான வழிகளைத் தேர்ந்தெடுக்கவும் அவனால் முடியும். இந்த நோக்கத்திற்காகவே, அவன் தனது காரணிகளை நம்பியுள்ளான். ஆனால் அந்த வகையில், அவன் தவறுகள் செய்கிறான். அதன் விளைவாக, அவன் பெரிய செயல்பாடுகளை அடைந்து, இறுதியில் குழப்பத்தில் சிக்கிக் கொள்கிறான். அவனது சொத்தாக இருக்கும் அவனுடைய இந்த தன்மை, அதன் தவறான வழியில் பயன்பபடுத்தியதால், அது அவனை சுயமாக செயல்படாதவாறு ஆக்கிவிட்டது. ஏனெனில்,  மனித அறிவு அவனை சில வரம்புகள் வரை மட்டுமே அவனை வழிநடத்துகிறது, ஏனெனில் அது  அறியப்படாத விஷயங்களைக் கண்டறிய அறியப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் செயல்படுகிறது . இது இயற்பியலின் களத்தில் ஓரளவுக்கு திறமையாக செயல்பட்டாலும், அடிப்படை தேவைகளின் அரங்கில் நுழையும் போது , கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பற்றிய விரிவான அறிவை வைத்திருக்க வேண்டியுள்ளதால் , அது  அவனுக்கு அனுமானங்களை  மட்டுமே தருகிறது. வாழ்க்கையின் இறுதிகட்ட உண்மைகளைக் கண்டறிய மனிதனால் இயலாது என்பதே இயற்கையின் நியதியாகும் . இருப்பினும், மனித ஆன்மா அந்த இறுதி உண்மைகளை அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது, அவை இல்லாமல் வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் விவரிக்கப்படாமலும், மனித முடிவின் உண்மையான குறியீடுகள் இணைக்கப்படாமலும் போய்விடும். விஞ்ஞானத்தால் அதை நமக்கு வழங்க முடியாது. ஏனெனில், அது  உடல் ரீதியான யதார்த்தத்துடன் மட்டுமே செயல்படுகிறது ; தத்துவங்களாலும் அதை நமக்கு கொடுக்க முடியாது. ஏனெனில், அது எடுகோள்கள் மற்றும் அனுமானங்களின் மூலமே செயல்படுகிறது. இந்த கட்டத்தில்தான் மனித ஆத்மா சர்வவல்லமையுள்ள மாபெரும் ஆற்றல் படைத்த புலக் கண்ணுக்குத் தெரியாத   அல்லாஹ்விடம் வழிகாட்டுதலுக்காக அழுகிறது. காரணம், அவனே எல்லா வாழ்கைக்கும் மூலமாக இருக்கிறான். இறைவனின் உதவியின்றி மனிதனால் இந்நிலையைத் தொடர முடியாது.  காரணம் ஆன்மா அதன் பாதையை வெளிச்சம் போடக்கூடிய ஒரு ஜோதியையும் , உறுதியான அறிவின் அடிப்படையில் வழிகாட்டலை வழங்கக்கூடிய ஒரு வழிகாட்டியையும் வைத்திருக்க விரும்புகிறது. எனவே, மனிதகுலத்திற்கு அத்தகைய உறுதியான, நேர்மறையான மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய வழிகாட்டுதல் தேவைப்படுகிறது, மேலும் இயற்பியல் ரீதியாக நம்மையும் இப்பிரபஞ்சத்தையும் நிலைநிறுத்தும்  அன்பான  படைப்பாளன் மனிதனின்  இந்த முக்கிய தேவையை அவனுக்கு வழங்குவதற்காக அதை தானே எடுத்துக் கொண்டான். பூமியில் மனிதகுலத்தின்  தொடக்கத்திலிருந்தே மதம் இருந்து வந்தது என்பதற்கு மனித வரலாறு சான்றளிக்கிறது .  இறைவன் தன் படைப்பின் மூலம் மனிதகுலத்திற்கு வழிகாட்டுதல்களை வழங்குகிறான் என்பதை இது காட்டுகிறது. இதனால்  இருளில் சிக்கிக்கொள்ளாமல் அதன் இயற்கை நிலைக்கு இணங்கி சட்ட திட்டங்களின் வழி நடக்க மனித குலத்தால் முடியும். இந்த வழிகாட்டுதல்களை வழங்க இறைவனால் நியமிக்கப்பட்டவர்களே தீர்க்கதரிசிகள், இறைத்தூதர்கள் மற்றும் அப்போஸ்தர்கள் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுபவர்கள் ஆவர் . அவர்களே அந்த வழிகாட்டலை இறைவெளிப்பாடுகளின் வடிவத்தில் பெறுகிறார்கள்.  அதை அவர்கள் எழுத்து வடிவத்தில் மக்களுக்கு முன்வைக்கும்போது, அது ஒரு வேதம் அல்லது வெளிப்பாடுகளின் புத்தகம் என்றழைக்கப்படுகிறது. திருக்குர்ஆனில் உள்ளபடி அல்லாஹ்வின் இறுதிச் சட்டங்களைப் பெறுவதற்கான பேரருளைப் பெற்ற கடைசி சட்ட திட்டங்களைக் கொண்ட இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் ஆவார்கள். இதன் பொருள், அல்லாஹ் தனது நேசத்திற்குரிய தூதரான முஹம்மது (ஸல்) அவர்களின் சமூகத்தினுள் தனது ஏனைய அடியார்களுடன் பேசமாட்டான் என்பதோ அல்லது மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும் வகையில் கண்களுக்கு புலப்படாதவற்றிலிருந்து இத்தகைய தெய்வீக தகவல்களை எழுதவோ அல்லது வெளிப்படுத்தவோ அவன் தனது அடியார்களை தேர்ந்தெடுக்க  மாட்டான் என்பதோ அல்ல. நிச்சயமாக அவ்வாறு இல்லை! இந்த முந்தைய  ஏடுகள் யாவும் அல்லாஹ்விடமிருந்து வந்த சட்டங்களின் மொத்த வடிவம் அல்ல. அவை வெளிப்பாடுகளின் புத்தகங்களே. அத்தகைய ஏடுகள் அனைத்தும் இறுதி வேதமான திருக்குர்ஆனின் கட்டளைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும், மேலும் அதன் நம்பகத்தன்மையையும் புனிதத்தையும் நிலைநிறுத்த வேண்டும். சட்டங்ளை வகுக்கும் சில குறிப்பிட்ட இறைத்தூதர்கள் மட்டுமே தெய்வீக சட்டங்கள் அல்லது தெய்வீக வேதவசனங்களுடன் அலங்கரிக்கப்பட்டனர், மேலும் அந்த வசனங்களின் உள்ளடக்கங்கள் எல்லா நிலையிலும் மனிதனின் சரியான வாழ்க்கைக்காக படைப்பாளனும் பிரபஞ்சத்தின் பாதுகாவலனும் ஆகிய அல்லாஹ் நியமித்த சட்டங்களாக இருந்தன. திருக்குர்ஆன் அத்தகைய கடைசி சட்டங்களைக் கொண்டதாகும்.  நியாயத்தீர்ப்பு நாள் வரை நிலைத்திருக்கும் இனிமை நிறைந்த  முழுமையான சட்டங்களின் தொகுப்பாகும்.
    வழிகாட்டுதலின் நோக்கம் மனிதனை இறைச்சட்டத்திற்கு எப்போதும் அடிபணியச் செய்வதை அவனுக்குக் கற்பிப்பதே ஆகும். இது இஸ்லாம் என்ற வார்த்தையுடைய  அரபிப் பொருளின்  அணுகுமுறை மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. இந்த  தெய்வீக வழிகாட்டுதல் மனிதனை அவனுடைய உண்மையான இயற்கைநிலைக்குரிய சட்ட திட்டங்களுக்கு இணங்க செயல்பட வேண்டும் என்றும்,  அல்லாஹ்விற்கு அடிபணியும் உயிரினமாக இருப்பது என்ற அவனது இயல்பை ஏற்றுக்கொள்ள அவனது முழு விருப்பத்தையும் சுதந்திரத்தையும் பயன்படுத்த வேண்டும் என்றும் விரும்புகிறது . மற்ற உயிரினங்களைப் போன்று ஒரு இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து, அதில் இயற்கையின் விதிகளுக்கு இணங்கி இருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் அவனுக்கு இல்லாவிட்டாலும், உண்மையை அறிந்து, அதன்படி நடப்பது அவனுக்குறிய கடினமான கடமையாக உள்ளது. எனவே, மற்ற உயிரினங்களோடு ஒப்பிடுகையில், அவற்றைப் போல் இல்லாமல் மனிதன் இந்த உலகத்தின் சோதனைகளில் வெற்றி பெற்றுவிட்டால், அவனுக்கு வழங்கப்படும் வெகுமதிகள் எண்ணிலடங்காதவையாக இருக்கும். சுருக்கமாக கூறுவதானால், இந்த தெய்வீக வழிகாட்டி மனிதனை ஒரு முஸ்லிமாக வாழ வேண்டுகிறது.  . இது குறித்து திருக்குர்ஆன் கூறுகையில்: அல்லாஹ் மனிதர்களை எதில் படைத்தானோ அத்தகைய இயற்கை மார்க்க(மாகிய இஸ்லா)த்தை (பற்றிப்பிடித்து நிலைத்திருப்பீராக!) அல்லாஹ்வின் படைப்பில் எவ்வித மாற்றமும் இல்லை; இதுவே (சரியான) நிலையான மார்க்கமாகும்.எனினும், மனிதர்களில் பெரும்பாலானோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள். (30: 31). சர்வவல்லமையுள்ள இறைவனிடமிருந்து  வந்த இந்த வழிகாட்டுதல் ஒரு குறிப்பிட்ட குழுக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கோ மட்டுப்படுத்தப்படவில்லை. எனினும், இது உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும், அனைத்து இனங்களுக்கும்  பொதுவாக அனுப்பப்பட்டதாகும் .  இறைவனின் அருள் உலகம் முழுக்க  பொதுவான முறையில் வழங்கப்பட்டதாகும். இது குறித்து திருக்குர்ஆன் கூறுகையில் : எந்த ஒரு சமுதாயத்தவருக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர் சென்றே தவிர இல்லை. (35: 26).எனவே, வரலாறு அவர்களில் சிலரின் பெயர்களைப் பாதுகாத்து வருகிறது, அதே சமயம் பலரின் பெயர்களும் பணிகளும் மக்களால் மறக்கடிக்கப்பட்டுவிட்டன. அவர்களுள்  இன்னும் நினைவுகூறப்பட்டு, திருக்குர்னிலும் குறிப்பிடப்பட்ட இறைத்தூதர்களின் பெயர்களாவன: ஆதம், நூஹ் , இப்ராஹிம், இஸ்மாயில், இஸ்ஹாக் , யாகூப் , யூசுஃப், மூசா, தாவுத் , சுலைமான், ஜகரிய்யா , யஹ்யா , ஈஸா (அலை) ஆகியோர் மற்றும் முஹம்மது ( ஸல் ) அவர்கள் . முஹம்மது நபி ( ஸல் ) அவர்கள் கிறிஸ்தவ சகாப்தத்தின் ஏழாம் நூற்றாண்டில் தோன்றி , மனிதகுலத்தின் முந்தைய இறைத்தூதர்களின் பாதையில் மக்களை திரும்ப அழைத்தார்கள். மேலும், திருக்குர்ஆனை இவ்வுலகிற்கு வழங்கினார்கள்.  அந்த குர்ஆன் முந்தைய இறைத்தூதர்கள் கற்பித்த சட்ட திட்டங்களின் சரியான மற்றும் விரிவான வடிவத்தை உள்ளடக்கியதாகும்.  . முந்தைய இறைத்தூதர்களின் கற்பித்தல்களுக்கு யூத மதம், கிறித்தவம் என மக்கள் பலவிதமாகப் பெயரிட்டிருந்தனர். இஸ்லாத்தின் இறுதித்தூதரான நபி முஹம்மது ( ஸல் ) அவர்கள்  உண்மையான, அசலான, அர்த்தமுள்ள பெயரான இஸ்லாத்தை  நினைவுறுத்தினார்கள். திருக்குர்ஆனின் வார்த்தைகள் வாயிலாக இதை அவர்கள் நமக்கு உறுதிப்படுத்துகிறார்கள்:  நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாமாகும்; (அதாவது அவருடைய விருப்பத்திற்கும் வழிகாட்டுதலுக்கும் சரணடைதல்). (3: 20). மீண்டும் ஒருமுறை எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகையில், உங்கள் தந்தை இப்ராஹீமுடைய மார்க்கத்தை (கடைபிடியுங்கள்!). அவன்தான் (அல்லாஹ்) உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். (22: 78) மீண்டும், சர்வவல்லமையுள்ள அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்: இப்ராஹிம் யூதராக இருக்கவில்லை; கிரிஸ்துவராகவும்  இல்லை. எனினும்,  அவர் ஹனீஃபாக (அசத்திய மார்க்கங்கள் அனைத்தை விட்டும் சத்திய மார்க்கத்தின்பால் சார்ந்தவராக), முஸ்லிமாக (அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவராக) இருந்தார்; மேலும், அவர் இணைவைப்போரில் ஒருவராகவும் இருக்கவில்லை. (3: 68). ஆகவே , மனித இனம் தோன்றியதிலிருந்தே மனிதனின் இயல்பான வாழ்க்கைக்கு ஏற்ற முறையாக இஸ்லாமிய மார்க்கம் இருப்பதாக நாம் உணர்கிறோம் . நாம் அனைவரும் அல்லாஹ்வால் இஸ்லாமியர்களாக ஆக்கப்பட்டிருக்கிறோம், அவனுக்கே நாம் அடிபணிபவர்களாகவும் இருக்கிறோம். அதனால்தான், முழுமையான மற்றும் இறுதி வாழ்க்கை நெறிமுறையை வகுத்துத் தரும் திருக்குர்ஆனில், நம்முடைய உண்மையான மார்க்கம் இஸ்லாம் என்பதையும், அதைத் தவிர்த்து வேறு எதுவும் இல்லை  என்பதையும் அல்லாஹ் எடுத்துரைத்துள்ளான். இது அல்லாஹ்வுடனான நம் உறவின் புனிதத்தன்மையாகும். ஏனென்றால் அவனுடைய கருணையின் உயரத்தை அடைய நாம் அவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவனுடைய அன்பிலும் அருகாமையிலும் முழுமையானவர்களாக கருதப்பட வேண்டும். எனவே, அல்லாஹ் நம் ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையில் தூய இஸ்லாத்தை உணரச் செய்வானாக.  ஏனெனில், அதுவே  நம்முடைய வாழ்க்கையின் நோக்கமாகும். நமக்குள் இருக்கும் இஸ்லாமியம் தான் இந்த உலகம் முழுவதையும் ஒளிரச் செய்யும். மேலும் இந்த இஸ்லாம்  நம்மை நாம் பரிபூரணமாக்கிக்கொள்ள நமக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்த ஓர் பரிசாகும். இதனால் மனிதகுலத்தின் சீர்திருத்தத்திற்கான உண்மையான வழிகாட்டிகளாக  செயல்படவும்,  மக்களை அல்லாஹ்வின் பக்கம் வழிநடத்தவும் நம்மால் முடியும்.

  • இஸ்லாம் என்றால் என்ன

    ‘இஸ்லாம்’ என்ற சொல் அரபு மூலச்சொல்லான  “ஸில்ம்” என்பதிலிருந்து வந்தது. அதன் பொருள் ‘அமைதி’ என்பதாகும். ஆனால், இஸ்லாத்தை முழு மனதுடன் ஏற்றுக்கொண்ட பல்வேறு நாட்டவர்களைப் பொருத்தவரை, அவர்கள் அரபு மொழியை நன்கு அறியாததால், இஸ்லாத்தின் சரியான அளவுகோலையும் சரியான குறிப்பீட்டையும் முழுமையாக புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் . ஆகவே, இன்று எனது உரையில் இஸ்லாம் என்றால் என்ன? என்பது பற்றிய விளக்கத்தைத் தொடரலாம் என்று நினைக்கிறேன் . என் அன்பான சகோதர சகோதரிகளே! இஸ்லாம்  நம் இதயத்தை துடிக்கச் செய்கிறது. வானங்களிலும், பூமியிலும் உள்ள எல்லா உயிரினங்கள், மனித இனம் ஆகியவற்றின் உடலையும் உள்ளத்தையும் புத்துயிர் பெறச் செய்கிறது . வானம் மற்றும் பூமியின் அழகிய கட்டமைப்பை நாம் சுற்றிப் பார்க்கும்போது , அது ஒரு பெரிய படைப்பாளனின் படைப்பு என்பதற்கான சாட்சியத்தை  கொண்டிருக்கிறது. நவீன விஞ்ஞானம் தீவிரமான ஆய்வுகளின் மூலம் , நமக்குக் கற்பித்த விஷயமானது, இந்த  பிரபஞ்சத்தின் ஒழுங்குமுறை  மற்றும் இதன் வடிவமைப்பு ஒரு உயர்ந்த சக்தியின் இருப்பை நம்புவதற்கு நம்மை இட்டுச் செல்கிறது.  இந்த சிக்கலான ஆனால் நேர்த்தியான வடிவமைப்பிற்கு பொறுப்பான ஒரு உயர்ந்த கண்காணிப்பு இருக்க வேண்டும் என்பதையும்,  இதைப் படைத்து, இதன் வாழ்க்கை மற்றும் வளர்ச்சிக்கு தேவையான அனைத்தையும் வழங்குகிற  ஒரு பிரம்மாண்டமான படைப்பாளன் இருக்க வேண்டும் என்பதையும் இது நமக்கு உணர்த்துகிறது.  புதிய ஆராய்ச்சிகள் இந்த பூலோகத்தைப் போன்ற பல வான்மண்டலங்கள் உள்ளன என்பதையும் அறிவியல் ஞானத்தின் மூலம் அவை இறைவனின் பரந்த சக்தியையும் பிரம்மாண்டத்தையும் உணர்த்துவதையும்  உறுதி செய்கிறது.
    ஆகவே, நவீன விஞ்ஞானம் கூட   எண்ணற்ற ஆராய்ச்சிகளின் அடிப்படையில்  பரிசுத்த வேதங்களில் அதிலும் குறிப்பாக இறுதி சட்டங்களைக் கொண்ட  திருக்குர்ஆனில் கூறப்படும் இறைவனின் வார்த்தைகள்  அனைத்தும் உண்மை என்று நிரூபிக்க வந்துள்ளது என்பதைக் காண்கிறோம் . இந்த பிரபஞ்சம், அறிவியல் நமக்குத் தெரிவித்தபடி, ஒரு கரிம வடிவமாகும். அதன் பகுதிகள் அனைத்தும் அழகாகவும் இணக்கமாகவும் ஒன்றோடொன்று தொடர்புடையவையாகவும் உள்ளது. மேலும் இது இறைநியதியின் ஒரு களமாகும். அதாவது  இதில் உள்ள ஒவ்வொரு துகளின் இருப்பும் இறைநியதிக்குட்பட்டதாகும். அவை ஒரு நிர்ணயிக்கப்பட்ட, மாற்ற முடியாத நியதிக்கு அடிபணிந்து நகர்கிறது . நமது சூரிய மண்டலத்தில் உள்ள பெரிய கிரகங்களோ (பிற விண்மீன் திரள்கள்) அல்லது உயிராற்றலைக் கொண்டிருக்கும் மண்ணின் சிறிய துகள்களோ இந்த நியதியிலிருந்து சற்றும் விலகிச் செல்ல முடியாது. அவைகளின் வாழ்க்கை ஒரு முழுமையான அர்ப்பணிப்பு வாழ்க்கையாகும். அவை அல்லாஹ்வின் சட்ட திட்டங்களின்படி வாழ்கின்றன. ஒருபோதும் அவை அதன் போக்கிலிருந்தும், அதன் நோக்கத்திலிருந்தும் விலகுவதில்லை . எனவே உண்மையில், அவற்றின் வாழ்க்கை இஸ்லாமிய வாழ்க்கையாகும். அதாவது இறைக்கட்டளைகளுக்கு அடிபணிந்து நடக்கும் வாழ்க்கையாகும் . வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவை முஸ்லிம்களாக இருக்கின்றன. திருக்குர்ஆன் இந்த உண்மையை பின்வரும் வார்த்தைகளில் குறிப்பிடுகிறது: வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தும் விரும்பினாலும், வெறுத்தாலும் அவனுக்கே முழுமையாக கீழ்ப்படிந்து விட்டன.அவர்கள் அனைவரும் அவனிடமே மீண்டு வருவார்கள். (3: 84). இந்த பொது நியதிக்கு ஒரே விதிவிலக்கு மனிதனே. படைப்பினங்களின் முழு கட்டமைப்பிலும் அவன் தனித்துவமானவன். அவன் பகுத்தறிவு மட்டுமல்ல,  சுதந்திரமாக செயல்படும் விருப்ப உரிமையும்  கொண்டிருக்கிறான். இது அவனது செயல்களின் போக்கையும், நடத்தையின் முறையையும் கணிக்க முடியாததாக ஆக்குகிறது . சூரியனின் செயலை ஒருவர் கணக்கிட முடியும் , ஏனெனில் அது ஒரு நிறுவப்பட்ட நியதியின் கீழ் செயல்படுகிறது, மேலும் அதிலிருந்து விலகுவதற்கான சுதந்திரம் அதற்கு இல்லை. ஆனால், மனிதனின் விஷயத்தில் ஒருவரால் அவனை கணிக்க முடியாது . பிரபஞ்சத்தின் அனைத்து பொருட்களின் செயல்பாடும் ஒரு நியமிக்கப்பட்ட ஒழுங்கிலும் சமநிலையிலும் நிர்பந்தமாக வைக்கப்பட்டுள்ளது , ஆனால் மனிதன் மட்டுமே வாழ்க்கையில் தனது போக்கைத் தேர்ந்தெடுப்பதற்கான அனுமதியைப் பெற்றிருக்கிறான் . அவனால் தன்னைக்தானே கட்டமைக்கவோ அல்லது  அழிக்கவோ முடியும். மேலும் அப்படிச் செய்வது அவனுடைய பிந்தைய வாழ்க்கையில் விளைவுகளையும் ஏற்படுத்தும். எனவே, மற்ற படைப்புகளுடன் ஒப்பிடும்போது, மனிதனால் அவனது முடிவுகளைத் தேர்வுசெய்ய முடியும், மேலும் அதற்கான வழிகளைத் தேர்ந்தெடுக்கவும் அவனால் முடியும். இந்த நோக்கத்திற்காகவே, அவன் தனது காரணிகளை நம்பியுள்ளான். ஆனால் அந்த வகையில், அவன் தவறுகள் செய்கிறான். அதன் விளைவாக, அவன் பெரிய செயல்பாடுகளை அடைந்து, இறுதியில் குழப்பத்தில் சிக்கிக் கொள்கிறான். அவனது சொத்தாக இருக்கும் அவனுடைய இந்த தன்மை, அதன் தவறான வழியில் பயன்பபடுத்தியதால், அது அவனை சுயமாக செயல்படாதவாறு ஆக்கிவிட்டது. ஏனெனில்,  மனித அறிவு அவனை சில வரம்புகள் வரை மட்டுமே அவனை வழிநடத்துகிறது, ஏனெனில் அது  அறியப்படாத விஷயங்களைக் கண்டறிய அறியப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் செயல்படுகிறது . இது இயற்பியலின் களத்தில் ஓரளவுக்கு திறமையாக செயல்பட்டாலும், அடிப்படை தேவைகளின் அரங்கில் நுழையும் போது , கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பற்றிய விரிவான அறிவை வைத்திருக்க வேண்டியுள்ளதால் , அது  அவனுக்கு அனுமானங்களை  மட்டுமே தருகிறது. வாழ்க்கையின் இறுதிகட்ட உண்மைகளைக் கண்டறிய மனிதனால் இயலாது என்பதே இயற்கையின் நியதியாகும் . இருப்பினும், மனித ஆன்மா அந்த இறுதி உண்மைகளை அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது, அவை இல்லாமல் வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் விவரிக்கப்படாமலும், மனித முடிவின் உண்மையான குறியீடுகள் இணைக்கப்படாமலும் போய்விடும். விஞ்ஞானத்தால் அதை நமக்கு வழங்க முடியாது. ஏனெனில், அது  உடல் ரீதியான யதார்த்தத்துடன் மட்டுமே செயல்படுகிறது ; தத்துவங்களாலும் அதை நமக்கு கொடுக்க முடியாது. ஏனெனில், அது எடுகோள்கள் மற்றும் அனுமானங்களின் மூலமே செயல்படுகிறது. இந்த கட்டத்தில்தான் மனித ஆத்மா சர்வவல்லமையுள்ள மாபெரும் ஆற்றல் படைத்த புலக் கண்ணுக்குத் தெரியாத   அல்லாஹ்விடம் வழிகாட்டுதலுக்காக அழுகிறது. காரணம், அவனே எல்லா வாழ்கைக்கும் மூலமாக இருக்கிறான். இறைவனின் உதவியின்றி மனிதனால் இந்நிலையைத் தொடர முடியாது.  காரணம் ஆன்மா அதன் பாதையை வெளிச்சம் போடக்கூடிய ஒரு ஜோதியையும் , உறுதியான அறிவின் அடிப்படையில் வழிகாட்டலை வழங்கக்கூடிய ஒரு வழிகாட்டியையும் வைத்திருக்க விரும்புகிறது. எனவே, மனிதகுலத்திற்கு அத்தகைய உறுதியான, நேர்மறையான மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய வழிகாட்டுதல் தேவைப்படுகிறது, மேலும் இயற்பியல் ரீதியாக நம்மையும் இப்பிரபஞ்சத்தையும் நிலைநிறுத்தும்  அன்பான  படைப்பாளன் மனிதனின்  இந்த முக்கிய தேவையை அவனுக்கு வழங்குவதற்காக அதை தானே எடுத்துக் கொண்டான். பூமியில் மனிதகுலத்தின்  தொடக்கத்திலிருந்தே மதம் இருந்து வந்தது என்பதற்கு மனித வரலாறு சான்றளிக்கிறது .  இறைவன் தன் படைப்பின் மூலம் மனிதகுலத்திற்கு வழிகாட்டுதல்களை வழங்குகிறான் என்பதை இது காட்டுகிறது. இதனால்  இருளில் சிக்கிக்கொள்ளாமல் அதன் இயற்கை நிலைக்கு இணங்கி சட்ட திட்டங்களின் வழி நடக்க மனித குலத்தால் முடியும். இந்த வழிகாட்டுதல்களை வழங்க இறைவனால் நியமிக்கப்பட்டவர்களே தீர்க்கதரிசிகள், இறைத்தூதர்கள் மற்றும் அப்போஸ்தர்கள் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுபவர்கள் ஆவர் . அவர்களே அந்த வழிகாட்டலை இறைவெளிப்பாடுகளின் வடிவத்தில் பெறுகிறார்கள்.  அதை அவர்கள் எழுத்து வடிவத்தில் மக்களுக்கு முன்வைக்கும்போது, அது ஒரு வேதம் அல்லது வெளிப்பாடுகளின் புத்தகம் என்றழைக்கப்படுகிறது. திருக்குர்ஆனில் உள்ளபடி அல்லாஹ்வின் இறுதிச் சட்டங்களைப் பெறுவதற்கான பேரருளைப் பெற்ற கடைசி சட்ட திட்டங்களைக் கொண்ட இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் ஆவார்கள். இதன் பொருள், அல்லாஹ் தனது நேசத்திற்குரிய தூதரான முஹம்மது (ஸல்) அவர்களின் சமூகத்தினுள் தனது ஏனைய அடியார்களுடன் பேசமாட்டான் என்பதோ அல்லது மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும் வகையில் கண்களுக்கு புலப்படாதவற்றிலிருந்து இத்தகைய தெய்வீக தகவல்களை எழுதவோ அல்லது வெளிப்படுத்தவோ அவன் தனது அடியார்களை தேர்ந்தெடுக்க  மாட்டான் என்பதோ அல்ல. நிச்சயமாக அவ்வாறு இல்லை! இந்த முந்தைய  ஏடுகள் யாவும் அல்லாஹ்விடமிருந்து வந்த சட்டங்களின் மொத்த வடிவம் அல்ல. அவை வெளிப்பாடுகளின் புத்தகங்களே. அத்தகைய ஏடுகள் அனைத்தும் இறுதி வேதமான திருக்குர்ஆனின் கட்டளைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும், மேலும் அதன் நம்பகத்தன்மையையும் புனிதத்தையும் நிலைநிறுத்த வேண்டும். சட்டங்ளை வகுக்கும் சில குறிப்பிட்ட இறைத்தூதர்கள் மட்டுமே தெய்வீக சட்டங்கள் அல்லது தெய்வீக வேதவசனங்களுடன் அலங்கரிக்கப்பட்டனர், மேலும் அந்த வசனங்களின் உள்ளடக்கங்கள் எல்லா நிலையிலும் மனிதனின் சரியான வாழ்க்கைக்காக படைப்பாளனும் பிரபஞ்சத்தின் பாதுகாவலனும் ஆகிய அல்லாஹ் நியமித்த சட்டங்களாக இருந்தன. திருக்குர்ஆன் அத்தகைய கடைசி சட்டங்களைக் கொண்டதாகும்.  நியாயத்தீர்ப்பு நாள் வரை நிலைத்திருக்கும் இனிமை நிறைந்த  முழுமையான சட்டங்களின் தொகுப்பாகும்.
    வழிகாட்டுதலின் நோக்கம் மனிதனை இறைச்சட்டத்திற்கு எப்போதும் அடிபணியச் செய்வதை அவனுக்குக் கற்பிப்பதே ஆகும். இது இஸ்லாம் என்ற வார்த்தையுடைய  அரபிப் பொருளின்  அணுகுமுறை மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. இந்த  தெய்வீக வழிகாட்டுதல் மனிதனை அவனுடைய உண்மையான இயற்கைநிலைக்குரிய சட்ட திட்டங்களுக்கு இணங்க செயல்பட வேண்டும் என்றும்,  அல்லாஹ்விற்கு அடிபணியும் உயிரினமாக இருப்பது என்ற அவனது இயல்பை ஏற்றுக்கொள்ள அவனது முழு விருப்பத்தையும் சுதந்திரத்தையும் பயன்படுத்த வேண்டும் என்றும் விரும்புகிறது . மற்ற உயிரினங்களைப் போன்று ஒரு இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து, அதில் இயற்கையின் விதிகளுக்கு இணங்கி இருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் அவனுக்கு இல்லாவிட்டாலும், உண்மையை அறிந்து, அதன்படி நடப்பது அவனுக்குறிய கடினமான கடமையாக உள்ளது. எனவே, மற்ற உயிரினங்களோடு ஒப்பிடுகையில், அவற்றைப் போல் இல்லாமல் மனிதன் இந்த உலகத்தின் சோதனைகளில் வெற்றி பெற்றுவிட்டால், அவனுக்கு வழங்கப்படும் வெகுமதிகள் எண்ணிலடங்காதவையாக இருக்கும். சுருக்கமாக கூறுவதானால், இந்த தெய்வீக வழிகாட்டி மனிதனை ஒரு முஸ்லிமாக வாழ வேண்டுகிறது.  . இது குறித்து திருக்குர்ஆன் கூறுகையில்: அல்லாஹ் மனிதர்களை எதில் படைத்தானோ அத்தகைய இயற்கை மார்க்க(மாகிய இஸ்லா)த்தை (பற்றிப்பிடித்து நிலைத்திருப்பீராக!) அல்லாஹ்வின் படைப்பில் எவ்வித மாற்றமும் இல்லை; இதுவே (சரியான) நிலையான மார்க்கமாகும்.எனினும், மனிதர்களில் பெரும்பாலானோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள். (30: 31). சர்வவல்லமையுள்ள இறைவனிடமிருந்து  வந்த இந்த வழிகாட்டுதல் ஒரு குறிப்பிட்ட குழுக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கோ மட்டுப்படுத்தப்படவில்லை. எனினும், இது உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும், அனைத்து இனங்களுக்கும்  பொதுவாக அனுப்பப்பட்டதாகும் .  இறைவனின் அருள் உலகம் முழுக்க  பொதுவான முறையில் வழங்கப்பட்டதாகும். இது குறித்து திருக்குர்ஆன் கூறுகையில் : எந்த ஒரு சமுதாயத்தவருக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர் சென்றே தவிர இல்லை. (35: 26).எனவே, வரலாறு அவர்களில் சிலரின் பெயர்களைப் பாதுகாத்து வருகிறது, அதே சமயம் பலரின் பெயர்களும் பணிகளும் மக்களால் மறக்கடிக்கப்பட்டுவிட்டன. அவர்களுள்  இன்னும் நினைவுகூறப்பட்டு, திருக்குர்னிலும் குறிப்பிடப்பட்ட இறைத்தூதர்களின் பெயர்களாவன: ஆதம், நூஹ் , இப்ராஹிம், இஸ்மாயில், இஸ்ஹாக் , யாகூப் , யூசுஃப், மூசா, தாவுத் , சுலைமான், ஜகரிய்யா , யஹ்யா , ஈஸா (அலை) ஆகியோர் மற்றும் முஹம்மது ( ஸல் ) அவர்கள் . முஹம்மது நபி ( ஸல் ) அவர்கள் கிறிஸ்தவ சகாப்தத்தின் ஏழாம் நூற்றாண்டில் தோன்றி , மனிதகுலத்தின் முந்தைய இறைத்தூதர்களின் பாதையில் மக்களை திரும்ப அழைத்தார்கள். மேலும், திருக்குர்ஆனை இவ்வுலகிற்கு வழங்கினார்கள்.  அந்த குர்ஆன் முந்தைய இறைத்தூதர்கள் கற்பித்த சட்ட திட்டங்களின் சரியான மற்றும் விரிவான வடிவத்தை உள்ளடக்கியதாகும்.  . முந்தைய இறைத்தூதர்களின் கற்பித்தல்களுக்கு யூத மதம், கிறித்தவம் என மக்கள் பலவிதமாகப் பெயரிட்டிருந்தனர். இஸ்லாத்தின் இறுதித்தூதரான நபி முஹம்மது ( ஸல் ) அவர்கள்  உண்மையான, அசலான, அர்த்தமுள்ள பெயரான இஸ்லாத்தை  நினைவுறுத்தினார்கள். திருக்குர்ஆனின் வார்த்தைகள் வாயிலாக இதை அவர்கள் நமக்கு உறுதிப்படுத்துகிறார்கள்:  நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாமாகும்; (அதாவது அவருடைய விருப்பத்திற்கும் வழிகாட்டுதலுக்கும் சரணடைதல்). (3: 20). மீண்டும் ஒருமுறை எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகையில், உங்கள் தந்தை இப்ராஹீமுடைய மார்க்கத்தை (கடைபிடியுங்கள்!). அவன்தான் (அல்லாஹ்) உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். (22: 78) மீண்டும், சர்வவல்லமையுள்ள அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்: இப்ராஹிம் யூதராக இருக்கவில்லை; கிரிஸ்துவராகவும்  இல்லை. எனினும்,  அவர் ஹனீஃபாக (அசத்திய மார்க்கங்கள் அனைத்தை விட்டும் சத்திய மார்க்கத்தின்பால் சார்ந்தவராக), முஸ்லிமாக (அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவராக) இருந்தார்; மேலும், அவர் இணைவைப்போரில் ஒருவராகவும் இருக்கவில்லை. (3: 68). ஆகவே , மனித இனம் தோன்றியதிலிருந்தே மனிதனின் இயல்பான வாழ்க்கைக்கு ஏற்ற முறையாக இஸ்லாமிய மார்க்கம் இருப்பதாக நாம் உணர்கிறோம் . நாம் அனைவரும் அல்லாஹ்வால் இஸ்லாமியர்களாக ஆக்கப்பட்டிருக்கிறோம், அவனுக்கே நாம் அடிபணிபவர்களாகவும் இருக்கிறோம். அதனால்தான், முழுமையான மற்றும் இறுதி வாழ்க்கை நெறிமுறையை வகுத்துத் தரும் திருக்குர்ஆனில், நம்முடைய உண்மையான மார்க்கம் இஸ்லாம் என்பதையும், அதைத் தவிர்த்து வேறு எதுவும் இல்லை  என்பதையும் அல்லாஹ் எடுத்துரைத்துள்ளான். இது அல்லாஹ்வுடனான நம் உறவின் புனிதத்தன்மையாகும். ஏனென்றால் அவனுடைய கருணையின் உயரத்தை அடைய நாம் அவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவனுடைய அன்பிலும் அருகாமையிலும் முழுமையானவர்களாக கருதப்பட வேண்டும். எனவே, அல்லாஹ் நம் ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையில் தூய இஸ்லாத்தை உணரச் செய்வானாக.  ஏனெனில், அதுவே  நம்முடைய வாழ்க்கையின் நோக்கமாகும். நமக்குள் இருக்கும் இஸ்லாமியம் தான் இந்த உலகம் முழுவதையும் ஒளிரச் செய்யும். மேலும் இந்த இஸ்லாம்  நம்மை நாம் பரிபூரணமாக்கிக்கொள்ள நமக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்த ஓர் பரிசாகும். இதனால் மனிதகுலத்தின் சீர்திருத்தத்திற்கான உண்மையான வழிகாட்டிகளாக  செயல்படவும்,  மக்களை அல்லாஹ்வின் பக்கம் வழிநடத்தவும் நம்மால் முடியும்.

    ReplyForward

  • Elementor #2523

    *இஸ்லாம் என்றால் என்ன?**

     
    இஸ்லாம்’ என்ற சொல் அரபு மூலச்சொல்லான  “ஸில்ம்” என்பதிலிருந்து வந்தது. அதன் பொருள் ‘அமைதி’ என்பதாகும். ஆனால், இஸ்லாத்தை முழு மனதுடன் ஏற்றுக்கொண்ட பல்வேறு நாட்டவர்களைப் பொருத்தவரை, அவர்கள் அரபு மொழியை நன்கு அறியாததால், இஸ்லாத்தின் சரியான அளவுகோலையும் சரியான குறிப்பீட்டையும் முழுமையாக புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் . ஆகவே, இன்று எனது உரையில் இஸ்லாம் என்றால் என்ன? என்பது பற்றிய விளக்கத்தைத் தொடரலாம் என்று நினைக்கிறேன் .
     
    என் அன்பான சகோதர சகோதரிகளே! இஸ்லாம்  நம் இதயத்தை துடிக்கச் செய்கிறது. வானங்களிலும், பூமியிலும் உள்ள எல்லா உயிரினங்கள், மனித இனம் ஆகியவற்றின் உடலையும் உள்ளத்தையும் புத்துயிர் பெறச் செய்கிறது . வானம் மற்றும் பூமியின் அழகிய கட்டமைப்பை நாம் சுற்றிப் பார்க்கும்போது , அது ஒரு பெரிய படைப்பாளனின் படைப்பு என்பதற்கான சாட்சியத்தை  கொண்டிருக்கிறது. நவீன விஞ்ஞானம் தீவிரமான ஆய்வுகளின் மூலம் , நமக்குக் கற்பித்த விஷயமானது, இந்த  பிரபஞ்சத்தின் ஒழுங்குமுறை  மற்றும் இதன் வடிவமைப்பு ஒரு உயர்ந்த சக்தியின் இருப்பை நம்புவதற்கு நம்மை இட்டுச் செல்கிறது.  இந்த சிக்கலான ஆனால் நேர்த்தியான வடிவமைப்பிற்கு பொறுப்பான ஒரு உயர்ந்த கண்காணிப்பு இருக்க வேண்டும் என்பதையும்,  இதைப் படைத்து, இதன் வாழ்க்கை மற்றும் வளர்ச்சிக்கு தேவையான அனைத்தையும் வழங்குகிற  ஒரு பிரம்மாண்டமான படைப்பாளன் இருக்க வேண்டும் என்பதையும் இது நமக்கு உணர்த்துகிறது.  புதிய ஆராய்ச்சிகள் இந்த பூலோகத்தைப் போன்ற பல வான்மண்டலங்கள் உள்ளன என்பதையும் அறிவியல் ஞானத்தின் மூலம் அவை இறைவனின் பரந்த சக்தியையும் பிரம்மாண்டத்தையும் உணர்த்துவதையும்  உறுதி செய்கிறது.
     
    ஆகவே, நவீன விஞ்ஞானம் கூட   எண்ணற்ற ஆராய்ச்சிகளின் அடிப்படையில்  பரிசுத்த வேதங்களில் அதிலும் குறிப்பாக இறுதி சட்டங்களைக் கொண்ட  திருக்குர்ஆனில் கூறப்படும் இறைவனின் வார்த்தைகள்  அனைத்தும் உண்மை என்று நிரூபிக்க வந்துள்ளது என்பதைக் காண்கிறோம் .
     
    இந்த பிரபஞ்சம், அறிவியல் நமக்குத் தெரிவித்தபடி, ஒரு கரிம வடிவமாகும். அதன் பகுதிகள் அனைத்தும் அழகாகவும் இணக்கமாகவும் ஒன்றோடொன்று தொடர்புடையவையாகவும் உள்ளது. மேலும் இது இறைநியதியின் ஒரு களமாகும். அதாவது  இதில் உள்ள ஒவ்வொரு துகளின் இருப்பும் இறைநியதிக்குட்பட்டதாகும். அவை ஒரு நிர்ணயிக்கப்பட்ட, மாற்ற முடியாத நியதிக்கு அடிபணிந்து நகர்கிறது . நமது சூரிய மண்டலத்தில் உள்ள பெரிய கிரகங்களோ (பிற விண்மீன் திரள்கள்) அல்லது உயிராற்றலைக் கொண்டிருக்கும் மண்ணின் சிறிய துகள்களோ இந்த நியதியிலிருந்து சற்றும் விலகிச் செல்ல முடியாது. அவைகளின் வாழ்க்கை ஒரு முழுமையான அர்ப்பணிப்பு வாழ்க்கையாகும். அவை அல்லாஹ்வின் சட்ட திட்டங்களின்படி வாழ்கின்றன. ஒருபோதும் அவை அதன் போக்கிலிருந்தும், அதன் நோக்கத்திலிருந்தும் விலகுவதில்லை . எனவே உண்மையில், அவற்றின் வாழ்க்கை இஸ்லாமிய வாழ்க்கையாகும். அதாவது இறைக்கட்டளைகளுக்கு
     அடிபணிந்து நடக்கும் வாழ்க்கையாகும் . வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவை முஸ்லிம்களாக இருக்கின்றன. திருக்குர்ஆன் இந்த உண்மையை பின்வரும் வார்த்தைகளில் குறிப்பிடுகிறது:
     
    வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தும் விரும்பினாலும், வெறுத்தாலும் அவனுக்கே முழுமையாக கீழ்ப்படிந்து விட்டன.
    அவர்கள் அனைவரும் அவனிடமே மீண்டு வருவார்கள். (3: 84).
     
    இந்த பொது நியதிக்கு ஒரே விதிவிலக்கு மனிதனே. படைப்பினங்களின் முழு கட்டமைப்பிலும் அவன் தனித்துவமானவன். அவன் பகுத்தறிவு மட்டுமல்ல,  சுதந்திரமாக செயல்படும் விருப்ப உரிமையும்  கொண்டிருக்கிறான். இது அவனது செயல்களின் போக்கையும், நடத்தையின் முறையையும் கணிக்க முடியாததாக ஆக்குகிறது . சூரியனின் செயலை ஒருவர் கணக்கிட முடியும் , ஏனெனில் அது ஒரு நிறுவப்பட்ட நியதியின் கீழ் செயல்படுகிறது, மேலும் அதிலிருந்து விலகுவதற்கான சுதந்திரம் அதற்கு இல்லை. ஆனால், மனிதனின் விஷயத்தில் ஒருவரால் அவனை கணிக்க முடியாது . பிரபஞ்சத்தின் அனைத்து பொருட்களின் செயல்பாடும் ஒரு நியமிக்கப்பட்ட ஒழுங்கிலும் சமநிலையிலும் நிர்பந்தமாக வைக்கப்பட்டுள்ளது , ஆனால் மனிதன் மட்டுமே வாழ்க்கையில் தனது போக்கைத் தேர்ந்தெடுப்பதற்கான அனுமதியைப் பெற்றிருக்கிறான் . அவனால் தன்னைக்தானே கட்டமைக்கவோ அல்லது  அழிக்கவோ முடியும். மேலும் அப்படிச் செய்வது அவனுடைய பிந்தைய வாழ்க்கையில் விளைவுகளையும் ஏற்படுத்தும்.
     
    எனவே, மற்ற படைப்புகளுடன் ஒப்பிடும்போது, மனிதனால் அவனது முடிவுகளைத் தேர்வுசெய்ய முடியும், மேலும் அதற்கான வழிகளைத் தேர்ந்தெடுக்கவும் அவனால் முடியும். இந்த நோக்கத்திற்காகவே, அவன் தனது காரணிகளை நம்பியுள்ளான். ஆனால் அந்த வகையில், அவன் தவறுகள் செய்கிறான். அதன் விளைவாக, அவன் பெரிய செயல்பாடுகளை அடைந்து, இறுதியில் குழப்பத்தில் சிக்கிக் கொள்கிறான். அவனது சொத்தாக இருக்கும் அவனுடைய இந்த தன்மை, அதன் தவறான வழியில் பயன்பபடுத்தியதால், அது அவனை சுயமாக செயல்படாதவாறு ஆக்கிவிட்டது. ஏனெனில்,  மனித அறிவு அவனை சில வரம்புகள் வரை மட்டுமே அவனை வழிநடத்துகிறது, ஏனெனில் அது  அறியப்படாத விஷயங்களைக் கண்டறிய அறியப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் செயல்படுகிறது . இது இயற்பியலின் களத்தில் ஓரளவுக்கு திறமையாக செயல்பட்டாலும், அடிப்படை தேவைகளின் அரங்கில் நுழையும் போது , கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பற்றிய விரிவான அறிவை வைத்திருக்க வேண்டியுள்ளதால் , அது  அவனுக்கு அனுமானங்களை  மட்டுமே தருகிறது.
     
    வாழ்க்கையின் இறுதிகட்ட உண்மைகளைக் கண்டறிய மனிதனால் இயலாது என்பதே இயற்கையின் நியதியாகும் . இருப்பினும், மனித ஆன்மா அந்த இறுதி உண்மைகளை அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது, அவை இல்லாமல் வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் விவரிக்கப்படாமலும், மனித முடிவின் உண்மையான குறியீடுகள் இணைக்கப்படாமலும் போய்விடும். விஞ்ஞானத்தால் அதை நமக்கு வழங்க முடியாது. ஏனெனில், அது  உடல் ரீதியான யதார்த்தத்துடன் மட்டுமே செயல்படுகிறது ; தத்துவங்களாலும் அதை நமக்கு கொடுக்க முடியாது. ஏனெனில், அது எடுகோள்கள் மற்றும் அனுமானங்களின் மூலமே செயல்படுகிறது.
     
    இந்த கட்டத்தில்தான் மனித ஆத்மா சர்வவல்லமையுள்ள மாபெரும் ஆற்றல் படைத்த புலக் கண்ணுக்குத் தெரியாத   அல்லாஹ்விடம் வழிகாட்டுதலுக்காக அழுகிறது. காரணம், அவனே எல்லா வாழ்கைக்கும் மூலமாக இருக்கிறான். இறைவனின் உதவியின்றி மனிதனால் இந்நிலையைத் தொடர முடியாது.  காரணம் ஆன்மா அதன் பாதையை வெளிச்சம் போடக்கூடிய ஒரு ஜோதியையும் , உறுதியான அறிவின் அடிப்படையில் வழிகாட்டலை வழங்கக்கூடிய ஒரு வழிகாட்டியையும் வைத்திருக்க விரும்புகிறது. எனவே, மனிதகுலத்திற்கு அத்தகைய உறுதியான, நேர்மறையான மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய வழிகாட்டுதல் தேவைப்படுகிறது, மேலும் இயற்பியல் ரீதியாக நம்மையும் இப்பிரபஞ்சத்தையும் நிலைநிறுத்தும்  அன்பான  படைப்பாளன் மனிதனின்  இந்த முக்கிய தேவையை அவனுக்கு வழங்குவதற்காக அதை தானே எடுத்துக் கொண்டான்.
     
    பூமியில் மனிதகுலத்தின்  தொடக்கத்திலிருந்தே மதம் இருந்து வந்தது என்பதற்கு மனித வரலாறு சான்றளிக்கிறது .  இறைவன் தன் படைப்பின் மூலம் மனிதகுலத்திற்கு வழிகாட்டுதல்களை வழங்குகிறான் என்பதை இது காட்டுகிறது. இதனால்  இருளில் சிக்கிக்கொள்ளாமல் அதன் இயற்கை நிலைக்கு இணங்கி சட்ட திட்டங்களின் வழி நடக்க மனித குலத்தால் முடியும். இந்த வழிகாட்டுதல்களை வழங்க இறைவனால் நியமிக்கப்பட்டவர்களே தீர்க்கதரிசிகள், இறைத்தூதர்கள் மற்றும் அப்போஸ்தர்கள் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுபவர்கள் ஆவர் . அவர்களே அந்த வழிகாட்டலை இறைவெளிப்பாடுகளின் வடிவத்தில் பெறுகிறார்கள்.  அதை அவர்கள் எழுத்து வடிவத்தில் மக்களுக்கு முன்வைக்கும்போது, அது ஒரு வேதம் அல்லது வெளிப்பாடுகளின் புத்தகம் என்றழைக்கப்படுகிறது. திருக்குர்ஆனில் உள்ளபடி அல்லாஹ்வின் இறுதிச் சட்டங்களைப் பெறுவதற்கான பேரருளைப் பெற்ற கடைசி சட்ட திட்டங்களைக் கொண்ட இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் ஆவார்கள். இதன் பொருள், அல்லாஹ் தனது நேசத்திற்குரிய தூதரான முஹம்மது (ஸல்) அவர்களின் சமூகத்தினுள் தனது ஏனைய அடியார்களுடன் பேசமாட்டான் என்பதோ அல்லது மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும் வகையில் கண்களுக்கு புலப்படாதவற்றிலிருந்து இத்தகைய தெய்வீக தகவல்களை எழுதவோ அல்லது வெளிப்படுத்தவோ அவன் தனது அடியார்களை தேர்ந்தெடுக்க  மாட்டான் என்பதோ அல்ல. நிச்சயமாக அவ்வாறு இல்லை! இந்த முந்தைய  ஏடுகள் யாவும் அல்லாஹ்விடமிருந்து வந்த சட்டங்களின் மொத்த வடிவம் அல்ல. அவை வெளிப்பாடுகளின் புத்தகங்களே. அத்தகைய ஏடுகள் அனைத்தும் இறுதி வேதமான திருக்குர்ஆனின் கட்டளைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும், மேலும் அதன் நம்பகத்தன்மையையும் புனிதத்தையும் நிலைநிறுத்த வேண்டும். சட்டங்ளை வகுக்கும் சில குறிப்பிட்ட இறைத்தூதர்கள் மட்டுமே தெய்வீக சட்டங்கள் அல்லது தெய்வீக வேதவசனங்களுடன் அலங்கரிக்கப்பட்டனர், மேலும் அந்த வசனங்களின் உள்ளடக்கங்கள் எல்லா நிலையிலும் மனிதனின் சரியான வாழ்க்கைக்காக படைப்பாளனும் பிரபஞ்சத்தின் பாதுகாவலனும் ஆகிய அல்லாஹ் நியமித்த சட்டங்களாக இருந்தன. திருக்குர்ஆன் அத்தகைய கடைசி சட்டங்களைக் கொண்டதாகும்.  நியாயத்தீர்ப்பு நாள் வரை நிலைத்திருக்கும் இனிமை நிறைந்த  முழுமையான சட்டங்களின் தொகுப்பாகும்.
     
    வழிகாட்டுதலின் நோக்கம் மனிதனை இறைச்சட்டத்திற்கு எப்போதும் அடிபணியச் செய்வதை அவனுக்குக் கற்பிப்பதே ஆகும். இது இஸ்லாம் என்ற வார்த்தையுடைய  அரபிப் பொருளின்  அணுகுமுறை மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. இந்த  தெய்வீக வழிகாட்டுதல் மனிதனை அவனுடைய உண்மையான இயற்கைநிலைக்குரிய சட்ட திட்டங்களுக்கு இணங்க செயல்பட வேண்டும் என்றும்,  அல்லாஹ்விற்கு அடிபணியும் உயிரினமாக இருப்பது என்ற அவனது இயல்பை ஏற்றுக்கொள்ள அவனது முழு விருப்பத்தையும் சுதந்திரத்தையும் பயன்படுத்த வேண்டும் என்றும் விரும்புகிறது . மற்ற உயிரினங்களைப் போன்று ஒரு இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து, அதில் இயற்கையின் விதிகளுக்கு இணங்கி இருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் அவனுக்கு இல்லாவிட்டாலும், உண்மையை அறிந்து, அதன்படி நடப்பது அவனுக்குறிய கடினமான கடமையாக உள்ளது. எனவே, மற்ற உயிரினங்களோடு ஒப்பிடுகையில், அவற்றைப் போல் இல்லாமல் மனிதன் இந்த உலகத்தின் சோதனைகளில் வெற்றி பெற்றுவிட்டால், அவனுக்கு வழங்கப்படும் வெகுமதிகள் எண்ணிலடங்காதவையாக இருக்கும். சுருக்கமாக கூறுவதானால், இந்த தெய்வீக வழிகாட்டி மனிதனை ஒரு முஸ்லிமாக வாழ வேண்டுகிறது.  . இது குறித்து திருக்குர்ஆன் கூறுகையில்:
     
    அல்லாஹ் மனிதர்களை எதில் படைத்தானோ அத்தகைய இயற்கை மார்க்க(மாகிய இஸ்லா)த்தை (பற்றிப்பிடித்து நிலைத்திருப்பீராக!) அல்லாஹ்வின் படைப்பில் எவ்வித மாற்றமும் இல்லை; இதுவே (சரியான) நிலையான மார்க்கமாகும்.எனினும், மனிதர்களில் பெரும்பாலானோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள். (30: 31).
     
    சர்வவல்லமையுள்ள இறைவனிடமிருந்து  வந்த இந்த வழிகாட்டுதல் ஒரு குறிப்பிட்ட குழுக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கோ மட்டுப்படுத்தப்படவில்லை. எனினும், இது உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும், அனைத்து இனங்களுக்கும்  பொதுவாக அனுப்பப்பட்டதாகும் .  இறைவனின் அருள் உலகம் முழுக்க  பொதுவான முறையில் வழங்கப்பட்டதாகும். இது குறித்து திருக்குர்ஆன் கூறுகையில் :
     
    எந்த ஒரு சமுதாயத்தவருக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர் சென்றே தவிர இல்லை. (35: 26).
    எனவே, வரலாறு அவர்களில் சிலரின் பெயர்களைப் பாதுகாத்து வருகிறது, அதே சமயம் பலரின் பெயர்களும் பணிகளும் மக்களால் மறக்கடிக்கப்பட்டுவிட்டன. அவர்களுள்  இன்னும் நினைவுகூறப்பட்டு, திருக்குர்னிலும் குறிப்பிடப்பட்ட இறைத்தூதர்களின் பெயர்களாவன: ஆதம், நூஹ் , இப்ராஹிம், இஸ்மாயில், இஸ்ஹாக் , யாகூப் , யூசுஃப், மூசா, தாவுத் , சுலைமான், ஜகரிய்யா , யஹ்யா , ஈஸா (அலை) ஆகியோர் மற்றும் முஹம்மது ( ஸல் ) அவர்கள் .
     
    முஹம்மது நபி ( ஸல் ) அவர்கள் கிறிஸ்தவ சகாப்தத்தின் ஏழாம் நூற்றாண்டில் தோன்றி , மனிதகுலத்தின் முந்தைய இறைத்தூதர்களின் பாதையில் மக்களை திரும்ப அழைத்தார்கள். மேலும், திருக்குர்ஆனை இவ்வுலகிற்கு வழங்கினார்கள்.  அந்த குர்ஆன் முந்தைய இறைத்தூதர்கள் கற்பித்த சட்ட திட்டங்களின் சரியான மற்றும் விரிவான வடிவத்தை உள்ளடக்கியதாகும்.  . முந்தைய இறைத்தூதர்களின் கற்பித்தல்களுக்கு யூத மதம், கிறித்தவம் என மக்கள் பலவிதமாகப் பெயரிட்டிருந்தனர். இஸ்லாத்தின் இறுதித்தூதரான நபி முஹம்மது ( ஸல் ) அவர்கள்  உண்மையான, அசலான, அர்த்தமுள்ள பெயரான இஸ்லாத்தை  நினைவுறுத்தினார்கள். திருக்குர்ஆனின் வார்த்தைகள் வாயிலாக இதை அவர்கள் நமக்கு உறுதிப்படுத்துகிறார்கள்: 
     
    நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாமாகும்; (அதாவது அவருடைய விருப்பத்திற்கும் வழிகாட்டுதலுக்கும் சரணடைதல்). (3: 20).
     
    மீண்டும் ஒருமுறை எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகையில்,
     
    உங்கள் தந்தை இப்ராஹீமுடைய மார்க்கத்தை (கடைபிடியுங்கள்!). அவன்தான் (அல்லாஹ்) உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். (22: 78)
     
    மீண்டும், சர்வவல்லமையுள்ள அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்:
     
    இப்ராஹிம் யூதராக இருக்கவில்லை; கிரிஸ்துவராகவும்  இல்லை. எனினும்,  அவர் ஹனீஃபாக (அசத்திய மார்க்கங்கள் அனைத்தை விட்டும் சத்திய மார்க்கத்தின்பால் சார்ந்தவராக), முஸ்லிமாக (அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவராக) இருந்தார்; மேலும், அவர் இணைவைப்போரில் ஒருவராகவும் இருக்கவில்லை. (3: 68).
     
    ஆகவே , மனித இனம் தோன்றியதிலிருந்தே மனிதனின் இயல்பான வாழ்க்கைக்கு ஏற்ற முறையாக இஸ்லாமிய மார்க்கம் இருப்பதாக நாம் உணர்கிறோம் . நாம் அனைவரும் அல்லாஹ்வால் இஸ்லாமியர்களாக ஆக்கப்பட்டிருக்கிறோம், அவனுக்கே நாம் அடிபணிபவர்களாகவும் இருக்கிறோம். அதனால்தான், முழுமையான மற்றும் இறுதி வாழ்க்கை நெறிமுறையை வகுத்துத் தரும் திருக்குர்ஆனில், நம்முடைய உண்மையான மார்க்கம் இஸ்லாம் என்பதையும், அதைத் தவிர்த்து வேறு எதுவும் இல்லை  என்பதையும் அல்லாஹ் எடுத்துரைத்துள்ளான். இது அல்லாஹ்வுடனான நம் உறவின் புனிதத்தன்மையாகும். ஏனென்றால் அவனுடைய கருணையின் உயரத்தை அடைய நாம் அவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவனுடைய அன்பிலும் அருகாமையிலும் முழுமையானவர்களாக கருதப்பட வேண்டும்.
     
    எனவே, அல்லாஹ் நம் ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையில் தூய இஸ்லாத்தை உணரச் செய்வானாக.  ஏனெனில், அதுவே  நம்முடைய வாழ்க்கையின் நோக்கமாகும். நமக்குள் இருக்கும் இஸ்லாமியம் தான் இந்த உலகம் முழுவதையும் ஒளிரச் செய்யும். மேலும் இந்த இஸ்லாம்  நம்மை நாம் பரிபூரணமாக்கிக்கொள்ள நமக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்த ஓர் பரிசாகும். இதனால் மனிதகுலத்தின் சீர்திருத்தத்திற்கான உண்மையான வழிகாட்டிகளாக  செயல்படவும்,  மக்களை அல்லாஹ்வின் பக்கம் வழிநடத்தவும் நம்மால் முடியும்.