Jamaat Ul Sahih Al Islam Tamilnadu

Month: June 2020

அல்-அஸீம் தஃப்ஸீருல் குர்ஆன்

அல்-அஸீம் தஃப்ஸீருல் குர்ஆன் புனிதத்திருமறையின் ஸூரா அல்-ஹிஜ்ர் 10 வது வசனத்தில் அல்லாஹ் ஸுபுஹானஹு தாஆலா إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ  இந்த  (குர்ஆனாகிய) அறிவுரையை நாமே இறக்கினோம். நிச்சயமாக நாமே இதனை பாதுகாப்போம். உறுதியளித்தது போல் அதன் எழுத்துக்களை மட்டுமல்லாமல் அதன் உண்மை கருத்தையும் (ரூஹையும்) பாதுகாக்கின்றான். மேலும், இந்தப்பணியை ஒவ்வொரு நேரத்திலும் முஸ்லிம்களில் இருந்து இறைவனால் எழுப்பப்படும் மார்க்க சீர்திருத்தவாதிகள் மூலம் செய்கின்றான். இந்த மார்க்க சீர்திருத் தவாதிகளை இஸ்லாமிய …

அல்-அஸீம் தஃப்ஸீருல் குர்ஆன் Read More »

இப்ராஹீம் (அலை) அவர்களின் பிராத்தனை – தப்ஸீர் கபீர் – இரண்டாவது கலீஃபதுல் மஸீஹ்

இரண்டாவது கலீஃபதுல் மஸீஹ் (இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம் “என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)” எனக் கேட்டார்; என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான். (அல் குர்ஆன் 2:125) பரிசுத்த குர்ஆன் 2:125 இல் குறிப்பிடப்பட்டுள்ள பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்காக இறைவன் இப்ராஹீமின் சந்ததியினரிடமிருந்து மார்க்க …

இப்ராஹீம் (அலை) அவர்களின் பிராத்தனை – தப்ஸீர் கபீர் – இரண்டாவது கலீஃபதுல் மஸீஹ் Read More »

‘கப்ல மௌதிஹீ’ – ஒரு விளக்கம்

வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் அதற்க்கு அவர்கள் அளித்த பதிலும்)   கேள்வி : கீழ்க்காணும் திருக்குர்ஆன் வசனம் மஸீஹ் (அலை) அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்பதற்கு சான்று பகர்கிறது. அதாவது “வ இன் மின் அஹ்லில் கித்தாபி இல்லா ல யுமினன்னா பிஹீ கப்ல மௌதிஹீ (4:160) ‘மஸீஹின் மரணத்திற்கு முன் எல்லாரும் அவரிடத்து நம்பிக்கை கொள்வார்கள்’.   எனவே இந்த வசனத்தில் பொருளிலிருந்து வேதத்தையுடையவர்கள் எல்லோரும் நம்பிக்கை …

‘கப்ல மௌதிஹீ’ – ஒரு விளக்கம் Read More »

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் பிரதிப் பிம்பம் நானே! – ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள்.

கொள்கையைப் பொறுத்த அளவில் இறைவன் விரும்புவதெல்லாம் இறைவன் ஒருவனே என்பதை உளப்பூர்வமாக நம்வுவதும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவனுடைய தூதராகவும் ‘காதமுல் அன்பியா’ வாகவும் அனைத்து தூதர்களையும் விட மேலானவராகவும் நம்புவதும் ஆகும். எவர்மீது ‘முஹம்மதிய்யத்’ தின் பிரதிப்பிம்பம் என்னும் போர்வைப் போடப்படுகின்றதோ அவரைத் தவிர வேறு எவருக்கும் நபியாக வர இயலாது. ஓர் ஊழியன் தனது எஜமானனைவிட்டும் வேறுபட்டவன் அல்லன். ஒரு மரத்தின் கிளை அதன் வேரிலிருந்து வேறுபட்டதன்று. சுருக்கமாக எஜமானனிடத்திலேயே தன்னை …

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் பிரதிப் பிம்பம் நானே! – ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள். Read More »

மர்யத்தின் மகன் ஈஸா (அலை) அவர்கள் வானத்திலிருந்து வரமாட்டார்கள்! – ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள்

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்: மிகவும் விளக்கமாக, ஆணித்தரமாக மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். எவரும் வானத்திலிருந்து இறங்கி இவ்வுலகிற்கு வரப்போவதில்லை. எதிர்பார்ப்பவர்களின் சந்ததியினரும் மரணித்து விடுவார்கள் ஆனால் அவர்களில் எவரும் மரியமின் மகன் ஈசா (அலை) வானத்திலிருந்து இறங்கி வருவதை காணப்போவதில்லை. அதன் பிறகு அல்லாஹ் அவர்களை நிம்மதி இழக்கச் செய்து விடுவான். அந்த சமயத்தில் உலகத்திலிருந்து சிலுவையின் ஆதிக்கம் படிப்படியாக நழுவுவதை காணலாம். அதன் பிறகு ஒரு புதிய சகாப்த்தம், புதிய நிலை …

மர்யத்தின் மகன் ஈஸா (அலை) அவர்கள் வானத்திலிருந்து வரமாட்டார்கள்! – ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் Read More »

எழுதுகோலே இன்றைய ஆயுதம்! – ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள்

இக்காலத்தின் தேவை வாளல்ல; பயன்படவேண்டியது பேனாவே என்பதை நன்குணர்ந்து கொள்ள வேண்டும். நமது எதிரிகள் இஸ்லாத்திற்கெதிராக எழுப்பியுள்ள சந்தேகங்களும், பல்வேறு அறிவியல் தத்துவங்களினால், இறைவனின் உண்மையான மார்க்கத்தைத் தாக்க முயன்றதும், பேனா என்னும் ஆயுதம்தாங்கி, அறிவியல் மற்றும் அறிவின் முன்னேற்றப் போர்களத்தில் இறங்கி, இஸ்லாத்தின் ஆன்மீகக் கம்பீரத்தையும், அதன் அந்தரங்க ஆற்றலின் அற்புதத்தையும் உலகுக்குக் காட்ட வேண்டிய அவசியத்தை எனக்கு உணர்த்தியது.    இறைவனின் பேரருள் எனக்கு இருக்காவிடில், நான் ஒருக்காலும் இக் களம் புகும் தகுதி …

எழுதுகோலே இன்றைய ஆயுதம்! – ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் Read More »

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு அவர்கள் அளித்த பதிலும்.

கேள்வி: கலிமா கூறுபவரையும், கிப்லாவை முன்னோக்கித் தொழுபவரையும் காபிர் என்று கூறுவது சரியானதல்ல” எனத் தாங்கள் ஆயிரக்கணக்கான இடங்களில் எழுதியுள்ளீர்கள். இதிலிருந்து நம்பிக்கையாளர்களில் எவர்கள் தங்களை நிராகரித்தால் “காபிர்” ஆகி விட்டார்களோ அவர்களைத் தவிர தங்களை ஏற்றுக் கொள்ளாததால் மட்டும் எவரும் காபிர் ஆகமாட்டார் என்று தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அப்துல் ஹகீம் கான் என்பவருக்கு “எனது தூதுச் செய்தி எட்டியபின்னர் என் மீது நம்பிக்கை கொள்ளாத ஒவ்வொருவரும் முஸ்லிம் ஆகமாட்டார்” என எழுதியுள்ளீர்கள். “திரியாகுல் குலூப்” …

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு அவர்கள் அளித்த பதிலும். Read More »