Jamaat Ul Sahih Al Islam Tamilnadu

இஸ்லாம் என்றால் என்ன

‘இஸ்லாம்’ என்ற சொல் அரபு மூலச்சொல்லான  “ஸில்ம்” என்பதிலிருந்து வந்தது. அதன் பொருள் ‘அமைதி’ என்பதாகும். ஆனால், இஸ்லாத்தை முழு மனதுடன் ஏற்றுக்கொண்ட பல்வேறு நாட்டவர்களைப் பொருத்தவரை, அவர்கள் அரபு மொழியை நன்கு அறியாததால், இஸ்லாத்தின் சரியான அளவுகோலையும் சரியான குறிப்பீட்டையும் முழுமையாக புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் . ஆகவே, இன்று எனது உரையில் இஸ்லாம் என்றால் என்ன? என்பது பற்றிய விளக்கத்தைத் தொடரலாம் என்று நினைக்கிறேன் . என் அன்பான சகோதர சகோதரிகளே! இஸ்லாம்  நம் இதயத்தை துடிக்கச் செய்கிறது. வானங்களிலும், பூமியிலும் உள்ள எல்லா உயிரினங்கள், மனித இனம் ஆகியவற்றின் உடலையும் உள்ளத்தையும் புத்துயிர் பெறச் செய்கிறது . வானம் மற்றும் பூமியின் அழகிய கட்டமைப்பை நாம் சுற்றிப் பார்க்கும்போது , அது ஒரு பெரிய படைப்பாளனின் படைப்பு என்பதற்கான சாட்சியத்தை  கொண்டிருக்கிறது. நவீன விஞ்ஞானம் தீவிரமான ஆய்வுகளின் மூலம் , நமக்குக் கற்பித்த விஷயமானது, இந்த  பிரபஞ்சத்தின் ஒழுங்குமுறை  மற்றும் இதன் வடிவமைப்பு ஒரு உயர்ந்த சக்தியின் இருப்பை நம்புவதற்கு நம்மை இட்டுச் செல்கிறது.  இந்த சிக்கலான ஆனால் நேர்த்தியான வடிவமைப்பிற்கு பொறுப்பான ஒரு உயர்ந்த கண்காணிப்பு இருக்க வேண்டும் என்பதையும்,  இதைப் படைத்து, இதன் வாழ்க்கை மற்றும் வளர்ச்சிக்கு தேவையான அனைத்தையும் வழங்குகிற  ஒரு பிரம்மாண்டமான படைப்பாளன் இருக்க வேண்டும் என்பதையும் இது நமக்கு உணர்த்துகிறது.  புதிய ஆராய்ச்சிகள் இந்த பூலோகத்தைப் போன்ற பல வான்மண்டலங்கள் உள்ளன என்பதையும் அறிவியல் ஞானத்தின் மூலம் அவை இறைவனின் பரந்த சக்தியையும் பிரம்மாண்டத்தையும் உணர்த்துவதையும்  உறுதி செய்கிறது.
ஆகவே, நவீன விஞ்ஞானம் கூட   எண்ணற்ற ஆராய்ச்சிகளின் அடிப்படையில்  பரிசுத்த வேதங்களில் அதிலும் குறிப்பாக இறுதி சட்டங்களைக் கொண்ட  திருக்குர்ஆனில் கூறப்படும் இறைவனின் வார்த்தைகள்  அனைத்தும் உண்மை என்று நிரூபிக்க வந்துள்ளது என்பதைக் காண்கிறோம் . இந்த பிரபஞ்சம், அறிவியல் நமக்குத் தெரிவித்தபடி, ஒரு கரிம வடிவமாகும். அதன் பகுதிகள் அனைத்தும் அழகாகவும் இணக்கமாகவும் ஒன்றோடொன்று தொடர்புடையவையாகவும் உள்ளது. மேலும் இது இறைநியதியின் ஒரு களமாகும். அதாவது  இதில் உள்ள ஒவ்வொரு துகளின் இருப்பும் இறைநியதிக்குட்பட்டதாகும். அவை ஒரு நிர்ணயிக்கப்பட்ட, மாற்ற முடியாத நியதிக்கு அடிபணிந்து நகர்கிறது . நமது சூரிய மண்டலத்தில் உள்ள பெரிய கிரகங்களோ (பிற விண்மீன் திரள்கள்) அல்லது உயிராற்றலைக் கொண்டிருக்கும் மண்ணின் சிறிய துகள்களோ இந்த நியதியிலிருந்து சற்றும் விலகிச் செல்ல முடியாது. அவைகளின் வாழ்க்கை ஒரு முழுமையான அர்ப்பணிப்பு வாழ்க்கையாகும். அவை அல்லாஹ்வின் சட்ட திட்டங்களின்படி வாழ்கின்றன. ஒருபோதும் அவை அதன் போக்கிலிருந்தும், அதன் நோக்கத்திலிருந்தும் விலகுவதில்லை . எனவே உண்மையில், அவற்றின் வாழ்க்கை இஸ்லாமிய வாழ்க்கையாகும். அதாவது இறைக்கட்டளைகளுக்கு அடிபணிந்து நடக்கும் வாழ்க்கையாகும் . வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவை முஸ்லிம்களாக இருக்கின்றன. திருக்குர்ஆன் இந்த உண்மையை பின்வரும் வார்த்தைகளில் குறிப்பிடுகிறது: வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தும் விரும்பினாலும், வெறுத்தாலும் அவனுக்கே முழுமையாக கீழ்ப்படிந்து விட்டன.அவர்கள் அனைவரும் அவனிடமே மீண்டு வருவார்கள். (3: 84). இந்த பொது நியதிக்கு ஒரே விதிவிலக்கு மனிதனே. படைப்பினங்களின் முழு கட்டமைப்பிலும் அவன் தனித்துவமானவன். அவன் பகுத்தறிவு மட்டுமல்ல,  சுதந்திரமாக செயல்படும் விருப்ப உரிமையும்  கொண்டிருக்கிறான். இது அவனது செயல்களின் போக்கையும், நடத்தையின் முறையையும் கணிக்க முடியாததாக ஆக்குகிறது . சூரியனின் செயலை ஒருவர் கணக்கிட முடியும் , ஏனெனில் அது ஒரு நிறுவப்பட்ட நியதியின் கீழ் செயல்படுகிறது, மேலும் அதிலிருந்து விலகுவதற்கான சுதந்திரம் அதற்கு இல்லை. ஆனால், மனிதனின் விஷயத்தில் ஒருவரால் அவனை கணிக்க முடியாது . பிரபஞ்சத்தின் அனைத்து பொருட்களின் செயல்பாடும் ஒரு நியமிக்கப்பட்ட ஒழுங்கிலும் சமநிலையிலும் நிர்பந்தமாக வைக்கப்பட்டுள்ளது , ஆனால் மனிதன் மட்டுமே வாழ்க்கையில் தனது போக்கைத் தேர்ந்தெடுப்பதற்கான அனுமதியைப் பெற்றிருக்கிறான் . அவனால் தன்னைக்தானே கட்டமைக்கவோ அல்லது  அழிக்கவோ முடியும். மேலும் அப்படிச் செய்வது அவனுடைய பிந்தைய வாழ்க்கையில் விளைவுகளையும் ஏற்படுத்தும். எனவே, மற்ற படைப்புகளுடன் ஒப்பிடும்போது, மனிதனால் அவனது முடிவுகளைத் தேர்வுசெய்ய முடியும், மேலும் அதற்கான வழிகளைத் தேர்ந்தெடுக்கவும் அவனால் முடியும். இந்த நோக்கத்திற்காகவே, அவன் தனது காரணிகளை நம்பியுள்ளான். ஆனால் அந்த வகையில், அவன் தவறுகள் செய்கிறான். அதன் விளைவாக, அவன் பெரிய செயல்பாடுகளை அடைந்து, இறுதியில் குழப்பத்தில் சிக்கிக் கொள்கிறான். அவனது சொத்தாக இருக்கும் அவனுடைய இந்த தன்மை, அதன் தவறான வழியில் பயன்பபடுத்தியதால், அது அவனை சுயமாக செயல்படாதவாறு ஆக்கிவிட்டது. ஏனெனில்,  மனித அறிவு அவனை சில வரம்புகள் வரை மட்டுமே அவனை வழிநடத்துகிறது, ஏனெனில் அது  அறியப்படாத விஷயங்களைக் கண்டறிய அறியப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் செயல்படுகிறது . இது இயற்பியலின் களத்தில் ஓரளவுக்கு திறமையாக செயல்பட்டாலும், அடிப்படை தேவைகளின் அரங்கில் நுழையும் போது , கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பற்றிய விரிவான அறிவை வைத்திருக்க வேண்டியுள்ளதால் , அது  அவனுக்கு அனுமானங்களை  மட்டுமே தருகிறது. வாழ்க்கையின் இறுதிகட்ட உண்மைகளைக் கண்டறிய மனிதனால் இயலாது என்பதே இயற்கையின் நியதியாகும் . இருப்பினும், மனித ஆன்மா அந்த இறுதி உண்மைகளை அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது, அவை இல்லாமல் வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் விவரிக்கப்படாமலும், மனித முடிவின் உண்மையான குறியீடுகள் இணைக்கப்படாமலும் போய்விடும். விஞ்ஞானத்தால் அதை நமக்கு வழங்க முடியாது. ஏனெனில், அது  உடல் ரீதியான யதார்த்தத்துடன் மட்டுமே செயல்படுகிறது ; தத்துவங்களாலும் அதை நமக்கு கொடுக்க முடியாது. ஏனெனில், அது எடுகோள்கள் மற்றும் அனுமானங்களின் மூலமே செயல்படுகிறது. இந்த கட்டத்தில்தான் மனித ஆத்மா சர்வவல்லமையுள்ள மாபெரும் ஆற்றல் படைத்த புலக் கண்ணுக்குத் தெரியாத   அல்லாஹ்விடம் வழிகாட்டுதலுக்காக அழுகிறது. காரணம், அவனே எல்லா வாழ்கைக்கும் மூலமாக இருக்கிறான். இறைவனின் உதவியின்றி மனிதனால் இந்நிலையைத் தொடர முடியாது.  காரணம் ஆன்மா அதன் பாதையை வெளிச்சம் போடக்கூடிய ஒரு ஜோதியையும் , உறுதியான அறிவின் அடிப்படையில் வழிகாட்டலை வழங்கக்கூடிய ஒரு வழிகாட்டியையும் வைத்திருக்க விரும்புகிறது. எனவே, மனிதகுலத்திற்கு அத்தகைய உறுதியான, நேர்மறையான மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய வழிகாட்டுதல் தேவைப்படுகிறது, மேலும் இயற்பியல் ரீதியாக நம்மையும் இப்பிரபஞ்சத்தையும் நிலைநிறுத்தும்  அன்பான  படைப்பாளன் மனிதனின்  இந்த முக்கிய தேவையை அவனுக்கு வழங்குவதற்காக அதை தானே எடுத்துக் கொண்டான். பூமியில் மனிதகுலத்தின்  தொடக்கத்திலிருந்தே மதம் இருந்து வந்தது என்பதற்கு மனித வரலாறு சான்றளிக்கிறது .  இறைவன் தன் படைப்பின் மூலம் மனிதகுலத்திற்கு வழிகாட்டுதல்களை வழங்குகிறான் என்பதை இது காட்டுகிறது. இதனால்  இருளில் சிக்கிக்கொள்ளாமல் அதன் இயற்கை நிலைக்கு இணங்கி சட்ட திட்டங்களின் வழி நடக்க மனித குலத்தால் முடியும். இந்த வழிகாட்டுதல்களை வழங்க இறைவனால் நியமிக்கப்பட்டவர்களே தீர்க்கதரிசிகள், இறைத்தூதர்கள் மற்றும் அப்போஸ்தர்கள் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுபவர்கள் ஆவர் . அவர்களே அந்த வழிகாட்டலை இறைவெளிப்பாடுகளின் வடிவத்தில் பெறுகிறார்கள்.  அதை அவர்கள் எழுத்து வடிவத்தில் மக்களுக்கு முன்வைக்கும்போது, அது ஒரு வேதம் அல்லது வெளிப்பாடுகளின் புத்தகம் என்றழைக்கப்படுகிறது. திருக்குர்ஆனில் உள்ளபடி அல்லாஹ்வின் இறுதிச் சட்டங்களைப் பெறுவதற்கான பேரருளைப் பெற்ற கடைசி சட்ட திட்டங்களைக் கொண்ட இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் ஆவார்கள். இதன் பொருள், அல்லாஹ் தனது நேசத்திற்குரிய தூதரான முஹம்மது (ஸல்) அவர்களின் சமூகத்தினுள் தனது ஏனைய அடியார்களுடன் பேசமாட்டான் என்பதோ அல்லது மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும் வகையில் கண்களுக்கு புலப்படாதவற்றிலிருந்து இத்தகைய தெய்வீக தகவல்களை எழுதவோ அல்லது வெளிப்படுத்தவோ அவன் தனது அடியார்களை தேர்ந்தெடுக்க  மாட்டான் என்பதோ அல்ல. நிச்சயமாக அவ்வாறு இல்லை! இந்த முந்தைய  ஏடுகள் யாவும் அல்லாஹ்விடமிருந்து வந்த சட்டங்களின் மொத்த வடிவம் அல்ல. அவை வெளிப்பாடுகளின் புத்தகங்களே. அத்தகைய ஏடுகள் அனைத்தும் இறுதி வேதமான திருக்குர்ஆனின் கட்டளைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும், மேலும் அதன் நம்பகத்தன்மையையும் புனிதத்தையும் நிலைநிறுத்த வேண்டும். சட்டங்ளை வகுக்கும் சில குறிப்பிட்ட இறைத்தூதர்கள் மட்டுமே தெய்வீக சட்டங்கள் அல்லது தெய்வீக வேதவசனங்களுடன் அலங்கரிக்கப்பட்டனர், மேலும் அந்த வசனங்களின் உள்ளடக்கங்கள் எல்லா நிலையிலும் மனிதனின் சரியான வாழ்க்கைக்காக படைப்பாளனும் பிரபஞ்சத்தின் பாதுகாவலனும் ஆகிய அல்லாஹ் நியமித்த சட்டங்களாக இருந்தன. திருக்குர்ஆன் அத்தகைய கடைசி சட்டங்களைக் கொண்டதாகும்.  நியாயத்தீர்ப்பு நாள் வரை நிலைத்திருக்கும் இனிமை நிறைந்த  முழுமையான சட்டங்களின் தொகுப்பாகும்.
வழிகாட்டுதலின் நோக்கம் மனிதனை இறைச்சட்டத்திற்கு எப்போதும் அடிபணியச் செய்வதை அவனுக்குக் கற்பிப்பதே ஆகும். இது இஸ்லாம் என்ற வார்த்தையுடைய  அரபிப் பொருளின்  அணுகுமுறை மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. இந்த  தெய்வீக வழிகாட்டுதல் மனிதனை அவனுடைய உண்மையான இயற்கைநிலைக்குரிய சட்ட திட்டங்களுக்கு இணங்க செயல்பட வேண்டும் என்றும்,  அல்லாஹ்விற்கு அடிபணியும் உயிரினமாக இருப்பது என்ற அவனது இயல்பை ஏற்றுக்கொள்ள அவனது முழு விருப்பத்தையும் சுதந்திரத்தையும் பயன்படுத்த வேண்டும் என்றும் விரும்புகிறது . மற்ற உயிரினங்களைப் போன்று ஒரு இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து, அதில் இயற்கையின் விதிகளுக்கு இணங்கி இருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் அவனுக்கு இல்லாவிட்டாலும், உண்மையை அறிந்து, அதன்படி நடப்பது அவனுக்குறிய கடினமான கடமையாக உள்ளது. எனவே, மற்ற உயிரினங்களோடு ஒப்பிடுகையில், அவற்றைப் போல் இல்லாமல் மனிதன் இந்த உலகத்தின் சோதனைகளில் வெற்றி பெற்றுவிட்டால், அவனுக்கு வழங்கப்படும் வெகுமதிகள் எண்ணிலடங்காதவையாக இருக்கும். சுருக்கமாக கூறுவதானால், இந்த தெய்வீக வழிகாட்டி மனிதனை ஒரு முஸ்லிமாக வாழ வேண்டுகிறது.  . இது குறித்து திருக்குர்ஆன் கூறுகையில்: அல்லாஹ் மனிதர்களை எதில் படைத்தானோ அத்தகைய இயற்கை மார்க்க(மாகிய இஸ்லா)த்தை (பற்றிப்பிடித்து நிலைத்திருப்பீராக!) அல்லாஹ்வின் படைப்பில் எவ்வித மாற்றமும் இல்லை; இதுவே (சரியான) நிலையான மார்க்கமாகும்.எனினும், மனிதர்களில் பெரும்பாலானோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள். (30: 31). சர்வவல்லமையுள்ள இறைவனிடமிருந்து  வந்த இந்த வழிகாட்டுதல் ஒரு குறிப்பிட்ட குழுக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கோ மட்டுப்படுத்தப்படவில்லை. எனினும், இது உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும், அனைத்து இனங்களுக்கும்  பொதுவாக அனுப்பப்பட்டதாகும் .  இறைவனின் அருள் உலகம் முழுக்க  பொதுவான முறையில் வழங்கப்பட்டதாகும். இது குறித்து திருக்குர்ஆன் கூறுகையில் : எந்த ஒரு சமுதாயத்தவருக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர் சென்றே தவிர இல்லை. (35: 26).எனவே, வரலாறு அவர்களில் சிலரின் பெயர்களைப் பாதுகாத்து வருகிறது, அதே சமயம் பலரின் பெயர்களும் பணிகளும் மக்களால் மறக்கடிக்கப்பட்டுவிட்டன. அவர்களுள்  இன்னும் நினைவுகூறப்பட்டு, திருக்குர்னிலும் குறிப்பிடப்பட்ட இறைத்தூதர்களின் பெயர்களாவன: ஆதம், நூஹ் , இப்ராஹிம், இஸ்மாயில், இஸ்ஹாக் , யாகூப் , யூசுஃப், மூசா, தாவுத் , சுலைமான், ஜகரிய்யா , யஹ்யா , ஈஸா (அலை) ஆகியோர் மற்றும் முஹம்மது ( ஸல் ) அவர்கள் . முஹம்மது நபி ( ஸல் ) அவர்கள் கிறிஸ்தவ சகாப்தத்தின் ஏழாம் நூற்றாண்டில் தோன்றி , மனிதகுலத்தின் முந்தைய இறைத்தூதர்களின் பாதையில் மக்களை திரும்ப அழைத்தார்கள். மேலும், திருக்குர்ஆனை இவ்வுலகிற்கு வழங்கினார்கள்.  அந்த குர்ஆன் முந்தைய இறைத்தூதர்கள் கற்பித்த சட்ட திட்டங்களின் சரியான மற்றும் விரிவான வடிவத்தை உள்ளடக்கியதாகும்.  . முந்தைய இறைத்தூதர்களின் கற்பித்தல்களுக்கு யூத மதம், கிறித்தவம் என மக்கள் பலவிதமாகப் பெயரிட்டிருந்தனர். இஸ்லாத்தின் இறுதித்தூதரான நபி முஹம்மது ( ஸல் ) அவர்கள்  உண்மையான, அசலான, அர்த்தமுள்ள பெயரான இஸ்லாத்தை  நினைவுறுத்தினார்கள். திருக்குர்ஆனின் வார்த்தைகள் வாயிலாக இதை அவர்கள் நமக்கு உறுதிப்படுத்துகிறார்கள்:  நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாமாகும்; (அதாவது அவருடைய விருப்பத்திற்கும் வழிகாட்டுதலுக்கும் சரணடைதல்). (3: 20). மீண்டும் ஒருமுறை எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகையில், உங்கள் தந்தை இப்ராஹீமுடைய மார்க்கத்தை (கடைபிடியுங்கள்!). அவன்தான் (அல்லாஹ்) உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். (22: 78) மீண்டும், சர்வவல்லமையுள்ள அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்: இப்ராஹிம் யூதராக இருக்கவில்லை; கிரிஸ்துவராகவும்  இல்லை. எனினும்,  அவர் ஹனீஃபாக (அசத்திய மார்க்கங்கள் அனைத்தை விட்டும் சத்திய மார்க்கத்தின்பால் சார்ந்தவராக), முஸ்லிமாக (அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவராக) இருந்தார்; மேலும், அவர் இணைவைப்போரில் ஒருவராகவும் இருக்கவில்லை. (3: 68). ஆகவே , மனித இனம் தோன்றியதிலிருந்தே மனிதனின் இயல்பான வாழ்க்கைக்கு ஏற்ற முறையாக இஸ்லாமிய மார்க்கம் இருப்பதாக நாம் உணர்கிறோம் . நாம் அனைவரும் அல்லாஹ்வால் இஸ்லாமியர்களாக ஆக்கப்பட்டிருக்கிறோம், அவனுக்கே நாம் அடிபணிபவர்களாகவும் இருக்கிறோம். அதனால்தான், முழுமையான மற்றும் இறுதி வாழ்க்கை நெறிமுறையை வகுத்துத் தரும் திருக்குர்ஆனில், நம்முடைய உண்மையான மார்க்கம் இஸ்லாம் என்பதையும், அதைத் தவிர்த்து வேறு எதுவும் இல்லை  என்பதையும் அல்லாஹ் எடுத்துரைத்துள்ளான். இது அல்லாஹ்வுடனான நம் உறவின் புனிதத்தன்மையாகும். ஏனென்றால் அவனுடைய கருணையின் உயரத்தை அடைய நாம் அவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவனுடைய அன்பிலும் அருகாமையிலும் முழுமையானவர்களாக கருதப்பட வேண்டும். எனவே, அல்லாஹ் நம் ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையில் தூய இஸ்லாத்தை உணரச் செய்வானாக.  ஏனெனில், அதுவே  நம்முடைய வாழ்க்கையின் நோக்கமாகும். நமக்குள் இருக்கும் இஸ்லாமியம் தான் இந்த உலகம் முழுவதையும் ஒளிரச் செய்யும். மேலும் இந்த இஸ்லாம்  நம்மை நாம் பரிபூரணமாக்கிக்கொள்ள நமக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்த ஓர் பரிசாகும். இதனால் மனிதகுலத்தின் சீர்திருத்தத்திற்கான உண்மையான வழிகாட்டிகளாக  செயல்படவும்,  மக்களை அல்லாஹ்வின் பக்கம் வழிநடத்தவும் நம்மால் முடியும்.

ReplyForward