Jamaat Ul Sahih Al Islam Tamilnadu

இறைவன் என்றும் பேசக்கூடியவன்!

கடந்த காலங்களில் இறைவன் அவனது அடியார்களுடன் பேசியுள்ளான் எனில் இப்போது ஏன் பேசுவதில்லை? அவன் அவனுடைய வழிகாட்டலை அடியார்களின் சோதனையான, சந்தேகமான மற்றும் மனக்குழப்பமான தருணங்களில் அனுப்புவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கின்றானெனில் இப்போது அவனுடைய வழிகாட்டலின் கதவை திறந்து வைக்காதது ஏன்? சற்று சிந்தியுங்கள்! எல்லா மதங்களும் அவற்றின் உண்மை நிலையை அறியமுடியா வண்ணம் சிதைந்துவிட்ட காரணத்திலா? மேலும் அவற்றுள் ஏதேனும் ஒன்றை பின்பற்றுவதால் அந்த மேலான பலனையும் அடைய முடியாது எனக்கொள்ளலாமா? அல்லது இவ்வுலகில் உண்மையான மார்க்கம் இருந்தும் மக்கள் அதன் போதனைகளை பின்பற்றாததனால் ஆன்மீக முன்னேற்றம் அடைய முடியவில்லையா?

நாம் எந்த ஒரு கருத்தை முன்வைத்தாலும் பின்வரும் கேள்வி எப்போதும் கேட்கப்படும்.அதாவது இறைவன் உலகிற்கு புதிய மார்க்கத்தின் தேவை உள்ளதை நினைக்கும் பட்சத்தில் அவன் ஒரு புதிய மார்க்கத்தை வெளிப்படுத்தாதது ஏன்? பின்பற்ற வேண்டிய வழிகாட்டலை அவன் ஏற்கெனவே வழங்கியிருக்க மக்கள் அதில் கவனமின்றி இருப்பதால் அவர்களை சரியான பாதையில் வழி நடத்த ஒரு சீர்திருத்தவாதியை அவன் ஏன் அனுப்பவில்லை. அதன் மூலம் அவரின் நெருக்கத்தை பெற்று அவர்கள் படைக்கப்பட்டதன் நோக்கத்தை அடைய முடியும் அல்லவா?

மனித இனம் தவறிலும், உலகப்பற்றிலும் தடுமாறிக் கொண்டிருக்க அவற்றுக்கு வழிகாட்டலையும் , சரியான பாதையையும் காண்பிக்காமல் கருணைமிக்க அன்பான இறைவன் அக்கறையின்றி இருக்கின்றான் என்பது நம்பமுடியாதது அல்லவா.மேலும் நம்முடைய அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் சுபஹானஹுதாலா இரக்கமுள்ளவன்; நமது அன்பிற்குரிய தந்தை அல்லது தாயைவிடவும் கருணையுள்ளவன். நமது தாயும் தந்தையுமே நம்மை உருவாக காரணமானவர்கள் மட்டுமே. ஆனால் இறைவன் படைப்பவன் மட்டுமல்ல மனித இருப்பின் முடிவான இலக்கும் ஆவான்.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளாகிய நமக்கும் உள்ள உறவு தற்காலிகமானது. ஆனால் மனிதர்களாகிய நமக்கும் நம்மை படைத்து பரிபாலிகும் அல்லாஹுக்கும் இடையிலான உறவு என்ரென்றும் நிலைத்திருக்கக்கூடிய பந்தமாகும். அவர்கள் (பெற்றோர்) உங்களுக்கு வழங்கும் வளங்களும் ஆற்றல்களும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டது ஆனால் அந்த இறுவனால் உங்களுக்கு கிடைக்கும் வளங்கள் வற்றதையாகவும் மேலும் ஆற்றல் எல்லையற்றதாகவும் விளங்குகின்றது. தன்படைப்பினங்களின் மேல் இத்தகைய தொடர்புள்ள அதிபதியாகிய ஒருவன் அவனுடைய படைப்பினங்களை மறந்து விடுவானா? மற்றும் அவர்களின் துன்பங்களைக் கண்டும் காணாதது போல் இருந்து விடுவானா? ஒருபோதும் இல்லை. எந்தவழிகாட்டலும் ஆன்மீக முன்னேற்றமும் இன்றி மனித குலத்தைக் கை விட்டு அவனின் மற்ற படைப்பினர்களிடம் கருணைகாட்ட கூறுவானா? மேலும் அவனது மேலான படைப்பினம் வெளிச்சத்தை தேடும்போது பார்வையை இழக்க செய்து இருளில் அலைந்து திரியவிட்டுவிட்ட கருணை அற்றவனாக இருக்க முடியுமா? ஒருபோதும் இல்லை!

இறைவன் இருக்கின்றான் எனில் இதை அவன் ஒருபோதும் அனுமதிக்கமாட்டான். அவன் தன் அடியார்கள் எதிர்கொள்ளும் சோதனைகளுக்காக இரக்கப்படுபவனாக இருந்தும், எவ்விதமான பாதுகாப்பும் அளிக்காமல் இருந்தால், ஒன்று மனித இனத்தை உண்மையின் பால் வழிநடத்திச் செல்ல அவனுக்கு எந்த ஆற்றலும் கிடையாது என ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது மனித படைப்பு நோக்கமற்றது எனக்கொள்ள வேண்டும்.மேலும் உண்பது, குடிப்பது போன்ற விலங்கினங்களை போல பௌதீக வாழ்க்கை வாழத்தான் மனிதன் படைக்கப்பட்டவனாவான் என்ற முடிவுக்கு வரவேண்டியதிருக்கும். ஆகவே இதைவிட என்ன பொருள் கொள்ள வேண்டியது இருக்கும் சற்று சிந்தியங்கள். ஆனால் இப்பிரபஞ்சத்தைப் படைத்த இறைவனால் மனிதகுலத்திற்கு ஆத்மீக வழிகளுக்கான மூல ஆதாரங்களை அளிக்க ஆற்றல் கிடையாது என எண்ணுவது முற்றியிலும் பொருத்தமற்றதாகும். மேலும் மனிதன் முற்றிலுமாக இவ்வுலக வாழ்விற்காக மட்டுமே படைக்கப்பட்டவன் எனவும் எண்ண ஒருபோதும் முடியாது. ஏனென்றால் ஞானம் நிறைந்த எல்லாம் அறிந்த படைப்பாளன் எந்த நோக்கமுமின்றி பிரபஞ்சத்தை வெளிப்படுத்தியுள்ளான் என ஆமோதிக்க வேண்டிவரும். எந்த ஒரு இயந்திரமும் சாதாரணமாகதானாகவே இயங்குவதற்காக கண்டு பிடிக்கப்படவில்லை; (மாறாக) எந்த இயந்திரத்திற்கும் துல்லியமானஒரு வரையறுக்கப்பட்ட நோக்கம் உண்டு என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.

மனித இருப்பின் நோக்கம் உண்பதும், குடிப்பதும் மற்றும் உறங்குவதும் தான் எனில், மனிதன் உலக வாழ்க்கை வாழவே படைக்கப்பட்டான் என அர்த்தமாகிவிடும். மனிதப்படைப்பில் எவ்வித நோக்கமும் இல்லையெனில், பரஸ்பர உதவி செய்வதே வாழ்வின் இலக்காக நாம் கருத முடியாது. மாறாக மனிதனை இறைவனிடத்து வழிநடத்தும் ஒரு மார்க்கம் கட்டாயம் இவ்வுலகில் இருந்தே ஆக வேண்டும் என நாம் அறிகின்றோம். இருக்கின்ற எல்லா மார்க்கங்களும் கரைபடிந்து இருக்குமானால், மனிதகுலத்தை வழிநடத்த ஒரு புதிய மார்க்கம் (இஸ்லாம்) அருளப்பட வேண்டும் மனிதனை இறைவனிடத்து வழி நடத்தக் கூடிய மார்க்கம் இவ்வுலகில் இருக்கப் பெற்று மனிதனின் கவனக் குறைவால் நோக்கம் நிறை வேற்றப்படவில்லை எனில்,,மனிதனுடைய கவனத்தை திருப்பி மனித குலத்தை அவன்பக்கம் மீட்டுச் செல்ல ஒரு சீர்திருத்தவாதி எழுப்பப்பட வேண்டும் என்பது உங்களுக்கு புரிகின்றதா?

மனிதன் அழகானதொரு வீட்டைக் கட்டி அதில் விலை உயர்ந்த அலங்காரத்தைச் செய்தபின்அதை பழுதுபார்க்காமல் அலட்சியமாக இருந்து சீரழிய விட்டு விடுவானா? அல்லது அம்மனிதன் அழகியதொரு தோட்டத்தை அமைத்துவிட்டு, அதற்கு நீர் பாய்ச்சாமல் அதை காய்ந்து போக விட்டு விடுவானா? இவ்வாறு ஒருபோதும் நடக்காது! மேலும் இது எவ்வாறு அறிவு சார்ந்ததாக இல்லையோ, அதுபோலவே ஒரு சிறந்த மார்க்கத்தை மனித இரட்சிப்பிற்காக அருளியபின் அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க இறைவன் தவறி விட்டான் என எண்ணுவது எவ்வாறு சாத்தியமாகும்? சற்று சிந்தியுங்கள் சகோதரர்களே! மூஸா(அலை) அவர்களுக்கு பிறகு இறைவன் ஒன்றன்பின் ஒன்றாக தூதர்களை அனுப்பி யூத மார்க்கத்தை உயிருடன் வைத்திருக்கவும் அந்த மார்க்கம் எந்த நோக்கத்திற்காக அருளப்பட்டதோ அது நிறைவேறியதையும் நாம் பார்க்கவில்லையா? ஈஸா(அலை) அவர்களுக்கு பிறகு அவன் கிறிஸ்தவ போதனைகளை உயிருடன் இருக்கச் செய்ய சிலரை நியமிக்கவில்லையா? 

வேதங்களை அருளிய பின் அவன் கிருஷ்ணரையும், ராமச் சந்திரனையும் மற்றும் புனிதர்களையும் வேதங்களின் உண்மை போதனைகளை வலுப்படுத்த அனுப்பவில்லையா? சொராஷ்ட்டருக்கு பிறகு பாரசீக மார்க்கத்தை பாதுகாக்க அவன் வழிவகைகளை செய்யவில்லையா? மேலும் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களுக்குப் பிறகு இஸ்லாத்தின் போதனைகளை இறை அறிவிப்பின் மூலமாக விளக்குவதற்கும் அதனை உயிர்த்துடிப்புடன் வைத்திருக்கவும் தொடர்ச்சியாக புனிதர்களை எழுப்பவில்லையா?

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் நாம் எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் உலகின் தற்போதைய நிலைக்கு இறை ஈர்ப்புள்ள வழிகாட்டியே அவசியமாகும். (மாறாக) மனிதர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதுவும் மிகக் குறைவான எண்ணிக்கையிலான மனிதர்களால் தேர்ந்தெடுக்கப்படும் வழிகாட்டியின் தேவை ஏற்ப்படுமா? என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஒரே குடும்பவழி மூலம் தலைமை ஏற்று இறை சட்டத்தை நசுக்குகின்ற அவர்களை தடுத்து நிறுத்தக்கூடிய இறைத்தூதர், இஸ்லாம் மற்றும் மனிதகுலத்தின் சீர்திருத்தவாதியே இவ்வுலகில் தேவையாக இருப்பது உங்களுக்கு விளங்கவில்லையா, இறை வழிகாட்டலையும் கட்டளைகளையும் பெறாமலேயே அதிகாரத்திலிருக்கும் அம்மனிதர் உலகம் முழுவதும் தன்னை ‘நபி’ என்றும், ‘முஜத்தித்’ என்றும் ‘இஸ்லாத்தின் கலிபா’ என்றும் பிரகடனப்படுத்திக் கொண்டிருப்பதை நாம் எண்ணற்ற மக்களை நாம் இக்காலத்தில் பார்க்கின்றோம் அல்லவா?

நீங்கள் உண்மையாகவே உண்மையை நாடுபவர்களாக இருந்தால், எனது நண்பர்களே நல்லுள்ளம் கொண்டோர்களே! ரூஹுல்குதுஸ் (பரிசுத்தஆவி) கிடைக்கப் பெற்ற உங்கள் காலத்தில் இறைவனால் இறக்கப்பட்டவர்கள் மட்டுமே உங்களை அந்த நேரான வழியில் நடத்த முடியும் என்று அறிந்து கொள்ளுங்கள். இறைவனோடு அளப்பரிய அன்பு கொண்டுள்ள (இறைவனுடன், உண்மையுடன் ஆன்மீகத்துடன்) அம்மக்களின் ஆன்மா ஆகாயத்தை நோக்கி ஆர்வமாக தம் கண்களை திருப்பியவாறு வேதனையோடும் துக்கத்தோடும் படைத்தவனை இறைஞ்சி அவர்களது கண்கள் கண்ணீரால் நிரம்பி இருக்க, அதனால் அவன் அவர்கள் மேல் கருணை கொண்டு அவனது கருணை மற்றும் அருளின் கதவுகளைத் திறந்து அவர்களது முன்னோர்களுக்கு அருளியது போன்று அவர்களுக்கும் வழங்கி, ஆன்மீக இருளை நீக்கி கண்களிலும் இதயங்களிலும் உள்ள குருட்டுத் தன்மையையும் அசுத்தங்களையும் குணப்படுத்தி நிலையான வாழ்விற்கு வழிகாட்டுவானாக! அதுவே மனித இருப்பின் படைக்கப்பட்டதன் நோக்கம் ஆகும். 

என் அனுப்புக்குரிய சகோதர்களே!

இவ்வுலகில் இறை வழிபாடுகளில் இஸ்லாத்தின் கீழ் இருக்கின்ற ஜமாத்துகளில் ஜமாஅத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாம் மட்டுமே இறை பாதுகாப்பு பெற்ற இறை மார்க்கமாகும். ஆன்மீக வாழ்விற்கான தாகம் உடையவர்களே! இறை பாதுகாப்பின் நிழலின் கீழ்வாருங்கள்! ஜமாஅத்துல் சஹீஹ் அல் இஸ்லாம் ஆன்மீககளத்தில் உங்களுக்கு மிகவும் தேவையானதை வழங்கி இருக்கின்றது என்ற நற்செய்தியை நான் உங்களுக்கு தருகின்றேன்.

இறந்தவருக்கு ஆன்மீக வாழ்வை தருகின்ற,பார்வை இல்லாதவருக்கு ஆன்மீக பார்வையைத் தருகின்ற, செவிடருக்கு ஆன்மீக கேள்விபுலனை அளிக்கின்றது. ஆன்மீக குணமளிப்பவர் (அதாவது இந்த எளிய இறையடியான்) காலத்தின் தேவைக்கேற்பவும் நம் அன்பிற்குரிய பாசத்திற்கும் உரிய இறைத்தூதர் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பை நிறைவேற்றுவதற்காகவும் இறைவன் புறமிருந்து வந்துள்ளேன். அல்லாஹ் ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மார்க்கத்தை உயிர்ப்பிக்ககூடிய ஒருவரை (முஜத்தித்) இச்சமுதாயத்திற்கு அனுப்புவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள். வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) மற்றும் முஸ்லீமவூத் ஹஸ்ரத் மஹ்மூத் அஹ்மத் (ரலி) அவர்களுடைய முன்னறிவிப்புகளின் படியும் நான் உங்களிடையே வந்துள்ளேன். இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மனிதர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் போன்றவர்கள் அல்ல.இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இறைவன் புறமிருந்து பரிசுத்த ஆவியோடு மக்களை இருளிலிருந்து காக்கவும், இரட்சிப்பின்பால் வழி நடத்தவுமே வருகை தருகின்றார்கள்.

மக்களே செவிதாழ்த்துங்கள்! இறைவன் பாதுகாப்பதாக வாக்குறுதி அளித்துள்ள மார்க்கம் இஸ்லாம் மட்டுமேயாகும். அதனைஅவன் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றான். எனவே அதுவே இறைவன் தேர்ந்தெடுத்துள்ள மார்க்கமாகும்! உறுதியாக நமது காலத்தில் ஜமாஅத் துல் ஸஹீஹ் அல் இஸ்லாமே நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த, மனிதகுலத்திற்கு வழிகாட்டக் கூடிய ஜமாஅத், இஸ்லாத்தின் அதே வேரில் இருந்து வந்துள்ள இஸ்லாம் ஆகும். அவ்வாறு இல்லையெனில் இறைவன் அதைகாக்கவும் பாதுகாக்கவும் வழிவகைகளை அழித்துவிட்டு மற்ற மார்க்கங்களை பாதுகாப்பற்ற நிலையில் விட்டுவிட்டது ஏன்?

எனவே, உண்மையைத் தேடக் கூடியவர்களே! எனது அன்பு சகோதர, சகோதரிகளே! கடந்த காலங்களில் பலமுறை உங்களிடம் கூறியுள்ளேன். அதாவது நான் எந்த ஒரு புதிய மார்க்கத்தை கொண்டு வரவில்லை. ஆனால் உண்மை இஸ்லாத்தின் போதனைகளை உயிர்ப்பிக்கவும் இஸ்லாத்திற்கு சேவை செய்யவும், மீட்கவும், அழகிய இஸ்லாத்தை பரப்பவும், மனித குலத்தை அழகிய இஸ்லாத்தின் மூலமாக இறைவனின் பால் வழி நடத்தவும் அனுப்பப்பட்டுள்ளேன். இன்ஷா அல்லாஹ் உளத்தூய்மையுடன் உண்மையின்பால் உங்களை எல்லாம் வல்ல இறைவன் வழி நடத்துவானாக. ஆமீன்!

ஹஸ்ரத் முஹையுதின் அல் கலீபாத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை)

இறைவன் என்றும் பேசக்கூடியவன்!

கடந்த காலங்களில் இறைவன் அவனது அடியார்களுடன் பேசியுள்ளான் எனில் இப்போது ஏன் பேசுவதில்லை? அவன் அவனுடைய வழிகாட்டலை அடியார்களின் சோதனையான, சந்தேகமான மற்றும் மனக்குழப்பமான தருணங்களில் அனுப்புவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கின்றானெனில் இப்போது அவனுடைய வழிகாட்டலின் கதவை திறந்து வைக்காதது ஏன்? சற்று சிந்தியுங்கள்! எல்லா மதங்களும் அவற்றின் உண்மை நிலையை அறியமுடியா வண்ணம் சிதைந்துவிட்ட காரணத்திலா? மேலும் அவற்றுள் ஏதேனும் ஒன்றை பின்பற்றுவதால் அந்த மேலான பலனையும் அடைய முடியாது எனக் கொள்ளலாமா? அல்லது இவ்வுலகில் உண்மையான மார்க்கம் இருந்தும் மக்கள் அதன் போதனைகளை பின்பற்றாததனால் ஆன்மீக முன்னேற்றம் அடைய முடியவில்லையா?

நாம் எந்த ஒரு கருத்தை முன்வைத்தாலும் பின்வரும் கேள்வி எப்போதும் கேட்கப்படும். அதாவது இறைவன் உலகிற்கு புதிய மார்க்கத்தின் தேவை உள்ளதை நினைக்கும் பட்சத்தில் அவன் ஒரு புதிய மார்க்கத்தை வெளிப்படுத்தாதது ஏன்? பின்பற்ற வேண்டிய வழிகாட்டலை அவன் ஏற்கெனவே வழங்கியிருக்க மக்கள் அதில் கவனமின்றி இருப்பதால் அவர்களை சரியான பாதையில் வழி நடத்த ஒரு சீர்திருத்தவாதியை அவன் ஏன் அனுப்பவில்லை. அதன் மூலம் அவரின் நெருக்கத்தை பெற்று அவர்கள் படைக்கப்பட்டதன் நோக்கத்தை அடைய முடியும் அல்லவா?

மனித இனம் தவறிலும், உலகப்பற்றிலும் தடுமாறிக் கொண்டிருக்க அவற்றுக்கு வழிகாட்டலையும், சரியான பாதையையும் காண்பிக்காமல் கருணைமிக்க அன்பான இறைவன் அக்கறையின்றி இருக்கின்றான் என்பது நம்ப முடியாதது அல்லவா. மேலும் நம்முடைய அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் சுபஹானஹுதாலா இரக்கமுள்ளவன்; நமது அன்பிற்குரிய தந்தை அல்லது தாயைவிடவும் கருணையுள்ளவன். நமது தாயும் தந்தையுமே நம்மை உருவாக காரணமானவர்கள் மட்டுமே. ஆனால் இறைவன் படைப்பவன் மட்டுமல்ல மனித இருப்பின் முடிவான இலக்கும் ஆவான்.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளாகிய நமக்கும் உள்ள உறவு தற்காலிகமானது. ஆனால் மனிதர்களாகிய நமக்கும் நம்மை படைத்து பரிபாலிகும் அல்லாஹுக்கும் இடையிலான உறவு என்ரென்றும் நிலைத்திருக்கக்கூடிய பந்தமாகும். அவர்கள் (பெற்றோர்) உங்களுக்கு வழங்கும் வளங்களும் ஆற்றல்களும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டது ஆனால் அந்த இறுவனால் உங்களுக்கு கிடைக்கும் வளங்கள் வற்றதையாகவும் மேலும் ஆற்றல் எல்லையற்றதாகவும் விளங்குகின்றது. தன் படைப்பினங்களின் மேல் இத்தகைய தொடர்புள்ள அதிபதியாகிய ஒருவன் அவனுடைய படைப்பினங்களை மறந்து விடுவானா? மற்றும் அவர்களின் துன்பங்களைக் கண்டும் காணாதது போல் இருந்து விடுவானா? ஒருபோதும் இல்லை. எந்த வழிகாட்டலும் ஆன்மீக முன்னேற்றமும் இன்றி மனித குலத்தைக் கை விட்டு அவனின் மற்ற படைப்பினர்களிடம் கருணைகாட்ட கூறுவானா? மேலும் அவனது மேலான படைப்பினம் வெளிச்சத்தை தேடும் போது பார்வையை இழக்க செய்து இருளில் அலைந்து திரியவிட்டுவிட்ட கருணை அற்றவனாக இருக்க முடியுமா? ஒருபோதும் இல்லை!

இறைவன் இருக்கின்றான் எனில் இதை அவன் ஒருபோதும் அனுமதிக்கமாட்டான். அவன் தன் அடியார்கள் எதிர்கொள்ளும் சோதனைகளுக்காக இரக்கப்படுபவனாக இருந்தும், எவ்விதமான பாதுகாப்பும் அளிக்காமல் இருந்தால், ஒன்று மனித இனத்தை உண்மையின் பால் வழிநடத்திச் செல்ல அவனுக்கு எந்த ஆற்றலும் கிடையாது என ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது மனித படைப்பு நோக்கமற்றது எனக்கொள்ள வேண்டும். மேலும் உண்பது, குடிப்பது போன்ற விலங்கினங்களை போல பௌதீக வாழ்க்கை வாழத்தான் மனிதன் படைக்கப்பட்டவனாவான் என்ற முடிவுக்கு வரவேண்டியதிருக்கும். ஆகவே இதைவிட என்ன பொருள் கொள்ள வேண்டியது இருக்கும் சற்று சிந்தியங்கள். ஆனால் இப்பிரபஞ்சத்தைப் படைத்த இறைவனால் மனிதகுலத்திற்கு ஆத்மீக வழிகளுக்கான மூல ஆதாரங்களை அளிக்க ஆற்றல் கிடையாது என எண்ணுவது முற்றியிலும் பொருத்த மற்றதாகும். மேலும் மனிதன் முற்றிலுமாக இவ்வுலக வாழ்விற்காக மட்டுமே படைக்கப்பட்டவன் எனவும் எண்ண ஒருபோதும் முடியாது. ஏனென்றால் ஞானம் நிறைந்த எல்லாம் அறிந்த படைப்பாளன் எந்த நோக்கமுமின்றி பிரபஞ்சத்தை வெளிப்படுத்தியுள்ளான் என ஆமோதிக்க வேண்டிவரும். எந்த ஒரு இயந்திரமும் சாதாரணமாகதானாகவே இயங்குவதற்காக கண்டு பிடிக்கப்படவில்லை; (மாறாக) எந்த இயந்திரத்திற்கும் துல்லியமான ஒரு வரையறுக்கப்பட்ட நோக்கம் உண்டு என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.

மனித இருப்பின் நோக்கம் உண்பதும், குடிப்பதும் மற்றும் உறங்குவதும் தான் எனில், மனிதன் உலக வாழ்க்கை வாழவே படைக்கப்பட்டான் என அர்த்தமாகிவிடும். மனிதப்படைப்பில் எவ்வித நோக்கமும் இல்லையெனில், பரஸ்பர உதவி செய்வதே வாழ்வின் இலக்காக நாம் கருத முடியாது. மாறாக மனிதனை இறைவனிடத்து வழிநடத்தும் ஒரு மார்க்கம் கட்டாயம் இவ்வுலகில் இருந்தே ஆக வேண்டும் என நாம் அறிகின்றோம். இருக்கின்ற எல்லா மார்க்கங்களும் கரை படிந்து இருக்குமானால், மனித குலத்தை வழிநடத்த ஒரு புதிய மார்க்கம் (இஸ்லாம்) அருளப்பட வேண்டும் மனிதனை இறைவனிடத்து வழி நடத்தக் கூடிய மார்க்கம் இவ்வுலகில் இருக்கப் பெற்று மனிதனின் கவனக் குறைவால் நோக்கம் நிறை வேற்றப்படவில்லை எனில்,,மனிதனுடைய கவனத்தை திருப்பி மனித குலத்தை அவன்பக்கம் மீட்டுச் செல்ல ஒரு சீர்திருத்தவாதி எழுப்பப்பட வேண்டும் என்பது உங்களுக்கு புரிகின்றதா?

மனிதன் அழகானதொரு வீட்டைக் கட்டி அதில் விலை உயர்ந்த அலங்காரத்தைச் செய்தபின்அதை பழுது பார்க்காமல் அலட்சியமாக இருந்து சீரழிய விட்டு விடுவானா? அல்லது அம்மனிதன் அழகியதொரு தோட்டத்தை அமைத்துவிட்டு, அதற்கு நீர் பாய்ச்சாமல் அதை காய்ந்து போக விட்டு விடுவானா? இவ்வாறு ஒருபோதும் நடக்காது! மேலும் இது எவ்வாறு அறிவு சார்ந்ததாக இல்லையோ, அதுபோலவே ஒரு சிறந்த மார்க்கத்தை மனித இரட்சிப்பிற்காக அருளியபின் அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க இறைவன் தவறி விட்டான் என எண்ணுவது எவ்வாறு சாத்தியமாகும்? சற்று சிந்தியுங்கள் சகோதரர்களே! மூஸா(அலை) அவர்களுக்கு பிறகு இறைவன் ஒன்றன்பின் ஒன்றாக தூதர்களை அனுப்பி யூத மார்க்கத்தை உயிருடன் வைத்திருக்கவும் அந்த மார்க்கம் எந்த நோக்கத்திற்காக அருளப்பட்டதோ அது நிறைவேறியதையும் நாம் பார்க்கவில்லையா? ஈஸா(அலை) அவர்களுக்கு பிறகு அவன் கிறிஸ்தவ போதனைகளை உயிருடன் இருக்கச் செய்ய சிலரை நியமிக்கவில்லையா? 

வேதங்களை அருளிய பின் அவன் கிருஷ்ணரையும், ராமச் சந்திரனையும் மற்றும் புனிதர்களையும் வேதங்களின் உண்மை போதனைகளை வலுப்படுத்த அனுப்பவில்லையா? சொராஷ்ட்டருக்கு பிறகு பாரசீக மார்க்கத்தை பாதுகாக்க அவன் வழிவகைகளை செய்யவில்லையா? மேலும் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களுக்குப் பிறகு இஸ்லாத்தின் போதனைகளை இறை அறிவிப்பின் மூலமாக விளக்குவதற்கும் அதனை உயிர்த்துடிப்புடன் வைத்திருக்கவும் தொடர்ச்சியாக புனிதர்களை எழுப்பவில்லையா?

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் நாம் எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் உலகின் தற்போதைய நிலைக்கு இறை ஈர்ப்புள்ள வழிகாட்டியே அவசியமாகும். (மாறாக) மனிதர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதுவும் மிகக் குறைவான எண்ணிக்கையிலான மனிதர்களால் தேர்ந்தெடுக்கப்படும் வழிகாட்டியின் தேவை ஏற்ப்படுமா? என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஒரே குடும்பவழி மூலம் தலைமை ஏற்று இறை சட்டத்தை நசுக்குகின்ற அவர்களை தடுத்து நிறுத்தக்கூடிய இறைத்தூதர், இஸ்லாம் மற்றும் மனிதகுலத்தின் சீர்திருத்தவாதியே இவ்வுலகில் தேவையாக இருப்பது உங்களுக்கு விளங்கவில்லையா, இறை வழிகாட்டலையும் கட்டளைகளையும் பெறாமலேயே அதிகாரத்திலிருக்கும் அம்மனிதர் உலகம் முழுவதும் தன்னை ‘நபி’ என்றும், ‘முஜத்தித்’ என்றும் ‘இஸ்லாத்தின் கலிபா’ என்றும் பிரகடனப்படுத்திக் கொண்டிருப்பதை நாம் எண்ணற்ற மக்களை நாம் இக்காலத்தில் பார்க்கின்றோம் அல்லவா?

நீங்கள் உண்மையாகவே உண்மையை நாடுபவர்களாக இருந்தால், எனது நண்பர்களே நல்லுள்ளம் கொண்டோர்களே! ரூஹுல் குதுஸ் (பரிசுத்தஆவி) கிடைக்கப் பெற்ற உங்கள் காலத்தில் இறைவனால் இறக்கப்பட்டவர்கள் மட்டுமே உங்களை அந்த நேரான வழியில் நடத்த முடியும் என்று அறிந்து கொள்ளுங்கள். இறைவனோடு அளப்பரிய அன்பு கொண்டுள்ள (இறைவனுடன், உண்மையுடன் ஆன்மீகத்துடன்) அம்மக்களின் ஆன்மா ஆகாயத்தை நோக்கி ஆர்வமாக தம் கண்களை திருப்பியவாறு வேதனையோடும் துக்கத்தோடும் படைத்தவனை இறைஞ்சி அவர்களது கண்கள் கண்ணீரால் நிரம்பி இருக்க, அதனால் அவன் அவர்கள் மேல் கருணை கொண்டு அவனது கருணை மற்றும் அருளின் கதவுகளைத் திறந்து அவர்களது முன்னோர்களுக்கு அருளியது போன்று அவர்களுக்கும் வழங்கி, ஆன்மீக இருளை நீக்கி கண்களிலும் இதயங்களிலும் உள்ள குருட்டுத் தன்மையையும் அசுத்தங்களையும் குணப்படுத்தி நிலையான வாழ்விற்கு வழிகாட்டுவானாக! அதுவே மனித இருப்பின் படைக்கப்பட்டதன் நோக்கம் ஆகும். 

என் அன்புக்குரிய சகோதர்களே!

இவ்வுலகில் இறை வழிபாடுகளில் இஸ்லாத்தின் கீழ் இருக்கின்ற ஜமாத்துகளில் ஜமாஅத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாம் மட்டுமே இறை பாதுகாப்பு பெற்ற இறை மார்க்கமாகும். ஆன்மீக வாழ்விற்கான தாகம் உடையவர்களே! இறை பாதுகாப்பின் நிழலின் கீழ்வாருங்கள்! ஜமாஅத்துல் சஹீஹ் அல் இஸ்லாம் ஆன்மீக களத்தில் உங்களுக்கு மிகவும் தேவையானதை வழங்கி இருக்கின்றது என்ற நற்செய்தியை நான் உங்களுக்கு தருகின்றேன்.

இறந்தவருக்கு ஆன்மீக வாழ்வை தருகின்ற,பார்வை இல்லாதவருக்கு ஆன்மீக பார்வையைத் தருகின்ற, செவிடருக்கு ஆன்மீக கேள்விபுலனை அளிக்கின்றது. ஆன்மீக குணமளிப்பவர் (அதாவது இந்த எளிய இறையடியான்) காலத்தின் தேவைக்கேற்பவும் நம் அன்பிற்குரிய பாசத்திற்கும் உரிய இறைத்தூதர் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பை நிறை வேற்றுவதற்காகவும் இறைவன் புறமிருந்து வந்துள்ளேன். அல்லாஹ் ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மார்க்கத்தை உயிர்ப்பிக்ககூடிய ஒருவரை (முஜத்தித்) இச்சமுதாயத்திற்கு அனுப்புவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள். வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) மற்றும் முஸ்லீமவூத் ஹஸ்ரத் மஹ்மூத் அஹ்மத் (ரலி) அவர்களுடைய முன்னறிவிப்புகளின் படியும் நான் உங்களிடையே வந்துள்ளேன். இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மனிதர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் போன்றவர்கள் அல்ல. இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இறைவன் புறமிருந்து பரிசுத்த ஆவியோடு மக்களை இருளிலிருந்து காக்கவும், இரட்சிப்பின்பால் வழி நடத்தவுமே வருகை தருகின்றார்கள்.

மக்களே செவிதாழ்த்துங்கள்! இறைவன் பாதுகாப்பதாக வாக்குறுதி அளித்துள்ள மார்க்கம் இஸ்லாம் மட்டுமேயாகும். அதனைஅவன் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றான். எனவே அதுவே இறைவன் தேர்ந்தெடுத்துள்ள மார்க்கமாகும்! உறுதியாக நமது காலத்தில் ஜமாஅத் துல் ஸஹீஹ் அல் இஸ்லாமே நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த, மனிதகுலத்திற்கு வழிகாட்டக் கூடிய ஜமாஅத், இஸ்லாத்தின் அதே வேரில் இருந்து வந்துள்ள இஸ்லாம் ஆகும். அவ்வாறு இல்லையெனில் இறைவன் அதைகாக்கவும் பாதுகாக்கவும் வழிவகைகளை அழித்துவிட்டு மற்ற மார்க்கங்களை பாதுகாப்பற்ற நிலையில் விட்டுவிட்டது ஏன்?

எனவே, உண்மையைத் தேடக் கூடியவர்களே! எனது அன்பு சகோதர, சகோதரிகளே! கடந்த காலங்களில் பலமுறை உங்களிடம் கூறியுள்ளேன். அதாவது நான் எந்த ஒரு புதிய மார்க்கத்தை கொண்டு வரவில்லை. ஆனால் உண்மை இஸ்லாத்தின் போதனைகளை உயிர்ப்பிக்கவும் இஸ்லாத்திற்கு சேவை செய்யவும், மீட்கவும், அழகிய இஸ்லாத்தை பரப்பவும், மனித குலத்தை அழகிய இஸ்லாத்தின் மூலமாக இறைவனின் பால் வழி நடத்தவும் அனுப்பப்பட்டுள்ளேன். இன்ஷா அல்லாஹ் உளத்தூய்மையுடன் உண்மையின்பால் உங்களை எல்லாம் வல்ல இறைவன் வழி நடத்துவானாக. ஆமீன்!

ஹஸ்ரத் முஹையுதின் அல் கலீபாத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை)