Jamaat Ul Sahih Al Islam Tamilnadu

இரத்த சந்திரன்

ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம்(அலை) அவர்கள் தன்னுடைய வருகைக்கான இறைவனின் மாபெரும் அத்தாட்சிகளில் ஒன்றாக தொடச்சியாக தோன்றும் இரத்த சந்திரன் மற்றும் சூப்பர் மூன் பற்றி அன்னார், ஒவ்வொரு நூற்றாண்டில் மட்டுமே தோன்ற கூடிய இந்த அறிய நிகழ்வு இந்த நூற்றாண்டில் இமாம் ஆக தோன்றியுள்ள தனது வருகைக்கான இறைஅடையாளமாகும் என்று கூறியுள்ளார்கள்.இந்த அத்தாட்சிகளை பற்றி அன்னார் கூறும்போது:

ஆகவே, பார்வையும் மழுங்கி;சந்திரனின் ஒளியும் மங்கி;சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்போது.{ திருகுரான் 75:7-10}

வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன்.கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வரும் முன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும் (பைபிள்பழைய ஏற்பாடு JOEL 2:30-31)

கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வரும் முன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும் (பைபிள் புதிய ஏற்பாடு ACTS 2:20)

திருக்குர்ஆன்,பைபிள் மற்றும் மற்ற இறைவேதங் களும் இந்த நிகழ்வுகள் பூமியில் இறைவனால் தேர்தெடுக்கப்பட்ட தூதர் உங்களிடையே உள்ளார் என்பதை முன்னறி விக்கின்றது. நான் எனது நாட்டின் இந்துக்கள் மற்றும் தமிழர்களிடம் எனது வருகையை பற்றி உரையாற்றும் போது,மேலும் முக்கியமாக அவர்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியின் போதும் இந்த நிகழ்வுகள் தோன்றியது, இன்னும் சில நிகழ்வுகள் ஒவ்வொரு நூற்றாண்டிலும் மட்டுமே நிகழக்கூடியவை. மேலும் 01.09.2016 அன்று மிக நீண்ட சூரிய கிரகணம் ஏற்பட்டது. மேலும் இதற்கு பிறகு இந்த நிகழ்வு 2200 ஆண்டிற்கு பிறகே நிகழும்.

:இந்த நிகழ்வுகள் 2014 -2015 ல் சரியாக யூதர்களின் புனித நாட்களில் தோன்றியுள்ளது.மேலும் இந்த அத்தாட்சிகள் இறை வஹீயை பெறக்கூடிய ஒரு தூதர், ஒரு மார்க்க சீர்திருத்தவாதி, ஒரு கலீஃபதுல்லாஹ் (தோன்றி) உள்ளார் என்பதை பூமிக்கு உணர்த்து கின்றது, இன்னும் இவர்களின் வருகையை பற்றி நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு நூற்றாண்டும் ஒரு மார்க்க சீர்திருத்தவாதி தோன்றி இந்த மார்க்கத்திற்கு புத்துயிர் வழங்குவார் என்று முன்னறிவித்துள்ளார் கள். நபி (ஸல்) அவர்களின் உம்மத்தில் தோன்றும் இவர்கள் புதிய ஷரீயத்தை கொண்டு வருவதில்லை; மாறாக இந்த உண்மை மார்க்கம் எப்போதெல்லாம் மார்க்க சீர்கேட்டையும் , திருக்குர் ஆனிற்கு மாற்றமான கொள்கையையும் கொண்டு பாதிக்கப்படும் போது இறைவனின் அருளாக இவர்கள் தோன்றி உங் களுக்கு எச்சரிக்கை செய்கின்றனர். இது இறுதிநாள் வரைத் தொடரும். இவ்வாறு தோன்றும் இவர்களால் இறைவன் தனது திருக்குர்ஆனின் போதனைகளை பாதுகாக்கின்றான் ([ஆதாரம் HQ, 15: 10, Five Volume Commentary on the Holy Qur’an(tafseer-e-Kabir), Volume III, pp. 1265-66].

மேலும் அவர்கள் அக்காலத்தின் இமாம்களாகவும், நபி (ஸல்) அவர்களது ஷரீஅத்துடைய கிலாஃபத்தின் கலீபாக்களாகவும் தோன்றுகின்றனர். நபி (ஸல்) அவர்களின் உம்மத்தில், முதல் நூற்றாண்டின் மார்க்க சீர்திருத்தவாதி உமர் பின் அப்துல் அஸீஸ்(ரஹ்) அன்னாரிலிருந்து தொடங்கி பதினான்காம் நூற்றாண்டின் மார்க்க சீர்திருத்தவாதியும், வாக்களி க்கப்பட்ட மஹ்தியும் மஸுஹூமான ஹஜ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது(அலை) அவர்கள் தோன்றியுள்ளனர் .அன்னார் நபி (ஸல்) அவர்களின் கிலாஃபத்தைப் பற்றி கூறும்போது; பதிமூன்றாம் நூற்றாண்டின் மார்க்க சீர்திருத்தவாதி ஸயீத் அஹமத் பரேல்வி (ரஹ்) அவர்கள் முஹம்மதிய்ய கிலாஃபத்தின் 12 வது கலீஃபா என்றும், அன்னார் (தன்னை) இஸ்லாத்தின் 13 வது  கலீஃபா என்றும் மிகத் தெளிவாக கூறியுள்ளார்கள்(ஆதாரம்: ரூஹானி கசாயின் – உருது, தொகுதி17 பக்கம் 193)

இதை விளக்குவதென்றால் ஹஜ்ரத் மஸீஹ் (அலை) அவர்களின் காலத்தில் ஒருவர் உங்களுக்கு பிறகு மார்க்க சீர்திருத்தவாதி வருவார்களா? என்று கேட்டார் அதற்கு வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை )அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள் :-“

எனக்கு பிறகு ஒரு  மார்க்க சீர்திருத்தவாதி வருவதில் என்ன தவறு இருக்கின்றது? மூஸா (அலை) அவர்களின் கிலாஃபத், ஈஸா(அலை)அவர்களுடன் முடிந்தது; ஆனால் நபி (ஸல்) அவர்களின் கிலாஃபத், கியாமத் வரை தொடரும்; எனவே ஒன்றுக்கு பின் ஒன்றாக முஜத்தித்கள் வருவார்கள். ஒருவேளை கியாமத்து நாள் நீட்டிக்கப்பட்டாலும் அதற்கும் ஒருவர் தோன்றுவார். நாம்  ஒருபோதும் இறைநேசர்களும், புனிதர்களும் வருவதை ஏற்றுக்கொள்ளாமல் விடமுடியாது; அப்போது திடீரென்று மறுமை தோன்றும். ( Malfoozat, Volume 7, Page 119)

மேலும், எனக்குப் பிறகு வரும் மஸீஹ், நபி (ஸல்)  அவர்களின் ஹதீஸை வைத்து வாதம் செய்வார்.(ஆதாரம்: உருது ரூஹானி கசாயின் , தொகுதி 3 பக்கம் 379)

எனக்கு பிறகு வரும் மஸிஹ், நபி (ஸல்)  அவர்களின் ஹதீதை வைத்து வாதம் செய்வார். (ஆதாரம்: ஆதாரம் உருது ரூஹானி கசாய்ன், தொகுதி; 3 பக்கம்: 379)

மேலும் கீழ் காணும் நபி மொழியும் என்னுடைய வருகையை உறுதி செய்கின்றது. ஹிஜ்ரி 1400ல் இருந்து 20 அல்லது 30 வருடத்தை கூட்டி கொள்ளுங்கள். அப்போது  உங்களிடையே மஹதி தோன்றுவர்….. (ஆதாரம்: Asmal Masalik Lieyyam Mahdiyy Maliki Li Kull-id Dunya Biemrillah-il Malik, Qalda bin Zayd, p. 216)

மேலும் இந்த ஹதீஸின்அறிவிப்பாளர் அபு ஹுரைரா (ரலி ) அவர்கள் ஆவார்கள். இந்த காலத்தின் அல்லாஹ்வின் கலீஃபாவாகிய முனீர் அஹ்மத் ஆஸிம் ஆகிய நான் பகிரங்க அறிவிப்பு செய்கின்றேன்:  அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் சுபஹானஹுதாலா  ஒரு கூரிய வாளை போன்று என் பக்கம் இருக்கிறான். அவன் எனக்கு இவ்வாறு கூறினான்: எவர் எனக்கு எதிராக அவதூறு மற்றும் அப்பாவி மக்களை குழப்புகின் றார்களோ அவரை அவன் நிச்சயம் இழிவுபடுத்துவான்.நான் அந்த அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்து கூறுகிறேன்:அவனே என்னை இந்த நூற்றாணடின் அமீருல் முஃமின், முஹையதீன், அல் கலீஃபதுல்லாஹ்வாக எழுப்பியுள்ளான். நான் உங்கள் முன்னே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸலம் அவர்களின் ஆன்மீக புதல்வனாகவும் மற்றும் வாக்களிக் கப்பட்ட மஹதி (அலை ) அவர்களின் ஆன்மீக மகனாகவும் வந்துள்ளேன். என்னை இறைவன் முஸ்லிஹ் மவூதே என்று 20 பிப்ரவரி 2004ஆம் ஆண்டு அன்று அழைத்தான். மேலும், அவன் என்னை படிப்படியாக உயர்த்திக் கௌரவ படுத்தினான் அதாவது முதலில் என்னை *கமரம்  முனீரா என்பதிலிருந்து காஜா நூருதீன், அமீருள் முஃமினீன், முஹைய் யுத்தீன், கலீஃபதுல்லாஹ், ரஸூலல்லாஹ் மற்றும் நபியுல்லாஹ்வாக  உயர்த்தினான்

இம் மதிப்பை  நான் எவரிடமும் சண்டையிட்டு பெற்றவதில்லை. மாறாக, அந்த ஏக இறைவன்  இந்த எளியவன் மீது கருணையாக பொழிந்தான். நான் இந்த உலகிற்கு ஒரு வெளிச்சமாக வந்துள்ளேன். என்னை பின்பற்றுபவர் இருளிலிருந்து விலகி அந்த வெளிச்சத்தை பெறுகின்றார்.

எனது வாதத்திற்கு இறைவன் 2003 ம் ஆண்டில் ரமலான் மாதத்தில் சூரிய மற்றும் சந்திர கிரகணத்தை அத்தாட்சியாக்கினான், இதே போன்ற ஒரு நிகழ்வை 1894 ம் ஆண்டு எனக்கு முன் தோன்றிய மஸிஹ் மவூது  (அலை ) அவர்களுக்கு அத்தாட்சியாக்கினான்.

மேலும் நபி மொழியில்லிருந்து வரக்கூடிய மஹ்திமார்கள்  ஒருவரல்ல பலர் என்றும் நாம் அறியலாம்(ஆதாரம்:ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 65. திருகுறான் விரிவுரை :4897&4988)

வாக்களிக்கப்பட்ட மஹ்தியும் ஆன மஸிஹ் மவுது (அலை) அவர்களும் இதை உறுதிசெய்கின்றார்கள், அன்னார் கூறும்போது:- நாங்கள் இதற்கு முன்பும் பல மஹதிகள் வந்துள்ளார்கள் என்றும்  மேலும் பல மஹதிகள் வரக்கூடும் என்றும் ஏற்றுக்கொள்கின்றோம்.  இன்னும் சில மஹதிகள் *இமாம் முஹம்மது* என்ற பெயரில் கூட வரலாம். (ஆதாரம் :ரூஹானி காசயின் தொகுதி 3 பக்கம் 379)

ரமலான் மாதத்தில் தோன்றும் சூரிய சந்திர கிரகணத்தை பற்றிய ஹதீதில் இதை போன்ற ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை என்பதில்லை. மாறாக, வாதம் செய்யும் ஒருவருக்கு அத்தாட் சியாக அமைந்ததில்லை என்பதே ஆகும், ஏனென்றால், இதில் “லும் தக்குன” (“lum takuna”) என்று பெண்பாலில் உள்ளது, அது ஒருமுறை யை தோன்றவேண்டும் என்றிருந்தால் “லும் யக்குன” (“lum yakuna”) என்ற ஆண்பாலில் வந்திருக்கவேண்டும், இதிலிருந்து மிக தெளிவாக இந்த நிகழ்வு நடந்ததே என்பதி ல்லை. மாறாக மஸிஹ் என்று வாதம் செய் பவருக்கு அத்தாட்சியாக அமைந்ததில்லை என்பதை குறிக்கின்றது.

உலக மக்கள் அனைவரும் குறிப்பாக முஸ்லிம்கள் உண்மையான இறை நம்பிக்கையின் சாரத்தை  மறந்துவிட்டார்கள். மேலும் இஸ்லாத்தின் உண்மையான போதனைகள் உட்பட உலக அனைத்தையும் படைத்த இறைவனையும் கூட மறந்து விட்டார்கள்….